Wednesday, November 30, 2011

சுபுஹு தொழ எழும்புங்கள் அழகாக வருவீர்கள் - லண்டன் ஆய்வில் தகவல்


தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வொன்றை நடத்தினர். 

அதன் விவரம்: தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.58 மணிக்கு எழுந்திருக்கும் நபர்களையும், காலை 8.54 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின் நடவடிக்கை, உடல் நிலை பற்றி அறியப்பட்டது. 

அதில் காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் நபர்களை விட, விடியற்காலை கண்விழித்து எழும் நபர்கள் உற்சாகமாக காணப்படுவது தெரியவந்தது. 

அத்துடன் அவர்களது உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருந்தனர். தோல் சுருக்கமின்றி இளமையாக காணப்பட்டனர். உடல்வாகும் அழகாக தோற்றமளித்தது.
yarlmuslim

இறைத்தூதரின் ரகசியத்தை இறுதிவரை காத்தவர்!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நான்[ரசூல்[ஸல்]அவர்களிடம் சேவகனாக இருந்தபோது] என்னிடம் வந்தார்கள்.
 நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நபி[ஸல்] அவர்கள் 
எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு ஒரு அலுவல் நிமித்தமாக என்னை 
ஒரு இடத்திற்கு அனுப்பினார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன்.
 அப்போது என்தாயார், உன் தாமதத்திற்கு காரணம் என்ன..? என்று கேட்டார்கள். 
நான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு அலுவலுக்காக என்னை அனுப்பி
 வைத்திருந்தார்கள் என்று சொன்னேன். அப்போது என் தாயார் என்ன அலுவல்? 
என்று கேட்டார்கள். நான் அது 'ரகசியம்' என்று சொன்னேன். அப்போது என்தாயார், 
அல்லாஹ்வின் தூதரின் ரகசியத்தை நீ யாரிடம் சொல்லாதே என்றார்கள்.
[ நூல்;முஸ்லிம் 4891 ].

மற்றொரு அறிவிப்பில்;
நபி[ஸல்] அவர்கள் என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்பிற்கு
 பிறகு கூட அதை நான் ஒருவரிடமும் தெரிக்கவில்லை. என் தாயார் உம்மு சுலைம்[ரலி]
 அவர்கள் அது குறித்து கேட்டபோது நான் அவர்களுக்கும் தெரிவிக்கவில்லை. 
[நூல்;முஸ்லிம் 4892 ]


இந்த பொன்மொழியில் நபி[ஸல்]அவர்களிடம் சேவகராக இருந்த அனஸ்[ரலி] 
அவர்களின் பண்பு நமக்கு மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது. சிறுவர்களுடன்
 விளையாடும் அளவுக்கு சிறிய வயதுடைய அனஸ்[ரலி]அவர்கள், இறைத்தூதரின் 
ரகசியம் விசயத்தில் எந்த அளவுக்கு கவனமாக இருந்துள்ளார்கள் எனில், அவர்களது
 தாயார் கேட்டபோதும் கூட சொல்லவில்லை. அதுமட்டுமன்றி, அந்த ரகசியத்தை 
இறைத்தூதர்[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் கூட எவரிடமும் சொன்னதில்லை
 என்றால், ரகசியமும் அமானிதமே என்பதை அனஸ்[ரலி] அவர்கள்வாழ்வு எமக்கு 
உணர்த்துகிறது. ஆனால் இன்று பெரும்பாலான பிரச்சினைக்கு ரகசியங்கள் வெளிப்படுவதே 
காரணமாக அமைகிறது. இயக்கம், அமைப்பு, தொழில், பாதுகாப்பு போன்றவை மட்டுமன்றி,
 கணவன் மனைவிக்குள் நடக்கும் இல்லறம் வரை பேணப்படவேண்டிய ரகசியங்கள் 
பகிரங்கப்படுத்தப்பட்டு அதனால் பல்வேறுவகையான பின்னடைவை சந்திக்கிறோம்.
 எனவே அனஸ்[ரலி] அவர்களின் இந்த உயரிய பண்பை நம்முடைய வாழ்விலும் 
கடைபிடிக்க முன்வருவோமாக!

sahabakkal

லேப்டாப்... வசதியா? அசதியா?


