Wednesday, August 31, 2011

எஜமானன் இறந்ததும் சோகத்தில் உயிரை விட்ட நாய்!(வீடியோ இணைப்பு)


வாலை குலைத்து வரும் நாய்தான் அது மனிதனுக்கு தோழனடி பாப்பா என்று பாடி இருக்கின்றார் மகாகவி பாரதியார். கணவன் இறந்தமையை அறிந்த கணத்திலேயே உயிரைத் துறக்கின்ற மனைவியை நாம் இலக்கியப் பாத்திரங்களூடாக கேள்விப்பட்டு இருக்கின்றோம். எஜமானன் இறந்து விட்டார் என்பதை அறிந்து பதைபதைத்து துடிதுடித்து இறந்து விட்டது இந்நாய். எஜமானனின் பெயர் ஜோன். இராணுவ வீரர். திடீர் மரணம் அடைந்து விட்டார். இவரது சடலம் வீட்டில் பிரேதப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இவர் இறந்து விட்டார் என்பதை உணர்ந்து கொண்ட செல்லப் பிராணியான நாய் பிரேதப் பெட்டிக்கு அருகில் உயிரை மாய்த்துக் கொண்டது.

facebook பற்றிய ஓர் எச்சரிக்கை !

Tuesday, August 30, 2011

விபச்சாரத்தை நெருங்காதீர்கள்


எனக்கும், உங்களுக்குமான என்னுடைய இரண்டாவது அழைப்பு "விபச்சாரத்தை நெருங்காதீர்கள்" ஆகும். இஸ்லாத்தில் தவிர்ந்து நடக்க வேண்டிய மோசமான விடயங்களில் இதுவும் ஒன்று. இங்கு நான் குறிப்பிட வருவது, விபச்சாரத்தை மட்டுமல்ல, மாறாக விபச்சாரத்திற்கு வழிகோலுகின்ற விடயங்களையங்களிளிருந்தும் தவிந்து நடப்பது.  ஏனென்றால், அல் குர்ஆன் விபச்சாரம் செய்யாதீர்கள் என்று குறிப்பிடவில்லை. மாறாக அதனை நெருங்காதீர்கள் என்று குறிப்பிடுவதை நாம் அவதானிக்கலாம்.

உதாரணத்திற்கு,  மேற்குறிப்பிட்ட அல் குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகின்ற அடிப்படைக்கு ,அமைவான பாடல்கள், படங்கள், அல்லது இதனடிப்படையில் ஆடை அணிகின்ற பெண்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம். 

இங்கு நான் மேலதிகமான ஒரு விடயத்தை பதிவு செய்யவிரும்புகிறேன். அதாவது,மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக பல்வேறு சந்தர்ப்பங்களும், பல்வேறு கேள்விகளும் எனக்கும், உங்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு எனது மனமே நீதிபதி. இப்படிப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்  ஒரு மனிதனின் மனம் இது சரி, இது தப்பு என்று நிற்சயமாக சொல்லும். இதனை நீங்கள் அனுபவ ரீதியாகவே  உணர்ந்து இருப்பீர்கள். 

                                            ஆகவே, இவ்விடயத்தை தொடர்ச்சியாக, இறுதிவரை என்னால் முடியுமான முறையில் அல்லாஹ் குறிப்பிட்ட படி நிறைவேற்ற மனதில் உறுதி கொள்கிறேன். அதே நேரம் இது உங்களுக்குமான எனது இரண்டாவது  அழைப்புமாகும்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.17:32

“(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்” (24:30)


கண்கள் செய்யும் விபச்சாரம் (விலக்கப்பட்டவைகளைப்) பார்ப்பதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)


"இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே!" (அல் குர்ஆன்3:8)                   

திப்பு சுல்தானின் வீரம் ! கட்ட பொம்மனையும் மீறும்!


மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி அண்ணல் காந்தியடிகள்:

" நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார்.
வருவாய் இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பூரண மதுவிலக்கை அமுலாக்கிய இவர் ஓர் உன்னதமான மன்னன்."

மாவீரன் திப்பு சுல்தான் பற்றி அல்லாமா இக்பால்:

ஏ! காவிரியே! கம்பீரமகாத் தலைநிமிர்ந்து நீ வீரநடைப் போடுகிறாயே!

நீ சுமந்து செல்லும் செய்தி என்னவென்று உனக்கு நினைவுள்ளதா?
...
நீ எந்த மாவீரனை சுற்றி நாள் தவறாமல் வலம் வந்து கொண்டிருந்தாயோ - அந்த

மாவீரனின் குருதி உனது அலைகளில் கொப்பளிக்கிறதே!

அது தான் அந்த செய்தி!

அன்று, கிழக்கு தூங்கிக் கொண்டிருந்தப் போது,

அவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான்.

