Saturday, November 20, 2010


தேசிய அளவிலான ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

19.11.10

பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எதிர்வரும் நவம்பர் 21 ம் தேதி முதல் நவம்பர் 28, 2010 வரை நாடு முழுவதும் நடைபெறும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.


உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் சுற்றுப்புற சூழலை தூய்மையானதாக மாசற்ற ஆரோக்கியமான நிலையில் வைத்திருப்பதில் பொதுமக்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் Healthy People Healthy Nation" என்ற முழக்கங்களோடு பிரச்சாரம் நடைபெறும்.


பாப்புலர் பிரண்ட் செயல்வீரர்கள் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகள், நோய்த்ததடுப்பு முறை, யோகா பயிற்சி, உடற்பயிற்சி, சரியான உணவு பழக்க வழக்கங்கள் பற்றிய பயிற்சி வகுப்புகள் மற்றும் செயல் விளக்க கூட்டங்கள் ஆகியவை உள்ளடக்கியிருக்கும்.


விளையாட்டு நிகழ்ச்சிகள் பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் துப்புரவுப்பனிகள் , ஆவணப்பட காட்சிகள் , தெருவோர நாடகங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்துவதென திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தகைய பொது நிகழ்சிகள் உள்ளூர் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து அவர்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தின் பொது சுகாதார திட்டங்களை, முயற்சிகளை வலுப்படுத்தும் விதத்தில் பிரசாரம் அமையும்.


இது தொடர்பான விளம்பரங்கள் புத்தகங்கள் மற்றும் போஸ்டர்கள் ஆங்கிலம் ஹிந்தி, உர்து, பெங்காலி கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மணிப்பூரி போன்ற பல்வேறு மொழிகளில் அச்சிட்டு வெளியிடப்படும்.


நாடுதழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது கடந்த ஆண்டு 2009 அக்டோபர் மாதம் நடத்திய பிரச்சாரம் பெருவாரியான மக்களின் பங்களிப்பையும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது

Monday, November 15, 2010

வெற்றிக்கு வழிகாட்டும் தூய எண்ணம்


“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூற்கள்: புகாரி,முஸ்லிம்
    இந்த ஹதீஸின் மூலம் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எண்ணம் அவசியம் என்பதை நன்கு விளங்கலாம். நம்முடைய எண்ணத்தின் அடிப்படையிலே தான் நம்முடைய அமல்களுக்கு அல்லாஹ் மறுமையில் கூலி வழங்குகிறான்.
    “நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்
    “மறுமையில் தீர்ப்புக் கூறப்படும் அந்நாளில் ஒரு உயிர்த்தியாகி அல்லாஹ்விடத்தில் அழைத்து வரப்படுவார். அவரிடம் இறைவன் அம்மனிதருக்கு தான் செய்த அருட்கொடைகளை எடுத்துக் காட்டுவான். அவரும் அதை உணர்ந்து கொள்வார். அவரிடம் ‘எனக்காக என்ன செய்தாய்?’ என இறைவன் கேட்பான். ‘உனக்காகப் போர் செய்தேன். அதனாலேயே கொல்லப்பட்டேன்’ எனக் கூறுவார். அப்பொழுது இறைவன் ‘நீ பொய் சொல்கிறாய், நீ வீரன் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய். அவ்வாறு கூறப்பட்டு விட்டது’ என்று கூறுவான். பிறகு (மலக்குகளை அழைத்து) அம்மனிதரை நரகில் முகம் குப்புற தள்ளும்படி கட்டளையிடுவான்…” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ”ரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
    மேற்கண்ட ஹதீஸின் மூலம் தூய்மையான உள்ளம் எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். படைத்த இறைவனுக்கு ஒரு மனிதன் செய்யக்கூடிய அதிகபட்ச தியாகமாக என்ன செய்ய முடியுமோ, அந்த தியாகத்தை, அதாவது உயிரை அல்லாஹ்வின் பாதையில் இழந்துள்ளார். இதை யாரும் மறுக்க முடியாது. அவ்வளவு எளிதாக யாரும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்தபோது எண்ணம் சரியில்லாத காரணத்தினால் அவர் நரகத்திற்கு செல்வதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. ஆனால், நாம் உணர்ந்திருக்கிறோமா? என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
    இன்று பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய இறைவனுக்கு செய்ய வேண்டிய நல்ல அமல்களை பேருக்காகவும், புகழுக்காகவும், பணத்திற்காகவும் செய்யக்கூடிய பரிதாபகரமான சூழ்நிலைகளை பார்க்கிறோம். அவர்கள் இது குறித்து எந்தவிதமான வருத்தமும் இல்லாமல் மிக எளிதாக செயல்படுகிறார்கள். இவர்களைப் பற்றித் தான் படைத்த இறைவன் தன் திருமறை குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.
    எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும். அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)
    எனவே, நம்முடைய அமல்களை தூய எண்ணத்துடன் செய்ய செய்யவேண்டும். மற்றவர்கள் பார்ப்பதற்காக, புகழ்வதற்காக என்று செயல்பட்டால் மறுமையில் நாம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டும். வல்ல இறைவன் நம் அனைவரையும் தூய்மையான எண்ணங்களுடன் வாழ கிருபை செய்வானாக! ஆமீன்.