லகையே உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது விஞ்ஞானம். ஆனாலும், அதற்கு விலையாக  அடுக்கடுக்கானப் பிரச்னைகளும் நம்மிடத்தில்  அணிவகுத்து நிற்கின்றன!
'கைக்கு அடக்கமாக இருக்கும்; எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம்’ என்பதாலேயே 'லேப்டாப்’ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்! குறிப்பாக, பிஸினஸ் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் - வெளிநாடு என பறந்து கொண்டே இருப்பவர்களிடையே லேப்டாப்பின் பயன்பாடு ரொம்பவே அதிகம்.
தற்போது கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. இப்படி பல்வேறு துறையினரும் லேப்டாப் பயன்படுத்தி வரும் சூழ்நிலையில், 'அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும்’ என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதுகுறித்து பொது மருத்துவர் ராஜாமணியிடம் கேட்டோம்.
'கம்ப்யூட்டரைப் போல ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால், பெரும்பாலானவர்கள் லேப்டாப்புக்கு மாறி வருகிறார்கள். மடியில் வைத்துப் பயன்படுத்துதல், படுத்துக்கொண்டே பயன்படுத்துதல், ஹாயாக தரையில் உட்கார்ந்துகொண்டு பயன்படுத்துதல் என ஒவ்வொருவரும் தங்களுடைய வசதிக்கேற்ப விதவிதமான முறைகளில் லேப்டாப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும், குறிப்பிட்ட நேரம்தான் என்றில்லை... மணிக்கணக்காக அதிலேயே மூழ்கி விடுகின்றனர். இப்படித் தொடர்ந்து பயன்படுத்துவதால் இடுப்பு, கழுத்து, மூட்டு, தோள்பட்டை என உடம்பில் பல இடங்களில் வலி தோன்றும்.
குறிப்பாக, நீண்ட நேரம் டைப் செய்யும்போது, மணிக்கட்டுப் பகுதிக்கு ரத்தம் வருவது குறைந்து வலி உண்டாகும். விரல்களிலும் இந்தப் பாதிப்பு இருக்கும். எனவே, தொடர்ந்து தட்டச்சு செய்யவேண்டிய வேலை இருந்தால், அவ்வப்போது விரல்களுக்கு ஓய்வு கொடுத்து, ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். விரல்களை நீட்டி மடக்குவது போன்ற சிறிய பயிற்சிகளையும் செய்யலாம். இதனால் ரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து, புத்துணர்வு ஏற்படும்.
மடியில் லேப்டாப்பை வைத்துப் பயன்படுத்தும்போது, அதில் இருந்து வெளியாகும் அதிக சூட்டினால் ஆண்களின் விதைப்பை பாதிக்கப்பட்டு, விந்தணுக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் 'குழந்தைப் பேறு கிடைப்பதிலும் சிக்கல் உண்டாகலாம்’ என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுதவிர, சூட்டினால் மடியில் எரிச்சல், புண் போன்ற சருமப் பாதிப்புகள் வரலாம்.
சிலர் துணி அல்லது தலையணையை மடியில் வைத்து, அதன்மேல் லேப்டாப்பை வைத்துக் கொள்வார்கள். இப்படிச் செய்வதால், லேப்டாப்பில் இருந்து வரும் வெப்பம் தங்களைத் தாக்காது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறான விஷயம். ஏனெனில், வெப்பம் வெளியேற வழி இல்லாமல், லேப்டாப் இன்னும் அதிகமாக சூடாகும். சில சமயங்களில் வெடித்து விடவும் வாய்ப்புண்டு.
லேப்டாப்பை மடியிலோ அல்லது தரையிலோ வைத்துப் பயன்படுத்தும்போது குனிந்தே இருப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி உண்டாகும். சிலர் படுக்கையில் குப்புறப் படுத்துக்கொண்டே லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இப்படிச் செய்யும்போது மார்பு வரை உள்ள உடல்பகுதி மட்டுமே படுக்கையில் பதிந்திருக்கும். தலையும், கழுத்தும் மேலே தூக்கி இருக்கும். இதனால் முதுகு, கழுத்துப் பகுதிகளில் வலி ஏற்படும்.
இப்படித்தான் அமர வேண்டும், படுக்க வேண்டும் என வரைமுறை இருக்கிறது. இந்த வரைமுறைகளை மீறும்போதுதான் மேற்கண்ட பிரச்னைகள் உருவாகின்றன. எனவே, மேஜை அல்லது அதற்குச் சமமான உயரம் கொண்ட இடங்களில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு முதுகு வளையாமல் வேலை செய்யலாம். மேலும் ஒரே நிலையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், குறிப்பிட்ட இடைவெளிகளில், உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இதுதவிர அவ்வப்போது எழுந்து சிறிது தூரம் நடக்கவும் செய்யலாம்.
அதிக வெளிச்சமுள்ள விளக்குகள் இருக்கும் இடங்களில் லேப்டாப் பயன்படுத்தும்போது, அதிகமான ஒளி லேப்டாப் திரை மீது பட்டு, எதிரொளிக்கும். இதனால், கண்களில் உள்ள ரெட்டினாவில் பாதிப்பு ஏற்படும். எனவே, அதற்குத் தகுந்தாற்போல் திரையின் பிரகாச அளவை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது!' என்கிறார் டாக்டர் ராஜாமணி!
JO.
 thedipaar.com

தமிழக முதல்வர் அவர்களுக்கு மொக்கையனின் மனம் திறந்த மடல்!



