Sunday, March 24, 2013

சமுக விரோதிகளிடம் இருந்து 100 கோடி மதிப்புள்ள பேட்டை நவாப் வாலாஜா பள்ளியின் சொத்துகள் மீட்பு

                

      நெல்லை மாவட்டம் பேட்டையையை நவாப் வாலாஜா பள்ளிவாசலுக்கு சொந்தமாக பல கடைகள் ,மண்டபம்,வீடுகள் என பல இடங்கள் உள்ளன இவைகள் தொடர்ந்து சமுக விரோதிகளின் கையில் சிக்கி மாத வாடகையும் பள்ளிக்கு கிடைக்காமல் இருந்து வருகிறது.இந்த பிரச்சினை பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது அண்மையில் நீதிமன்றம் இடம் வக்ப் வாரியத்திற்கு (பள்ளி வாசலுக்கு) உரியது என தீர்ப்பு வழங்கியது .தீர்ப்பில் பள்ளியின் சொத்துக்கள் பள்ளிக்கே சொந்தம் என்றும் அதை உடனடியாக ஆக்கிரமிப்பாளர்கள் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் காலி செய்து விட்டு செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செல்வதற்குள் எவ்விதமான கட்டிடங்களையும் இடிப்பது கூடாது என்றும் தீர்ப்பில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது, தீர்ப்பு இவ்வாறு இருந்தும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டிடம் ஒன்றை ஆக்கிரமிப்பாளர்கள் இடித்ததால் பேட்டை முழுவது ஒரு வித பரபரப்பிற்கு உள்ளாக்கப் பட்டது.

     ஆனால் தீர்ப்பு வழங்கியும் முஸ்லிம்களில் கையில் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தது மாவட்ட நிர்வாகம் இதனால் கோபமுற்ற முஸ்லிம் அமைப்புகள் (பாப்புலர் ஃப்ரண்ட்,ம.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ., உம்மத்தே முஸ்லீம் மற்றும் பல அமைப்புகள் )மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் மேலும் முதல்வரின் கவனிக்கும் கொண்டு சென்றனர் .மேலும் இழுத்தடிப்பு செய்தால் போராட்டம் நடைபெறும் எச்சரிக்கை விடுத்தனர் முஸ்லிம் அமைப்புகள். இதனால் மாவட்ட நிர்வாகம் உடனே 100 கோடிக்கு மேல் உள்ள நவாப் வாலஜா (வக்ப் வாரிய )சொத்துகளின் ஒரு பகுதியை ஜமாஅத் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.பள்ளிவாசல் ஜமாஅத் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையுடன் போராடியதால் பள்ளிவாசல் சொத்து மீட்கப்பட்டது.







பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிட்ட டெக்கான் க்ரோனிக்கிள், ஏசியன் ஏஜ் ஆகிய பத்திரிகைகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.டெக்கான் க்ரோனிக்கிளின் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் பதிப்புகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


     அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200 குழந்தைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடத்திச் சென்று பெங்களூர், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள மத நிறுவனங்களில் சேர்த்ததாக மேற்கண்ட பத்திரிகைகள் அவதூறான செய்தியை வெளியிட்டன. எவ்வித ஆதாரமும் இல்லாமல் இந்த செய்தியை வெளியிட்டதன் மூலம் பாப்புலர் ஃப்ரண்டின் இமேஜை தகர்ப்பதற்கான வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஆகும். மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் பெங்களூரில் எவ்வித மத நிறுவனங்களையும் நடத்தவில்லை. செய்தியில் கூறப்பட்டுள்ள ஹனஃபி மதரசாவுடன் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜரில் இருந்து 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் கடத்திச் சென்றதாக வெளியான செய்தி அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் இவ்விசயத்தில் நிபந்தனையின்றி மன்னிப்புக்கோராவிட்டால் பாப்புலர் ஃப்ரண்ட் இவ்விரு பத்திரிகைகளுக்கும் எதிராக நீதிமன்றத்தை அணுகும்.

இப்படிக்கு,

ஒ.எம்.அப்துல் ஸலாம்,

இலங்கை துணை தூதரகம் திருவனந்தபுரம் மாற்றம்…

chennai-lanka-20130324-1

     இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாகவும், யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையுடனும், கடந்த இரண்டு வார காலத்துக்கும் மேலாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகர காவல்துறை இலங்கை துணை தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்துள்ளது..
 
     இந்நிலையில் டில்லியில் செயல்பட்டு வரும் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி ரொஹான் டயஸ் திடீரென கொழும்புக்கு அழைக்கப்பட்டு, அங்கு நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
     திருவனந்தபுரத்தில், இலங்கை துணை தூதகரம் அமைக்க, கேரளா அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.
 
     சென்னையில் செயல்பட்டுவரும் இலங்கை வங்கி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
 
மக்கள்செய்திமையம் 24.3.13 மாலை5.15மணி thanks, makkal

நமது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை!

                                 video

     மார்ச் 25: ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.

        ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.

     கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
     குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.

     இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள்.

பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்! thanks, sinthikkavum

ஒபாமா-இஸ்ரேலின் தொழிலாளி! – ஹிஸ்புல்லாஹ்!

                          24 Mar 2013 'US turns CIA into Israel's servant' says hisbullah
 
     பெய்ரூத்:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இஸ்ரேலின் தொழிலாளி என்று லெபனானின் ஹிஸ்புல்லாஹ் குற்றம் சாட்டியுள்ளது. நேற்று முன் தினம் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒபாமா, அந்நாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததற்கு பதிலளித்துள்ளது ஹிஸ்புல்லாஹ்.
 
     ஹிஸ்புல்லாஹ்வை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கவேண்டும் என்று லெபனான் அரசுக்கு ஒபாமா அறிவுறுத்தியிருந்தார். ‘அமெரிக்கா என்ற சுதந்திர நாட்டின் உயர் ஆட்சியாளர் என்ற நிலையில் ஒபாமா பேசவில்லை. இஸ்ரேலின் நிலைப்பாடுகளை அரபு நாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆனால், ஃபலஸ்தீன் மக்களின் எந்த கோரிக்கையையும் ஒபாமா அங்கீகரிக்க தயாரில்லை’-ஹிஸ்புல்லாஹ் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஃப்ளோடில்லா தாக்குதல் இஸ்ரேல் மன்னிப்புக் கோரியது!

                      24 Mar 2013 Israel says sorry for flotilla attack
     டெல்அவீவ்:2010-ஆம் ஆண்டு ஃப்ளோடில்லா நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் முயற்சியின் பலனாக துருக்கியைச் சார்ந்த ஒன்பது மனித உரிமை ஆர்வலர்களின் கொலைக்கு காரணமான தாக்குதலுக்கு இஸ்ரேல் மன்னிப்புக் கோரியது.

     இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானை போனில் அழைத்து மன்னிப்புக் கோரியுள்ளார் என்று ஒபாமா தனது அறிக்கையில் கூறினார். ராணுவ நடவடிக்கையில் ஏற்பட்ட தவறு மூலமாக இத்தகையதொரு சம்பவம் நிகழ்ந்ததாக நெதன்யாகு எர்துகானிடம் தெரிவித்துள்ளார். நெதன்யாகுவின் மன்னிப்பை எர்துகான் ஏற்றுக்கொண்டதாக துருக்கி பத்திரிகையான ஹுர்ரியத் டெய்லி நியூஸ் கூறுகிறது.

     துருக்கியுடனான உறவை பழையதுபோல் புதுப்பிக்கவேண்டுமென்று நேற்று முன்தினம் மேற்காசியா சுற்றுப்பயணத்தில் ஒபாமா, நெதன்யாகுவிற்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், என்னக் காரியங்களெல்லாம் எர்துகானும், நெதன்யாகுவும் போனில் பேசினார்கள் என்பது தெளிவாக வெளியாகவில்லை. தங்களுக்கு நெருக்கமான துருக்கியும், இஸ்ரேலும் இடையேயான உறவுக்கு அமெரிக்கா மிகப்பெரிய மதிப்பளிப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில் இச்சம்பவம் தொடர்பாக துருக்கி மற்றும் இஸ்ரேலிடமிருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை. 2010 -ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு பிறகு இருநாடுகள் இடையேயான உறவு சீர்குலைந்தது.

மியான்மரில் கலவரம் பரவுகிறது! – மரணம் 20 ஆக உயர்வு!

                        24 Mar 2013 Myanmar riots stoke fears of widening sectarian violence
 
     யங்கூன்:மத்திய மியான்மரின் மிக்திலா நகரத்தில் நேற்று முன் தினம் வெடித்த கலவரம் தீவிரமடைந்து வருகிறது. இதர நகரங்களுக்கும் கலவரம் பரவுவதாகவும், வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

     இப்பகுதியில் ஆட்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. சிலர் இங்கிருந்து வேறு இடங்களுக்கு புலன் பெயருகின்றனர். நேற்று இப்பகுதியில் உள்ள 2 மஸ்ஜிதுகளையும், ஏராளமானவீடுகளையும் வன்முறையாளர்கள் தீவைத்து அழித்தனர். சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் மியான்மர் அரசுக்கு இனக்கலவரம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் மேற்கு மியான்மரின் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

     ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மர் அரசு கடுமையான பாரபட்சத்தை கையாளுவதாக சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியது. போலீசும், ராணுவமும் புத்த தீவிரவாதிகளுக்கு உதவி அளித்தன.
 