Saturday, November 6, 2010

பாக். மசூதியில் குண்டு வெடிப்பு 25 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானில் வடமேற்கு மாகாணத்தில் உள்ள மசூதியில் நேற்று குண்டுவெடித்ததில், 25 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின், தரா ஆத ம்கேல் அருகே அக்கோர்வால் கிராமத்தில் உள்ள மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நேற்று ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த பயங்கர சம்பவத்தில், 25 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்து பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

‌கியூபா‌வி‌ல் ‌விமான ‌‌விப‌த்து: 68 பே‌ர் ப‌லி


கியூபா‌வி‌ல் ‌விமான‌ம் ஒ‌ன்று ‌விப‌த்து‌க்கு‌ள்ளான‌தி‌ல் 28 அய‌ல்நா‌ட்டப‌ய‌ணிக‌ள் உ‌ள்பட 68 பே‌ர் உ‌யி‌‌ரிழ‌ந்தன‌ர்.

சா‌ன்டியாகோ நக‌‌ரி‌‌ல் இரு‌ந்து ஹவானா நோ‌க்‌கி செ‌ன்று கொ‌‌ண்டிரு‌ந்தபோதுதா‌ன் ‌விமான‌ம் ‌‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌‌கி வெடி‌த்து ‌சித‌றியது. 

ஏரோ க‌ரீ‌பிய‌ன் ‌‌நிறுவன‌த்‌தி‌ற்கு சொ‌ந்தமான அ‌‌ந்த விமான‌் சா‌ன்டியாகோ ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்ட ‌சி‌றிது நேர‌த்‌தி‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப கோளாறு ஏ‌ற்ப‌ட்டு சவு‌திமா‌ல் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் ‌விழு‌ந்தது.

விமான‌த்‌தி‌ல் இரு‌ந்த 28 அய‌ல்நா‌ட்டு பய‌ணிக‌ள் உ‌ள்பட 68 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். ‌மீ‌ட்பு ப‌ணி‌யி‌ல் ‌‌கியூபா அ‌திகா‌ரிக‌ள் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

Thursday, November 4, 2010

50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவிற்குள் செல்லும் முன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது: 

இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்பதற்கு, நான் அறிந்த வரையில் மூன்று கோட்பாடுகள் உள்ளன.

Evolution Theory: தற்செயலாக வந்திருக்க வேண்டும் (Natural Selection + Random Mutations).
Creation Theory: கடவுள் படைத்தார்.
Intelligent Design Theory: பதிவில் பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள் மேலே காணும் இந்த பதிவின் தலைப்பு என்னுடையதல்ல. பிரிட்டனின் பிரபல தினசரியான "The Guardian" தன்னுடைய கட்டுரை ஒன்றுக்கு வைத்த தலைப்பு தான் அது (Half of Britons do not believe in evolution, survey finds).   

சென்ற ஆண்டு, சார்லஸ் டார்வினின் "Origin of species" புத்தகம் வெளிவந்து 150 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டும், டார்வின் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டும் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் பிரதிபலிப்பு தான் "தி கார்டியன்" பத்திரிகையின் இந்த தலைப்பு.

பிரிட்டனின் மதிப்புமிக்க நிறுவனமான காம்ரஸ் (ComRes), "Rescuing Darwin" என்ற தலைப்பில் நடத்திய இந்த ஆய்வு பல ஆச்சர்யமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. பரிணாமவியலாளர்களுக்கோ இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை கொடுத்துள்ளன.

பரிணாமம் தொடர்பாக ஆய்வில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளையும் அதற்குண்டான பதில்களையும் இந்த பதிவில் பார்ப்போம். ஆய்வு முடிவுகளை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

1) பரிணாமத்தை இரண்டாக பிரித்து கொண்டார்கள், ஆத்திக பரிணாமம் மற்றும் நாத்திக  பரிணாமம் (Theistic Evolution and Atheistic Evolution).  

a) மக்கள் முன் வைக்கப்பட்ட முதல் கருத்து,  

பரிணாமம் என்ற யுக்தியை பயன்படுத்தி இறைவன் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தார். (Theistic Evolution)

மேலே பார்த்த கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு மக்கள் சொன்ன பதில்கள், 

நிச்சயமாக உண்மை (Definitely True) - 12%
ஏறக்குறைய உண்மை (Probably True) - 32% 
ஏறக்குறைய உண்மையில்லை (Probably Untrue) - 20%
நிச்சயமாக உண்மையில்லை (Definitely Untrue) - 26%         
தெரியாது (Don't Know) - 10%

ஆக, சுமார் 44% மக்கள், "பரிணாமம் உண்மைதான்...ஆனால் அதற்கு பின்னால் இறைவன் இருக்கின்றான்/இருக்கலாம்" என்று நம்புபவர்களாக இருக்கின்றனர்.


b) அடுத்ததாக மக்கள் முன் வைக்கப்பட்ட கருத்து,

இறைநம்பிக்கை என்பது அவசியமில்லாதது மற்றும் அசட்டுத்தனமானது என்ற கருத்தை பரிணாமம் உருவாக்குகின்றது (Atheistic Evolution).          

இதற்கு மக்கள் சொன்ன பதில்கள்,

நிச்சயமாக உண்மை - 13%
ஏறக்குறைய உண்மை - 21% 
ஏறக்குறைய உண்மையில்லை - 27%
நிச்சயமாக உண்மையில்லை - 30%         
தெரியாது - 10%

ஆக, சுமார் 57% மக்கள், "பரிணாமம் இறைவனை பொய்பிக்காது, மறுக்காது" என்று நம்புகின்றனர்.