தமிழக முதல்வர் அவர்களுக்கு,

தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளுக்கும் நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்பதைக் கடந்த ஆட்சியில் கருணாநிதி நிரூபணம் செய்த பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய ஆறே மாதத்தில் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நீங்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதுடன் பால் விலையையும் லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தியுள்ளீர்கள். இது போதாதென்று மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்க்கப் போகிறீர்கள்.

இதற்க்கெல்லாம் நீங்கள் சொல்லும் காரணம், தமிழக பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்பதுவே. கடந்த ஐந்து  வருடமாக தமிழகத்தை ஆண்ட கருணாநிதியே,  "பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கக் காரணம், தமிழக மின்சார வாரியம் சுமார் 45000 கோடி அளவுக்குக் கடனில் தத்தளிக்கிறது. நான் உட்பட தமிழக பாமர மக்களின் சந்தேகம், கடந்த ஐந்து  வருடங்களில் மட்டும் தானா பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.?" என்று கேட்டுள்ளார். அவர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. கருணாநிதிக்கு முன்னர் நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் இவையெல்லாம் லாபத்தில் இயங்கி வந்தனவா?

பேருந்துக் கட்டண உயர்வால் தமிழக மக்கள் படும் இன்னல்கள் உங்கள் பார்வைக்கு வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஊருக்குச் சென்று விட்டு சொந்த ஊர் திரும்ப கையில் பேருந்துக் கட்டணத்துக்கான முழுத் தொகையும் இல்லாமல் போக வேண்டிய இடத்துக்கு முன்னரே இறங்கி நடந்து சென்றதாகவும், பேருந்தில் ஏறிய சிலர் கண்டக்டர் சொன்ன டிக்கெட் ரேட்டைக் கேட்டு மாரடைப்பு வராத குறையாக இறங்கிய செய்திகளும் உங்கள் பார்வைக்கு வந்தனவா என்று தெரியவில்லை.

இலவச லேப்டாப் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தராததாலேயே கட்டண உயர்வு என்று அறிக்கை விடும் முதல்வர் அவர்களே, மத்திய அரசு நிதியை நம்பித்தானா இலவசத் திட்டங்களை அறிவித்தீர்கள்?. இல்லை, இலவச திட்டங்களை அறிவிக்கும் முன்னர் மத்திய அரசைக் கேட்டு அவர்களின் உறுதிமொழிகளைப் பெற்ற பின்னர் அறிவித்தீர்களா?. உங்களிடம் யார் கேட்டது இலவசம்?. பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம், பால் விலைகளை உயர்த்தாமல் இருந்தால் நீங்கள் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தரும் இலவசத்தை நாங்களே வாங்கிக் கொள்வோமே. உங்கள் அமைச்சர் பெருமக்களுக்குக் கிடைக்கும் கமிசனைப் பெறவா இது போன்றதொரு இலவச  யுத்தி?

20 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாலும் அரசு கேபிளை ரூ 70 விலையில் ஒளிபரப்புவதாலும் தமிழக மக்களின் மனங்கள் மகிழ்ந்து விடப் போவதில்லை.  பேருந்துக் கட்டணம் என்ற பெயரில் தினம் பெறும் கூலியில் பாதியையும் மின்சாரக் கட்டணம் என்ற பெயரில் மீதியையும் வாங்காமல் இருந்தாலே போதும்.

நஷ்டத்தை ஈடுகட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்த ஒரே வழி விலையை உயர்த்துவது தான். இவர்கள் எல்லாம் எப்படி இந்திய ஆட்சிப் பணி முடித்து வந்தார்கள் என்பது தெரிய வில்லை. தமிழக பொதுத் துறை  நிறுவனங்களில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு முடியும் வரை நஷ்டத்தைச் சமாளித்து விட்டு கடைசி முயற்சியாக 15 முதல் 25 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்தி இருக்கலாம். ஒரேயடியாக பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டீர்கள். சரி தான்.   ஐந்து வருடங்கள் கடந்து மீண்டும் ஆட்சிக்கு வருவது சந்தேகம் என்ற நிலையில் 10 வருடத்துக்கும் சேர்த்து ஏற்றி விடுங்கள் என்றுகூட உங்கள் ஆலோசனைக் குழு உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி இருக்கக் கூடும்.

ஒரு நாளாவது சென்னை மாநகரப் பேருந்துகளில் நீங்களும் உங்கள் அமைச்சர் பெருமக்களும் போயஸ் கார்டனில் இருந்து கோட்டைக்குப் பயணம் செய்து பாருங்கள். தமிழக பேருந்துகளின் அவல நிலை உங்களுக்குத் தெரிய வரும்.  கேரள மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப் படும் ஏழை முதல்வர்கள் போன்று தமிழ்நாட்டில் ஏழைகள் யாரும் முதல்வராகத் தேர்வு செய்யப் படாததே எங்களின் அவல நிலைக்குக் காரணம்.