     புதன் கிழமை மீக்திலாவில் ஒரு முஸ்லிம் வியாபாரியின் நகைக்கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வகுப்புக் கலவரத்தில் முடிந்தது. தங்க நகை வாங்க வந்த புத்தர்களுக்கும் கடையில் இருந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீதிக்கு வந்தது. இப்பகுதியில் 1200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டுவெளியேறி ஸ்டேடியம் மற்றும் போலீஸ் ஸ்டேசன்களில் தற்காலிகமாக ஏற்பாடுச் செய்யப்பட்ட முகாம்களில் தங்கியிருப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரும் அப்பகுதி எம்.பியுமான வின் ஹெதின் கூறுகிறார். ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் கலவரம் குறித்து துக்கம் மற்றும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

டெல்லி போலீசின் ‘தீவிரவாதி கைது நாடகம்’ அம்பலமானது!

Delhi Police claims wanted terrorist caught; not true   24 Mar 2013 
 
    புதுடெல்லி:டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நேற்று முன் தினம் நடத்திய ‘தீவிரவாதி கைது’ நாடகம் தோல்வியை தழுவியது. டெல்லி ஹோலி பண்டிகையொட்டியோ அல்லது அதற்கு பிறகோ மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதாக ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் லியாக்கத் ஷாவை கைது செய்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த டெல்லி போலீஸின் போலி நாடகம் ஜம்மு கஷ்மீர் போலீஸ் மூலம் தோல்வியை தழுவியுள்ளது.
 
     ஹிஸ்ப் போன்ற அமைப்புகளிலிருந்து வெளியேறி போலீஸ் அல்லது ராணுவத்தின் முன்னால் சரணடையும் போராளிகளுக்கு ஊக்கமளிக்கும் கஷ்மீர் அரசின் ’சரண்டர் அண்ட் ரிஹாபிலேஷசன் பாலிசி’ அடிப்படையில் லியாகத் இந்தியாவுக்கு வந்துள்ளார். போராளிகளின் பின்னணி மற்றும் விபரங்களை பரிசோதித்த பிறகே சரணடைய அனுமதி வழங்கப்படும்.இதனடிப்படையில் அதிகாரிகளுக்கு தெரிந்தே லியாகத் டெல்லிக்கு வந்துள்ளார்.
 
     பாகிஸ்தானில் ஹிஸ்ப் போராளியான லியாகத் சரணடைய தயாராக உள்ளார் என்று கூறி அவரது மனைவியும் குப்வாராவைச் சார்ந்தவருமான அமீனா பேகாம் 2011-ஆம் ஆண்டு கஷ்மீர் அரசுக்கு மனு ஒன்றை அளித்திருந்தார். இதனடிப்படையிலேயே லியாகத்திற்கு சரணடைவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.லியாகத்தும் அவரது 2-வது மனைவி அக்தர் நிஸாவும், மகனும் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். சரணடைபவர்களுக்கு இந்தியாவுக்கு வருவதற்கான வழியை நிச்சயித்து அளிப்பது கஷ்மீர் அரசாகும்.
 
    நேபாளம் எல்லையில் இருந்து லியாகத்தை போலீஸ் கைதுச் செய்து கொண்டு சென்றதாக அவரது மனைவி அக்தர்நிஸா கூறுகிறார்.
 
     உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வைத்து ஹிஸ்ப் கமாண்டரை கைதுச் செய்ததாகவும், சவுத் டெல்லி வணிக வளாகம், சாந்தினி சவுக் ஆகிய இடங்களில் நடத்தவிருந்த குண்டுவெடிப்பு சதித்திட்டத்தை முறியடித்ததாகவும் டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவு துணை கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா கூறினார். லியாகத் அளித்த தகவலின் அடிப்படையில் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகில் உள்ள லாட்ஜில் போலீஸ் ரெய்டு நடத்தி ஆயுதங்களை கைப்பற்றினார்களாம்.லியாகத்திற்கு உதவுவதற்காகவே தீவிரவாதிகள் இங்கு தங்கியிருந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது.
 
     இந்நிலையில்தான் கஷ்மீர் போலீஸ் அதிகாரியே, டெல்லி போலீஸின் நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கினார்.இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கஷ்மீர் அரசு தொடர்பு கொண்டது.ரிஹாபிலிஷேசன் பாலிசியின்படி சரணடைய முன்வருபவர்கள் பின்வாங்குவார்கள் என்றும் மீண்டும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரத்தக்களரி உருவாகும் எனவும் கஷ்மீர் அரசு உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.கஷ்மீர் சட்டப்பேரவையிலும் நேற்று இது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
 
      ஒருவேளை, நேபாளில் வைத்து லியாகத்துடன் போலீஸ் கைதுச் செய்த அர்ஷத் மீரை, வரும் தினங்களில் மேலும் ஒரு தீவிரவாதியை கைதுச் செய்துள்ளோம் என்று கூறி மீண்டும் ஒரு நாடகத்தை டெல்லி போலீஸ் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கும்.ஜம்மு கஷ்மீர் போலீஸின் எதிர்பாராத தலையீடு டெல்லி போலீஸின் நாடகத்திற்கு தடை போட்டுள்ளது.
 
      மிகப்பெரிய வெடிப்பொருட்களுடன் தீவிரவாதிகளை எவ்வாறு முன்பும் இதுபோல டெல்லி போலீஸ் கைதுச் செய்துள்ளது என்பதற்கான காட்சியை லியாகத்தின் கைது சம்பவம் தெரிவிக்கிறது.
 
     டெல்லி ஸ்பெஷல் போலீஸ் பிரிவு போலி தீவிரவாத கதைகளை உருவாக்குவது குறித்து நீதிமன்றங்கள் கண்டித்த பிறகும், ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலைச் செய்தபிறகும் ஸ்பெஷல் பிரிவின் போலி என்கவுண்டர் நாடகங்களையும், போலி தீவிரவாத கைது நடவடிக்கைகளையும் தடுக்க இதுவரை மத்திய உள்துறை அமைச்சகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை

மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறான விமர்சனம்!

sc
 
     புதுடெல்லி:மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் முஸ்லிம்கள் மீது தவறான விமர்சனங்களை வெளியிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
     ‘மதசார்பற்ற லட்சியங்களையும், நம்பிக்கைகளையும் கொண்டவர்கள் கூட மதவெறியால் தூண்டப்பட்டால் அல்லாஹ்வின் திருப்தியை பெறுவதற்காக உயிரை தியாகம் செய்யவும், புனிதப் போரை நடத்தவும் தயாராகிவிடுகின்றனர்’ என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இக்கருத்து நீதிபதிளின் அறியாமையா? அல்லது முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வா?

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மறைத்த சி.பி.ஐ!

                        24 Mar 2013 சி.பி.ஐ!
 
     புதுடெல்லி:சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான கலவரத்தைத் தொடர்ந்து நடந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற வாதத்தை பலப்படுத்த சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் இருந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை வேண்டுமென்றே தவிர்த்துள்ளது.
 
     1993-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டு வரை நடந்த 19 தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்தது. ஒவ்வொரு குண்டுவெடிப்புகள் நடந்த தேதியும் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. 1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு முதல் டெல்லியில் நடந்த இஸ்ரேல் தூதரக வாகனக் குண்டுவெடிப்பு வரை இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், ஏராளமானோர் கொல்லப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மாலேகான், அஜ்மீர் தர்கா, மொடாஸா ஆகிய குண்டுவெடிப்புகளை சி.பி.ஐ இப்பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை. ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வேண்டுமென்றே சி.பி.ஐ மூடி மறைத்துள்ளது. மேலும் சி.பி.ஐ தாக்கல் செய்த பட்டியலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை முஸ்லிம்கள்தாம் நடத்தினார் என்பதற்கு போதிய ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் தத்தின் தண்டனையை ரத்துச் செய்ய மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை! சட்ட அமைச்சர் ஆதரவு!

                        24 Mar 2013 Katju urges Maharashtra governor to pardon Sanjay Dutt
 
     புதுடெல்லி:மும்பையில் 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மகாராஷ்டிர ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.

     இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத், ஏற்கெனவே பல சிரமங்ளை அனுபவித்துவிட்டார். ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த அவர், அந்தக் காலகட்டத்தில் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தவராக நடந்துகொண்டுள்ளார்.

     நீதிமன்றம் அழைக்கும்போதெல்லாம் தவறாமல் ஆஜர் ஆகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். தான் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டு அரசின் அனுமதியைப் பெற்றிருக்கிறார். மேலும் வழக்கு நடந்துகொண்டிருந்ததால் வங்கிகள் அவருக்குக் கடன் தர மறுத்துவிட்டன. 20 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சஞ்சய் தத்துக்கு நேரடித் தொடர்பு இல்லை. அதனால் சட்டப்பிரிவு 161-ஐப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
 
     தண்டனையை ரத்து செய்ய சஞ்சய் தத் வேண்டினால் மகாராஷ்டிர ஆளுநர் கே.சங்கரநாராயணன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சஞ்சய் தத்தின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் மார்கண்டேய கட்ஜு.