இதற்கு அடுத்து வந்த மக்கள் கருத்து தான் பரிணாமவியலாளர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது.   

அப்படி என்ன கேள்வி, அதற்கு அப்படி என்ன பதில் என்று கேட்கின்றீர்களா?....தொடர்ந்து படியுங்கள்.


2) பரிணாமத்திற்கு (Evolution Theory) மாற்றாக கருதப்படும் ஒரு கோட்பாடென்றால் அது "Intelligent Design" கோட்பாடு.

இந்த உலகில் உயிரினங்கள் தற்செயலாக (Natural Selection + Random Mutation) வர வாய்ப்பில்லை, இவ்வளவு சிக்கலான உடலமைப்பை கொண்ட உயிரினங்கள் இருக்கிறதென்றால், அதற்கு ஒரு அறிவார்ந்த சக்தி (Intelligent Designer) தான் காரணமாய் இருக்க வேண்டுமென்று வாதிடுகின்றது இந்த கோட்பாடு.

டெக்னிகலாக சொல்லுவதென்றால், இந்த பிரபஞ்சம் மற்றும் உயிரினங்களின் குறிப்பிடத்தக்க தன்மைகளை விளக்க இயற்கை தேர்வு (Natural Selection) ஒத்துவராது, ஒரு அறிவார்ந்த சக்தி பின்னணியில் இருக்கின்றது என்ற விளக்கமே சிறந்தது என்று கூறுகின்றது இந்த கோட்பாடு.

The theory of intelligent design holds that certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not an undirected process such as natural selection--- Centre for Intelligent Design. 

இதனை படைப்பு கோட்பாட்டோடு (Creation Theory) குழப்பிக்கொள்ள கூடாது.

படைப்பு கோட்பாடென்பது, கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்று கூறும் கோட்பாடு. Intelligent Design கோட்பாட்டை பொறுத்தவரை, கடவுள் என்ற வார்த்தையை அது உபயோகிக்காது, புத்திசாலித்தனமான சக்தி என்றே குறிப்பிடும். அது போல குரான், பைபிள் போன்றவற்றை நிரூபிக்கவும் முயலாது.

இதனை பின்பற்றுபவர்களை பொறுத்தவரை, இந்த சிக்கலான உலகம், நிச்சயம் தற்செயலாக வர வாய்ப்பில்லை, இந்த சிக்கலான வடிவமைப்பிற்கு பின்னால் ஒரு "Intelligent Designer"  இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள். 

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்த உலகின் உருவாக்கத்திற்கு பின்னால் ஒரு புத்திசாலித்தனமான சக்தி இருக்கிறதென்பதை தர்க்க ரீதியாக நிரூபிக்க முயல்பவர்கள் (Intelligent design logically implies a designer).
  
இந்த கோட்பாடை அறிவியலாக பரிணாமவியலாளர்கள் ஏற்பதில்லை.

படைப்பு கோட்பாடை அறிவியலாக ஏற்க முடியாததால் Intelligent Design என்ற கோட்பாட்டை கொண்டு வந்து அதற்கு அறிவியல் சாயம் பூசி கடவுள் என்ற conceptடை  நிரூபிக்க பார்க்கின்றார்கள் ஆத்திகர்கள் என்பது பரிணாமவியலாளர்களின் குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரிக்கின்றார்கள் Intelligent Design கோட்பாடை ஆதரிக்கும் அறிவியலாளர்கள். இந்த கோட்பாட்டை படைப்பு கோட்பாட்டோடு சேர்த்து விட்டால் இதனை எளிதாக முறியடித்து விடலாம் என்று கருதுவதால் தான் பரிணாமவியலாளர்கள் அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என்று விளக்கம் சொல்கின்றனர் இவர்கள்.     

பரிணாமவியலாளர்களுக்கும், Intelligent Design கோட்பாட்டை ஆதரிப்பவர்களுக்கும் இடையே நடக்கும் கருத்து யுத்தம் அறிவியல் உலகம் நன்கு அறிந்த ஒன்று. 

சரி, விசயத்திற்கு வருவோம்.

பரிணாமவியலாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அந்த விஷயம் என்னவென்றால், சுமார் 51% பிரிட்டன் மக்கள், "Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மை/ஏறக்குறைய உண்மை என்று சொன்னதுதான்.

"Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மை என்று 14% மக்களும், ஏறக்குறைய உண்மையென்று 37% மக்களும் கருத்து தெரிவித்திருக்கின்றார்கள். "Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மையில்லை என்று 19% மக்களும், ஏறக்குறைய உண்மையில்லை என்று 21% மக்களும் கருத்து தெரித்திருக்கின்றார்கள்.

ஆக, பெரும்பாலான மக்கள் Evolution Theoryயை நம்புவதை விட அதற்கு சவாலாக இருக்கக்கூடிய Intelligent Design Theoryயை நம்புகின்றார்கள். இது பரிணாமவியலாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

இதுதான் பரிணாமவியலாளர்களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டார்வின் பிறந்த நாட்டில், அவர் மூலமாக பிரபலமான கோட்பாட்டை பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை.