அடுத்து தமிழக குடிமகன்களின் துயர் துடைக்க உங்கள் ஆட்சியில் எலைட் பார்களைத் திறக்க உள்ளதாக செய்திகள் மூலம் அறிந்தேன். வெளிநாட்டு மதுவகைகள் பரிமாறப் படும் எலைட் பாருக்குள் நுழையவே ரூ 50  கட்டணமாமே. மகத்தான திட்டத்தைக் கொண்டு வர உள்ள தமிழக முதல்வரே  வரலாற்றில் உங்கள் பெயர் நிச்சயமாக இடம்பெறும்.

தினக் கூலி பெறுவோரில் பாதிபேர் இப்போது டாஸ்மாக் வாசலில்தான் தவம் இருக்கிறார்கள். இனி எலைட் திட்டமும் வந்து விட்டால் உள்ளூர் சரக்கு அடித்து போரடித்து விட்டது என்று  வீட்டில் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மனைவி  ஒன்று இரண்டு என சேர்த்து வைக்கும் பணத்தை லவட்டிக் கொண்டு போய் எலைட் பாரில் போய் வெளிநாட்டு சரக்கு அடிக்கும் வாய்ப்பைத் தமிழ்க் குடிமகன்களுக்கு ஏற்படுத்தி தர உள்ளீர்கள் என்பதையும் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.

பல்வேறு நலத்  திட்டங்களை உங்கள் பொற்கரங்களால் தொடங்கி வைக்கும் தமிழக முதல்வர் அவர்களே, வரலாற்றுத் திட்டமாம் எலைட் பார் திட்டத்தையும் உங்கள் பொற் கரங்களால் தொடங்கி வைத்து தமிழ்க் குடிமகன்களின் வயிற்றில் வெளிநாட்டு மதுவை வார்ப்பீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.

வாழ்க அண்ணா நாமம்! வளர்க எம்.ஜி.ஆர் புகழ்! எக்கேடுகெட்டோ ஒழியட்டும் தமிழக மக்கள்!

- மொக்கையன்

நன்றி: இன்நேரம்

உலகின் முதலாவது பாலியற் கல்லூரி - உலகம் எங்கே போகிறது


தலைமை ஆசிரியை மரியா  



உலகின் முதலாவது சர்வதேச 'செக்ஸ்' பாடசாலை வியன்னாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களான காதலர்கள் எப்படி சிறந்த காதலர்களாக இருக்கவேண்டும் என்று கற்பித்துக் கொடுக்கின்றனர் (வாய்க்குள் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாவர்களுக்கு படித்துக் கொடுக்கிறார்களாம்). வியன்னாவில் உள்ள இந்த சர்வதேச செக்ஸ் பாடசாலையில் மாணவர்களிடமிருந்து £ 1,400 தொகையை அறவிடுகிறார்களாம்.

அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியை மரியா தோம்சன் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்ட "உலகின் முதலாவது பிரயோக செக்ஸ் கல்லூரி- College of Applied Sex" இதுதான். இதைவிட என்ன வேண்டும் என்றும் கேட்கிறார் அந்த தலைமை ஆசிரியை.

இங்கு ஆண், பெண் மாணவர்களை 'கலந்து' பயிற்சிகள் செய்து பழக விடுகிறார்களாம். அதில் வீட்டுப் பயிற்சி (Home Work) வேறு கொடுக்கிறார்களாம். (என்ன கொடுமை சேர் இது... இதற்கு பெற்றோர்கள் கட்டணம் செலுத்தி படிக்கவிடுவார்களா?) இவர்களது அடிப்படைக் கல்வி பாடத்திட்டமாக இல்லையாம், அது நடைமுறைக்கு சாத்தியமில்லாததால் செய்முறைப் பயிற்சிதான் கொடுக்கிறார்களாம். இதனால் காதலன்-காதலி உறவை வலுப்படுத்த திட்டம் தீட்டியிருக்கிறார்களாம்.

இந்தப் பாடசாலையில் செக்ஸ் செய்முறைகள், உணர்வைத் தூண்டும் நுட்பங்கள், உடற்கூறியல் அம்சங்கள் என்பவற்றை மாணவர்களுக்கு கற்பித்துக் கொடுக்கின்றார்களாம். இந்தக் கருமத்தையும் படித்துக்கொடுக்க ஒரு சர்வதேச பாடசாலையாம். உலகம் எங்கே போகிறது? உலகம் விரைவில் அழியப்போகின்றதா?
yarlmuslim

பிரிட்டன் புதன்கிழமை அதிரும்


பிரிட்டனில் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களை எதிர்த்து, 30 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ள பிரமாண்டமான பொது வேலை நிறுத்தம், புதன்கிழமை நடக்க உள்ளது. இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரிட்டனுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கூட்டணி அரசு, அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு வருவாய்களில் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியத்திற்காக பொதுத் துறை ஊழியர்கள் அதிகளவில் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும்; கூடுதல் நேரம் உழைக்க வேண்டும். ஆனால், இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, நாட்டின் 20 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நவம்பர் 30ம் தேதி புதன்கிழமை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இந்த வேலை நிறுத்தத்தால், பள்ளி, கல்லூரிகள், சாலை, ரயில், விமானப் போக்குவரத்துகள் உள்ளிட்ட அன்றாட வாழ்வின் அத்தியாவசியச் சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படும்.