     இது குறித்து சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் கூறியதாவது: ஆளுநர் மனது வைத்தால் சஞ்சய் தத்தின் தண்டனையை ரத்து செய்யலாம் அல்லது குறைந்தபட்ச தண்டனை விதிக்கலாம். அவருக்கு அதற்குரிய அதிகாரம் இருக்கிறது என்றார். இதற்கு பா.ஜ.கவும், சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எஸ்.டி.பி.ஐ நடத்திய தூதரகம் நோக்கிய பேரணி! – இத்தாலி இணையதளத்தில்!

italy  24 Mar 2013
 
     புதுடெல்லி:இந்திய மீனவர்களை சுட்டுக் கொலைச் செய்த இத்தாலி கடற்படையினரை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவர கோரி இத்தாலி தூதரகத்தை நோக்கி சோசியல்டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா நடத்திய பேரணியின் படம் அந்நாட்டின் செய்தி நிறுவனமான அன்ஸாவில் வெளியாகியுள்ளது. கடற்படையினரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்புவதாக கூறும் செய்தியுடன் எஸ்.டி.பி.ஐ நடத்திய பேரணியின் படமும் வெளியாகியுள்ளது
 
    கடந்த 14-ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ பேரணியை நடத்தியது. தீன்மூர்த்தி சவுக்கில் துவங்கிய பேரணியை சாணக்யபுரி போலீஸ் ஸ்டேசனின் முன்னால் போலீஸ் தடுத்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். தேசிய பொதுச் செயலாளர்களான எ.ஸயீத், ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் ஆகியோர் பேரணிக்கு தலைமை தாங்கினர். இப்படத்தை அல்ஜஸீரா இணையதளமும் வெளியிட்டிருந்தது.

Saturday, March 23, 2013

ஓர் இலங்கை வாழ் முஸ்லிமின் உள்ளக் குமுறல்!






டந்த மார்ச் 11, 2013 இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஓர் முக்கிய நாள். தமது சமூக / அரசியல் தலைவர்களின் மீது பாரிய நம்பிக்கை வைத்த நாள். நம் தலைவர்கள் எப்படியாவது இலங்கை உணவுகளில் எது ஹலால் / எது ஹராம் என தரம் பிரித்து அறியும் வாய்ப்பினைப் பெற்றுத் தருவார்கள் என்று பெரும் நம்பிக்கை வைத்த நாள். இந்த சிங்கள அரசாங்கத்தை கடந்த ஜெனிவாவில் நாங்கள் மன்றாடியதனால் எங்கள் அரபு சகோதர நாடுகள் ஆதரித்தமைக்கு ஒரு நன்றிக் கடனாகவாவது எங்களுக்கு இந்த அரசாங்கம் ஹலால் உணவைக் கண்டு கொள்ள வழி செய்வர் என்று நம்பி இருந்த நாள் அது!
துபாய் நகரில் கண் விழித்தது முதல் காலை ஏழு மணிக்கு பணியிடம் சென்ற எனக்கு ஒவ்வொரு நிமிடமும் ஹலால் பற்றிய தீர்மானம் என்னவாயிற்று என்பதை நினைத்து கொண்டே பதட்டத்துடன் நாள் சென்றது. ஒரு வழியாக வேலையை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக எனது அறைக்கு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக எனது மடிக் கணணியை தட்டினேன். என் தலையில் பெரும் இடி விழுந்தது போன்றதொரு உணர்வு ஆட்கொண்டு பித்துப் பிடித்தது. ஆம்! ஹலால் என்பது இனி இலங்கையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்களுக்கு மட்டுமே! உள் நாட்டில் ஹலால் குறியீடு என்பது இனி இல்லையாம். இல்லவே இல்லையாம்!

இச் செய்தியைப் பார்த்தவுடன் என் இதய துடிப்பு ஒரு கணம் நின்று விட்டது. இனிமேல் எனக்கு, என் குடும்பத்தினருக்கு உன் உம்மத்திற்கு ஹலாலான உணவு கிடைக்காதே? ஹலால் உணவை எங்குத் தேடுவது?, சந்தையில் விற்கும் பொருட்களில் ஹலாலுக்கும் ஹராமுக்கும் எப்படி வித்தியாசம் காண்பது? என்ற கேள்விகள் ஓடினது தவிர இந்த தீர்மானத்திற்குரிய காரணகர்த்தா யார்? நமது சமுக, அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்ற அவசியமற்ற கேள்விகளை கேட்க எண்ணவில்லை. ஏனெனில் கேட்டும் பயனில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்.

இருவாரங்கள் முன்பு வரை "நான் ஒரு ஸ்ரீலங்கன், நான் ஒரு லயன்" என்று என் Face Book இல் பெருமையாக வித்தியாசமான வரிகளைக் கொண்டு நிரப்பியிருந்தேன். இப்போது "நான் ஒரு ஸ்ரீலங்கன்" என்று நினைக்கக் கூட என் உள் மனசு கூசுகிறது. இந்த அவல நிலைக்கு என்னை தள்ளியவர்கள் யார்? சிங்கள இனவாதிகளே! எதற்காக இந்தச் சதி வலையை எங்களை நோக்கி பின்னுகிறீர்கள்? நீங்கள் இன்னும் இன்னும் தோண்ட நினைக்கும் படுகுழியின் ஆழம் என்ன? இறுதி இலங்கை முஸ்லிம் வரை அனைவரையும் அதில் தள்ளிப் புதைக்கும் வரை அந்த குழி தோண்டும் செயலை நிறுத்த முடியாதோ உங்களுக்கு? ஆனால் ஒன்றைக் காதில் போட்டுக் கொள்ளுங்கள்! நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போன்று அது லேசான காரியமல்ல! எங்கள் தலைவர்கள் வேண்டுமானால் உங்கள் சுகபோகங்களுக்கு விலை போயிருக்கலாம். நாங்கள் போராளிகள்! அல்லாஹ்வின் போராளிகள்; போராடியே தீருவோம்!

ஆனாலும் புரியவில்லை... அமைதி விரும்பிகளான இலங்கை முஸ்லிம்களை நோக்கிய சதித் திட்டங்கள் ஒவ்வொன்றாக தீட்டப்படுவது எதற்கு?

ஆறாம் ஜனாதிபதி மகிந்தா ராஜப்கசா-வை ஐ.நா தண்டனையிலிருந்து விடுவிக்க அரசு எடுத்த புதிய திட்டமா இது? அமெரிக்காவின் மறு பெயரான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தி கொள்வதுடன் அதனுடாக அமெரிக்காவிற்கு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலம் தன்னை தப்பித்து கொள்வதற்காகவா? இஸ்ரேலுடன் ஒரு ஆழமான உறவை உண்டாக்குவதற்காகவே, இலங்கை முஸ்லிம்கள் பலி கிடாக்கள் ஆக்கப் படுகிறார்களா? இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பல்வேறு வகையில் அழுத்தங்களைக் கொடுத்தால் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு கொண்டாட்டம் அடையச் செய்யும் முயற்சியா? இவை என் கற்பனைக் கேள்விகள் அல்ல! கடந்தகால அமைச்சர் பீரிசின் இஸ்ரேல் வருகையும் இஸ்ரேல் பிரதமரின் அரவணைப்பு அறிக்கையும் என் கேள்விகளுக்குச் சான்று பகரும்.
அதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளா இவை? இல்லை, முஸ்லிம்களின் தூய்மை நிலை மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியா இது? எங்கள் சொத்துகளின் மீது கொண்டுள்ள ஆசையா இது? முழுதாய் இன்னமும் புரியவில்லை; எதற்கான இந்த சதி வேலை திட்டம், இலங்கை நாட்டிற்காக முஸ்லிம்கள் என்னதான் செய்யவில்லை? நாட்டின் சுதந்திரத்தில் பங்கெடுக்க வில்லையா? நாட்டின் அடித்து ஓய்ந்து போன முப்பது வருட கால யுத்தத்தில் பங்களிக்க வில்லையா? எங்கள் நிலம், வீடு மற்றும் சொத்துக்களை இழந்தோம்; விரட்டியடிக்கப் பட்டோம், வெட்டுண்டோம், கொலையுண்டோம், இன்னும் எத்தனை எத்தனை துயரங்களை இந்த முப்பதாண்டு கால யுத்தத்தில் சந்தித்திருப்போம்? இவற்றையெல்லாம் எதற்காக புலிகள் எங்களுக்கு செய்தார்கள் என்று வேறு சொல்ல வேண்டுமா? உங்களை நாங்கள் ஆதரித்தோம்; நான் ஒரு முஸ்லிம் - நான் ஒரு ஸ்ரீலங்கன் என்ற எங்கள் அந்த தாரக மந்திரத்தைச் சொன்னதால்தான்.

இன்னமும் எங்களிடம் என்னதான் எதிர் பார்க்கிறீர்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் உங்களைக் கையடுத்து கும்பிட வேண்டுமா? இல்லை காலில் விழுந்து வணங்க வேண்டுமா? நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்! எங்களின் ஏக இறைவன் அல்லாஹ்வை தவிர யாருக்கும் நாங்கள் சிரம் பணிந்து வணங்கியதில்லை. பல நாடுகளில் முஸ்லிம்களை ஆயுதம் ஏந்தி போராட நிர்பந்திக்கும் ஏகாதிபத்திய அரசுகளின் விளையாட்டை நீங்களும் ஓரக் கண்ணால் கண்டு, இலங்கை முஸ்லிம்கள் மட்டும் நிம்மதியாக இருக்கிறார்களே, அவர்களும் ஆயுதம் ஏந்தி போராடினால் எப்படி இருக்கும் என்று விளையாடிப் பார்க்க ஆசைப் படுகிறீர்களா என் நாட்டு இனவாதிகளே! நீங்கள் தாங்க மாட்டீர்கள்! இறைவன் மீது சத்தியமாக சொல்கிறோம்! தாங்க மாட்டீர்கள்... உங்களின் இந்த இனவாத விளையாட்டு, அமைதியை விரும்பும் முஸ்லிம்களான எங்களிடம் வேண்டாம்.

அதைத் தான் நீங்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளீர்கள் என்றால் அதற்கு நாங்களும் தயாராகத் தான் இருக்கிறோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம். ஆனால் அது எங்களின் நாட்டம் இல்லை.