ஏற்கனவே "Intelligent Design" கோட்பாடை பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த நேரத்தில் இப்படியொரு கருத்து வந்து, எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினால் டென்ஷன் அடையாமல் வேறு என்ன செய்வர்!!!!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிச்சர்ட் டாகின்ஸ், பிரிட்டன் மக்களின் அறிவியல் அறியாமை வருத்தப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பரிணாமவியலாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றால் அமெரிக்க ஆய்வு முடிவுகளோ பேரதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளன.

ஆம், அமெரிக்க மக்களிடம் கடந்த இருபது வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பரிணாமத்திற்கு எதிராகவே உள்ளது.

கடந்த ஆண்டு, தனது பரிணாமம் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பிரபல "Gallup"நிறுவனம், அதற்கு என்ன தெரியுமா தலைப்பு வைத்தது..."டார்வினின் பிறந்த நாளன்று, பத்தில் நான்கு பேரே பரிணாமத்தை நம்புகின்றார்கள்"....எப்படி இருக்கின்றது தலைப்பு?

மொத்தத்தில், பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்களின் பரிணாமத்திற்கு எதிரான இந்த நிலைப்பாடு பரிணாமவியலாளர்களை திணறடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பள்ளிகளில், படைப்பு கோட்பாடையும் (Creation Theory), Intelligent Design கோட்பாட்டையும் சேர்க்க வேண்டுமென்று அதிகரித்து வரும் குரல்களால் பரிணாம உலகம் திக்குமுக்காடுகின்றது.

உதாரணத்திற்கு, பிரிட்டனில், அறிவியல் ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒருவர் படைப்பு கோட்பாட்டை அறிவியல் வகுப்புகளில் பரிணாமத்துடன் சேர்ந்து நடத்த வேண்டுமென்று கூறியிருக்கின்றார்களாம்.

இங்கு நாம் பார்த்த செய்திகள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும். இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு இன்னும் ஆச்சர்யத்தை தரலாம்.

உலகில், படித்த மக்கள் அதிகமுள்ள நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. அங்கு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 28% மக்கள் மட்டுமே பரிணாமத்தை நம்புவதாக தெரியவந்துள்ளது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, இந்த ஆண்டின் துவக்கத்தில், இஸ்ரேல் கல்வித்துறையின் தலைமை விஞ்ஞானியான கவ்ரியல் அவிடல் (Gavriel Avital) பரிணாமத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி மிகுந்த பரபரப்பை உண்டாக்கினார்.

ஆக, உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேலின் பெரும்பாலான மக்கள் பரிணாமத்திற்கு எதிராகவே உள்ளனர். முஸ்லிம் நாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்ட கோட்பாடாகவே அது கருதப்படுகின்றது.

இவ்வளவுக்கும் என்ன காரணம் என்று பரிணாமவியலாளர்கள் கருதுகின்றார்கள்?....

பதில் எளிதானது தான். பரிணாமம், பள்ளிகளில் சரியான முறையில் கற்பிக்கப்படுவதில்லை என்பது முக்கிய காரணங்களில் ஒன்று.

எது எப்படியோ, பரிணாமவியலாளர்கள் முன் மிகப்பெரிய சவால் இருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
Intelligent Design கோட்பாடு குறித்த தகவல்களை தமிழ் படுத்தியதில் சிரமங்கள் இருந்தன. சரியாக மொழி பெயர்த்திருக்கின்றேன் என்றே எண்ணுகின்றேன். என்னுடைய மொழிப்பெயர்ப்பில் தவறு இருப்பதாக கருதும் சகோதரர்கள் சரியான மொழிப்பெயர்ப்பை மறுமொழி வாயிலாக தெரியப்படுத்தவும்.

My sincere thanks to:
1. The Guardian.
2. The Daily Telegraph.
One can download the Rescue Darwin report from:
1. http://www.comres.co.uk/page1657513.aspx


பாபைர பின்பற்றுவோம் வாருங்கள்







கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
இது பாபர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயில்
பாபர் நாமா எனும் வரலாற்று புத்தகம் இதை பதிவு செய்துள்ளது.


ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார். இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது. பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு. பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள். ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது. பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.

இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல; மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும். மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை. ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை. இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!
என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
source : நான் தான் பாபரி பேசுகின்றேன் -ஆடியோ இலக்கிய சோலை வெளியீடு   

Wednesday, November 3, 2010

சர்வதேச கண்டனத்தைத் தொடர்ந்து கல்லடிக்குப் பதில் தூக்கில் போடப்படும் ஈரான் பெண்

டெஹ்ரான்: சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து ஈரான் பெண் [^] சகினே முகம்மதி அஷ்தியானிக்கு கல்லால் அடித்து மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குப் பதில் தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்ற ஈரான் அரசு [^] உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்காதல் தொடர்பாக கைதானவர் இந்தப் பெண்மணி. இவரை கல்லால் அடித்து மரண தண்டனையை நிறைவேற்ற ஈரான் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து உலகம முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து தற்போது அஷ்தியானிக்கு தூக்குத் தண்டனையாக மரண தண்டனை மாற்றப்பட்டுள்ளது.

தப்ரியாஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக ஜெர்மனியைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதைத் தொடர்ந்து தனது கடைசி ஆசையை அஷ்தியானி சிறை நிர்வாகிகளிடம் தெரிவித்தார் என்றும் கடைசி முறையாக தனது அறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை சந்தித்து அவர்களை கட்டித் தழுவி விடை பெற்றார் என்றும் அத்தகவல் கூறுகிறது.