இந்த பொது வேலை நிறுத்தத்தில், 30 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 1926ல் நடந்த வேலை நிறுத்தத்தில் 30 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து, இந்த வேலை நிறுத்தம் தான் மிகப் பெரிய அளவில் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

வேலை நிறுத்தத்தில், விமானப் போக்குவரத்து ஊழியர்கள், எல்லைப் பாதுகாப்பு ஊழியர்கள் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, விமான போக்குவரத்து சேவையில் அதிக கால தாமதம் ஏற்படும் என்பதால், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் லண்டனுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
yarlmuslim

ஈரான் மாணவர்கள் பிரிட்டன் தூதரகத்தை கைப்பற்றினர்

ஈரான்நாட்டு பல்கலைமாணவர்கள் இங்கி‌லாந்து அரசை கண்டித்து தலைநகர் டெஹ்ரானில் உள்ள தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர். ஈரான் நாடு அணுகுண்டு தயாரிப்பது குறித்து இங்கிலாந்து அரசு கருத்து ஒன்றை வெளியிட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் நாட்டு பல்கலை மாணவர்கள் ஈரான் அரசு ‌ இங்கிலாந்து நாட்டு தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளி‌யேறச்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான வாசகங்களை கூறியபடி பேரணியாக சென்ற பல்கலை மாணவர்கள் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர். பி்னனர் அங்கிருந்த பாதுகாவலர்கள்மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் ‌கொடியை தீ வைத்து கொளுத்தினர். 
yarlmuslim

இதனை உள்ளூர் டி.விக்கள் ‌நேரடியாக ஒளிபரப்பு செய்ததாகவும், தூதரகத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்ததால் மாணவர்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லை என்றும் ‌ஏஜென்சி செய்திகள் தெரிவித்துள்ளது. 

Tuesday, November 29, 2011

ஜெர்மனியிலுள்ள நோக்கியா நிறுவனத்தில் 17000 ஊழியர்கள் திடீர் டிஸ்மிஸ்.


செல்போன் தயாரிப்பில் உலகில் முன்னணி நிறுவனமாக நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளின் சீமன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செல்போனை தயாரித்து வருகிறது. கடும் போட்டி காரணமாக சமீப காலமாக இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
எரிக்சன் மற்றும் சீன நிறுவனம் ஹாவி ஆகியவை கடும் போட்டியாக உள்ளன. அவற்றை சமாளிக்க முடியாமல் நோக்கியா நிறுவனம் தவிக்கிறது. எனவே நஷ்டத்தை சரிக்கட்ட 17 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று நோக்கியா நிறுவனம் முடிவு செய்தது. இந்த நிறுவனத்தில் மட்டும் 74 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 23 சதவீத ஊழியர்கள் நீக்கப்படுகின்றனர்.
இதன் மூலம் நிறுவனத்துக்கு ரூ. 7,300கோடி மிச்சமாகும். எனவே நிறுவனத்தை லாபத்தில் செயல்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நோக்கியா சீமன்ஸ் நிறுவனம் ஆகியவை தனித்தனியே பிரிந்து விடுவது என்றும் திட்டமிட்டுள்ளனர்.
sourses-thedipaar.com

ஊமையாகிப்போன ஊடகங்கள்.





ஒரு புகழ்பெற்ற மைதானம்....!
அதுவும் தேசத்தின் தலை நகரம்...!
பல்லாயிரக்கணக்கான மக்கள் சங்கமித்த இடம்....!
எங்கே போனது ஊடகம்?
ஒரு வேளை ஊமையாகிப்போனதோ?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா : ஒரு சமூக நல இயக்கம், கடந்த 1989 ஆம் ஆண்டிலே தொடங்கப்பட்டு  ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறது. இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான கேரளாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த பேரியக்கம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று இந்தியாவின் எட்டுத்திசைகளிலும் மக்கள் பேராதரவோடு சமூகப்பணிகளை ஆற்றி வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுக்கும் ஒவ்வொரு பணிகளும் மக்கள் நலனுக்காகவே செய்யப்படுகிறது. ஆகவே தான் தென் இந்தியாவைக்காட்டிலும் தற்போது வட இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒரு வேகமான அதுவும் படிப்படியான் வளர்ச்சி அடைந்து வரும் இயக்கத்தினால் தேசவிரோத சக்திகளுக்கும், வகுப்புவாத சக்திகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இந்திய சுதந்திரத்திற்காய் தங்களது சதவீதத்தைவிட அதிகமான மக்கள் போராடியதாக வரலாறு கூறியிருந்தும், சுதந்திரத்தை இழந்து, கண்ணியத்தை இழந்த இந்த முஸ்லிம் சமூகம் தீவிரவாதிகளாய் சித்திரக்கப்படும் போது, தீவிரவாதிகள் யார்? தேசியவாதி யார்? என்பதை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் சிந்தித்திராத, முயற்ச்சி செய்திராத ஒரு கண்ணியமான செயல் தான் சுதந்திர தின அணிவகுப்பு. 