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி ஆங்கில கனோனால் மேடோஸ் டைலர்:

"திப்பு சுல்தான் கௌரவமான பெரிய மனிதர். அவரைப் போன்ற உயர்ந்தக் கொள்கையுடைய மனிதரை இந்தியா இனிமேல் எப்போதும் பார்க்காது. வியக்கத்தக்க திறமையும் ஊக்கமும் கொண்டு, மக்களைக் கவர்ந்து எல்லோரிடமும் அன்போடும் கருணையோடும் நடந்துக் கொண்டார். மாசா அல்லாஹ்! திப்பு சுல்தான் கண்ணியம் மிகுந்த தலைவன்!"

மாவீரன் திப்பு சுல்தான் பற்றி ஆங்கில ஜெனரல். மேஜர் டிரோம்:

திப்பு சுல்தானின் ஆட்சி தன்னிச்சையானதும், கண்டிப்பனதுமானாலும், குடிமக்களைப் பாதுகாத்து , உதவிகள் செய்து அவர்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டு நடத்தும் செங்கோலாட்சியே அல்லாமல் துன்புறுத்தும் கொடுங்கோல் ஆட்சியல்ல! திப்பு சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த மக்கள் தாரளமாக பெற்று மன மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ்ந்தார்கள் என கூறியுள்ளார்.

தமிழ் கலைக் களஞ்சியத்தில் திப்பு சுல்தான்:

" திப்பு தூயவர். ஒழுக்கம், சமயப் பற்று, அறிவு , அரசியல் திறன் உடையவர். உருது, அரபி, கன்னடம், பாரசீக மொழிகளைப் பேசக்கூடியவர். சிறந்த நிர்வாகி. சிறந்த நூல் நிலையம் வைத்து இருந்தார். புதிய நாணயங்களை வெளியிட்டார். வேளாண்மையைப் பெருக்கினார். மதுவிலக்கை அமல்படுத்தினார். சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய கடிதங்கள் அவர் இந்து மதத்தின் இனிய நண்பர் என்பதை விளக்குன்கின்றன".

மஞ்சை வசந்தன் எழுதிய மாவீரன் திப்பு சுல்தான் வரலாற்று நூல் முழுவதுமாக படிக்க


http://content.yudu.com/Library/A1tf5m/TipuSultanHistory/resources/index.htm?referrerUrl=

- ராஜகிரி கஸ்ஸாலி அனுப்பிய மின் அஞ்சலில் இருந்து

வரலாற்றில் சில ஏடுகள்

1)தீரர் திப்பு சுல்தான் அவர்களின் சிறுவயது பிராயம்,அவருக்கு அப்போது அவர் தாயார் காய்கறிகளை காட்டி சொல்வார்களாம்,” இதோ பார்,இது என்ன தெரியுமா?இந்த பெரிய காய்தான் பரங்கியரின் தலை,(வெள்ளையர்)அதன் தலையை சீவு பார்க்கலாம்”என சொல்லி,வாளையும் கையில் கொடுத்து பயிற்சி செய்வாராம்.அந்த காய்தான் பிறகு பரங்கிக்காய் என வழக்கில் வந்தது.அப்பேற்பட்ட தீரர் திப்புவை,பூர்னையா என்ற பிராமணன்,ஆங்கிலேயனிடம் காட்டிக்கொடுத்தான்.


2)வ உ சி கப்பல் ஓட்ட,அவருக்கு கப்பல் வாங்கிக்கொடுத்தது வள்ளல் ஹபீப் முஹம்மத்.ஆனால் இதை வரலாற்றில் மறைத்துவிட்டனர்.


3)ஷாஜகான் ஜூம்மா மசூதியை அறுபத்து மூன்று படிகள் வைத்து கட்டினார்.அது நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வயதை குறிப்பிடும் காரணமாக,மேலும் அதன் அருகில் உள்ள செங்கோட்டையில் அவரது சிம்மாசனத்தில் உட்காரும்போது அவருடைய கிரீடம், ஜூம்மா மசூதியின் அறுபத்து இரண்டாம் படியின் அளவு இருக்கும்படி பார்த்து கட்டினார்,அதற்கான காரணம் கேட்டதற்கு அவர் சொன்னார்,”இறைவனை தொழ வருபவர்களின் செருப்புக்களை விட என் கிரீடம் தாழ்மையானது,”


4)பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு சில கட்டளைகள் இடுகிறார்:ஒன்று)மற்ற மத வழிபாட்டு இடங்களை இடித்து மசூதிகள் கட்டக்கூடாது என நம் இஸ்லாம் மார்க்கம் தடுத்துள்ளதால்,அவ்வாறு நீ செய்யக்கூடாது.
இரண்டு)எல்லா மத,இன மக்களையும் சரி சமம் என நடத்த வேண்டும் என நம் மார்க்கம் கட்டளை இட்டுள்ளபடியால் நீயும் அவ்வாறு எல்லா மக்களையும் சீராக நடத்த வேண்டும்.


