Saturday, April 30, 2011

உலகின் மிக நீளமான பேருந்து !



பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பேருந்து தனது பயணத்தை தொடங்கியது.

பிரேசிலில் பிரபல நிறுவனம் பி.ஆர்.டி என்ற உலகின் நீளமான பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீற்றர் நீளமுள்ள அந்த பேருந்தில் 250 பேர் பயணிக்கலாம்.

இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பது தான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பேருந்தின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் மொத்தம் 24 பேருந்துகளை இந்நிறுவனம் இயக்க உள்ளது.

மேலும் மணிக்கு 28 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த பேருந்துகள் தயாரிக்கப்படுவதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.



தனது பிறப்புச் சான்றிதழை வெளியிட்டார் ஒபாமா.


தனது பிறப்புச் சான்றிதழை வெளியிட்டார் ஒபாமா.வாஷிங்டன் - அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, அமெரிக்காவில் பிறந்தவரல்ல என்றும் 
வெளிநாட்டில் பிறந்த ஒருவர் அமெரிக்காவின் முறையான அதிபராக இருக்க முடியாது என்ற சர்ச்சையை எதிர்க்கட்சிகள் கிளப்பின. இருப்பினும் தாம் அமெரிக்க மாநிலத்தில் தான் பிறந்ததாக ஒபாமா விளக்கமளித்தார். எனினும் அந்த சர்ச்சை ஒயாத நிலையில் தனது பிறப்புச் சான்றிதழை  வெள்ளை மாளிகை இணையத் தளத்தில் ஒபாமா நேற்று வெளியிட்டார்.
அமெரிக்காவின் ஹாவாய் மாநிலம், ஹானோலுலு என்ற இடத்தில் ஒபாமா பிறந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. அப்பிறப்புச் சான்றிதழில் உள்ளாட்சி அதிகாரியும், ஒபாமாவின் தாயாரும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவில் காரத்தை குறைத்தால் எடை குறையும்


உணவில் சிவப்பு மிளகாய் தூளை மிதமாக சேர்த்துக் கொண்டால் பசி குறைந்து உணவின் அளவும் குறையும். அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்று இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

பசி ஏற்பட்டால் அளவுக்கு அதிகமான அளவு உணவு சாப்பிடுவது வழக்கம். அதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்கள் வந்து சேரும். பொதுவாக சதை போட விரும்பும் ஒல்லியானவர்கள் உணவுக்கு முன் பசியைத் தூண்டும் பானங்களை குடிப்பதுண்டு.

அதற்கு நேர்மாறாக உடல் பருமனாக இருப்பவர்கள் உணவின் அளவைக் குறைக்க இயற்கையான வழி குறித்து இங்கிலாந்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் சராசரி எடை கொண்ட 25 பேரில் மசாலா உணவு ரசிகர்கள், அதற்கு எதிரானவர்கள் என 2 குழுவினர் தெரிவு செய்யப்பட்டனர்.

மசாலா உணவு விரும்பிகளுக்கு 1.8 கிராமும், விரும்பாதவர்களுக்கு 0.3 கிராம் சிவப்பு மிளகாய் தூள் உணவுக்கு முன் தரப்பட்டது. 6 வாரங்களுக்கு பிறகு நடந்த சோதனையில் மிளகாய் தூள் குறைவாக சேர்த்தவர்களுக்கு பசி குறைந்ததும், அதிகம் சேர்த்தவர்களுக்கு பசி அதிகரித்ததும் தெரியவந்தது.

பொதுவாக உடல் சூட்டை மிளகாய் தூள் அதிகரித்து அதிக கலோரிகளை இழக்கச் செய்வதால் அதிகமான அளவு பசி ஏற்படும். இதை மிளகாயில் உள்ள "கேப்சைசின்" என்ற பொருள் செய்கிறது. மிளகாய் தூளின் அளவு குறைந்தால் பசி குறையும். அத்துடன் உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும் என்று லண்டன் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Thursday, April 28, 2011

சிறப்பாக நடந்து முடிந்த(AFFC) கிரிக்கெட் தொடர்ப் போட்டி...

அதிரையில் இன்று (28-04-2010 ) நடந்து முடிந்த கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் (AFFC)அதிரை பிரெண்ட்ஸ் கிரிக்கெட் அணியும் (KCC) கறம்பக்குடி அணியும் இறுதி ஆட்டத்தில் மோதின அதில் (AFFC)அதிரை பிரெண்ட்ஸ் கிரிக்கெட் அணி ரூபாய்12000 பரிசை தட்டிச்சென்றது, இரண்டாம் பரிசு 10000 த்தை கறம்பக்குடிஅணி தட்டிச்சென்றது முன்றாம் பரிசு ரூபாய் 8000 த்தை அதிரை WCC மேலத்தெரு அணி தட்டிச்சென்றது. இந்த தொடர் போட்டியில் சுமார் 46 அணிகள் பங்கு பெற்றது என்பது குறிப்பிடதக்கது.து 

யெமன் நாட்டில் சட்டத்தை மீறும் பிரச்சாரம் துவங்கியது


Jan11YemenProtests_452
ஸன்ஆ:அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி 2 மாதங்களை தாண்டியுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் புதிய வழிமுறைகளை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.இதன் ஒரு பகுதியாக சட்டத்தை மீறும் போராட்டத்தை நேற்று எதிர்ப்பாளர்கள் துவக்கியுள்ளனர்.
இப்போராட்டத்தில் 18 நகரங்கள் பங்கேற்கும் என எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பிரதேசங்களில் கடைகள் திறக்கவில்லை. பள்ளிக்கூடங்களும், அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. இரண்டுவாரம் நீண்ட போராட்டமாக இது அமையும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கி போராடும் மக்களின் கோரிக்கையை புறக்கணித்து ஆட்சியில் தொடரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹை கண்டித்து ஏராளமான அரசு உயர் அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமாச் செய்துள்ளனர்.
அதேவேளையில்,நேற்று யெமனின் பல இடங்களிலும் மோதல்கள் நடந்தேறின. ஏடனில் அரசு எதிர்ப்பாளர்களும்,ராணுவமும் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. டாங்குகளும், ஆயுதங்கள் நிரப்பிய வாகனங்களுடன் ராணுவத்தினர் வந்தனர். அபியானில் ராணுவ பாதுகாப்பு முகாமை தாக்கிய ஆயுத ஏந்தியவர்கள் இரண்டு ராணுவத்தினரை கொலைச் செய்தனர்