மதக்கலவரங்களாலும், மோதல்களாலும் அப்பாவி மக்களை கொன்று குவித்த சங்கப்பரிவார சக்திகள் இந்த அணிவகுப்பை கண்டு நடுங்கி மிரள, அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களோ ஆனந்தக் கண்ணீர் விட்டனர் அணிவகுப்பைக்கண்டு.

கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலஹாபாத் உயர் நீதி மன்றத்திலிருந்து வெளியான் தீர்ப்பிற்குப் பின் இனியும் பாபரி மஸ்ஜித்திற்காக போராட வேண்டுமா? என்று எண்ணிய முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் "நீதி தேடும் பாபரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் நாடு முழுவதும் நடத்திய பிரச்சாரங்கள், விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.

முஸ்லிம் சமூகத்தின் வலிமைக்காவும், வளர்ச்சிக்காவும் தொலை நோக்கு சிந்தனையோடும், சாத்தியக்கூறாக விழங்கக்கூடிய பல பணிகளை செய்து வரும் பாப்புலர் ஃப்ரண்டால் தூக்கம் தொலைந்து திறியும் உளவுத்துறை எப்படியாயினும் பாப்புலர் ஃப்ரண்ட் செய்யும் பணிகளை தடுத்திட வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு உளவுத்துறையினர் அதிகம் பயன்படுத்துவது ஊடகத்துறையைத்தான்.

பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகளை பரப்புவதில் மட்டுமே முனைப்புடன் செயல்படுகிறது இந்த ஊடகத்துறை. இதில் எந்த பத்திரிக்கையும், நாளிதழும் விதிவிலக்கல்ல... ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் செய்யும் சமூக சேவைகளை இந்த பத்திரிக்கைகள் பிரசுரிப்பதே இல்லை. காரணம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது நற்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது உளவுத்துறை.

தேசத்தின் தலைநகரமான புதுடெல்லியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட ஓர் இடம் அதுவும் புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமான ஒரு மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட். ஆனால் இது பற்றிய செய்தி எந்த நாளிதழிலும் வெளிவரவில்லை (சிறு பத்திரிக்கைகளைத்தவிர). அப்படியானால்? ஊடகம் ஊமையாகிப்போனதோ?

ஊடகங்கள் இந்தச்செய்திகளை மக்கள் மன்றத்தில் எடுத்துச்செல்கிறதோ? இல்லையோ? பாப்புலர் ஃப்ரண்டின் வளர்ச்சி ஊடகங்களில் கைகளில் இல்லை. ஊடகங்கள் செய்யும் தவறான பிரச்சாரங்களை ஒரு ஏணியாக உபயோகப்படுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் தனது கால்களை ஆழமாக பதித்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம். இறையருளால் அது தன்னுடைய இலக்கை அடைந்தே தீரும்! இன்ஷா அல்லாஹ்!

ஆக்கம்: முத்து

மன்னிப்பு கேட்டால் போதாது - அமெரிக்காவை மிரட்டும் பாகிஸ்தான்



"நேட்டோ படைகள் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும்' என பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாக்., தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் அது மறுத்துள்ளது.கடந்த 26ம் தேதி அதிகாலை, பாகிஸ்தானின் மொஹ்மந்த் பழங்குடியினப் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள சலாலா எல்லைச் சாவடி மீது, நேட்டோ-ஆப்கன் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், 24 பாக்., வீரர்கள் பலியாயினர்.இச்சம்பவம், ஏற்கனவே சிக்கலில் உள்ள அமெரிக்கா - பாக்., உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ மன்னிப்பு:நேட்டோ பொதுச் செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முஸ்ஸன், பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு எழுதிய கடிதத்தில், "எவ்வித உள்நோக்கமும் இன்றி எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நடந்து விட்டது' என வருத்தம் தெரிவித்திருந்தார்.
ராணுவம் காட்டம்:ஆனால், நேட்டோவின் மன்னிப்பு மட்டும் போதாது என பாக்., ராணுவம் காட்டமாகத் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர் அதர் அப்பாஸ் கூறியதாவது:
இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. இதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்கனவே பல முறை நடந்து விட்டன.
கடந்த மூன்றாண்டுகளில், நேட்டோ நடத்திய தாக்குதல்களில், 72 பாக்., வீரர்கள் பலியாகியுள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். நேட்டோ நடத்திய தாக்குதல் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பாக்., அரசு முடிவெடுக்கும்.இவ்வாறு அப்பாஸ் தெரிவித்தார்.