5)ஒரு தடவை காந்தியடிகளிடம்,”உலகில் உள்ள மந்திரங்களில் எல்லாம் சிறந்தது எது என நீங்கள் எண்ணுகிறீர்கள்?என கேட்டனர்,அதற்கு அவர் சொன்னார்,”லா இலாஹா இல்லல்லாஹு “என்ற மந்திரம்தான் சிறந்தது என்பது என் கருத்து.காரணம் அதில் எல்லாமும் அடங்கிவிட்டது”.


6)ஒரு தடவை பெரியாரிடம் சிலர் கேட்டனர்,”ஐயா நீங்கள் சாமி இல்லை என்கிறீர்,ஆனால் உம் பெயரோ ராமசாமி,?என்றனர்.உடனே சொன்னார் பெரியார்,”ஆமாம்,நான் ராமனுக்கே சாமி”.அந்தப் பெரியார் சொன்னதுதான் இது,”இன இழிவு நீங்க இஸ்லாம் மட்டுமே இனிய மருந்து.

Friday, August 26, 2011

இது ஒரு நாடகம் அல்ல..ஒரு கண்ணீரின் கதை

ஒரு இலட்சியத்திற்காக சுமார் பத்து வருடமாக போராடும் ஒரு பெண்மணியின் வரலாறு மற்றும் மணிப்பூரின் நிலைமை கீழே உள்ள வீடியோவில் இணைக்கபட்டுள்ளது .இவ்வளவு அக்கிரமங்கள் நடந்து கொண்டு இருக்கிறது .தொடர்ந்து போராடும் இந்த பெண்மணியை மீடியாக்கள் அதிக முக்கியதுவம் கொடுக்க மறந்து விட்டனர் 









ஹஸாரே:ஊடகங்களின் இரட்டை வேடம்-அருணாச்சல் பிரதேச மாணவர் யூனியன் கண்டனம்






ஹஸாரேவின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பரப்புரை செய்யும் தேசிய ஊடகங்கள் இரட்டை கொள்கையை பின்பற்றுவதாக ஆல் அருணாச்சல பிரதேஷ் ஸ்டுடண்ட்ஸ் யூனியன் (எ.எ.பி.எஸ்.யு) குற்றம் சாட்டியுள்ளது.



வடகிழக்கு மாநிலங்களில் அமுலில் உள்ள கொடிய ராணுவச்சட்டத்திற்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் மணிப்பூரைஸ் சார்ந்த இரோம் ஷர்மிளாவுக்கு அளிக்காத ஆதரவை ஊடகங்கள் ஹஸாரேவை தேசிய ஹீரோவாக மாற்றிக்காட்டுவதாக யூனியனின் தலைவர் தகம் தருங் குற்றம் சாட்டுகிறார்.






ஹஸாரேவின் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். அதே வேளையில் ஹஸாரேவின் போராட்டத்தை விட முக்கியத்துவம் குறைந்ததல்ல இரோம் ஷர்மிளாவின் போராட்டம் என அவர் கூறினார். வடகிழக்கு மாநிலங்களில் அமுலில் இருக்கும் கொடிய ராணுவ சட்டத்திற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் ஷர்மிளாவும் மக்களுக்கு வேண்டிதான் போராடுகிறார் என அவர் மேலும் தெரிவித்தார்

Source:
thoothuonline

Thursday, August 25, 2011

எயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக் கொள்கையே !மீண்டும் நிரூபித்தது பி.பி.ஸி உலக சேவை.



இந்த இயற்கை மார்க்கம் மனிதனின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகத் தெளிவான பதில்களைத் தருகிறது என்றால் அது மிகையில்லை.

உலகையை ஆட்டம் காணச் செய்யும் மிகக் கொடிய நோயான ஹெச்.ஐ.வி. எய்ட்ஸை விட்டும் மனிதனைக் காப்பாற்ற பல நாடுகளும் தங்களால் முடிந்த மருத்துவக் கண்டுபிடிப்புக்களில் இறங்கியுள்ளன.

இவ்வகையில் ஆய்வுகளை மேற்கொண்ட பல நாடுகளும் இந்தக் கொடுமையான நோய்க்கு தீர்வாக முன்வைத்துள்ளது விருத்த சேதனம் என்ற இஸ்லாமிய வழிகாட்டளைத் தான்.

ஆம் ஆண்கள் தங்கள் மர்ம உருப்பின் முன் பகுதியை நீக்கி விருத்த சேதனம் செய்து கொள்வதின் மூலம் இந்த நோயின் பாதிப்பை 60 சதவீதத்தினால் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.


"இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வதுமர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது,மீசையைக் கத்தரிப்பதுநகங்களை வெட்டுவதுஅக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 5891

மேற்கண்ட செய்தியில் இயற்கையாக செய்ய வேண்டிய கடமைகளின் பட்டியலில் முதல் இடத்தில் விருத்த சேதனத்தைத் தான் இஸ்லாம் குறிப்பிடுகிறது.

ஆண்கள் விருத்த சேதனம் செய்து கொள்வதென்பது எயிட்ஸ் என்ற கொடிய நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.