ஆப்கானில் எட்டு நேட்டோ படையினரை சுட்டுக்கொன்ற பைலட்


Afghan-air-force-shooting-007
காபூல்:ஆப்கானிஸ்தானில் காபூல் விமானநிலையத்தில் வைத்து எட்டு நேட்டோ படையினரை ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பைலட் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
நேட்டோ படையினருடன் ஏற்பட்ட வாய் தகராறில் ஆப்கான் பைலட் துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் ஒரு காண்ட்ராக்டரும் கொல்லப்பட்டார். உள்ளூர் நேரம் 11 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஸாஹிர் ஆஸ்மி தெரிவிக்கிறார். மேலும் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
ஆனால், எதற்காக துப்பாக்கியால் பைலட் சுட்டார் என்பது தெளிவாகவில்லை என நேட்டோ செய்தித் தொடர்பாளர் மேஜர் கிம் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதிதான் காபூல் விமானநிலையம். ஆனால், தாக்குதலின் பொறுப்பை தாலிபான் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், ஏதேனும் போராளி இயக்கத்திற்கு இந்த சம்பவத்தில் பங்கிருப்பதாக தெளிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போலீஸ் மற்றும் ராணுவத்தில் தாலிபான் போராளிகள் பணியாற்றுவதாக பத்திரிகைகள் கூறுகின்றன.
ஆப்கானின் பாதுகாப்பு பொறுப்பை வெளிநாட்டு ராணுவத்தினர் ஆப்கான் படையினரிடம் ஒப்படைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ள சூழலில் இச்சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த போலீஸ்காரர் ஒருவர் ஆறு அமெரிக்க ராணுவத்தினரை சுட்டுக்கொன்றார். ஃபர்யாப் மாகாணத்தில் இம்மாதம் நான்காம் தேதி எல்லை காவல்துறையில் பணியாற்றிய அதிகாரியொருவர் இரண்டு நேட்டோ ராணுவத்தினரை சுட்டுக்கொன்றார்

எண்டோஸல்ஃபான்:தடை செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ டெல்லியில் தர்ணா


217367_1347563864485_1692987272_590557_5120674_n
புதுடெல்லி:எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடைச் செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் டெல்லி பிரிவு சார்பாக ஜந்தமந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கேரளாவிலும்,கர்நாடகா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்வதற்கு பதிலாக தடை எதிர்க்கும் நிலைப்பாட்டை அரசு மேற்கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்டோர் குற்றஞ்சாட்டினர்.
எண்டோஸல்ஃபான் குறித்து மேலும் ஆய்வறிக்கைகளை காத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக மத்திய அரசு தடைச்செய்ய வேண்டுமென அவர்கள் கோரினர்.
74 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் என்ற கொடூரமான பூச்சிக்கொல்லி மருந்தினால் இந்தியாவில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதனை தடைச்செய்ய மத்திய அரசு தயங்குகிறது. எண்டோஸல்ஃபானை தடைச்செய்ய பிரதமர் முன்வரவேண்டும். தடைக்கான வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் மத்திய விவசாயத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்களின் உயிர்களைவிட எண்டோஸல்ஃபான் நிறுவனத்திற்கும், விவசாயிகளுக்கும் கிடைக்கும் லாபத்திற்கு மேற்கண்ட அமைச்சகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமருக்கு மனு அளித்தனர்.
இப்போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ டெல்லி கன்வீனர் அப்துற்றஷீத் அக்வான் துவக்கிவைத்தார். இப்போராட்டத்தில் அம்பேத்கார் சமாஜ் கட்சியின் தலைவர் தேஜ்சிங், எஸ்.டி.பி.ஐ உ.பி மாநில கன்வீனர் அன்ஸான் இந்தோரி, எஸ்.டி.பி.ஐ டெல்லி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அஸ்லம்,கேரள மாநில பொதுச்செயலாளர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப், இமாம்ஸ் கவுன்சில் உத்தரபிரதேச கன்வீனர் மெளலானா ஷஹ்தாஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்

ஹைதராபாத்தில் கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு


CFI
கோழிக்கோடு:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு மே மாதம் முதல் தேதியில் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறும் என அவ்வமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அனீஸுர்ரஹ்மான் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் நாரோ ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மாநாட்டில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வுச் செய்யப்படுவர். கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பு உருவானது.
நாட்டின் கல்வி வளாகங்களில் நன்மையின் பிரச்சாரகர்களாக மாற முன்மாதிரிகளை மாணவர்கள் தேடுகிறார்கள். ஏகாதிபத்தியமும், ஃபாசிசமும், அரச பயங்கரவாதமும், கறுப்புச் சட்டங்களும் கொடூரத்தை வெளிக்கொணரும் வேளையில் அதனை திருத்தவேண்டிய பொறுப்பை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என அனீஸ்ஸூர்ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்

யானை வரலாறு சுருக்கம்


நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.அத்தியாயம் - 105

அபீஸீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷியின் பிரதிநிதியாக யமனில் ஆட்சி செய்த அப்ரஹா என்பவன், அரேபியர்கள் மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வை ஹஜ் செய்வதையும் அதனை அவர்கள் புனிதப்படுத்துவதையும், மிகவும் தூரமான பகுதிகளிலிருந்தெல்லாம் அங்கு வருவதையும் கண்டபோது ஸன்ஆ என்ற ஊரில் பொரிய சர்ச் ஒன்று கட்டினான்.

ஹஜ்ஜீக்கு செல்லும் அரபியரை அதன் பால் திருப்பிவிட வேண்டும் என்பதற்காக இதைக் கேள்வியுற்றதும் அரபுக் குலங்களில் ஒன்றான பனூ கினானாவைச் சேர்ந்த ஒருவன் இரவில் அந்த சர்ச்சினுள் நுழைந்து அதன் சுவர்களில் மலத்தைத் தேய்த்து விட்டான். இதைக் கேள்வியுற்றதும் அப்ரஹா கொதித்தெழுந்தான். ஆறாயிரம் போர் வீரர்கள் கொண்ட மிகப்பெரும் படையைத் தயார்படுத்தினான். அப்படையில் ஒன்பது யானைகள் இருந்தன. அவற்றில் மிகப்பெரிய யானையைத் தனக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு கஃபதுல்லாஹ்வை இடிப்பதற்காக அப்படையுடன் புறப்பட்டான்.. மக்காவிற்கு அருகே வந்தடைந்ததும் தன் படையைத் தயார்படுத்தி மக்காவிற்குள் நுழைய ஆயத்தமானான். எனினும் அவன் யானை மக்காவை நோக்கிச் செல்லாமல் படுத்துவிட்டது. அவர்கள் யானையை வேறு திசைகளின் பக்கம் திருப்பினால் எழுந்து ஓட ஆரப்பிக்கிறது. மக்காவை நோக்கித் திருப்பினால் படுத்துக்கொள்கிறது. இந்நிலையில் அவர்கள் மீது "அபாபீல்" பறவைக் கூட்டங்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான். அவை நரக நெருப்பில் சூடேற்றப்பட்ட சிறு சிறு கற்களை அவர்கள் மீது எறிந்தன. ஒவ்வொரு பறவையும் கொண்டைக் கடலை அளவிலான மூன்று கற்களைச் சுமந்து வந்தது. ஒன்று அவற்றின் அலகிலும் மற்ற இரண்டு இரு கால்களிலும் இருந்தன. அக்கற்கள் ஒருவன் மீது விழுந்துவிட்டால் அவனுடைய உறுப்புகள் துண்டு துண்டாகி சிதைந்து அவன் அழிந்தேபோவான். அவர்கள் பயந்து ஓடும்போது வழியிலேயே விழுந்து அழிந்தனர்.