கள்ளக்காதல் கொண்டு தனது கணவரைக் கொலை செய்ததாக இந்தப் பெண் மீது குற்றம் [^] சாட்டப்பட்டு தண்டனை தரப்பட்டுள்ளது. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஆனால் தனது தாயார் கள்ளக்காதலில் ஈடுபடவில்லை என்று அவரது மகன் திட்டவட்டமாக கூறியிருந்தார். இருப்பினும் அதை கோர்ட் ஏற்கவில்லை.

ஏற்கனவே அஷ்தியானிக்கு கோர்ட் தீர்ப்புப்படி 99 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டு முதல் தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2010/11/03/iran-woman-death-sentence-hanging-stoning.html

Tuesday, November 2, 2010

RtÛN- ‡£op›¦£‹‰ Y£• TÍL· ŒÁ¿ ÙN¥X ÚLÖ¡
“‰ehz fWÖU UeL· NÖÛX U½V¥

‡£eLÖy|T·¸, SY.2-

RtÛN- ‡£op›¦£‹‰ Y£• TÍL· “‰ehz›¥ ŒÁ¿ ÙN¥XÖRÛR Lz†‰ ÚS¼¿ A‹R fWÖU UeL· NÖÛX U½V¦¥ D|TyP]Ÿ.

NÖÛX U½V¥

RtÛN- ‡£op ÙS|tNÖÛX›¥ E·[‰ “‰ehz fWÖU•. r¼¿ YyPÖW fWÖUjLÛ[ ÚNŸ‹R UÖQY, UÖQ«L·, ÙRÖ³XÖ[ŸL· RjL· T·¸, ÚYÛXLºeh ÙN¥X Cjh·[ TÍ Œ¿†R†‡¥ C£‹‰ RÖÁ TÍ H\ ÚY|•. B]Ö¥ C‹R TÍ Œ¿†R†‡¥ TÍL· ˜Û\VÖL ŒÁ¿ ÙN¥Y‡¥ÛX. AÚRÚTÖX RtÛN, ‡£op, ‡£ÙY¿•”¡¥ C£‹‰ Y£• TÍLº• “‰ehzeh Y£• TV‚LÛ[ H¼½eÙLÖ·Y‡¥ÛX. CR]Ö¥ T·¸, L¥©¡ UÖQY, UÖQ«L· TV‚L· h½†R ÚSW†‡¥ RjL· T‚Lºeh ÙN¥X ˜zVÖU¥ AY‡eh E·[ÖfÁ\]Ÿ. C‹R ŒÛX›¥ ‡£op U¼¿• RtNÖ±¡¥ C£‹‰ Y£• AÛ]†‰ TÍLº• “‰ehz TÍ Œ¿†R†‡¥ ŒÁ¿ ÙN¥X ÚY|• GÁTÛR Y¦¿†‡ ÚS¼¿ A‹R fWÖU UeL· NÖÛX U½V¦¥ D|TyP]Ÿ. ”R©Ÿ JÁ½V UÖŸepÍy L•ïÂÍ| Lyp ÙNVXÖ[Ÿ LQÁ, UÖRŸ NjL• NÖŸ‘¥ R–²oÙN¥« BfÚVÖŸ NÖÛX U½V¨eh RÛXÛU RÖjf]Ÿ. CR]Ö¥ 11/2 U‚ÚSW†‡¼h• ÚUXÖL A‹R Th‡›¥ ÚTÖehYW†‰ TÖ‡eLTyP‰.

ŒÁ¿ ÙN¥X SPYzeÛL

RtÛN AWr ÚTÖehYW†‰ LZL ÚLÖyP ÚUXÖ[Ÿ f£ÐQ™Ÿ†‡, fÛ[ ÚUXÖ[Ÿ YÇÈWÚY¨, ‰YÖehz fÛ[ ÚUXÖ[Ÿ UÚ]ÖLŸ, RtÛN RÖp¥RÖŸ TÖ“, ÚTÖ§Í CÁÍÙTePŸ SPWÖ^Á BfÚVÖŸ NÖÛX U½V¦¥ D|TyPYŸL¸P• ÚTorYÖŸ†ÛR SP†‡]Ÿ. AÚTÖ‰ «ÛW° TÍL· R«W U¼\ TÍL· ŒÁ¿ ÙN¥X SPYzeÛL G|eL A‡LÖ¡L· E¿‡ A¸†R]Ÿ. CÛR ÙRÖPŸ‹‰ NÖÛX U½V¥ ÚTÖWÖyP• ÛL«PTyP‰.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=604426&disdate=11/2/2010&advt=2





DWÖe SÖyz¥ AÙU¡eL WÖ„Y•
f½ÍRY ÚLÖ«¨eh· “h‹R ˆ«WYÖ‡LºPÁ ‰TÖef NÛP
49 ÚTŸ T¦, 56 ÚTŸ LÖV•http://www.dailythanthi.com/article.asp?NewsID=604476&disdate=11/2/2010
TÖeRÖ†, SY.2-

DWÖe SÖyz¥ TÖeRÖ† SL¡¥ f½ÍRY ÚLÖ«¨eh· “h‹R ˆ«WYÖ‡LºPÁ AÙU¡eL DWÖe WÖ„Y• ‰TÖef NÛP SP†‡V‰. C‡¥ 49 ÚTŸ T¦VÖ]ÖŸL·. 56 ÚTŸ LÖV• AÛP‹R]Ÿ.