கடந்த முப்பது வருடமாக நீண்ட அவல நிலை ஒரு வழியாக முடிந்து விட்டது என்று நினைத்தால், இன்னொரு வடிவத்தில் அதை சிங்கள இனவாதிகள் தொடர்கிறீர்கள். ஆனால் ஓன்று மட்டும் புரிகிறது. அது, முஸ்லிம்கள் மீதான இப் போர் "ஹலால் இனி இல்லை" என்ற பதத்தோடு மட்டும் முடிந்து விடப்போவது இல்லை. அதனால் நாம் உலமா சபையை நோகடித்து ஒன்றுமே நடக்க போவதில்லை, ஒரு சதவீதத்திற்கும் கூட பெறுமதி இல்லாத அரசியல்வாதிகளை குறைசொல்லியும் பயனில்லை.

உங்கள் அடுத்த நடவடிக்கையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். அது மீண்டும் எங்களைச் சீண்டுவதாக அமைந்தால், எங்கள் பதில் வேறு விதமாக இருக்கும். அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் இல்லை.


இப்படிக்கு,

இறைவன் அனுமதித்த ஹலால் உணவுகளை மட்டும் உண்ண துடிக்கும்,
முஹம்மத் ஹனீஸ் (துபை) thanks, sinthikkavum



டந்த மார்ச் 11, 2013 இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஓர் முக்கிய நாள். தமது சமூக / அரசியல் தலைவர்களின் மீது பாரிய நம்பிக்கை வைத்த நாள். நம் தலைவர்கள் எப்படியாவது இலங்கை உணவுகளில் எது ஹலால் / எது ஹராம் என தரம் பிரித்து அறியும் வாய்ப்பினைப் பெற்றுத் தருவார்கள் என்று பெரும் நம்பிக்கை வைத்த நாள். இந்த சிங்கள அரசாங்கத்தை கடந்த ஜெனிவாவில் நாங்கள் மன்றாடியதனால் எங்கள் அரபு சகோதர நாடுகள் ஆதரித்தமைக்கு ஒரு நன்றிக் கடனாகவாவது எங்களுக்கு இந்த அரசாங்கம் ஹலால் உணவைக் கண்டு கொள்ள வழி செய்வர் என்று நம்பி இருந்த நாள் அது!
துபாய் நகரில் கண் விழித்தது முதல் காலை ஏழு மணிக்கு பணியிடம் சென்ற எனக்கு ஒவ்வொரு நிமிடமும் ஹலால் பற்றிய தீர்மானம் என்னவாயிற்று என்பதை நினைத்து கொண்டே பதட்டத்துடன் நாள் சென்றது. ஒரு வழியாக வேலையை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக எனது அறைக்கு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக எனது மடிக் கணணியை தட்டினேன். என் தலையில் பெரும் இடி விழுந்தது போன்றதொரு உணர்வு ஆட்கொண்டு பித்துப் பிடித்தது. ஆம்! ஹலால் என்பது இனி இலங்கையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்களுக்கு மட்டுமே! உள் நாட்டில் ஹலால் குறியீடு என்பது இனி இல்லையாம். இல்லவே இல்லையாம்!

இச் செய்தியைப் பார்த்தவுடன் என் இதய துடிப்பு ஒரு கணம் நின்று விட்டது. இனிமேல் எனக்கு, என் குடும்பத்தினருக்கு உன் உம்மத்திற்கு ஹலாலான உணவு கிடைக்காதே? ஹலால் உணவை எங்குத் தேடுவது?, சந்தையில் விற்கும் பொருட்களில் ஹலாலுக்கும் ஹராமுக்கும் எப்படி வித்தியாசம் காண்பது? என்ற கேள்விகள் ஓடினது தவிர இந்த தீர்மானத்திற்குரிய காரணகர்த்தா யார்? நமது சமுக, அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்ற அவசியமற்ற கேள்விகளை கேட்க எண்ணவில்லை. ஏனெனில் கேட்டும் பயனில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்.

இருவாரங்கள் முன்பு வரை "நான் ஒரு ஸ்ரீலங்கன், நான் ஒரு லயன்" என்று என் Face Book இல் பெருமையாக வித்தியாசமான வரிகளைக் கொண்டு நிரப்பியிருந்தேன். இப்போது "நான் ஒரு ஸ்ரீலங்கன்" என்று நினைக்கக் கூட என் உள் மனசு கூசுகிறது. இந்த அவல நிலைக்கு என்னை தள்ளியவர்கள் யார்? சிங்கள இனவாதிகளே! எதற்காக இந்தச் சதி வலையை எங்களை நோக்கி பின்னுகிறீர்கள்? நீங்கள் இன்னும் இன்னும் தோண்ட நினைக்கும் படுகுழியின் ஆழம் என்ன? இறுதி இலங்கை முஸ்லிம் வரை அனைவரையும் அதில் தள்ளிப் புதைக்கும் வரை அந்த குழி தோண்டும் செயலை நிறுத்த முடியாதோ உங்களுக்கு? ஆனால் ஒன்றைக் காதில் போட்டுக் கொள்ளுங்கள்! நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போன்று அது லேசான காரியமல்ல! எங்கள் தலைவர்கள் வேண்டுமானால் உங்கள் சுகபோகங்களுக்கு விலை போயிருக்கலாம். நாங்கள் போராளிகள்! அல்லாஹ்வின் போராளிகள்; போராடியே தீருவோம்!

ஆனாலும் புரியவில்லை... அமைதி விரும்பிகளான இலங்கை முஸ்லிம்களை நோக்கிய சதித் திட்டங்கள் ஒவ்வொன்றாக தீட்டப்படுவது எதற்கு?

ஆறாம் ஜனாதிபதி மகிந்தா ராஜப்கசா-வை ஐ.நா தண்டனையிலிருந்து விடுவிக்க அரசு எடுத்த புதிய திட்டமா இது? அமெரிக்காவின் மறு பெயரான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தி கொள்வதுடன் அதனுடாக அமெரிக்காவிற்கு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலம் தன்னை தப்பித்து கொள்வதற்காகவா? இஸ்ரேலுடன் ஒரு ஆழமான உறவை உண்டாக்குவதற்காகவே, இலங்கை முஸ்லிம்கள் பலி கிடாக்கள் ஆக்கப் படுகிறார்களா? இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பல்வேறு வகையில் அழுத்தங்களைக் கொடுத்தால் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு கொண்டாட்டம் அடையச் செய்யும் முயற்சியா? இவை என் கற்பனைக் கேள்விகள் அல்ல! கடந்தகால அமைச்சர் பீரிசின் இஸ்ரேல் வருகையும் இஸ்ரேல் பிரதமரின் அரவணைப்பு அறிக்கையும் என் கேள்விகளுக்குச் சான்று பகரும்.
அதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளா இவை? இல்லை, முஸ்லிம்களின் தூய்மை நிலை மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியா இது? எங்கள் சொத்துகளின் மீது கொண்டுள்ள ஆசையா இது? முழுதாய் இன்னமும் புரியவில்லை; எதற்கான இந்த சதி வேலை திட்டம், இலங்கை நாட்டிற்காக முஸ்லிம்கள் என்னதான் செய்யவில்லை? நாட்டின் சுதந்திரத்தில் பங்கெடுக்க வில்லையா? நாட்டின் அடித்து ஓய்ந்து போன முப்பது வருட கால யுத்தத்தில் பங்களிக்க வில்லையா? எங்கள் நிலம், வீடு மற்றும் சொத்துக்களை இழந்தோம்; விரட்டியடிக்கப் பட்டோம், வெட்டுண்டோம், கொலையுண்டோம், இன்னும் எத்தனை எத்தனை துயரங்களை இந்த முப்பதாண்டு கால யுத்தத்தில் சந்தித்திருப்போம்? இவற்றையெல்லாம் எதற்காக புலிகள் எங்களுக்கு செய்தார்கள் என்று வேறு சொல்ல வேண்டுமா? உங்களை நாங்கள் ஆதரித்தோம்; நான் ஒரு முஸ்லிம் - நான் ஒரு ஸ்ரீலங்கன் என்ற எங்கள் அந்த தாரக மந்திரத்தைச் சொன்னதால்தான்.

இன்னமும் எங்களிடம் என்னதான் எதிர் பார்க்கிறீர்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் உங்களைக் கையடுத்து கும்பிட வேண்டுமா? இல்லை காலில் விழுந்து வணங்க வேண்டுமா? நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்! எங்களின் ஏக இறைவன் அல்லாஹ்வை தவிர யாருக்கும் நாங்கள் சிரம் பணிந்து வணங்கியதில்லை. பல நாடுகளில் முஸ்லிம்களை ஆயுதம் ஏந்தி போராட நிர்பந்திக்கும் ஏகாதிபத்திய அரசுகளின் விளையாட்டை நீங்களும் ஓரக் கண்ணால் கண்டு, இலங்கை முஸ்லிம்கள் மட்டும் நிம்மதியாக இருக்கிறார்களே, அவர்களும் ஆயுதம் ஏந்தி போராடினால் எப்படி இருக்கும் என்று விளையாடிப் பார்க்க ஆசைப் படுகிறீர்களா என் நாட்டு இனவாதிகளே! நீங்கள் தாங்க மாட்டீர்கள்! இறைவன் மீது சத்தியமாக சொல்கிறோம்! தாங்க மாட்டீர்கள்... உங்களின் இந்த இனவாத விளையாட்டு, அமைதியை விரும்பும் முஸ்லிம்களான எங்களிடம் வேண்டாம்.

அதைத் தான் நீங்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளீர்கள் என்றால் அதற்கு நாங்களும் தயாராகத் தான் இருக்கிறோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம். ஆனால் அது எங்களின் நாட்டம் இல்லை.