அப்ரஹாவின் கதி என்னவெனில், அல்லாஹ் அவன் மீது ஒரு நோயை அனுப்பினான். அதன் காரணமாக அவனது விரல்கள் அழுகி விழுந்தன. ஸன்ஆவை அடைவதற்குல் அந்நோய் அவன் உடல் முழுவதும் பரவி அங்கேயே செத்து மடிந்தான். பிறகு யானைப் படையினருக்கு நேர வேண்டியது நேர்ந்தது பிறகு குரைஷிகள் அச்சமற்றவர்களாக வீடு திரும்பினர். இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் பிறப்பதற்கு ஐம்பது நாள்களுக்கு முன்பு நடைப்பெற்றது.

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்


ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான பாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக 'விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு' என்றான்.
'தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே' என்றேன். அதற்கு ஷைத்தான் 'நான் அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப் போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்க்கம் இலேசானது. அதை கடினமாக்கி விடாதே!' என்றான். அவன் பேச்சில் மயங்கி உறங்கி விட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுது ஷைத்தான் எதிரில் வந்து 'வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது' என்றான்.
நான் தௌபா செய்ய நாடினேன். உடனே ஷைத்தான் 'உன் இளமைப் பருவம் முடியுமுன் அதை முழுமையாக அனுபவி' என்றான்.
நான் 'மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்', என்றேன். அதற்கவன் 'பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாது' என்றான்.
நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில் உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான்.
நான் 'அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய்' என்றேன். 'இல்லை, இல்லை. நீ இரவு படுக்குமுன் துஆ செய்யலாமே' என்றான்.
நான் 'உம்ரா செல்ல நாடியுள்ளேன்' என்றேன்.'நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளு தானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய்' என்றான்.
நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் ' நீ ஏன் பாடல், கவிதைகளை பாடி உன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்?' என்றான்.
நான் 'பாடல் பாடி கூப்பாடு போடுவது ஹராம்' என்றேன். உடனே அவன் 'மார்க்க மேதைகளிடையே இசை, பாடல் குறித்து கருத்து வேற்றுமை உள்ளது' என்றான். 'இசையை ஹராம் என்று கூறும் ஹதீஸ்களை நான் படித்துள்ளேன்' என்றேன். உடனே அவன் ' அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது' என்றான்.
அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் 'என்ன வெட்கப்படுகிறாய்? முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே!' என்றான். 'அந்நியப் பெண்ணை பார்ப்பது நரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன்' என்றேன். அவன் சிரித்து விட்டு 'இயற்கை அழகை கலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டது தான் ' என்றான்.
நான் 'தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன்' என்றேன். உடனே அவன், 'ஏன் நீ தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்?' என்றான். 'என் நோக்கம் இஸ்லாத்தை பிறருக்கு எடுத்து இயம்புவது' என்றேன். உடனே அவன் 'இல்லை உன் நோக்கம் உன்னை எல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன் அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்த வேலையை செய்' என்றான்.
நான் 'இமாம் அஹமது இப்னு ஹன்பல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'அவர் மக்களை குர்ஆன் மற்றும் சுன்னத்தின் பக்கம் அழைத்து என்னை எதிர்த்தார் ' என்றான்.
நான் 'இமாம் இப்னு தைமிய்யாவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்?' என்றேன்.அதற்கு அவன் 'அவருடைய வார்த்தைகள் என் தலையை பிளக்கின்றன.' என்றான்.
நான் 'இமாம் புகாரி எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'அவர் தொகுத்த ஹதீஸ் கிதாப் என் வீட்டில் இருந்தால் என் வீட்டையே கொளுத்தி விடுவேன்' என்று கோபமாகக் கூறினான்.
நான் 'ஸலாவுதீன் அய்யூபி எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'அவரைப் பற்றி பேசாதே. என்னையும், என் தோழர்களையும் கேவலப்படுத்தி, எங்களை மண்ணோடு புதைத்தார்' என வெறுப்போடு கூறினான்.
நான் 'முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்' என இழுத்தேன். அதற்கு அவன், 'நீ என்னை கோபப்படுத்துகிறாய். அவருடைய பேச்சும், எழுத்தும் எரி நட்சத்திரம் போன்று என்னை சுட்டெரிக்கிறது' எனக் கத்தினான்.
நான் 'பிர்அவ்ன் எப்படி? ' என்றேன். அதற்கு அவன் 'அவனுக்கு என் ஆதரவு உண்டு. அவன் வெற்றி பெற விரும்பினேன்' என்றான்.
நான் 'அபு ஜஹ்ல் பற்றி என்ன நினைக்கிறாய்?' எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன், 'அப்படிக் கேளு. நானும், அவனும் உடன் பிறவா சகோதரர்கள்' என்று உற்சாகமாகக் கூறினான்.

நான் 'அபூ லஹப் எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'நாங்கள் என்றென்றும் இணைபிரியாத தோழர்கள்' என்றான்.
நான் 'லெனின் எப்படி?' என்றேன். அதற்கு அவன். 'என் சிறந்த சீடர்;, ஸ்டாலின் என்ற என் சிறந்த தளபதியை உருவாக்கினார்,' என்றான்.
நான் 'மஞ்சள் பத்திரிக்கைகள் பற்றி?' என இழுத்தேன். உடனே அவன் 'அவை தான் என் வேத புத்தகங்கள்' என்றான்.
நான் 'மார்க்கப் பத்திரிக்கைகள் பற்றி என்ன கூறுகிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'அல்-ஜன்னத், சமரசம், விடியல் வெள்ளி, அல் முபீன், ஒற்றுமை, முஸ்லிம் பெண்மணி பற்றித் தானே கேட்கிறாய்? அவர்கள் எல்லாம் காசு சம்பாதிக்கும் எழுத்து வியாபாரிகள். அவற்றை நான் படிப்பது வீண் விரயம்' என்றான் கேலியாக.

நான் 'டி.வி., சாடிலைட் சேனல் பற்றி' என்றேன். அதற்கு அவன் 'அவை தான் மக்களை என்றென்றும் என் ஞாபகத்திலேயே வைத்திருப்பவை' என்றான்.
நான் 'பிபிசி, சிஎன்என் சேனல் பற்றிக் கூறு' என்றேன்.
அதற்கு அவன் 'அவை மட்டுமல்ல சன், ஜெயா, விஜய், ஸ்டார், ஜீ, ஸஹாரா, தமிழன், சோனி, பொதிகை, தூர்தர்ஷன், ராஜ் இவையெல்லாம் என் ஆயுதங்கள். அதன் மூலம் தான் விஷம் தடவிய தேனை மக்கள் பருகுமாறு செய்கிறேன். முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இவை மூலமே வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்' என்று பெருமையாகக் கூறினான்.