ÙT ÛL‡LÛ[ «|«eL ÚLÖ¡

DWÖe RÛXSLŸ TÖeRÖ†‡¥ E·[ A¥ÙLÖšRÖ ˆ«WYÖ‡L· ÙP¦ÚTÖÁ ™X• DWÖe A‡LÖ¡LÛ[ ÙRÖPŸ“ ÙLց| pÛ\›¥ AÛPeLTy| C£eh• ÙT ˆ«WYÖ‡LÛ[ «|«eh•Tz ÚLy|eÙLցP]Ÿ. CR¼h AWNÖjL• U¿†‰ «yP‰. CÛR ÙRÖPŸ‹‰ ˆ«WYÖ‡L· TÖeRÖ†‡¥ E·[ Tjh UÖŸeÙLy LyzP†‡Á —‰ RÖehR¥ SP†‡]ÖŸL·.

Ajh TÖ‰L֐“eh ŒÁ\ ÚTÖ§NÖŸ AYŸLÛ[ «Wyz Az†R]Ÿ. ˆ«WYÖ‡L· Ajh C£‹‰ R‘ Kz A£f¥ E·[ SL¡Á –LÙT¡V f½ÍRY ÚLÖ«¨eh· “h‹R]Ÿ. AYŸL· ‰TÖefVÖ¥ ryPTzÚV E·Ú[ îÛZ‹R]Ÿ. C‡¥ TX f½ÍRYŸL· T¦VÖ]ÖŸL·.

pÛ\‘z†R]Ÿ

Ajh ‘WÖŸ†RÛ] SP†‡V 120 f½ÍRYŸLÛ[ pÛ\‘z†R]Ÿ. fyP†RyP 4 U‚ ÚSW• AYŸL· pÛ\‘zeLTyP ŒÛX›¥ ÚRYÖXV†‰eh· C£‹R]Ÿ.

C‰T¼½V RLY¥ fÛP†R‰• DWÖe U¼¿• AÙU¡eL WÖ„Y ®WŸL· Ajh «ÛW‹‰ ÙNÁ\]Ÿ. CÛR ÙRÖPŸ‹‰ ˆ«WYÖ‡Lºeh•, WÖ„Y†‰eh• CÛPÚV ‰TÖef NÛP H¼TyP‰.

7 p¿YŸL· E·TP 49 ÚTŸ T¦

C‹R N•TY†‡¥ ÙUÖ†R• 37 f½ÍRYŸL· T¦VÖ]ÖŸL·. WÖ„Y• SP†‡V RÖehR¦¥ 5 ˆ«WYÖ‡Lº•, ˆ«WYÖ‡L· SP†‡V RÖehR¦¥ 7 WÖ„Y ®WŸLº• T¦VÖ]ÖŸL·. T¦VÖ]YŸL¸Á ÙUÖ†R G‚eÛL 49 Bh•. 56 f½ÍRYŸLº•, 15 ˆ«WYÖ‡Lº• LÖV• AÛP‹R]Ÿ.

T¦VÖ]YŸL¸¥ 7 ÚTŸ p¿YŸLº•, 5 ÚTŸ ÙTLº•, 2ÚTŸ TÖ‡¡VÖŸLº• BYÖŸL·. LÖV• AÛP‹RYŸL¸¥ 10 ÚTŸ ÙTLº•, 8 ÚTŸ p¿YŸLº•, J£YŸ TÖ‡¡VÖ£• BYÖŸL·.

8 ÚTŸ ÛL‰

NÛP›Á ˜z«¥ 8 ˆ«WYÖ‡L· ÛL‰ ÙNšVTyP]Ÿ. ˆ«WYÖ‡L¸P• TQVeÛL‡VÖL ‘zTy| C£‹RYŸL· «|«eLTyP]Ÿ.


Monday, November 1, 2010

ரிஸானாவுக்கு கருணை கோரி பிரார்த்தனைகள்


ரிஸானாவின் குடும்பத்தினர் (ஆவணப்படம்-2007)
ரிஸானாவின் குடும்பத்தினர்(ஆவணப்படம்-2007)சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய போது குழந்தை ஒன்றின் மரணத்திற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணுக்கு கருணை கிட்ட வேண்டுமெனக் கோரி பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.
இலங்கையின் கிழக்கே மூதூர் சாபி நகரைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்ற இந்தப் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு கிட்ட வேண்டுமென மூதூர் பொது மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை வழிபாடுகளை நடத்தியுள்ளனர்.
இதேவேளை சவுதி அரேபியாவில் ரிஸானாவின் பராமரிப்பிலிருந்த போது உயிரிழந்ததாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரிடமும் ரிஸானாவுக்கு மன்னிப்பளிக்குமாறு கோரும் மக்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவினையும் இலங்கையில் உள்ள சவூதி தூதரகத்தின் மூலம் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளையும் அந்த மக்கள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குழந்தையைக் கொன்றதாக ரிஸானா மீது குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2007ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளிக்கும் பட்சத்தில் மட்டுமே ரிஸானாவின் விடுதலை சாத்தியமாகும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் நடப்பது என்ன?