கடந்த முப்பது வருடமாக நீண்ட அவல நிலை ஒரு வழியாக முடிந்து விட்டது என்று நினைத்தால், இன்னொரு வடிவத்தில் அதை சிங்கள இனவாதிகள் தொடர்கிறீர்கள். ஆனால் ஓன்று மட்டும் புரிகிறது. அது, முஸ்லிம்கள் மீதான இப் போர் "ஹலால் இனி இல்லை" என்ற பதத்தோடு மட்டும் முடிந்து விடப்போவது இல்லை. அதனால் நாம் உலமா சபையை நோகடித்து ஒன்றுமே நடக்க போவதில்லை, ஒரு சதவீதத்திற்கும் கூட பெறுமதி இல்லாத அரசியல்வாதிகளை குறைசொல்லியும் பயனில்லை.

உங்கள் அடுத்த நடவடிக்கையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். அது மீண்டும் எங்களைச் சீண்டுவதாக அமைந்தால், எங்கள் பதில் வேறு விதமாக இருக்கும். அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் இல்லை.


இப்படிக்கு,

இறைவன் அனுமதித்த ஹலால் உணவுகளை மட்டும் உண்ண துடிக்கும்,
முஹம்மத் ஹனீஸ் (துபை) thanks, sinthikkavum

தமிழக நிதிநிலை அறிக்கை அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

butjet
     SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
 
     இன்று(22.03.2013) தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட வில்லை.
 
     விலைஉயர்வை கட்டுபடுத்தும் திட்டங்கள்,வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள், மின்வெட்டை நீக்குவதற்கான திட்டங்கள் நிதி நிலை அறிக்கையில் இல்லை. சூரிய ஒழி மின் திட்டம் பற்றி பெரிய அளவில் அறிவித்திருந்தும் அதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
 
     காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கான நிவாரண தொகையை உயர்த்திடும் அறிவிப்பும், விவசாய தொழிலாளருக்கான நிவாரண அறிவிப்பும் இடம் பெறவில்லை .நெல் மற்றும் கரும்பு கொள்முதல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்.
 
     பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.61 என்பது கவலைக்குரியது . இதை உயர்த்துவதற்கான பொருளாதார திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை.
 
     மதுவிலக்கு கோரிக்கை பரவலாக இருக்கும் நிலையில் மது விற்பனை நம்பியே இலவச திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்திருப்பது ஏமாற்றதிர்க்குரியது.
 
     சிறுபான்மை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் ,அவர்களை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றதிர்க்குரியது என்றாலும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், கூட்டுறவு அங்காடி மூலம் 1 கிலோ அரிசி ரூ.20 க்கு விற்பனை செய்யும்அறிவிப்பும் ,தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அறிவிப்பும், தென் மாவட்டங்களுக்கு முதலீட்டை அதிகரிக்க திட்டம் அறிவிக்கப்படும் என்பதும்,வரிகள் ஏதும் விதிக்கப்படாததும் வரவேற்கப்பட வேண்டியவை.
 
     கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளன, சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் முழுமையாக செலவளிகப்படுகிறதா என்பது பற்றியும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் .அப்படி வெளியிட்டால்தான் பட்ஜெட் என்பது வெறும் அறிவிக்கப்படும் வெற்று திட்டங்களா அல்லது அவை நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை மக்கள் அறிய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

நெல்லையில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்கள் தொடர்முழக்க போராட்டம் : கேம்பஸ் ஃப்ரண்ட் பங்கேற்ப்பு

                           

     2009-ல் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழர்கள் மீது மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது.குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என லட்சக்கனக்கானோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சரணடைந்தவர்கள் கொடூரமாக கொலை செய்யப் பட்டனர்.இறுதிப்போருக்கு பிறகும் மனித உரிமை மீறல்களும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் காணாமல் போகும் அவலமும் தொடர்கின்றது.



     இந்நிலையில் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா வின் மனித உரிமை கூட்டத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சே மற்றும் இலங்கை அரசின் மீது சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும்,அத்துடன் தமிழர் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது.
     அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் பாளை பேருந்து நிலையம் அருகில் இன்று அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களை திரட்டிய கூட்டமைப்பினர் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் ஒன்று கூடினர். அங்கு ஈழ விடுதலைக்காகவும், ஐ.நா சபையில் திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடர் முழக்கங்களை எழுப்பினர் இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாயை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர் மேலும் ஈழ தமிழர்களுக்கான தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் கலந்து கொண்டனர்

ஏர்வாடியில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்





     நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ஹூப்புன் நபி(பிரியாமான நபி)என்ற தலைப்பில் நபிகள் நாயகம் சிறப்பை விளக்கும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக நடைப்பெற்றது.
     இந்த பொதுகூட்டதிற்கு ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் பெண்கள் அறிவகம் முதல்வர் ஜாபர் ஆலிம் அவர்கள் தலைமை வகித்தார் ,மீரான் முகைதீன் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.இமாம் கவுன்சில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யதலி மஹ்லரி அவர்கள் பிரியமான நபி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.நபிகள் நாயகம் கூறிய குடும்பம் என்ற தலைப்பில் இமாம் கவுன்சில் மாவட்ட பேச்சாளர் காஜா ஹுசைன் உஸ்மானி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக ஏர்வாடி ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் சாஹிப் மற்றும் பைத்துல் சலாம் செயலாளர் செய்யது அவர்களும் கலந்து கொண்டனர் இறுதியில் ஏர்வாடி நகர தலைவர் காஜா பிர்தௌசி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட பெண்களும் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர்

இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் மக்கள் உரிமை இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

     இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் மக்கள் உரிமை இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி.
 
கேள்வி: இலங்கைத் தமிழர் விவகாரம் தற்போது தமிழகத்தில் மக்கள் போராட்டமாக மாறிவிட்டதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
js_ribai
     பதில்: இலங்கைத் தமிழர் விவகாரம் ராஜீவ் படுகொலைக்கு முன்பு, பின்பு என இரு வகையாகப் பார்க்கப்பட்டது. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழக மக்கள் விடுதலைப்புலிகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மவுனம் காத்தார்கள். ஆனால் 2009ஆம் ஆண்டில் நான்காம் கட்டப் போர் என சொல்லப்படும் கடைசிகட்டப் போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள், கற்பழிப்புக்கு உள்ளானார்கள். குழந்தைகள் கூட குதறப் பட்டனர். எண்ணற்ற இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பதற, பதற கொலை செய்யப் பட்டனர்.
 
     இதுதான் தமிழகத்தில் நிலைமை மாற காரணமாகியது. அதுவும் சேனல்-4 என்ற லண்டன் தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படங்களில் வெளியான காட்சிகள் உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. குறிப்பாக, தமிழக மக்களைப் பதறச் செய்துவிட்டது.
 
     இலங்கைத் தமிழர் விவகாரம் இப்போது முள்ளிவாய்க்காலுக்கு முன்பு, பின்பு என தமிழக மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. அதுவும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கரங்களிலிருந்து முன்னேறி மக்கள் கைகளுக்குப் போய்விட்டது. அதன் ஒரு வெளிப்பாடுதான் மாணவர்களின் போராட்டங்கள்.
 
கேள்வி: இவ்விஷயத்தில் இந்திய (நடுவண்) அரசின் நிலைப்பாடு புதிராக உள்ளதே... இது அண்டை நாட்டு விவகாரம் என்கிறார்களே...?
 
     பதில்: முதலில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை ராஜீவ் படுகொலையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும். மத்தியில் அவர்கள்தான் ஆள்கிறார்கள். நான் குறிப்பிட்டதுபோல், முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்பு உருவாகியுள்ள புதிய சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
     அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்ட காட்சிகள் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இது அண்டை நாட்டு பிரச்சனை எனக்கூறி ஒதுங்க முடியாது. முன்பு கிழக்கு பாகிஸ்தானில் (இன்று பங்களாதேஷ்) உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டபோது, அகதி களாக வங்காளிகள் இந்தியாவுக்கு வந்தார்கள். இவ்விவகாரத்தை இனி இந்தியா மவுனமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அந்நாட்டு விவகாரத்தில் துணிந்து தலை யிட்டார்.
 
‘முக்தி வாகினி’ என்ற புரட்சிப் படைக்கு இந்தியா ஆயுத உதவி செய்து, ‘பங்களாதேஷ்’ என்ற நாடு உருவாக இந்தியா உதவியது.
 
‘திபெத்’ மக்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தபோது, ‘தலாய்லாமா’வுக்கு நேரு அடைக் கலம் கொடுத்தார்.
 
ஏன்? விடுதலைப்புலிகள், டெலோ, பிளாட் போன்ற தமிழ் ஆயுத அமைப்புகளுக்கு இந்தியா பயிற்சி அளிக்கவில்லையா? ராஜீவ் காந்தி இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் உணவுப் பொட்டலங்களை வீச சொல்ல வில்லையா? இப்போது மாலத்தீவின் அரசியல் குழப்பத்தில் தடையிடவில்லையா?
 
     இந்த வரலாறுகளையெல்லாம் மறந்துவிட்டு, இந்தியா இப்போது இரட்டை வேடம் போடுகிறது. வரலாற்று உண்மைகளை மறந்து விட்டுப் பேசக்கூடாது.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அம் மக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றும் பொறுப்பும், கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது.
 
கேள்வி: இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவாக செயல்படாவிட்டால், இலங்கை சீனாவின் உதவியை நாடும் என்றும், இதனால் தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இந்தியா கூறுகிறதே...
 
     பதில்: இந்தியாவைக் காட்டி சீனாவிடமும், சீனாவைக் காட்டி இந்தியாவிடமும் உதவிகளைப் பெறுகிறது இலங்கை. மறுபுறம் இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தானிடமும் உதவி பெறுகிறது. அதாவது எதிரும், புதிருமான அரசியல் எதிரிகளை எல்லாம் இலங்கை தனக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதிலும், ராஜதந்திர ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது.
 