நான் 'காபி ஷாப், இண்டர்நெட் கஃபே எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் மக்களைத் திசை திருப்பும் எந்த செயலையும் நான் வரவேற்கிறேன்' என்றான்.
நான் 'சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப்', என்றான்.

நான் 'கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'என் எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து, அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன்' என்று பெருமையோடு கூறினான்.

நான் 'இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'நீ புறம் பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னை நோகடிக்காதே' என்றான்.
நான் 'வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'அதுவே என் புகுந்த வீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும் அதுவே,' என்று பெருமையாகக் கூறினான்.
நான் 'மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'பேராசை, சந்தேகம், வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியான நம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது, நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்'. ஆமாம், என்ன நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்று வினவினான்.

'சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்?' என்று நான் வினவினேன். அதற்கு அவன் 'அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம் மூலம் தான்' என்றான்.
'சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்?' என்று நான் வினவினேன்.அதற்கு அவன் 'அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும், கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடி செய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன்' என்றான்.
'நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது?' எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன் 'சபாஷ். நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்ன தெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள் அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது. ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது. ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச் செய்யலாம். 1. தந்தை, 2. சகோதரன், 3. கணவன், 4. மகன். சுருங்கச் சொன்னால் ஒரு பெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம்' என உற்சாகம் கொப்பளிக்கக் கூறினான்.

நான் 'இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'சினிமா, இசை, இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடை உடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும் ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான்' என்றான்.

நான் 'சரி நவீன, புதிய கலாச்சாரம் ((Modern Culture-Society)) பற்றி கூறேன்' என்றேன்.
அதற்கு அவன் 'என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும் பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே?' என்றான்.

நான் 'மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'அது தான் என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமே வெவ்வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள்' என்றான்.

நான் 'ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய்' என்றேன்.
அதற்கு அவன் கோபமாக 'அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என் பலத்தைக் குலைத்த சதிகாரர்கள். நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள்; திக்ர் செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறார்கள்' என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.

நான் 'காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்?' என்று கேட்டேன்.
அதற்கு அவன் உற்சாகமாக, 'நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின் இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாக என் வலையில் வீழ்ந்தான்' என்று கூறினேன்.

நான் 'பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான்' என்று கேட்டேன்.
அதற்கு அவன், 'நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னை எதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என் அடிமையானான்' என்று கூறினான்.

நான் 'ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்?' என்று கேட்டேன்.
அதற்கு அவன் 'அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்; அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்பு தேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன்' எனக் கூறினான்.

நான் 'உன் துஆ எது?' என்றேன். அவன் 'சினிமா பாடல்கள்' என்றான்.
நான் 'உன் குறிக்கோள் என்ன?' என்றேன். அதற்கு அவன் 'மக்களிடையே பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது' என்றான்.
நான் 'எது உன்னை அழிக்கும்?' என்று கேட்டேன்.
அதற்கு அவன், 'குர்ஆனில் உள்ள ஆயத்துல் குர்ஸி 2வது அத்தியாயம் 255வது வசனம் யார் ஓதுகிறார்களோ அவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான்,' என்று கூறினான்.

நான் 'அடடே! அப்படியா', எனக் கூறிவிட்டு ஆயத்துல் குர்ஸியை ஓத ஆரம்பித்தேன். உடனே ஷைத்தான் கூக்குரலிட்டவாறு, அவ்விடத்தை விட்டு வெருண்டோடி மறைந்தான்.
மூலம் - இஸ்லாம்வெப்.காம் - ஷேக் அயாத் அல் கர்னி
எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
பார்த்தீர்களா ஷைத்தானுடைய விஷம, விபரீத விளையாட்டை! எப்படி மனிதர்களை அவன் வழிகெடுக்கிறான் பாருங்கள். அவனுடைய வேலை நம்மை நேரடியாக நன்மை செய்வதை தடுப்பது அல்ல - அதைத் தாமதப்படுத்தி அதன் மூலம் மறைமுகமாகத் தடுப்பதே. இந்த உரையாடலை எடுத்துக் கொண்டால்,

1. பஜ்ர் தொழ எழுபவரை என்ன கூறி தடுத்தான் - 'இப்பொழுது தான் பாங்கு கூறினார்கள். இகாமத் வரை சிறிது தூங்கு'. பின்பு, இகாமத் கூறும்பொழுது 'விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஆகவே சிறிது தூங்கு' – ' அப்படியே தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி உள்ளதே' என எப்படி நம்மை தொழுவதிலிருந்து தடுக்கிறான் பார்த்தீர்களா!
2. துஆ ஓத ஆரம்பித்தால், உடனே 'இரவு படுக்கும் முன் ஓதலாமே' எனக் கெடுப்பான். தூங்கும் முன் துஆ ஓத ஆரம்பித்தால், 'களைப்பாக இருக்கிறதே' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஓதாமல் தூங்கச் செய்து விடுவான்.
3. உம்ரா செல்ல நாடினால், சுன்னத்தை விட பர்ளு முக்கியம். எனவே, ஹஜ் செய்யலாமே, என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கெடுப்பான். பின்பு ஹஜ் காலத்தில் தங்கை நிக்காஹ், மகனின் படிப்பு செலவு, வீடு கட்டுவது என பல்வேறு செலவினங்களை முன்னிறுத்தி ஹஜ் செய்வதையும் தடுப்பான்.
4. ஹராமான காரியங்களை - இசை போன்றது - ஹலால் மாதிரி காட்டுவான். ஹதீஸ் கலை வல்லுநர்களிடையே கருத்துவேற்றுமை உள்ளது - பலஹீனமான ஹதீஸ் என தவறான எண்ணத்தை ஏற்படுத்துவான்.
5. அந்நியப் பெண்ணை பார்க்கலாம் - 'முதல்பார்வைக்கு அனுமதி உள்ளது' என்பான் - பின்பு, 'அழகை கலைக்கண் கொண்டு ரசிக்கலாம்' எனப் பாவம் செய்யத் தூண்டுவான்.
6. தாவா வேலை செய்வதைத் தடுக்க அவன் ஏற்படுத்தும் தீய எண்ணம் 'நாம் பெருமைக்கு செய்கிறோம்' எனத் தடுப்பது அல்லது நல்ல நோக்கில் செய்து வரும்போது மனதில் பெருமையை உண்டாக்குவது.
மேலும், மார்க்க அறிஞர்களை, ஆண்களை, பெண்களை, இளைஞர்களை எவ்வாறெல்லாம் வழிகெடுக்கின்றான் எனப் பார்த்தோம். அவனுடைய வழிமுறைகளை அறிந்த நாம் அவற்றிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்வதே சிறந்தது - நம்மை நரக நெருப்பில் வீழ்வதை விட்டும் தடுக்கும்.
அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன் திருமறையாம் குர்ஆனில் கூறுகின்றான்,

' நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள். ஏனெனில், அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி ஆவான் ' குர்ஆன் 2 : 208
ஆகவே, இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும் ஷைத்தானுடைய பாதையில் செல்வதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம். நம்முடைய மற்ற சகோதர, சகோதரிகளையும் அங்ஙனம் செயல்பட அறிவுறுத்துவோம்.