பி.பி.ஸியின் செய்தியை ஆடியோ வடிவில் கேட்க்க இங்கு க்லிக் செய்யவும்.

உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இருண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளைஅதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.

இதனால்பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது. B.B.C Tamil

ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி பி.பி.சி ஏற்கனவே வெளியிட்ட ஒரு தகவல்.

இஸ்லாம் சொல்லும் கத்னா முறை ஆண்கள் தங்கள் மர்ம உருப்பின் முன் பகுதியை நீக்குவதின் மூலம் விருத்த சேதனம் செய்துகொள்வதின் மூலம் ஏற்படும் நன்மைகளை பி.பி.சி உலக சேவை ஏற்கனவே பல முறை சுட்டிக் காட்டியிருந்தது. அதன் ஒரு பகுதியை இந்த ஆக்கத்துடனும் இணைத்துத் தருகிறோம்.


ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.

தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும்உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது.

இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.

இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமாஅல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமாஎன்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.

அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடைபலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது.

கத்னாவிபச்சாரத் தடைபலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான்.


ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது என்று அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.

சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போதுஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.


இஸ்லாமிய மார்க்கம் தான் இவ்வுலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்ல முடியும் என்பதை மேற்கண்ட செய்திகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

ஆக இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஏற்று நடந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக.

நன்றி: http://rasminmisc.blogspot.com/ 

அன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன். அருந்ததி ராய்

அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..

தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்வி கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைதான் சரியென அவர் 'டிக்' செய்திருப்பார்கள் (அ) வந்தே மாதரம்! (ஆ) பாரத அன்னைக்கு ஜே! (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா! (ஈ) இந்தியாவுக்கு ஜே!

முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)

2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது "சாகும் வரை உண்ணாவிரதத்தை" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் "அன்னா அணி" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவைப் பார்லிமெண்டில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அது இருந்தது.

பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டம், ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள், அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய இடத்திலேயே, கெளரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, அன்னா அணியின் உறுப்பினர்கள் திகாரில் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த விடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும் மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப் பட்டதில்லை.) இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லைலா மைதானத்தில் நாள் முழுக்க வேலைப் பார்த்து, அடுத்த வாரம் அரங்கேறப் போகும் தமாஷாவுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்” என்று முழக்கமிட ஆரம்பித்து விட்டார்கள்.

அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அமத்தியத்துவப் படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு, அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாகக் கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகதானே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. ,இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது.

இந்த மசோதா பயன் தருமா இல்லை தராதா என்பது, நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறிதான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி ஞாயமாக இருக்கும்?

இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்கா விட்டால், அவர்கள் உங்களை "உண்மையான இந்தியன் இல்லை" என்று அடையாளப் படுத்துவர்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லாத போல, மாயையை உருவாக்கி வருகின்றன.

இந்த உண்ணாவிரதம் ஐரம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தமும் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் அப்ஸ்பா சட்டத்திற்கு எதிராக AFSPA (Armed Forces [Special Power] ACT) பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப் பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே ஐரம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரம் கணக்கான கிராமத்துவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.

அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? ஐரம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயு கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இலலையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்த, நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.

பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா பார்லிமெண்டில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படா விட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கோரும், அன்னா என்ற 74 வயது மனிதனை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பிலியன் குரல்கள் ஒலித்து விட்டன,” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”

மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசர தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ, அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ, இவர் ஒரு வார்த்தை கூட உகுத்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார்க் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது விசேச பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைப் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர் மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர். 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களைத் நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமார புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)

இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர் எஸ் எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது அம்பலத்துக்கு இப்பத்திகையாளர்கள் மூலமாக வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்வி படுகிறோம். அங்கோ கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்தோ அல்லது கூட்டுறவு சொசைட்டியோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “இந்த மகாத்தமா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சமார், ஒரு சுனார், ஒரு கும்ஹர் இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைதான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது?

கோகோ கோலாவில் இருந்தும், லெக்மென் பிரதர்ஸில் இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று கையெடுத்து நடத்தியவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில் அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல விசேச பொருளாதார பகுதிகளைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் பெளன்டேசன்களும் அடக்கம். பல கோடிக் கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்களே அந்த அவர்கள். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித பாதகக் கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்?

எப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! 2G ஸ்பெட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமான போது, பல முக்கியமான கார்பரேசன்களும் மூத்த பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் மற்றும் நேச கட்சிகளின் மந்திரிகளும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும் ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்த கரந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இவ்வளவு நாட்களிலும் முதன் முறையாக பத்திரிகையாளர்களும் பரிந்துரையாளர்களும் பெரும் அவமானப் பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா?

அரசு தனது வழக்கமான கடமைகளைக் கைக்கழுவி வரும் போது, கார்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப் பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.

தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும் அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்த இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டுச் செல்வதற்காகதான். இதன் மூலம் இன்னும் தனியார் மயமாக்குதலை ஊக்குவிப்பதுவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கையான வளங்கைள இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்குப் பரிந்துரைக்கும் கட்டணம் என்று பெயர் சூட்டப்படும்.

இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராதிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்?

இந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடிஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடியாற்றுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப் பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆங்கிலத்தில் : அருந்ததி ராய் (21/08/2011, தி இந்து)

தமிழில் : சொ.பிரபாகரன்

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்



ஹைதராபாத்:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஹஸாரேவின் வழிகள் காந்திய வழியாக இருக்கலாம். ஆனால் அவரது கோரிக்கைகள் ஒருபோதும் காந்தியக் கொள்கை அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

                                    
’தி ஹிந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை ஹசாரே மீது சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‘நாட்டில் அவசரமாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு விஷயத்தில் கூட ஹஸாரே குரல் எழுப்பவில்லை. தனது மாநிலமான மஹாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக ஹஸாரே வாயை திறக்கவில்லை. ஹஸாரே முன்வைக்கும் லோக்பால் மசோதா காந்தியடிகளின் அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு எதிரான அடக்கியாளும் சட்டமாகும்.
அரசின் பாரம்பரிய பொறுப்புகள் கார்ப்பரேட்டுகளுக்கும், அரசு சாரா நிறுவனங்களுக்கும் பெருமளவில் பகிர்ந்தளிக்கும் சூழலில் ஹஸாரேவின் லோக்பால் மசோதா கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் முற்றிலும் தவிர்த்துள்ளது.
கார்ப்பரேட் ஊடகங்கள் பொதுமக்களின் விருப்பங்களை கட்டுப்படுத்த முயலும் வேளையில் ஊடகங்களையும், கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் லோக்பால் மசோதாவின் வரம்பிற்குள் கொண்டுவருவதற்கு பதிலாக ஹஸாரே இவற்றை முற்றிலும் தவிர்த்துள்ளார்.
இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள ’யூத் ஃபார் இக்யுவாலிட்டி’ என்ற அமைப்புடன் ஹஸாரே குழுவினருக்கு தொடர்புள்ளது. இவ்வமைப்பின் கீழ் செயல்படும் அமைப்புகளுக்கு கொக்கோ கோலா, லெமன்ப்ரதர்ஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து பெருமளவிலான பணம் கிடைக்கிறது.
ஹஸாரேவின் குழுவைச் சார்ந்த அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பு ஃபோர்ட் ஃபவுண்டேசனிலிருந்து நான்கு லட்சம் அமெரிக்க டாலரை பெற்றுள்ளது. ஹஸாரேவின் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் ’இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஷன்’ என்ற அமைப்பு பெரும் இந்திய நிறுவனங்களிடமிருந்து உதவி பெற்றுவருகிறது. இப்பொழுது ஊழல் வழக்கிலும், இதர குற்றங்களிலும் சிக்கி விசாரணையை எதிர்கொள்பவர்களும் இதில் உட்படுவர்.
ஹஸாரே கைதுச் செய்யப்பட்டவுடன் ஊழலுக்கு எதிரான போராட்டம் எதிர்ப்பு தெரிவிப்பதற்குரிய உரிமைக்கான போராட்டமாக மாறிவிட்டது. ஆனால், இந்த ஆதரவு, போராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரிஸ்ஸாவின் போஸ்கோ நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலத்தை திரும்ப பெறுவதற்காக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அருந்ததிராய் கூறியுள்ளார்.

நன்றி 
thoothuonline.com

Monday, August 22, 2011

RSS வீழ்ச்சி !



‎உ பி யில் R.S.S கயவர்கள் (மனித குல விரோதிகள்!) எண்ணிக்கை குறைவால் R.S.S ஒப்பாரி!!! 20 Aug 2011
லக்னோ ஆகஸ்ட் 15 : உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ச்சியாக R .S .S . சாகக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதுடன் சாகா பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இணை சர் சஞ்சாலக் பையாஜி ஜோஷி லக்னோவில் கடந்த 9 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரையில் முகாமிட்டு சாகாக்கள் எண்ணிக்கையின் குறைவு பற்றியும் போது மக்களின் ஆர்வமின்மை பற்றியும் தகவல் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரக்க்ஷா பந்தன் நிகழ்ச்சியில் பேசிய அவர் சாகாக்கள் மக்களை கவர முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது உத்திர பிரதேசம் பெரிய மாநிலம் என்றும் இதில் பிஜேபி பெரிய அரசியல் கட்சி என்றும் இங்கு R .S .S . கிளைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
R .S .S .இன் சாகா பயிற்சியில்தான் முஸ்லிம்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினரை எவ்வாறு கொல்வது என்றும் கலவரங்களை எவ்வாறு நடத்துவது என்றும் போதிக்கப்டுவது குறிப்பிடத்தக்கது.

Saturday, August 20, 2011

யார் இந்த சயித் குதுப்?