     தனது துறைமுகங்களை சீனாவின் கடற்படை பயன்பாட்டிற்கு இலங்கை அனுமதிக்கிறது. இது ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்திற்கு எதிரானது.
 
     சீனா பெரும் முதலீடுகளை இலங்கையில் கொட்டியிருக்கிறது. இந்தியா பங்களா தேஷையும், மாலத்தீவையும் கட்டுப்படுத்துவது போல சீனா, இலங்கையைக் கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வந்துவிட்டது.
 
     தற்போது இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை, தடுமாற்றத்தில் உள்ளது. இந்தியா உதவினாலும், உதவாவிட்டாலும் இலங்கை சீனாவுக்குத்தான் விசுவாசமாக இருக்கும். இதை இந்திய - சீனப் போரிலும் பார்த்தோம். எனவே இந்தியா இதைக் கூறியே தமிழர்களை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
 
கேள்வி: அமெரிக்க எதிர்ப்பு மனநிலை உடைய நீங்கள், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை எப்படி ஏற்கிறீர்கள்?
 
     பதில்: நாங்கள் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்கும், அதன் பன்னாட்டு பயங்கர வாதத்திற்கும் எதிரானவர்கள். அதேநேரம், நீதியின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பவர்கள்.
 
     இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பேச அமெரிக்காவுக்கு அருகதை கிடையாது. ஜப்பானில் அணுகுண்டு வீசியதில் தொடங்கி, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்க பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்ட நாடுகளும், மக்களும் அதிகம்.
 
     இதே இலங்கை ராணுவத்துக்கு தமிழர்களைப் படுகொலை செய்ய, 1984ல் இலங்கையின் வனப்பகுதிகளில் ‘கிரின் பரேட்’ என்ற தனது ராணுவ அதிரடிப்படை மூலம் இலங்கை ராணுவத்துக்கு இதே அமெரிக்காதான் பயிற்சி கொடுத்தது.
 
     இப்போது அமெரிக்கா, நாடகம் ஆடுகிறது. அதன் நோக்கம் இலங்கையைப் பயன்படுத்தி, சீனா அப்பகுதியில் மேலாதிக்ககம் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. இலங்கையை மிரட்டவே அமெரிக்கா நாடகமாடுகிறது.
 
     அவர்கள் கொண்டுவரும் தீர்மானம், ‘இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசே ஒரு விசாரணையை நடத்தவேண்டும்’ என்கிறது. ராஜபக்சே தன்னைத்தானே குற்றவாளி என முடிவெடுக்க அனுமதிப்பாரா? இது வேடிக்கையாக இல்லையா?
 
     நாங்கள் சொல்வது என்னவெனில், இலங்கையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை அறிவித்து, ஒரு சுதந்திரமான - சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.
 
     இலங்கை எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
 
கேள்வி: இந்த விவகாரத்தில் நீங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?
 
     பதில்: நாங்கள் மனித உரிமைகளுக்காகப் பாடுபடுபவர்கள். உலகில் எங்கு மனித உரிமை மீறல்களும், இனப்படுகொலைகளும் நடந்தாலும் அதைக் கண்டிப்பவர்கள். பாலஸ் தீனம், ஈராக், சோமாலியா, குஜராத், காஷ்மீர், மணிப்பூர், இலங்கை என எங்கு அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.
 
     இலங்கை நமக்கு அருகில் உள்ள நாடு என்பதாலும், அங்குள்ள தமிழர்கள் நமக்கு நெருக்கமான தொடர்புடையவர்கள் என்ப தாலும் இவ்விஷயத்தில் மனிதாபிமானத்தோடு அக்கறைக் காட்டுவது அவசியமாகிறது.
 
கேள்வி: இலங்கையில் விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைக் கொன்றவர்கள். அதை மறந்துவிட்டீர்களா?
 
     பதில்: நாங்கள் மறக்கவில்லை. புலிகளின் பல தவறுகளில் அதுவும் ஒன்று. அதேசமயம், அச்சம்பவம் குறித்து 2002ல் நடைபெற்ற சர்வதேச பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரபாகரன், பகிரங்க மன்னிப்பு கோரினார். அதன்பிறகு பிரபாகரனுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் குழு கிளிநொச்சியில் புரிந்துணர்வு சந்திப்பை நடத்தினார்கள்.
 
    அதேசமயம், நாங்கள் தெளிவாக இருக் கிறோம். நாங்கள் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவதில்லை. அவர்கள் இப்போது களத்தில் இல்லை.
 
    நாங்கள் இலங்கையில் போரினாலும், சிங்கள பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்களுக்காக மனிதாபிமானத்தோடு வாதாடுகிறோம். நாங்கள் முள்ளிவாய்க்கால் போருக்குப் பிந்தைய புதிய சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுகிறோம்.
 
கேள்வி: விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைப் படுகொலை செய்ததையும், ராஜபக்சே தமிழ் மக்களைக் கொன்று குவித்ததையும் சமப்படுத்தி இலங்கையிலும், தமிழகத்திலும் சிலர் பேசுகிறார்களே...
 
     பதில்: அவர்களுக்காக நாம் பரிதாப் படுகிறோம். இப்போது இலங்கை அரசும் இதேபோல் கருத்துக்களைப் பேசி தங்களின் தவறுகளை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். கொத்துக் கொத்தாய் சொந்த பந்தங்களை இழந்தவர்கள், மயானத்தில் நின்றுகொண்டு ஓலமிடும்போது, ‘பார்த்தாயா... எங்களை அவர்கள் கொன்றது நினைவில்லையா? இப்போது தெரிகிறதா? எங்களைக் கொன்றது என்ன நியாயம்?’ என்றெல்லாம் பேசுவது மனிதாபிமானமற்றது. புலிகள் செய்த தவறுகளுக்கு அப்பாவித் தமிழ் மக்களைப் பொறுப்பாக்கக் கூடாது.
 
     “...எந்த சமூகத்தவரின் விரோதமும், நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம்; (எவ்வளவு விரோமிருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள்...” என்ற திருமறை வசனம் (திருக்குர்ஆன் 5:8) நம்மைக் கடுமையாக எச்சரிக்கிறது.
 
     அதுமட்டுமின்றி, தமிழகத்தில் சிலர் இதுபோன்ற மனநிலையில் பொறுப்பற்ற முறையில் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.
 
    அரசியல் தெளிவு, சமூகப் பொறுப்பு, நல்லிணக்கம் குறித்து புரிதல் இல்லாதவர்கள் இப்படி செய்கிறார்கள். புலிகளின் விவகாரத் தையும், அப்பாவி தமிழ் மக்களின் வாழ் வுரிமையையும் பிரித்துப் பார்க்க வேண்டும்.
 
     பெரும்பான்மையான தமிழக முஸ்லிம்கள் எங்களது கருத்தோட்டத்தில் தெளிவாக இருக்கிறார்கள். முஸ்லிம்களை முதன்மைப் படுத்தி அரசியல் நடத்தும், எமது அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அரசியல் களத்தில் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்து வருகிறது. சிறுவன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முதலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது மனித நேய மக்கள் கட்சி தான். அதன்பிறகுதான் மற்ற கட்சிகள் களத்துக்கு வந்தன. இன்று மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடு வதற்கு உத்வேகத்தைத் தந்தது மமக நடத்திய முதல் போராட்டம் தான் என்பதை மறந்து விடக் கூடாது.
 
கேள்வி: இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?
 
     பதில்: இங்கு தமிழகத்தில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும், இம்மண்ணில் பூர்வகுடிகளாக வாழும் அனைவரும் நம்மைத் தமிழர்கள் என்கிறோம். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழி இணைக்கிறது.
இலங்கையில் சூழல் வேறு. அங்கு இந்துக்கள், சைவ மதத்தினர் உள்ளிட்டவர்கள் தங்களைத் தமிழர்கள் என்கிறார்கள். இந்திய வம்சாவழியினர் தங்களை ‘மலையகத் தமிழர் கள்’ என்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களை ‘தமிழ் பேசும் முஸ்லிம்கள்’ என்கிறார்கள். அதாவது, தங்களை மற்றொரு தனித்த தேசிய இனமாகக் கருதுகிறார்கள்.
 
     இப்போது இலங்கையில் கோயில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் என சிறுபான்மையினருக்குச் சொந்தமான 65 வழிபாட்டுத் தலங்களை சிங்கள வெறியர்கள் சேதப்படுத்தி இருக்கிறார்கள். பௌத்த குருமார்கள் மத வெறிப் பிடித்து அலைகிறார்கள். அங்கு ‘பொது பல சேனா’ என்ற புத்த மதவெறி அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை களைத் தூண்டி வருகிறது. இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அவர்கள் குறிவைக்கிறார்கள்.
முஸ்லிம்கள் முறைப்படி உண்ணும் ‘ஹலால்’ முத்திரையிடப்பட்ட உணவு கலாச் சாரத்திற்கு தடை விதித்திருக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபுக்கு (முகத்திரை) தடைவிதிக்க முனைகிறார்கள்.
 
     முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை முஸ்லிம்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இலங்கை முஸ்லிம்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி செயல்படுகிறது.
 
கேள்வி: இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து?
 
     பதில்: இது ஐ.நா. சபை முடிவெடுக்க வேண்டிய ஒரு சர்வதேச விவகாரமாகும். அங்கு ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலை யகத் தமிழர்கள் என்று மூன்று பெரும் இனங் களின் உரிமைகள் அடங்கியிருக்கிறது. இதை கவனமுடனும், மனிதாபிமானத்தோடும் அனைவரும் அணுக வேண்டும். இவ்விவகாரம் என்பது ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவித்து, தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டித்த பிறகு பேசவேண்டிய அடுத்தக்கட்ட நகர்வாகும்.
 