இறுதி நபியின்... இறுதி பயணம்...



1.மாண்பு நபியின் மரண அறிகுறி!

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் ,செயல்களிலிருந்து அவர்களின் மரணத்திற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன.

1. ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் 20 நாட்கள் நபியவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.

2. இவ்வாண்டு ரமழான் மாதத்தில் இரண்டு முறை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபியவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். 3. நபியவர்கள் கடைசி ஹஜ்ஜின் போது கூறினார்கள். இந்த வருடத்திற்குப்பிறகு இவ்விடத்தில் இனிமேல் உங்களை நான் சந்திக்காமல் இருக்கலாம்.

4. அய்யாமுல் தஷ்ரீகீன் நடுப்பகுதியிலே சூரத்துன் நஸ்ர் இறங்கியது, இதைக்கண்டு அவர்களின் மரணம் நெருங்கியதாக அறிந்துகொண்டார்கள். இறுதி நோயின் துவக்கம் ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ஸபர் மாதம் 29ஆம் தேதி திங்கட்கிழமை நபி (ஸல்) அவர்கள் ஜன்னதுல் பகீயில் ஒரு ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டுத்திரும்பி வரும்போது நபியவர்களுக்கு தலைவலியும், பெரும் காய்ச்சலும் ஏற்பட்டது. அதனால் அவர்களின் தலையில் அணிந்திருந்த தலைப்பாகைக்கு மேல் அதன் சூடு தென்பட்டது. நபியவர்கள் நோயாளியாக இருந்து கொண்டே பதினொரு நாட்கள் மக்களுக்கு தொழுகை நடத்தினார்கள். நபியவர்கள் நோயாளியாக இருந்த நாட்கள் 13 அல்லது 14 நாட்கள்.

கண்ணிய நபியின் கடைசி வாரம்

நபியவர்களின் நோய் அதிகரித்துவிட்டது. 'நான் நாளைக்கு எந்த மனைவியிடம் செல்லும் நாள், நான் நாளைக்கு எந்த மனைவியிடம் செல்லும் நாள்' எனக்கேட்க ஆரம்பித்தார்கள். நபியவர்களின் நோக்கத்தைத்தெரிந்து கொண்ட மனைவிமார்கள் நீங்கள் விரும்பிய வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என அனுமதியளித்தார்கள். பழ்ல் இப்னு அப்பாஸ், அலீ இப்னு அபீதாலிப் என்னும் இரு நபித்தோழர்களுக்கு மத்தியில் தலையை (துணியால்) கட்டியவர்களாக இரண்டு கால்களும் (நடக்க முடியாத காரணத்தால்) இழுபட்ட நிலையில் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களின் வீட்டிலேயே அன்னாரின் வாழ்க்கையின் கடைசி வாரத்தை கழித்தார்கள்.

மரணத்திற்கு ஐந்து தினங்களுக்கு முன்...??

நபியவர்கள் பள்ளிக்குள் நுழைந்து மிம்பரில் அமர்ந்து அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து, மனிதர்களே! என் பக்கம் கவனம் செலுத்துங்கள், 'தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை பள்ளி வாசல்களாக (வணங்குமிடமாக) எடுத்துக் கொண்ட யூத, கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் எனக் கூறினார்கள்.

நான்கு நாட்களுக்கு முன்....??

நபியவர்கள் நோயாளியாக இருந்தும் மக்களுக்கு எல்லாத் தொழுகைகளையும் தொழவைத்தார்கள். இஷா நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத அளவுக்கு நோய் அதிகரித்து விட்டது. மக்கள் தொழுது விட்டார்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இல்லை அல்லாஹ்வின் தூதரே அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என நாங்கள் கூறினோம். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுங்கள் எனக்கூறினார்கள். நாங்கள் தண்ணீரை ஊற்றினோம், நபியவர்கள் குளித்தார்கள். பள்ளிக்கு செல்வதற்கு முயற்சித்தார்கள். ஆனால் மயக்கம் ஏற்பட்டு மயங்கிவிட்டார்கள். மயக்கம் தெளிந்த பின் மக்கள் தொழுது விட்டார்களா? எனக் கேட்டார்கள். ஆரம்பத்தில் நடந்தது போன்றே நடந்தது. மூன்றாவது முறையும் அப்படியே நடந்தது. அபூபக்கர் (ரலி) அவர்களை மக்களுக்கு தொழ வைக்கும்படி நபியவர்கள் செய்தி அனுப்பினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் மீதியான நாட்களில் (நபியவர்கள் மரணிக்கும் வரை உள்ள தொழுகைகளை); தொழவைத்தார்கள் (புகாரி, முஸ்லிம்).

அதாவது, நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது பதினேழு நேர தொழுகைகளை அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழவைத்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் (புகாரி).

ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்...??

சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை நோய் குறைந்திருந்ததை நபியவர்கள் உணர்ந்து, இரண்டு மனிதர்களின் உதவியோடு அவ்விருவருக்கும் மத்தியில், ளுஹர் தொழுகைக்காக பள்ளிக்கு வெளியானார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் வருவதைக்கண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் பின்னுக்கு வர ஆரம்பித்தார்கள். பின் வராமல் அங்கேயே நிற்கும்படி நபியவர்கள் அவர்களுக்கு சைகை செய்தார்கள். என்னை அவருக்கு அருகாமையில் உட்கார வையுங்கள் என அவ்விருவருக்கம் கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் இடது புறத்தில் நபியவர்களை அவ்விருவரும் உட்கார வைத்தார்கள். நபியவர்களை பின்பற்றி அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழுதார்கள். மக்களுக்கு நபியவர்களின் தக்பீரை கேட்கவைப்பதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் (தக்பீரை) கூறினார்கள் (புகாரி).

இறுதி தினத்திலும் இருந்ததெல்லாம் வழங்கிய நபி (ஸல்) அவர்கள்! மரணமடைவதற்கு ஒரு நாளைக்கு முன் தன்னிடத்திலிருந்த அடிமையை உரிமையிடடு ஆறு அல்லது ஏழு தங்கக்காசுகளை தர்மம் செய்தார்கள். அவர்களின் ஆயுதத்தை முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள். அந்த இரவு ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னுடைய விளக்கை அனுப்பி ஒரு பெண்ணிடமிருந்து எண்ணெய்யை வாங்கி விளக்கை ஏற்றினார்கள். நபியவர்கள் ஒரு யூதனிடம் தன்னுடைய கவச ஆடையை முப்பது ஸாஉ கோதுமைக்கு அடமானம் வைத்திருந்தார்கள்.

இறுதி தினமும் இரகசியச்செய்தியும்...??