யார் முதலில் தாக்கியது?அதேநேரம், "வால் ஸ்ட்ரீட் ஜர்னல், கார்டியன்' போன்ற பத்திரிகைகளில், முதன் முதலில் பாக்., தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அது தலிபான்களாக இருக்கலாம் எனக் கருதித் தான் நேட்டோ பதிலடி கொடுத்ததாகவும், தாக்குதல் குறித்து பாக்., ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆப்கன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏன் 2 மணி நேரத் தாக்குதல்?இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்ட போது அப்பாஸ் கூறியதாவது:"இது ஒரு சாக்கு போக்கு. அப்படி பாக்., தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டால் அங்கு எத்தனை பேர் பலியாயினர், சேதம் என்ன என்பது பற்றி விவரங்களை அவர்களால் தரமுடியுமா? தாக்குதல் நடந்த நேரத்தில், சலாலா சாவடியில், வீரர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.நேட்டோ தாக்குதல் துவங்கிய போதே, அதை நிறுத்தும்படி அவர்களுக்கு பாக்., ராணுவத் தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது.
அதையும் மீறித் தான் இரண்டு மணி நேரமாக அத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் எதற்காக ராணுவ ஹெலிகாப்டர்களும் ஜெட் ரக போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன?இவ்வாறு அப்பாஸ் கேள்வி எழுப்பினார்.இதற்கிடையில், நேட்டோ தாக்குதல் குறித்து தனித்த விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மக்கள் கொந்தளிப்பு:நேட்டோ தாக்குதலை அடுத்து, பாக்.,ல் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. இனி எக்காரணம் கொண்டும், நேட்டோவுக்கு எரிபொருள் வினியோகிக்கப் போவதில்லை என பாக்., எரிபொருள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.பாக்., முழுவதும் நேற்று வழக்கறிஞர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சீனா அதிர்ச்சி:சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இச்சம்பவத்தால் சீனா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பெரும் கவலை அடைந்துள்ளது. பாகிஸ்தானின் சுயேச்சையான, இறையாண்மை மிக்க எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். நடந்த சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். 
yarlmuslim

Monday, November 28, 2011

வேலைவாய்ப்பு ----சவூதி ஆரேபியாவில் உள்ள பிரபல "அல் மராய்" என்ற நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை .



சவுதியில் உள்ள பிரபலமான "AL MARAI" (அல் மராய்) என்ற நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. எனவே (தாங்கள் விருப்பம் உள்ளவர்கள்) கீழ் கண்ட பணிகளில் பல் வேறு விதமான வேலைகள் இருப்பதால் உடனே பதிவு செய்யுமாறு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
பணிகளின் விபரம்:
1 ) Material Handler : = மாத சம்பளம் ரியால் = 800 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 5 .769

2 ) Stock Controller : = மாத சம்பளம் ரியால் = 2 ,965 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 16 .158

3 ) Cook : = மாத சம்பளம் ரியால் = 1688 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 12 .165

4 ) Heavy Duty Driver : = மாத சம்பளம் ரியால் = 1 ,080 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 12 .165

5 ) Machine Operator := மாத சம்பளம் ரியால் = 800 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 5 .769

6 ) Lead Process Operator : = மாத சம்பளம் ரியால் = 1687 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 12 .165

7 ) Senior Machine Operator : = மாத சம்பளம் ரியால் = 930 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 6 .706

8 ) Laborer : = மாத சம்பளம் ரியால் = 620 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 4 .586

9 ) Fork Lift Operator : = மாத சம்பளம் ரியால் = 870 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 6 .274

10 ) Maintenance Tech : = மாத சம்பளம் ரியால் = 1687 சாப்பாடு = 400 ஓவர் டைம் =

11) Mechanic : = மாத சம்பளம் ரியால் = 1 ,482 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 10 .687

12 ) Stock Control Clerk : = மாத சம்பளம் ரியால் = 2 ,420 சாப்பாடு = 400 ஓவர் டைம் =18.987

மேலும் தொடர்புக்கு : மாலிக் = 90806 66733

source : http://muthupettaiexpress.blogspot.com/2011/11/blog-post_24.html

அமல் செய்வதில்தான் எத்துனை ஆர்வம் இவருக்கு..?