Friday, August 19, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஊடகங்கள்


இந்தியாவில் தற்போது சில மீடியாக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பிடித்த இலக்காக மாறியுள்ளது. சமீப காலமாக தொலைக்காட்சி சேனல்களிலும்,  நாளிதழ்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய தவறான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான் மீடியாக்களின் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும்தான் என்று இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான மொழிகள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களில் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் இயக்க உறுப்பினர்கள் அறவே இல்லாத மாநிலங்களிலும் இத்தகைய மீடியாக்களின் தாக்குதல்கள் இருந்து வருகிறது. 

தற்போது இயங்கி வரும் மீடியாக்கள் வெளியிடும் அறிக்கைகள் எப்பொதும் வேடிக்கையாகவும் அதேசமயம் அந்த ஊடகங்களின் நம்பகத்தன்மையை இரு முறை யோசிக்க வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. ஒரு அறிக்கையோ அல்லது செய்தியையோ வெளியிடும்போது அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை இத்தகைய மீடியாக்கள் சோதிப்பதில்லை. அப்படியே ஒரு தவறான செய்தியை வெளியிட்டுவிட்டாலும் பின்னர் உண்மை நிலை அறிந்தவுடன் தான் வெளியிட்ட செய்தி தவறு என்பதை மீண்டு பிரசுரிக்க வேண்டும் இதை பெரும்பாலான மீடியாக்கள் செய்வதில்லை. ஊடகங்களின் நெறிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை. கடந்த சில மாதங்களாக இந்த ஊடகங்களை பார்க்கும்போது அவர்கள் வெளியிட்ட அபாண்டமான, அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை நம்மால் சுட்டிக்காட்ட இயலும்.

சமீபத்தில் வெளியாகிய சில அறிக்கைகளை படிக்கும்போது இது போன்ற ஊடக தாக்குதல்கள் தற்செயலாய் ஏற்பட்டது அல்ல என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக‌ சதி வலை பின்னப்படுவதை உணரலாம்.
எல்லா ஊடகங்களும் இப்படித்தான் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது என்றாலும் ஊடகங்களில் சில பிரிவுகள் இருக்கின்றது, அவை சங்கப்பரிவார சித்தாந்தத்தை நோக்கி சரிந்திருக்கும் ஊடகங்களாக இருக்கின்றன.

இத்தகைய மீடியாக்கள் முஸ்லிம்கள் மீதும், இந்திய முஸ்லிம்களின் வலிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடும் இயக்கங்கள் மீதும் காழ்புணர்ச்சியோடு செயல்படுகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் அப்பாவி இளைஞர்கள் எவ்வாரெல்லாம் திவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு விசாரணை உட்படுத்தப்பட்டதையும், பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் சில வருடங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட பெங்களூரைச்சேர்ந்த டாக்டர் ஹனீஃப். தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட டாக்டர் ஹனீஃபை அப்பாவி என ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்ட போதிலும் இந்திய பத்திரிக்கைகள் தொடர்ந்து ஹனீஃபை தீவிரவாதியாகவே சித்தரித்து செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருந்தது.






இந்த மீடியாக்களின் இந்த விஷமப்பிரச்சாரத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் இன்று தீவிரவாத கண்ணோட்டத்துடனே பார்க்கப்படுகிறார்கள். படித்த முஸ்லிம் இளைஞர்கள் தான் தீவிரவாத இயக்கங்களில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனரா? என்று கருத்து கணிப்புகள் நாளிதழ்களில் கேட்கும் அளவிற்கு இந்த பிரச்சாரம் அமைந்துவிட்டது. புதுடெல்லியில் நடைபெற்ற பாட்லா ஹவுஸ் போலி எண்கவுண்டர் விவகாரத்திலும் அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்த மீடியாக்கள் நியாயப்படுத்தின.  இத்தகைய செய்திகளிலிருந்து இந்தியாவில் செயல்படும் மீடியாக்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவது ஊர்ஜிதமாகிறது.

கடந்த ஜூலை மாதம் 13அம் தேதி அன்று மும்பையில்  நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம துரதிஷ்டவசமானதும், மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். ஆனால் எந்த ஒரு விசாரணையும் முடிவடையாத நிலையில், யார் இந்த தாக்குதலை நிகழ்த்தினார்கள் என்பதும் உறுதி செய்யப்படாத நிலையில் இந்த மீடியாக்கள் முஸ்லிம்களை இந்த குண்டுவெடிப்போடு தொடர்பு படுத்தி செய்திகள் வெளியிட்டன. இந்த சம்பவம் நிகழ்ந்து சிறிது நாட்களுக்கு பின்னர் புனேயில் வெளிவரும் "மிட் டே" என்ற பத்திரிக்கை பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய அவதூறான செய்தியை வெளியிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கமும் அதனோடு தொடர்புடைய தடை செய்யப்பட்ட மற்ற இயக்கங்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று செய்தி வெளியிட்டது. மராட்டிய மொழியில் வெளிவரும் பத்ரிக்கையான "லோக் மாத்" இன்னும் ஒரு படி மேலே போய் அரசியல் கட்சியாக செயல்பட்டு வரும் எஸ்.டி.பி.ஐ கட்சி இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம என செய்தி வெளியிட்டது. இவ்வாறு செய்தி வெளியிட்ட பத்திரிக்கையின் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று கேள்வி எழுப்பும்போது மஹாராஷ்டிரா மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையின் தூண்டுதலின் பேரில்தான் செய்திகள் வெளியிட்டதாகவும், மறுநாளே மறுப்பு செய்தி வெளியிடுகிறோம் என்றும் கூறுகின்றனர். ஆனால் அது அத்தோடு நின்றுவிடுவதில்லை.