புதுடெல்லி: உயர்ந்த மலைகள், வானத்தை தொட முயற்சிக்கும் அளவில் மரங்கள், அடர்ந்த காடுகள், ஓடைகள், உலகின் மிகப் பிரபலமான தால் ஏரி, அருவிகள், இமய மலை, பனிமலைகள்... இப்படி எந்தப் பக்கம் பார்த்தாலும் இயற்கை வளம் கொட்டிக் கிடக்கும் இடம் காஷ்மீர். உள்நாட்டினரை மட்டுமன்றி வெளிநாட்டினரையும் கவர்ந்த இடம். இயற்கையின் அமைதி கொட்டிக் கிடந்தாலும், காஷ்மீரில் நிலைமை வேறு.

தீவிரவாதிகள் ஊடுருவல், துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல், பிரிவினைவாதிகளின் ஆர்ப்பாட்டம்... இவற்றை தாண்டி இப்போது பொதுமக்களையும் தூண்டிவிட்டு குளிர்காயும் போக்கு அதிகரித்துள்ளது. மக்களை ‘மூளை சலவை‘ செய்துவிட்டதன் விளைவு, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பிரச்னை எல்லை கடந்து சென்றுவிட்டது.

கடந்த ஜூன் மாதம் பிரிவினைவாதிகள் ஊர்வலம் நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது. கலவர கும்பலை விரட்டி அடிக்கும் போது, கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் பயந்து ஓடி ஆற்றில் குதித்திருக்கிறான். ஆற்றில் மூழ்கி அவன் பரிதாபமாக இறந்தான். இதுதான் தொடக்கம். சிறுவன் உடலை ஊர்வலமாக எடுத்து சென்ற பிரிவினைவாதிகள், மீண்டும் பொதுமக்களை தூண்டி விட கலவரம் பெரிதானது.
அதன்பின் கடந்த 4 மாதங்களாக பல ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மீண்டும் கல்வீச்சு, அலுவலகங்களுக்கு தீ வைப்பு, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு, தடை உத்தரவு, பரிதாப பலி என அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன. இவற்றுக்கு எல்லாம் காரணம், ‘காஷ்மீர் யாருக்கு சொந்தம்‘ என்ற கேள்விதான்.

காஷ்மீருக்கு 4 பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ‘காஷ்மீர் மக்கள்‘. ஒட்டுமொத்த காஷ்மீர் நிலம் இப்போது 3 நாடுகளிடம் பகுதி பகுதியாக பிரிந்து கிடக்கிறது. இதில் இந்தியாவிடம் 43 சதவீத காஷ்மீர் உள்ளது. இதில் ஜம்மு, காஷ்மீர், லடாக், சியாசின் பனிமலைப் பகுதிகள் அடங்கும். பாகிஸ்தானிடம் 37 சதவீதம் உள்ளது. இதில் ஆசாத் காஷ்மீர், கில்ஜிட்டின் வடக்குப் பகுதிகள், பல்திஸ்தான் அடங்கும். சீனாவின் கட்டுப்பாட்டில் 27 சதவீதம் காஷ்மீர் பகுதி உள்ளது. இதில் அக்ஷய் சின் (கடந்த 1962ம் ஆண்டு இந்தியாவுடனான போரின் போது சீனா கைப்பற்றியது.), காரகோரம் அடங்கும்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் காஷ்மீர் என்பது இந்தியாவின் நிலை. ஆனால், பிரச்னைக்குரிய பகுதி காஷ்மீர். அதன் அந்தஸ்து குறித்து முடிவு செய்ய வேண்டியது காஷ்மீர் மக்கள்தான் என்கிறது பாகிஸ்தான். இந்த இரண்டுக்கும் இடையில், அக்ஷய் சின் நிலப்பகுதி திபெத்தின் ஒரு பகுதிதான். திபெத் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அக்ஷன் சின் பகுதியும் எங்களுக்குதான் சொந்தம் என்கிறது சீனா.
இந்தியாவின் காஷ்மீரை, பாகிஸ்தான், சீனா நாடுகள் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்துக் கொண்டன. உண்மையில் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் வேறு மாதிரி சொல்கின்றனர்.

‘காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமில்லை, பாகிஸ்தானுக்கும் சொந்தமில்லை. அது தனி நாடாக அறிவிக்க வேண்டும்‘ என்று சொல்கின்றனர். இவ்வளவு இடியாப்ப சிக்கலுக்கு நடுவில் தவிப்பது காஷ்மீர் மக்கள்தான். பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐ.யும் காஷ்மீரில் தீவிரவாதிகளை தொடர்ந்து ஊடுருவ செய்து பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பயந்து காஷ்மீர் பண்டிட்டுகள் (இந்துக்கள்), முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து விட்டனர். அவர்கள் சொந்த நாட்டுக்குள்ளே அகதிகள் போல் வாழ்கின்றனர். டெல்லியில்தான் பெரும்பாலான காஷ்மீர் முஸ்லிம்களும் பண்டிட்களும் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்ந்த மத்திய அரசு, அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பியது.

அதன்பின் 8 அம்ச திட்டத்தை அறிவித்தது. இப்போது, காஷ்மீரில் அனைத்து பிரிவினருடன் பேச்சு நடத்த 3 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்துள்ளது. இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்றால் காஷ்மீர் தால் ஏரியில் நாமும் பயமில்லாமல் உல்லாச பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
பிரிவினைவாதிகள் கேட்பது என்ன?

காஷ்மீரை தனியாக கொடுத்து விடவேண்டும்‘ என்பதில் 2 பிரிவினைவாத அமைப்புகள் பிடிவாதமாக உள்ளன. இந்த அமைப்புகள்தான் அடிக்கடி போராட்ட அறிவிப்பை வெளியிட்டு மக்களை தூண்டி விடுகிறது. இதில் முக்கியமாக இருப்பது பிரிவினைவாத கொள்கை உடைய ஹுரியத் மாநாட்டு கட்சி. 

இதன் தலைவர் சயத் அலி ஷா கிலானி. மிதவாத கொள்கை உடையவர் மிர்வெஸ். இவர் தலைமையில் ஒரு இயக்கம் உள்ளது. இவரும் காஷ்மீரை தனியாக கேட்கிறார்.  ஆனால், தனி அதிகாரம் வேண்டும் என்கிறார். தவிர ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் (ஜேகேஎல்எப்) யாசின் மாலிக் என்பவரும் காஷ்மீர் வேண்டும் என்று மக்களை திரட்டி வருகிறார். இவர்களுடைய ஆர்ப்பாட்டங்களால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதுதான் மிச்சம்.

3 பேர் குழு அமைப்பு காஷ்மீரில் எதிர்ப்பு

காஷ்மீர் இளைஞர்கள், பெண்கள், அரசியல் கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் என்று ஒன்று விடாமல் எல்லோருடனும் பேச்சு நடத்த மத்திய அரசு 3 பேர் குழுவை அமைத்துள்ளது. இதில் பிரபல பத்திரிகையாளர் திலீப் பட்கோங்கர், கல்வியாளர் ராதா குமார், சி.ஐ.சி. முன்னாள் உறுப்பினர் எம்.எம்.அன்சாரி ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜேகேஎல்எப் தலைவர் யாசின் மாலிக் கூறுகையில், “பள்ளிகள், கல்லூரிகளின் பிரச்னையா இது. கல்வியாளர்கள் குழுவை அமைப்பதற்கு? அரசியல் ரீதியாக தீர்வு காணும் திறன் படைத்தவர்களை குழுவில் நியமிக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார். http://www.dinakaran.com/specialdetail.aspx?id=19273&id1=22

ஈராக்கில் சர்ச்சிற்குள் பிணைக்கைதிகளாக இருந்த 100 பேர் விடுவிப்பு

பாக்தாத்: ஈராக்கில் சர்ச்சிற்குள் புகுந்த அல்கொய்தா பயங்கரவாதிகள், பெண்கள், குழந்தைகள் உள்பட 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஈராக்கின் மத்திய பாக்தாத் நகரில் கராடா பகுதியில் உள்ளது சையத்அல்- நஜாஹ் சர்ச் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அப்போது சர்ச்சிற்குள் திடீரென ஆயதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் அவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். சம்பவம் அறிந்த பாதுகாப்புப்படையினர் சர்ச்சினை முற்றுகையிட்ட போது அவர்கள் தாங்கள் பிடித்துள்ள பிணைக்கைதிகளை கொன்றுவிடுவதாகவும், அவர்களை விடுவிக்க ‌வேண்டுமெனில் ஈராக் , எகிப்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அல்-கொய்தாவினர் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இ‌தனை அல்-பஹாதியா டி.வி. செய்தி ஒளிபரப்பியது. இதுகுறித்து ஈராக் உள்துறை அமைச்சகம் கூறுகையில், சர்ச்சில் முதலில் துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் ஈராக்கிய டி.வி. சேனல் செய்தி வெளியிட்டது. பிறகு தான் சர்ச்சில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதும் அங்கு பெண்கள்,குழந்தைகள் உள்பட 100 பேரை பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருப்பதும் தெரி்யவந்தது என கூறியுள்ளது. இந்நிலையில் ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளர் காசிம் அல-மெளசாவி தெரிவிக்கையில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கி்ச்சண்டையில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 37 அப்பாவி மக்கள் பலியாயினர். இந்த சண்டைக்குப்பின் சர்ச்சில் பிணைக்கைதிகளாக இருந்த 100 பேர் மீட்‌கப்பட்டனர் என்றார்.http://www.dinamalar.com/News_Detail.asp?Id=118105

மக்கா, மதீனாவில் உடல் நல பாதிப்பால் 29 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் மரணம்

ஸ்ரீநகர்: ஹஜ் யாத்திரை சென்ற 29 இந்திய யாத்ரீகர்கள், பல்வேறு உடல் நல பாதிப்பு காரணமாக மக்காவிலும், மதீனாவிலும் மரணமடைந்துள்ளனர்.

அடுகத்த மாதம் ஹஜ் புனித யாத்திரை தொடங்குகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து மக்காவுக்கும், மதீனாவுக்கும் யாத்ரீகர்கள் குவிந்து வருகின்றனர்.

இப்படி வந்துள்ள இந்தியர்களில் 29 பேர் இதுவரை இறந்துள்ளனர். அனைவரும் பல்வேறு உடல் நல பாதிப்புகளால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர்களில் 8 பேர் உ.பியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லைhttp://thatstamil.oneindia.in/news/2010/10/31/indians-haj-pilgrims-makkah-madina.html