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நபி [ஸல்] அவர்களின் இந்த உம்மத்தில் தலைசிறந்தவர் அபூபக்கர் சித்தீக்[ரலி] அவர்கள் என்பதை
 நாமெல்லாம் அறிந்துவைத்துள்ளோம். இத்தகைய சிறப்பு அவர்களுக்கு இருந்தும், சொர்க்கத்திற்கு 
உரியவர் என்று இறைத்தூதரால் பிரகடனப் படுத்தப்பட்ட பின்பும் அபூபக்கர்[ரலி] அவர்களின் அமல்கள்
 குறைந்ததா என்றால் இல்லை. நல்லமல்கள் என்று எவையெல்லாம் உள்ளதோ அவைகளை 
அன்றாடம் செய்யக்கூடிய அற்புத மனிதராக அபூபக்கர்[ரலி] அவர்கள் திகழ்ந்துள்ளதற்கு சான்றாகவும், 
நமக்கும் அத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்பதற்காகவும் இந்த பொன்மொழி இங்கு பதியப்படுகிறது;

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

[ஒருநாள்] இறைத்தூதர்[ஸல்] அவர்கள் [எங்களிடம்] இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர்
 யார் என்று கேட்டார்கள்.

அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றைய தினம் உங்களில், ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்றவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் உங்களில் ஒரு ஏழைக்கு உணவளித்தவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் ஒரு உங்களில் ஒரு ஒரு நோயாளியின்நலம் விசாரித்தவர் யார் என்று
 கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

அப்போது இறைத்தூதர் அவர்கள், இவை அனைத்தும் ஒரு மனிதரிடத்தில் ஒன்று சேர்ந்தால்
 அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். [நூல்;முஸ்லிம்].

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்!


பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்!அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம். சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.
கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர். இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களுக்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச்’ வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!
நன்றி:  தினகரன்

அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றன – ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம்.


புதுடெல்லி:முஸ்லிம்களின் மோசமான சூழ்நிலையை சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டிய பிறகும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுவது தொடர்கிறது என டெல்லி ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டையொட்டி நடைபெற்ற மில்லி கன்வென்சனை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது:

சச்சார், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கைகளை தற்பொழுதும் மேசைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமை கூட சவாலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. பலரும் முஸ்லிம்களின் பிரச்சனைகளை கேட்க கூட தயாரில்லை. முஸ்லிம்களை ஏமாற்றுவதில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே போலவே உள்ளன.

சமூக நீதிக்கான அழைப்பு வெறும் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல. சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அதன் வரம்பிற்குள் வருவர். இத்தகையதொரு சமூகநீதிக்காகத்தான் நமது தேச தந்தை மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவுக்காக பாடுபட்டார். அதனால்தான் அவர் கலீஃபா உமரின் நீதியை விரும்பினார். சமூகநீதி மாநாடு முஸ்லிம்களின் துயரநிலையை மாற்றுவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த துவக்கமாகும். இவ்வாறு ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம் கூறினார்.

சங்க்பரிவார்கள் நடத்திய குண்டுவெடிப்புகள் சமூகங்களை பிளவுப்படுத்தியுள்ளது – சுரேஷ் கெய்ர்னார்


 புதுடெல்லி:சங்க்பரிவாரம் நடத்திய குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களை பாதுகாப்பு அற்றவர்களாகவும், பீதிவயப்படுபவர்களாகவும் மாற்றியது மட்டுமல்ல, சாதாரண ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே ஆபத்தான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என அகில இந்திய தேசிய மதசார்பற்ற பேரவையின் தேசிய கன்வீனர் டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் நடத்திவரும் சமூக நீதி மாநாட்டில் ’நீதிக்கான மக்களின் உரிமை’ என்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது: ‘அரசின் அனைத்து துறைகளும் முஸ்லிம்களுக்கு அநீதியை காட்டுகின்றன. கல்வி கற்ற மாணவர்களுக்கு தங்களுடைய கல்வி தகுதியே பெரும் தலைவலியாக மாறும் அளவிற்கு இந்தியாவின் புலனாய்வு ஏஜன்சிகள் நடந்துகொள்கின்றன.

அஸிமானந்தா என்ற குற்றவாளி பல வருடங்களுக்கு பிறகு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அதனை கொண்டாட இங்கே ஆட்கள் உள்ளனர். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த உண்மைகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டனர். இந்தியாவில் நடந்த எந்த குண்டுவெடிப்பிலும் ஒரு முஸ்லிமுக்கும் பங்கில்லை.’ இவ்வாறு கெய்ர்னார் கூறினார்.

பாகிஸ்தான் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் - அமெரிக்காவை வெறியேற உத்தரவு


பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் அமைச்சரவையின் அவசர கூட்டம் நேற்றிரவு நடந்தது. பிரதமர் யூசுப் ராசா கிலானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் மீதான நேட்டோ படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என பிரதமர் கிலானி இதை வர்ணித்துள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு பொருட்கள், ராணுவ தளவாடங்களை கொண்டு செல்லும் பாதைகளை பாகிஸ்தான் அடைத்து விட்டது. மேலும், பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறும், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
yarlmuslim