பாப்புலர் ஃப்ரண்டிற்கு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக நாட்டில் பல்வேறு பத்ரிக்கைகள் பொய்யான் செய்திகளை வெளியிட்டது, சில ஆங்கில பத்திரிக்கை உட்பட. மீரட், ஜெய்பூர், பெங்களூ,கொச்சி போன்ற நகரங்களில் வெளிவரும் பத்திரிக்கைகள் இவ்வாறு எந்த ஒரு ஆதாரமும் இல்லாத‌ அவதூறு செய்திகளை பரப்பியது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது இந்த மீடியாக்கள் பெரும்பாலும் கூறும் குற்றச்சாட்டு தடை செய்யப்பட்ட இயக்கமான சிமியுடன் தொடர்பு உண்டு என்பதுதான். ரகசிய பாதுகாப்பு படையின் மூலமாக இந்த செய்தி தங்களுக்கு கிடைத்ததாக இந்த மீடியாக்கள் கூறுகிறது. இத்தோடு மட்டுமல்லாம் இன்னும் எண்ணற்ற கற்பனை கதைகளை இந்த மீடியாக்கள் வெளியிடுவதில் எந்த ஒரு குறைபாடும் வைத்திடவில்லை. இல்லாத ஒரு இல்லாத ஒரு இயக்கமான (இந்தியன் முஜாஹிதீன்)னோடு பாப்புலர் ஃப்ரண்ட்டை தொடர்பு படுத்தி செய்திகள் வெளியிடுவது இவர்களின் வாடிக்கையாகிவிட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேறு எந்த இயக்கத்தோடும் தொடர்பு கிடையாது. இவை போன்ற அப்பட்டமான செய்திகளை வெளியிடும் எந்த பத்திரிக்கையாயினும் இதுவரை எந்த ஒரு ஆதாரப்பூர்வமான சாட்சிகளை வெளியிட்டதில்லை. இவை போன்ற முட்டாள்தனமான செய்திகளை வெளியிட்டுவிட்டு தங்களை "உளவுத்துறை" என்று கூறுவது வேடிக்கயாக இருக்கிறது. இவ்வாறான பத்திரிக்கைகள் தவறான செய்திகளை வெளியிட்ட போது நாம் இதனை கண்டித்து மறுப்பு கடிதம் எழுதியும் இது வரை எந்த ஒரு பத்திரிக்கையும் அதனை பிரசுரித்ததில்லை. இதிலிருந்து இவர்களின் இரட்டை நிலையை நாம் அறிந்து கொள்ளலாம். எத்தனையோ கேள்விகளை இந்த பத்திரிக்கை ஆசிரியர்களிடம் கேள்வி கேட்ட பின்னரும் இதுவரை அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் வந்ததில்லை. இவ்வாறான பொய்யான செய்திகள் வெளிவந்த போதும் எந்த ஒரு பத்திரிக்கையும் நம்முடைய கருத்தினை கேட்பதற்கு நம்மை தொடர்பு கொள்ளாதது வேதனை அளிப்பதாக உள்ளது. எல்லாவிதமான தீவிரவாதத்திற்கு எதிராகவும், தேசவிரோத செயல்களுக்கு எதிராகவும் பாப்புலர் ஃபரண்ட் முன் நின்று போராடக்கூடிய இயக்கமாகும்.