திங்கட்கிழமை சுபஹுதொழுகையை அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழவைத்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையிலிருந்து திரையை விலக்கிக்கொண்டு தொழுது கொண்டிருந்த மக்களைப் பார்த்து புன்முறுவலாக சிரித்தார்கள். நபியவர்கள் தொழுவதற்காக வரப்போகிறார்கள் என நினைத்து அபூபக்கர் (ரலி) அவர்கள் பின்னுக்கு வர நினைத்தார்கள். நபியவர்களை பார்த்த சந்தோஷத்தில் மக்கள் தங்களின் தொழுகையில் குழம்பிக் கொள்ளும் அளவுக்கு ஆகிவிட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'நீங்கள் உங்களின் தொழுகையை பரிபூரணப்படுத்துங்கள்' எனக்கூறிவிட்டு நபியவர்கள் அறைக்குள் சென்று திரையை மூடிவிட்டார்கள். அதன் பின் நபியவர்களுக்கு வேறு எந்த தொழுகையும் தொழ வாய்ப்பு கிடைக்கவில்லை.

சூரியன் உதயமாகும் போது நபியவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து அவர்களுக்கு ஒரு செய்தியை இரகசியமாக கூறினார்கள். அதைக்கேட்டதும். பாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, இன்னுமொரு முறை அவர்களை அழைத்து ஒரு செய்தி கூறினார்கள். அதைக்கேட்டதும் சிரித்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். அதன்பின் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவ்விரு செய்திகள் பற்றி நாங்கள் கேட்டோம். அந்த நோயினால், நபியவர்கள் மரணிக்கப்போவதாக கூறினார்கள். அதைக்கேட்டு நான் அழுதேன். அவர்களின் குடும்பத்தில் நபியவர்களுக்குப்பின், முதலில் மரணிப்பவர் நான் என கூறினார்கள், அதற்கு நான் சிரித்தேன் எனக் கூறினார்கள்.

அவர்களுக்கு நோய் அதிகரித்துக்கொண்டே சென்றது. கைபரில் யூதப் பெண் கொடுத்த நஞ்சின் விளைவை உணர்ந்தார்கள். ஆயிஷாவே! கைபரில் உண்ட உணவின் (நஞ்சின்) வேதனையை உணருகின்றேன், அந்த நஞ்சின் காரணமாக என் கல் ஈரல் துண்டிக்கப்படும் நேரம் வந்து விட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அண்ணலின் சகராத் நேரம்

நபியவர்களுக்கு சகராத் நேரம் வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் நபியவர்களை தன்னோடு அணைத்துக் கொண்டார்கள். 'நபியவர்கள் என்னுடைய வீட்டில் இருக்கும்போது என்னுடைய நாளிலே என்னுடைய அணைப்பிலேயே மரணமடைந்தது' அல்லாஹ் எனக்களித்த பெரும் அருளில் ஒன்றாகும். நபியவர்கள் என் மீது சாய்ந்து படுத்திருக்கும் போது என்னுடைய சகோதரர் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் தன்னுடைய கையில் மிஸ்வாக் ஏந்தியவர்களாக வீட்டிற்குள் நுழைந்தார்கள். நபியவர்கள் அந்த மிஸ்வாக்கின் பக்கம் தன் பார்வையை திருப்புவதை நான் பார்த்து நபியவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புவதை தெரிந்து கொண்டு உங்களுக்கு அதைத் தரவா? என கேட்டேன் நபியவர்கள் தன் தலையால் 'ஆம்' என சாடை செய்தார்கள். அதை எடுத்து அவர்களுக்கு கொடுத்தேன். அது அவர்களுக்கு கடினமாக இருந்ததால் அதை மென்மையாக்கித்தரவா? எனக் கேட்டேன். நபியவர்கள் தன் தலையால் 'ஆம்'; என சாடை செய்தார்கள். அவர்களுக்கு மென்மையாக்கிக் கொடுத்தேன். அவர்கள் மிஸ்வாக் செய்தார்கள். நபியவர்களுக்கு பக்கத்தில் ஒரு தண்ணீர் பாத்திரம் இருந்தது. அதில் தனது இரு கரத்தையும் வைத்து தன் முகத்தை தடவிக் கொண்டு லா இலாஹ இல்லல்லாஹ் 'நிச்சயமாக மரணத்திற்கு சகராத் வேதனை உண்டு' எனக்கூறினார்கள் (புகாரி).

நெஞ்சை உருக்கும் நிறைவான விடைபெறல்!

மிஸ்வாக் செய்து முடித்ததும், தன் கையை அல்லது விரலை உயர்த்தி விழிகள் விண்ணை நோக்க, இதழ்கள் மெல்ல அசைந்தன. உதடுகள் உதிர்த்ததை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் செவி சாய்த்துக் கேட்டார்கள். مَعَ الَّذِيْنَ أَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّـيْـنَ وَالصِّدِّيْقِيْـنَ وَالشُّهَدَاءِ وَالصَّالِـحِيْـنَ 'நீ அருள் புரிந்த நபிமார்களோடும், உண்மை யாளர்களோடும், ஷுஹதாக்களோடும், நல்லடியார்களோடும் (என்னை) சேர்த்து விடுவாயாக'. இறைவா! 'என் பாவங்களை மன்னிப்பாயாக! என் மீது அருள் புரிவாயாக! உயர்ந்தவனாகிய அல்லாஹ் (வாகிய உன்) அளவில் என்னைச் சேர்த்துக் கொள்வாயாக' இந்த கடைசி வார்த்தையை மும்முறை மொழிந்த போது 'அவர்களின் கரம் சாய்ந்தது'. உயர்ந்தவனாகிய அல்லாஹ் அளவில் சேர்ந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு, ரபீஉல் அவ்வல், பிறை 12 திங்கட்கிழமை, சூரிய வெப்பம் அதிகமான நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் இறையடி சேர்ந்தார்கள்.

மாண்பு நபியின் புனித உடல் மண்ணுக்குள் அடக்கம்

நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு யார் கலீபாவாக வருவது என்னும் கருத்துமோதல் ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஏற்பட்டு கடைசியில் அபூபக்கர் (ரலி) அவர்களை கலீபாவாக ஏகமனதோடு ஏற்றுக்கொண்டார்கள். திங்கள் கிழமை பகல்பகுதி கலீபாவாக யாரை முடிவு செய்வதென்பதிலேயே முடிந்து விட்டது. செவ்வாய்க்கிழமை இரவு சுப்ஹு வரைக்கும் நபியவர்களை அடக்கம் செய்யும் விஷயத்தில் ஈடுபட்டார்கள், நபியவர்களின் புனித உடல் கோடிடப்பட்ட பருத்தி துணியினால் மூடப்பட்ட நிலையில் அன்னாரின் விரிப்பிலேயே படிந்திருந்தது, அவர்களின் குடும்பத்தினர் கதவை மூடிவைத்திருந்தார்கள், செவ்வாய்க்கிழமை அன்னாரின் தோழர்கள், அன்னாரின் புனித உடலைக் குளிப்பாட்டியபோது அன்னாரின் உடையை நீக்காமலேயே குளிப்பாட்டினார்கள்.

நபியவர்களின் உடல் இருந்த அறைக்கு மக்கள் சென்று பத்து, பத்து பேராக, தனிமையில் நபியவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழுதார்கள், முதலில் நபியவர்களின் குடும்பத்தினரும், அதன் பின் முஹாஜிரின்கள், அன்ஸாரிகள், 'சிறியவர்கள், பெண்கள் (அல்லது) பெண்கள், சிறியவர்கள்' என்ற வரிசையில் தொழுதார்கள் இவைகளைச் செய்வதிலேயே செவ்வாய்கிழமையின் முழு நாட்களும் புதன் கிழமையின் இரவின் பெரும்பகுதியும் சென்று விட்டது. புதன் இரவின் கடைசிப்பகுதியில்தான் அன்னாரின் ஜனாஸாவை அடக்கம் செய்யப்பட்டது.

இரவின் கடைசிப்பகுதியிலே கப்ரை மூடும் மண்ணின் சத்தத்தை கேட்கும்வரைக்கும் நபியவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் (அஹ்மத்).

சிந்திக்க சில வரிகள் இதுவரை நபியவர்களின் மரணச் செய்தியை படித்தீர்கள், அதைக்கேட்ட நபித்தோழர்கள் துடியாய்த் துடித்தார்கள். ஆனால் இன்று நாம் அவர்கள் மரணித்த நாளை கொண்டாடும் நாளாக எடுத்துக்கொண்டோமா இல்லையா? இது இறைவிசுவாசியின் பண்பாக இருக்கமுடியுமா?

நபியவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் 12ஆம் தேதி பிறந்தார்களா? என்பதில் வரலாற்று ஆசிரியர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கின்றது. ஆனால் ரபீஉல் அவ்வல் 12ஆம் தேதி மரணித்தார்கள் என்பது ஊர்ஜிதமானதே. இதில் எந்த அறிஞருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ரபீஉல் அவ்வல் பிறை 12ல் மீலாது விழா இன்று கொண்டாடப்படுவது நபியவர்களின் பிறந்த நாளுக்காகவா? அல்லது இறந்த நாளுக்காகவா? சிந்திக்கமாட்டீர்களா?

நபியவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவது நபியவர்களை புகழ்வதென்றால் அல்லது இஸ்லாத்தில் உள்ள நற்கருமமாக இருந்தால் நபியவர்களே ஒவ்வொரு வருடத்திலும் ரபீஉல் அவ்வல் பிறை 12ல் அதைச் செய்திருப்பார்கள். ஸஹாபாக்கள் அதை பின்பற்றி இருப்பார்கள். தாபியீன்கள், இமாம்கள் அதைச் செய்திருப்பார்கள். இவர்களில் யாரும் இதை செய்யவில்லையே. ஹிஜ்ரி 300க்குப் பிறகு மிஸ்ரை ஆட்சி செய்த ஃபாத்திமீயீன்கள் அரசியல் லாபத்திற்காக செய்த வேலையே மீலாத் மேடைகள், இதே போன்றுதான் நபியவர்களின் பெயரில் பாடப்படும் பாடல்களும்இ இதற்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. மாறாக இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத் என்னும் வழிகேடாகும்.

நேச நபியை நேசிப்பதென்பது...???

நேச நபியை நேசிப்பதென்பது அல்லாஹ்வும்இ நபியவர்களும் காட்டிய மார்க்கத்தை அப்படியே பின்பற்றுவதான். (நபியே!) நீர் கூறும், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னை பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் 3-31 என்னை யார் நேசிக்கின்றாரோ அவர் என் வழிமுறைகளை பின்பற்றட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகி)

இதுதான் அல்லாஹ்வின் தூதரை நேசிக்கும் முறையாகும். அல்லாஹ் நம் அனைவரையும் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் நேசித்தவர்களாக வாழ்ந்து மரணிக்க வாய்ப்பளிப்பானாக

அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது; சிரியா கலவரத்தில் 400 பேர் பலிs


அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது; 
சிரியா கலவரத்தில் 400 பேர் பலி
டமாஸ்கஸ், ஏப். 28
 
சிரியாவில் அதிபர் பாஷார்-அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனால் போராட்டம் வலுவடைந்து வருகிறது. போராட்டத்தை அடக்க பொதுமக்கள் மீது ராணுவம் ஏவி விடப்பட்டுள்ளது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.இருந்தும் போராட்டம் குறைந்த பாடில்லை.
 
டாரா, டமாஸ்கஸ், தவுமா உள்ளிட்ட அனைத்து நகரங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது. இப்போராட்டத்தில் இது வரை 400 பேர் பலியாகி உள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை சிரியா மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
 
சிரியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஈவு இரக்கமின்றி மக்கள் கொல்லப்படுகின்றனர் என்ற ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடி இதுகுறித்து விவாதிகக் வேண்டும்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
 
சிரியாவில் உள்ள இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல் நாடுகளின் தூதர்களும் இங்கு நடைபெறும் படுகொலைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன

Wednesday, April 27, 2011

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உதவியால் விடுதலையான சுலைமான்

sulieman
தாயிஃப்:சுலைமான்(53) கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்தவர். சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் ஓட்டுநராக பனியாற்றி வந்த சுலைமானுக்கு அன்றைய தினம் மறக்கமுடியாததாக மாறிவிட்டது.
2008 ஆம் ஆண்டு தாயிஃபிலிருந்து ரியாதிற்கு ட்ரக்கை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தார் அவர். எதிர்பாராதவிதமாக அவருடைய ட்ரக் மீது ஸுலும் சாலையில் வைத்து கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் கார் நசுங்கிப் போனது. அக்காரிலிருந்த 6 பேரும் இறந்து போயினர். இவ்விபத்துச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுலைமான் சிறையிலடைக்கப்பட்டார். முதல் 7 மாதங்கள் குர்மா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுலைமான் பின்னர் தாயிஃப் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வழக்கை விசாரித்த தாயிஃப் நீதிமன்றம் சுலைமான் 675,000 ரியால் ஈட்டுத் தொகையை கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. இல்லையெனில், பணத்தை கட்டும்வரை சிறையிலடைக்கப்படுவார் எனவும் தெரிவித்தது.
சுலைமானோ ஏழ்மையானவர். இந்த பெருந்தொகைக்கு எங்கு செல்வார் அவர். அவருடைய ஸ்பான்சர் தன்னால் உதவமுடியாது என்று கூறிவிட்டார். மேலும் சுலைமான் 3 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சந்திக்கவும் இல்லை.
இந்நிலையில் வெளிநாட்டு இந்தியர்களின் நலனுக்காக பாடுபடும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் தாயிஃப் கிளை சுலைமானுக்கு உதவ முன்வந்தது. சவூதி அரேபியாவின் இதர பகுதிகளில் செயல்படும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் கிளைகளுடனும், ஜித்தாவில் இந்திய தூதரகத்தின் நல்வாழ்வு பிரிவுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டது தாயிஃப் ஃபெடர்னிடி ஃபாரம். அத்துடன் ஃபெடர்னிடி ஃபாரம் இந்தியாவில் கஷ்டப்படும் சுலைமானின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளையும் அளித்துவந்தது. சுலைமானை விடுவிப்பதற்காக நம்பிக்கை இழக்காமல் ஒவ்வொரு கதவாக தட்டத் துவங்கியது ஃபெடர்னிடி ஃபாரம்.
காப்பீட்டு நிறுவனத்திடம் பேசி 675,000 ரியால் இழப்பீட்டுத் தொகையை வழங்க சம்மதிக்க வைத்தது. காப்பீட்டு நிறுவனம் அளித்த காசோலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடைசியாக அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டு சுலைமான் கடந்த 25/04/2011 அன்று விடுதலைச் செய்யப்பட்டார்.
இதுத்தொடர்பாக இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் ரஃபீக் கூறியதாவது: ”நாங்கள் துவக்கத்தில் இவ்வழக்கின் பின்னணியை புரிந்துக்கொண்டோம். சுலைமானின் குடும்பத்தின் அன்றாட தேவைக்கான உதவிகளை அனுப்பி வைத்தோம். ஈட்டுத் தொகைக்காக விபத்துக்குள்ளான ட்ரக் காப்பீடுச் செய்யப்பட்டுள்ள நிறுவனம், ட்ரக்கின் உரிமையாளர் மற்றும் விபத்தில் கொல்லப்பட்ட சவூதி அரேபியாவைச் சார்ந்தவர்களின் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.’ என தெரிவித்தார்.
காப்பீட்டு நிறுவனம், விபத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சவூதி அதிகாரிகளுடன் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உறுப்பினர்களான ரஃபீக், நவ்ஷாத், ஹுஸைன், அல்தாஃப், சுலைமான் ஆகியோர் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி சுலைமானின் விடுதலையை உறுதிச்செய்தனர்.
சிறையிலிருந்து விடுதலையான சுலைமான் கர்நாடகா மாநிலம் தெற்கு கன்னட மாவட்டத்தில் புத்தூர் தாலுகாவில் நெல்யாடி கிராமத்தைச் சார்ந்தவராவார். இவரது உழைப்பை நம்பி தாய், மனைவி, இரண்டு ஆண் மக்கள், மூன்று பெண் மக்கள் உள்ளனர். சுலைமான் 25 ஆண்டுகளாக சவூதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் இதைப்போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிகளை சவூதியில் சிரமத்திற்கும், சிக்கலுக்கு உள்ளாகும் இந்தியர்களுக்காக புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

மோடி மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்

popular front
புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆதாரங்கள் வெளியான சூழலில் அவர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சங்க்பரிவார சக்திகள் சிறுபான்மையினருக்கெதிராக திட்டமிட்டு நடத்தியதுதான் குஜராத் இனப்படுகொலை எனவும், ஹிந்துத்துவ சக்திகள் கோரத்தாண்டவம் ஆட மோடி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் எனவும் மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் தெளிவுப்படுத்துகிறது. இனப்படுகொலையைக் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தாங்கள் மோடியின் பணியாளர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.
அதனால்தான், இனப்படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்ய எஸ்.ஐ.டி புனர் நிர்மாணிக்கப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனிதர்களுக்கும், இயற்கைக்கும் ஆபத்தை விளைவிக்கும் என நிரூபணமான என்டோ ஸல்ஃபான் கிருமிநாசினியை தடைச்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென செயற்குழு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
63 நாடுகளில் தடைச்செய்யப்பட்ட என்டோ ஸல்பான் 70 சதவீதம் இந்தியாவில் தான் தயாராகிறது.பெரும் கிருமி நாசினி நிறுவனங்களின் விருப்பத்திற்கு அடிபணிந்து என்டோஸல்பானை தடை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என கருதுவதாக பாப்புலர் ஃப்ரண்ட் கருத்து தெரிவித்துள்ளது. என்டோஸல்பான் எதிர்ப்பு போராட்டங்களுக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே நடத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கபளீகரிக்க வலதுசாரி ஹிந்துத்துவா குழுக்கள் நடத்தும் முயற்சியைக் குறித்து பாப்புலர் ப்ரண்ட் கவலை தெரிவித்துள்ளது. ஊழல்வாதிகளான ஹிந்துத்துவா சக்திகள் நடத்தும் முயற்சிகள் குறித்து சமூக-கலாச்சார ஆர்வலர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும், முழுமையான லோக்பால் மசோதாவிற்கான முயற்சி தொடர வேண்டும் எனவும் தேசிய செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜய்தாப்பூரில் உள்ளூர் மக்களின் விருப்பத்தையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் மீறி அணுமின் நிலையம் நிர்மாணிக்க முயலும் அணுசக்தி துறைக்கு பாப்புலர் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் உருவான சுனாமியைத் தொடர்ந்து ஏற்பட்ட அணுசக்தி விபத்தும் அணு உலைகள் மிகப்பெரிய ஆபத்தையும், அதிகமான செலவினத்தையும் கொண்டது என்பதை நிரூபித்துள்ளன.
இது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேட்டை விளைவிப்பதாகும். பிரான்சில் பரிசோதனை செய்து உறுதி செய்யப்படாத தொழில் நுட்பத்தை ஜய்தாப்பூர் அணுமின் நிலையத்தில் உபயோகிக்க திட்டமிட்டுள்ளார்கள். ரத்னகிரியில் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆதரவு தெரிவிக்கிறது.
பாப்புலர் ப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, மவ்லானா உஸ்மான் பேக், பேராசிரியர் பி.கோயா, யா முஹைதீன், ஹாமித் முஹம்மது, அனீஸ் அஹ்மத், இல்லியாஸ் தும்பெ, அஷ்ரஃப் மெளலவி, ஒ.எம்.எ.ஸலாம், முஹம்மது ரோஷன், எ.எஸ்.இஸ்மாயீல் ஆகியோர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்

யார் இந்த ஹசன் அல் பன்னா? ஒரு பார்வை .


சுவிஸ் வங்கி கணக்கு; இந்தியர்களின் பெயர் விரைவில் வெளியீடு: விக்கிலீக்ஸ் நிறுவனர்

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே கூறியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் நேற்று அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலில் இந்தியர்களின் பெயர்களையும் கண்டேன். விரைவில் அந்த பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவோம். கறுப்புப் பண விவகாரத்தில் இந்திய அரசு மெத்தனமாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் ஜெர்மன் அரசு தீவிரம் காட்டி வருகிறது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் ஜெர்மன் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. எனினும், ஜெர்மனை விட இந்தியர்களின் பணமே சுவிஸ் வங்கிகளில் அதிகமாக பதுக்கப்பட்டுள்ளது." என்று அசாஞ்ஜே கூறியுள்ளார்.

ஜுலியன் அசாஞ்ஜேவின் தகவலால், சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.