கேள்வி: இலங்கையில் உள்ள தமிழர் தலைவர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்ன?
 
     பதில்: முன்பு வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அப்பகுதிகளில் மீள் குடியேற்றம் கண்டு வருகிறார்கள். அவர்களை அரவணைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்கள் மீண்டும் கிடைக்க துணை நிற்க வேண்டும். தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இரத்த பந்தங்கள் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். இதில் இரண்டு சமூகங்களின் தலைமையும் இணைந்து செயல்பட வேண்டும். அரசியல் ரீதியாக இணைவது குறித்து வரும் காலங்களில் இருதரப்பும் விவாதத்தை தொடங்க வேண்டும்.
 
கேள்வி: இதுகுறித்து நீங்கள் முயற்சிகள் ஏதும் எடுப்பீர்களா?
 
     பதில்: இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் குறித்து யாரும் பேசுவதில்லை. அவர்களில் பலர் இன்னமும் அகதிகளாக உள்ளனர். நாங்கள் பல மேடைகளில் அதைப் பேசி வருகிறோம். இலங்கை முஸ்லிம்களின் தலைமையும், தமிழர் தலைமையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் தலைமையும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோளாகும். இதை நாங்கள் முன்னெடுக்கத் தயாராக இருக்கிறோம். சகோதரர்கள் நமக்குள் உறவு வலுப்பட வேண்டும் என விரும்புகிறோம். விரைவில் அதற்கான காலம் கனியும் என நம்புகிறோம்.thanks, keetru

பாகிஸ்தான் பிரிந்து போனதற்கு யார் காரணம்?


முகநூலில் இந்துத்துவ சிந்தனை கொண்ட நண்பர்கள் எங்கள் மீது பல அவதூறுகளை சொன்னார் பாகிஸ்தான் பிரிவினைக்கு இங்குள்ள முஸ்லிம்கள் காரணம் என்கிற வாதத்தை முன் வைத்தார் அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக சரியான செய்தியை அனைவருக்கும் அறிய வைத்து வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதற்காக இந்த பதிவு.

இந்து – முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்..

கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியிலும் கூட காண இயலாது. ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19ஆம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து – முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும்

இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர். அதற்கு இரு வழியினைக் கடைப்பிடித்தனர்.

1) இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்ப்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளைத் திரித்துக் கூறுதல்

2) பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும், பொறாமையையும், குரோதத்தையும் ஏற்ப்படுத்துதல்.

பிரீட்டிஷாரின் சதி

ஒரிசாவின் முன்னாள் ஆளுநரும், இந்நாள் ராஜ்யசபை உறுப்பினருமான பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படித் திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும் பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார் :

பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும். எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளர் “வுட்” எழுதியக் கடிதத்தில்,

“ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்திமூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம். இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

கவர்னர் ஜெனரல் டஃபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,

“மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பெருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்ப்படுத்தித் தரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்” என எழுதியுள்ளார்.

கர்ஸான் பிரபுவுக்கு ஜார்ஜ் பிரான்ஸிஸ் ஹாமில்டன் பின்கண்டவாறு எழுதியுள்ளார் :

“படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துள்ள இருக் கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே இனத்துக்கு இனம் பிளவை அதிகப்படுத்துகிற வகையில் பாடப்புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்.”

இதன் அடிப்படையில் இந்திய சரித்திரப் பாடப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திரித்து எழுதப்பட்டன. மத்திய காலத்தில் முஸ்லிம் மன்னர் ஆட்சியில் இந்து மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர் என்பதுப் போன்ற கருத்துக்கள் வலிந்து திணிக்கப்பட்டன.

பொருளாதாரத் தாக்குதல் :

இரண்டவதாக, பொருளாதார ரீதியில் இருவரிடையே விரோதத்தை ஏற்ப்படுத்த முனைந்தனர். வங்காளத்தில் நிரந்தரக் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களிடம் ஊழியர்களாக இருந்த இந்துக்களிடம் தரப்பட்டன. டாக்டர். டபிள்யூ. டபிள்யூ .டபிள்யூ. ஹண்டர் பின்வறுமாறு எழுதுகிறார் :

“நிரந்தரக் குடியேற்றத்தின் இலட்சியமே இந்து அதிகாரிகளை நிலச்சுவான்தார்களாக மாற்றுவதே. அன்று வரை முக்கிய பதவிகளில் இல்லாமல் இருந்த வரி வசூலிப்பவர்களை இக்குடியேற்றம் உயர்த்தி விட்டது. முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியிருந்த செல்வங்களை எல்லாம் இந்த இந்து ஏவலாளர்கள் சேகரித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.”

(Quoted The Meaning of Pakistan By F,K. Khan Durrani)

நிதி நிர்வாக விஷயங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். இரானுவத்தில் முஸ்லிம்கள் சேராமல் தடை செய்யப்பட்டனர்.

கல்கத்தாவிலிருந்து வெளிவந்த “டோர்பின் என்ற பத்திரிக்கை 1867ஆம் ஆண்டு ஜுலை 14 ஆம் தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவல நிலையை வெளிப்படுத்தும்,

“பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாரையும் ஒரே விதமாக பாவிக்கக் கடமைப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க, முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்கு தங்களின் கெஜட்டுக்களிலிருந்து முஸ்லிம்களை பகிழரங்கமாக நீக்கி விட்டிருக்கிறது. சமீபத்தில் சுந்தர்பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாகின. இதைப் பற்றி கமிஷ்னர், அரசாங்க கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரப்பட மாட்டாதென அறிவித்திருந்தார். முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கிணித்தே வைத்திருந்தது. இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்குள் முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்.”

மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்ட சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும் முஸ்லிம்களை விட தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்றும் மனோ பாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.

சிப்பாய் கலகத்திற்குப் பின்

இந்நிலையில், 1857 ஆம் வருடத்தில் பசுமாட்டின் கொழும்பினால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் காரணம் காட்டி இந்து சிப்பாய்களால் சிப்பாய் கலகம் துவக்கப்பட்டது. அதில் முஸ்லிம்களும் பூரணமாகக் கலந்துக் கொண்டனர். அக்கலம் சில மாதங்களிலேயே ஒடுக்கப்பட்டு விட்டது. இந்துக்களில் சிலர் தங்களுடன் தோளோடு தோள் சேர்த்து ஆயுதத் தாங்கிப் போரிட்ட முஸ்லிம்களுக்குத் துரோகிகளாக மாறி அரசாங்கத்திற்குக் காட்டிக் கொடுத்தனர். இதனால் அரசாங்கத்தின் கோபமெல்லாம் முஸ்லிம்களின் மீது விழுந்தது.

சிப்பாய்க் கலகத்திற்குப் பின் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற கொடுமைகளை நேரில் கண்டனர். ஸையித் அஹ்மது கான், 1887 ஆம் ஆண்டு, காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமைத் தாங்கி பம்பாய் பாரிஸ்டர் ஜனாப் பக்ருத்தீன் தையிப்ஜீக்கு எழுதிய கடிதத்தில்,

“சிப்பாய் கலகத்தின் போது என்ன நடந்தது? இந்துக்கள் அதனை ஆரம்பித்தனர். முஸ்லிம்கள் அதிக தைரியத்துடன் அதில் ஈடுபட்டனர். இறுதியில் இந்துக்கள், கங்கையில் மூழ்கித் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொண்டு முன் போல் நல்ல பிள்ளைகளாகிவிட்டனர். ஆனால், ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் நசிந்து நாசமடைந்தன” என குறிப்பிட்டுள்ளார். (பாகிஸ்தான் விளக்கம் : By எப். கே. துர்ரானி)

சொல்லவொணா துன்பங்களை அனுபவித்த முஸ்லிம்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் பல நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்து தீவிரவாதிகளின் போக்கு :

1867-ல் காசியிலுள்ள இந்துத் தலைவர்கள் உருது மொழிக் கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1875-ல் “இந்தியா இந்துக்களுக்கே” என்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆர்யசமாஜ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும் கிறிஸ்துவ மதத்தையும் எதிர்ப்பதே.

1890-ல் “முஸ்லிம்கள் அந்நியர்கள்” எனக் கூறிக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர், முஸ்லிம்கள் குர்பானிக் கொடுப்பதை எதிர்த்து பசு பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினர்.

1882-ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி, ஆனந்த மடம்’ எனும் பெயரில் ஒரு நாவல் வெளியிட்டார். அதில் தான் வந்தேமாதரம் என்ற கீதம் வருகிறது. அதில் இந்தியாவை “காளி” என்ற கடவுளுக்கு ஒப்பிட்டு, அந்த காளி துஷ்டர்களை ஒழிக்கச் சொல்லுகிறாள் எனும் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் முஸ்லிம்களுக்கு எதிராக தனது துவேஷத்தை வெளிப்படுத்தியது.

இவையெல்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒருவகையான பயஉணர்ச்சியை ஏற்ப்படுத்தின. அது பின்னாளில் இரு சாரரிடையே நிரந்தரப் பகையாக மாறியது.

காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும்

இந்நிலையில், 1885ல் தேசிய காங்கிரஸ் தோன்றியது. அதன் முன்னோடித் தலைவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் எதிர்ப்பாளர்களே, அவர்கள் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆங்கிலேயர்கள் தூவிய வேற்றுமை விஷ வித்துக்களுக்கு பலியான இந்து மதத் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தை இந்து மறுமலர்ச்சி எனும் அடிப்படையில் நடத்த விரும்பினர். முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்கு பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர். முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர். விளைவு? 1906ஆம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக் சர். ஆகாகான் அவர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.

முஸ்லிம் லீக் ஏன் தோற்றுவிக்கப்பட்டது? என்பதன் காரணத்தை R.P. Dutt இப்படிக் குறிப்பிடுகிறார்:

“தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமத அடிப்படையில் நடத்த விரும்பினர். இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர். எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து விடாமல் இருக்க முயற்ச்சித்தனர். அதன் விளைவே 1906 முஸ்லீம் லீக் தோன்றியது.”

(Quoted in R. At Desai’s Social Background of Indian Nationalism)

Most members of the congress made a serious error refusing to admit the exitence and validity of muslim nationalism.

முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும். நிலைப்பாட்டையும் மறுத்ததின் மூலம் பெறும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமானத் தவறினை செய்தனர்.

(A Short History of india and pakistan by T. Walter wall Bank) (U.S.A.) 1965.

முஸ்லிம் லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காங்கிரஸிலும், லீக்கிலும் இருந்தனர். மேளலானா அலி சகோதரர்கள் காங்கிரஸை பெரிதும் நம்பினர்.

பிரிவினை பிரச்சாரம் யார் துவக்கியது?

இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கும் 1940க்கும் இடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம். இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு எனும் திட்டத்தை முதன் முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள் தாம்.

இன்று இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கும் 1940க்குமிடையே நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் ஒரு முறை ஆராய்ந்து பார்க்கட்டும்.

இந்நாட்டை விட்டும் வெளியேறி விடுங்கள்; அல்லது இங்கு இரண்டாம் தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாக போடப்பட்டது.

“முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின் மூளையில் தான் முதன்முதலில் உதித்தது” என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்க செயலாளராக இருந்துவரும் காந்திஜியின் நெருங்கிய சகாவுமான பண்டிட்சுந்தர்லால், “ரேடியன்ஸ்” வார இதழில் (13-6-87) ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இன்று R.S.S போற்றிப் புகழும் V.D சாவர்க்கார், இந்துக்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாக R.N. அகர்வால் தனது the national movement என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

குர்தகி மட சங்கராச்சாரியார், “இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது. முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே. அவர்கள் விருந்தாளியைப் போலவே நடந்துக் கொள்ள வேண்டும். என்று முஸ்லிம்களை எச்சரித்தனர்.

அகில இந்திய சிவில் சர்வீசில் உறுப்பினராக இருந்த ஹர்தயால், A Joint Hindu – Muslim state is sheer nonsense “இந்து – முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது ஒரு முட்டாள்தனம்” என உரத்துச் சொன்னார்.

1923ல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தரைமையில் இந்துமகாசபை புதுப்பிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல், இந்துக்களுக்குப் போர் பயிற்சி தரல். அதன் முக்கியக் குறிக்கோள் இந்தியா இந்துக்களுக்கே; வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை. என்பதே இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின. இஸ்லாத்தையும், முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் இழிவுப் படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. 1924-ல் லாஹுரில் ரங்கிலா ராஜா (கெட்ட நடத்தையுள்ள ராஜா) என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் இஸ்லாமியர்களைப் போற்றும் முஹம்மது நபி அவர்களைத் தரக் குறைவாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் நிலை

இவ்விதம் இந்துமதத் தலைவர்களில் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917ல் இருந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும்.?

இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் முதலில் இரு நாடு எனும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். 1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப் பூர்வமாக இணைந்தார். அதுவரை அவர் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்தார். The ambassador of Hindu-Muslim Unity” என்று சரோஜினி நாயுடுவால் பரப்பப்பட்டவர், 1933-ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை பற்றிக் குறிப்பிட்ட பொழுது An Impossible Dream’ நடைபெற இயலா கனவு என்றார் ஜின்னா.

1906 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக் 1940 ம் ஆண்டு வரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை, 1945, 1946-ல் தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.

ஏன் கேட்டார் தனி நாடு ?

தனிநாடுக் கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்? 1937 க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார். சர். சிம்மன்லால் சிடால்வாட். லிபரல் பார்டியின் தலைவரும் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவருமான சிடால்வாட் தனது Recollection and Reflections” என்ற நூலில், Congress parentage of partitio (பக் 414) என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்.

“பாகிஸ்தான் இயக்கத்திற்கு முலாதாரம் காங்கிரஸ் தான். அது 1935 ஆம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துக் கொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்ப்படுத்தியது. முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை” என்கிறார்.

வட்டமேஜை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மை பிரதிகளையும் சேர்த்துக் கொள்வதென ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது, ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகாணங்களில் லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆணாலே தவிர மந்திரி பதவி இல்லை. என காங்கிரஸ் கூறி விட்டது. இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதனைப் பற்றி டாக்டர். அம்பேத்கார் குறிப்பிடும் போது “காங்கிரஸ் அனுசரித்த போக்க விதிக்கு நேர்மாறானது. நாட்டின் இதரக் கட்சிகளையெல்லாம் நிர்முலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாகச் செய்வதற்கே இந்த முறைக் கையாளப்பட்டது. ஒரு ஏகாதிபத்திய யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவச் செய்யப்படும் இம்முயற்சியை ஹிந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம். ஆனால் இது சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்” எனக் கண்டித்துக் கூறுகிறார். (Quoted in a Short History of India and Pakistan).

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது. உருது புறக்கணிக்கப்பட்டது. முஸ்லிம் கலவி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. தங்கள் நபியைப் பற்றியோ, கலீபாக்களைப் பற்றியோ மற்றும் முஸ்லிம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. தங்களின் கலாச்சாரம் ஒரே அடியாக அழிந்துவிடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர். ( Sir Regined Coupland. The Indian problem.)

இவ்வாறு காங்கிரஸ் நடந்துக் கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயஆட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொருப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இளைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940-ல் ஆதரித்தார். எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.

நேருவின் பேட்டியால் நிலை மாறியது :

ஒன்றுப்பட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946-ஆம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி வெளியிடப்பட்ட கேபினேட் தூதுக் குழுவின் முடிவினை ஜுன் மாதம் 6-ம் தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின் படி ஏற்றுக் கொண்டது. 1940-ல் அக்கட்சி இயற்றிய தனிநாடு கோரிக்கையைக் கைவிட தயாரானது. ஆனால் ஜுலை 10ம் தேதி நேரு அவர்கள், கேபினெட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு அதிகாரம் உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசமாக்கியது. அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை. தனிநாடுதான் தீர்வு என முடிவாக ஜின்னா கூறி விட்டார்.

“நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றிவிட்டது. என மெளலானா அபுல்கலாம் ஆஜாத் தனது India wins freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மேற்க்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம் லீகும், முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ்நிலைத் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.

R.S.S-யை நோக்கி ஒரு கேள்வி?

இன்று இந்தியாவைத் துண்டாடிய பாவிகள் என முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிப் பிரச்சாரம் செய்யும் R.S.S அன்று என்ன செய்தது? இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என இந்து மகாசபையினர் பேசினார்களே; பிரிக்கலாம் என இராஜாஜி அவர்கள் ஆலோசனை வழங்கினார்களே; பிரிக்கவேக் கூடாது என பிடிவாதம் செய்த காந்தியை வல்லபாய் படேல் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தாரே; இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது R.S.S என்ன செய்தது? இன்று பாரதமாதாவை துண்டாடிய பாவிகள் என நீலிக்கண்ணீர் வடிப்போர் அன்று பிரிவினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனரா? இல்லையே ஏன்?

முஸ்லிம் லீக்கை, ஜின்னாசாஹிபை. காயிதேமில்லத்தை, முஸ்லிம்களைப் பிரிவினை வாதிகள் எனச் சாடுவோர் பிரிவினைக்கு முதலில் வித்திட்ட லஜ்பத்ராயை, பண்டிட் மாளவியாவை ஆதரித்த இராஜாஜியை, பட்டேலை பிரிவினை வாதிகள் எனச் சொல்வது இல்லையே ஏன்?

இந்தியா பிளவுப்பட்டாலும் பரவாயில்லை, முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டி விட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக் கொண்டனர்; விரும்பினர் R.S.S காரர்கள். ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய மக்களை இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை. இந்நாட்டிலேயே பிறந்து இந்நாட்டிலேயே வளர்ந்து இந்நாட்டின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படிப் போவார்கள்? அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அதனால் ஏற்ப்பட்ட குரோத உணர்வே இன்றைய R.S.S காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர்.

சற்று சிந்தியுங்கள்!

* மேற்க்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித் தொகுப்புகளிலிருந்து நாம் என்னப் புரிகிறோம்?

* பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் எதுவும் நடக்கவில்லை.

* இந்து – முஸ்லிம் கருத்து வேற்றுமையையும் குரோதமும் பிரிட்டிஷாரால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டவை.

* முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ, திட்டமிடவோ இல்லை.

* இந்து தீவிரவாதிகளும் அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.

எனவே இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் துர்ப்பிரச்சாரமே தவிர அதில் உண்மை ஏதுவுமில்லை. மேற்கொண்டு உண்மை நிலையை அறிய விரும்புகிறோர் H.M. Sreevai partition of India : legend and Reality என்ற நூலையும், The Dialogue Between Hindus and Muslim என்ற நூலையும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி: கணியூர் நாஜி நீடுரி அவர்கள்

நன்றி: http://annajaath.com/?p=5468
thanks, valaiyugam