மும்பை குண்டு வெடிப்பிற்கு பிறகு மீரட்டிலிருந்து வெளிவரும் பத்திரிக்கையான "தயினிக் ஜகரம்" என்ற பத்திரிக்கை மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இயக்கத்தை தடை செய்துள்ளது என்றும் அதன் தலைவர்கள் இன்று தலைமறைவாகிவிட்டனர் என்று செய்தி வெளியிட்டது. தென் இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான "தி ஹிந்து" பத்திரிக்கை பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்யப்படவேண்டிய இயக்கம் என்று வெளியிட்டிருக்கிறது. நடுநிலையான இந்தியக்குடிமகன் பத்திரிக்கையின் இந்த விஷமத்தனமான செய்திகளை நன்கு உணர்ந்து கொள்வான். தேசிய அளவில் செயல்பட்டுவரும் புதிய சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யப்பட்ட இயக்கம் என்று கூறுவது எதேர்சயாகவோ அல்லது தவறுதலாகவோ கூறப்பட்ட செய்தி அல்ல மாறாக அதன் வளர்ச்சியை தடுப்பதற்காக திட்டமிடப்பட்ட சதியேயாகும். ஆரம்பகாலகட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தென் இந்தியாவில் மட்டுமே இயங்கி வந்த இயக்கமாக இருந்தது. தற்போது சமீபகாலங்களில் இதன் வளர்ச்சி வட இந்தியாவை நோக்கி வேகமாய் பாய்ந்து வருவதன் காரணத்தால் தான் இத்தைகைய பொய் பிரச்சாரங்கள் அரங்கேற்றப்படுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடி வருகிறது. சுதந்திர தின அணிவகுப்பு, பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலம் சுதந்திர வேட்கையை மக்களின் கொண்டு சேர்க்கின்றது. ஆனால் கடந்த வருடம் கர்நாடகாவில் ஒரு பத்திரிக்கையில் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் ஆக்ஸ்ட் 15 ம் தேதி மைசூரில் பாகிஸ்தானின் தேசியக்கொடியை ஏற்ற முயற்ச்சித்ததாக செய்தி வெளியிட்டது. இத்தகைய முட்டாள்தனமான செய்தியை பத்திரிக்கைகளுக்கு கொடுத்தது அங்குள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவனாவான். ஆனால் மீடியாக்கள் இந்த செய்தி உண்மையானதுதானா? என்பதை ஆராய்ந்து வெளியிடாமல் உடனே பத்திரிக்கையில் பிரசுரித்தது. இதனை கண்டித்துடன் மைசூரில் நடந்தது என்ன? என்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் பேட்டி அளித்தத்போது அதனை எந்த பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. மைசூரில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாட விடாமல் தடுத்தையும் எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை.

ஊடகங்களின் பார்வையில் முஸ்லிம்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவது, தேசியக்கொடியை ஏற்றுவதும் குற்றச்செயலாக பார்க்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு லக்னோவில் பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவரை சுதந்திர தினத்தை கொண்டாட விடாமல் தடுத்து காவல்துறையினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்த அநீதியான செய்திகளை மக்களுக்கு தெரிவிக்காமல் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் சுதந்திர தினத்தன்று பிரச்சனைகளில் ஈடுபடுவதாக பத்திரிக்கைள் செய்தி வெளியிட்டு வருகிறது.

தற்போது தொலைக்காட்சி செய்தி சேனல்களும் இந்த பந்தயத்தில் சேர்ந்துள்ளன. சமீபத்தில் சிறந்த ஆங்கில தொலைக்காடி செய்தி சேனலான சி.என்.என் கடந்த மே மாதம் 30ம் தேதி செய்தி வெளியிட்டது. அதாவது அல்கொய்தா இயக்கத்திற்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் தடைசெய்யப்படுமா? என்றும் செய்தி வெளியிட்டது. மேலும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்தி வெளியிட்டது.

இந்த கட்டுக்கதையின் தொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தின் உறுப்பினர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் பிரான்ஸை உருவாக்குவதற்காகவும், அல்கொய்தா இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்பதற்கு செயல்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. இது மிகப்பெரிய ஆதாரமற்ற அபாண்டமான் குற்றச்சாட்டாகும். பாப்புலர் ஃப்ரண்டிற்கு இந்தியாவை தவிர்ந்து வேறு எங்கும் உறுப்பினர்கள் இல்லை. சி.என்.என் ஐ தொடர்பு கொண்டு கேட்டதற்கு "ரகசிய பாதுகாப்பு படை" தான் இந்த செய்தியை அவர்களுக்கு கொடுத்ததாக கூறியது. பின்னர் கடுமையான நெருக்கடி கொடுத்தவுடன் உள்துறை அமைச்சகம் தாம் இந்த செய்தியை கொடுத்ததாக கூறியது. இப்பேற்பட்ட  பொய்யான் செய்திகள் அந்த நாள் முழுவதும் எல்லா சேனல்களிலும் ஒளிப்பரப்பாகியது. ஆனால் இதற்கான மறுப்பு செய்தி எந்த சேனலிலும் ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை.

இதிலிருந்து ஊடகங்களில் சில பாப்புலர் ஃப்ரண்டின் மீது அவதூறு பிரச்சரத்தை மேற்கொண்டு வருவதை அறியலாம். முஸ்லிம் சமூகத்தை சக்தி படுத்தவும், நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இவை போன்ற தவறான செய்திகளை சவாலாக எடுதுக்கொள்ளும். வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலும், கிழக்கிலும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஆதரவு பெருகி வருகிறது. அநியாயக்காரர்களால் ஒரு போதும் பாப்புலர் ஃப்ரண்டின் வளர்ச்சியை தடுத்துவிடமுடியாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு

கே.எம். ஷரீஃப்
தேசிய பொதுச்செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா