Wednesday, April 14, 2021

முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக டாக்டர் அம்பேத்கர்!

 



1946ம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பாக நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலில் பம்பாயில் இருந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி கைவிடாது, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உறுப்பினர் தேர்விற்கான பட்டியலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயர் (அன்றைக்கு இருந்த சனாதன சக்திகளின் சூழ்ச்சியால்) காங்கிரஸ் பட்டியலில் இடம் பெறவில்லை. அவரை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை என்ற செய்தி காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து தான் தெரியவந்தது.
இந்த செய்தி அறிந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அறிவும் ஆற்றலும் நாட்டுக்கு பயன்பட வேண்டும் என்ற நன்னோக்கில் வங்காளத்திற்கு அழைத்து முஸ்லிம் லீக்கிற்கான ஒதுக்கீட்டில் முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக அறிவித்து, வெற்றிப் பெறச் செய்து அண்ணல் அம்பேத்கர் அவர்களை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆக்கினர் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாறு.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை உள்ளிட்ட சமூக மக்களுக்காக போராடிய அண்ணலை கொண்டாடும் நாம் நெஞ்சத்தில் பதிந்து வைக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு ஆகும் அது.
-ஏப்ரல் 14, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம்.

முடிவுறுமா? தொடருமா?




கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருவதாகச் சொல்லப்படுகிறது. முதன் முதலில் கொரோனா விமானத்தில் வந்தது. அப்போது விமானப் பயணிகள் காரணமாகவே கொரோனா பரவியதாகச் செசால்லப்பட்டது. இப்போது அதன் இரண்டாம் அலை என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. சரி, இந்த இரண்டாம் அலையோடு முடிந்துவிடுமா என்றால், முடியாது என்பதுதான் பதில்.
அடுத்து மூன்றாம் அலை, நான்காம் அலை எனத் தொடரும் என்றுதான் தெரிகிறது. ஏனென்றால் மக்களைச் சுதந்திரமாக வாழவிடுவதைவிடப் பயத்தோடு வாழ வைப்பதுதான் ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம். எதிர்த்துக் கேட்க ஆள் இருக்காது. போராட்டங்களே இல்லாமல் செய்துவிடலாம். பிடிக்காதவர்களை கொரோனா பெயரைச் சொல்லி சமாதி கட்டிவிடலாம்.
யூதர்களின் திட்டம் என்னவென்றால், தஜ்ஜாலை வரவேற்க இவ்வுலகைத் தயார் செய்வதே ஆகும். அதற்கு மக்கள் ஒருவருக்கொருவர் வெறுத்தொதுக்கும் நிலையை உருவாக்குதல், வாயையும் மூக்கையும் மறைக்கச் செய்தல், ஒருவருக்கொருவர் ஒட்டாதவாறு இடைவெளியை ஏற்படுத்துதல் ஆகியவற்றைச் செய்தல்.
இதையெல்லாம் எப்படிச் செய்வது? அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த கொரோனா. அதாவது பயத்தை ஏற்படுத்திவிட்டால் மக்கள் ஒருவருக்கொருவர் வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால்தான் இப்போது யாரும் யார் வீட்டிற்கும் செல்ல விரும்புவதில்லை. யாராவது வருவதாகச் சொன்னாலும் கொரோனாவைக் காரணம் காட்டி, வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள்.
கூட்டமாக இருப்பதை ஷைத்தான் விரும்புவதில்லை. அதனால்தான் சமூக இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் நபிமொழி ஒன்றை நினைவூட்டுகிறேன். “நீங்கள் சமுதாயக் கூட்டமைப்புடன் சேர்ந்திருங்கள். பிரிந்துவிட வேண்டாம் என நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் ஷைத்தான் (பிரிந்து வாழும்) தனிமனிதனுடன்தான் இருக்கிறான். அவன் (இணைந்திருக்கும்) இருவரைவிட்டுத் தொலைவில் சென்றுவிடுவான்...” (திர்மிதீ: 2091)
இப்போது புரிகிறதா? மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை ஷைத்தான் விரும்புவதில்லை. அவர்கள் தனித்தனியாக இருப்பதையே விரும்புகிறான். அதை செல்ஃபோன் மூலம் ஏற்கெனவே அவன் செய்துவிட்டான். இருப்பினும் பயத்தை அள்ளிப்போட்டால் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிரிந்துகிடப்பார்கள். அதுதான் அவனது எண்ணம்.
காலம் செல்லச் செல்ல அதைவிட மோசமான காலம்தான் வருமே தவிர வசந்த காலம் திரும்ப வராது. அதனால் இப்போது நாம் வாழும் காலமே நம்மைப் பொருத்த வரை பொற்காலம். இனி வரும் காலமெல்லாம் இதைவிட மோசமாகவே இருக்கும். அதுவெல்லாம் வறண்ட காலம்.
கொரோனா என்பது நோயல்ல. அது ஒரு பேரச்சம். அந்த அச்சம் யாருடைய மனதிற்குள் புகுந்துகொண்டதோ அவரெல்லாம் அதற்கு இரையாகிவிடுவார். யார் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி, மற்ற எதைக் கண்டும் அஞ்சாமல், எது வந்தபோதிலும் “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களைத் தீண்டாது” என்று உரக்கச் சொல்கிறாரோ அவரை எதுவும் தீண்டாது. அவர் நிம்மதியாக வாழ்வார்.
ஐவேளை தொழுகையைக் கடைப்பிடிப்போம்.
அல்லாஹ்வையே அஞ்சுவோம்.
எல்லா நிலைகளிலும் நிம்மதியாக வாழ்வோம்.

நோன்பை முறிக்கும் காரியங்கள் விஷயங்கள் யாவை.?




01) நோன்பை முறிக்கும் விஷயங்கள்:
உடலுறவில் ஈடுபடுதல்
சாப்பிடுவது, குடிப்பது
மாதவிடாய் ஏற்படுதல்
பிரசவ கால இரத்தம் வெளியேறுதல்
வேண்டுமென்றே வாந்தியெடுப்பது
முத்தமிடுதல், சுய இன்பம் போன்றவற்றின் மூலம் இந்திரியம் வெளிப்படுத்துவது
நரம்பு வழியாக சத்தூசி போன்றவற்றை உட்கொள்ளுதல்
இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்

02) நோன்பை முறிக்காத செயல்கள் யாவை?
A) நோன்பை முறிக்காத செயல்கள்:
வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பது
கணவின் மூலம் விந்துவெளிப்படுதல்
இரத்தப் பரிசோதனைக்காக குறைவான இரத்தம் எடுத்தல்
சுயவிருப்பமின்றி காயம், பல் பிடுங்குதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் தானாக வெளியாகுதல் (மேற்கண்டவைகளை மறதியானால் அல்லாமல் வேண்டுமென்றே செய்தால் நோன்பு முறிந்துவிடும்.)
குளித்தல், நீந்துதல்
வெப்பத்தைத் தனித்துக்கொள்வதற்காக தண்ணீரை உடலில் தெளித்துக்கொள்வது
பல் துலக்குதல் (விரும்பத்தக்கது)
வாய் வழியாக உட்கொள்ளாத வகையில் வைத்தியம் செய்துகொள்வது (உ.ம். ஊசி போடுவது, கண், மூக்கு, காது ஆகியவற்றிக்கு சொட்டு மருந்து இடுதல்)
வயிற்றுக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்ப்பது
வாய்கொப்பளிப்பது
வயிற்றினுள் தண்ணீர் சென்றுவிடாத வகையில் பக்குவமாக நாசிக்கு தண்ணீர் செலுத்துவது.
வாசனைப் பொருட்களை உபயோகிப்பது, அவற்றை நுகர்வது
நேரம் தெரியாது, சூரியன் மறைந்துவிட்டதாக எண்ணி, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று எண்ணி, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ, சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரத்தை தெரிந்து விட்டால், உடனே உணவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கண்ணுக்கு சுருமா இடுதல்
03) நோன்பின் சுன்னத்துக்கள் யாவை?
1) ஸஹர் செய்தல்
2) விரைந்து நோன்பு துறத்தல்
3) துஆச் செய்தல்
04) ஸஹர் செய்வதன் சிறப்பு யாது?
A) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஸஹர் செய்யுங்கள்; ஏனெனில் ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது’ (புகாரி, முஸ்லிம்)
இரவின் கடைசி வரை ஸஹர் செய்வதை பிற்படுத்துவது சுன்னத்தாகும்.
05) நோன்பின் நிய்யத்தை எப்போது வைக்க வேண்டும்?
பர்ளான நோன்பு நோற்கும் விசயத்தில் பஜ்ர் உதயமாவதற்கு முன் நோன்பிற்குரிய நிய்யத்தை வைத்துக்கொள்வது கடமையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘யார் நோன்பு நோற்க பஜ்ருக்கு முன்னால் நிய்யத்தை சேர்த்து வைக்கவில்லையோ அவரது நோன்பு கூடாது’ (அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி), ஆதாரம் : அபூதாவுது, திர்மிதி, நஸயீ)

06) நோன்பின் நிய்யத்தை எவ்வாறு வைக்க வேண்டும்?
நிய்யத் (எண்ணம்) வைப்பது உள்ளத்தில் தான்! வாயால் அல்ல!

07) நோன்பாளிகள் தவிர்ந்துக்கொள்ள வேண்டியவைகள் யாவை?
யார் கெட்ட, பொய் பேச்சுக்களையும், அதை செயல்படுத்துவதையும் விட்டுவிடவில்லையோ அவன் நோன்பு நோற்று அவனது சாப்பாட்டையும் குடிப்பையும் விட்டு பசியில் இருப்பதனால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை!’ (புகாரி)
08) நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுமா?
A) “நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ” (பைஹகி)
09) நோன்பு திறந்தவுடன் கூறவேண்டிய துஆ எது?
A) ‘தஹபள் ளமவு வப்தல்லதில் உரூக் வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’
பொருள்: தாகம் தனிந்தது. நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்.
10) எதைக்கொண்டு நோன்பு திறக்க வேண்டும்?
A) கனிந்த பேரித்தம் பழம் மூலம் நோன்பு திறப்பது சுன்னத் ஆகும். அது கிடைக்காவிடில் காய்ந்த பேரீத்தம் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் கிடைப்பதைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
11) ரமலான் இரவுத் தொழுகையின் (தராவீஹ்) சிறப்பு என்ன?
A) ‘எவர் ரமலான் இரவில் ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
அதிகமாகவே அறியாத மக்களும் இருக்கின்றார்கள் அவர்களுக்காகவும் பகிர்ந்து அறியபடுத்துவோம்.
16
33 Shares

Tuesday, April 13, 2021

அடுத்த மாதம் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து சவுதியா(Saudi Arabian Airlines) ஆலோசனை.



போக்குவரத்து அமைச்சர் Saleh Al-Jasser தலைமையிலான சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷனின் இயக்குநர்கள் குழு, அடுத்த மாதம் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை விரைவுபடுத்த வலியுறுத்தியுள்ளது.

https://www.saudigazette.com.sa/article/605417/SAUDI-ARABIA/Saudia-discusses-preparations-for-resumption-of-international-flights-next-month


தகவல்:
:earth_africa: சவூதிவாழ் தமிழ் மன்றம்

மக்கா மதீனாவில், ரமலானில் தவக்கல்னா மூலம் அனைத்து விதமான Permitம் Check செய்வார்கள்


 ரமலான் மாதத்தில் அனுமதியின்றி உம்ரா செய்தால் 10,000ரியால் அபராதம்.


மேலும் அனுமதியின்றி மஸ்ஜிதுல் ஹரம் உள்ளே நுழைபவர்களுக்கு 1000ரியால் அபராதம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கா மதீனாவில்,
ரமலானில் தவக்கல்னா மூலம் அனைத்து விதமான Permitம் Check செய்வார்கள்...
விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 1000ரியால்கள் அபராதம்..
ரமலானில் தவக்கல்னா மூலம் அனைத்து விதமான Permitம் Check செய்வார்கள்...
விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 1000ரியால்கள் அபராதம்..





சவூதியிலிருந்து தமிழகம் செல்லும் விமான பயணிகள் கவனத்திற்கு.

கீழ் உள்ள விண்ணப்பங்களை கட்டாயமாகப் பூர்த்தி செய்து பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் உங்களுக்கு போர்டிங் பாஸ் (Boarding Pass) கொடுக்க மாட்டார்கள்..

*Air Suvidha*(Upload PCR Test report),
*TN ePass*ஆன்லைன் formஇல் register.
*PCR Report* கட்டாயம்(72Hrs Validity),
:white_check_mark: 2Copy Print எடுத்து கையில் வைத்து கொள்ளவும்.

:point_down:ONLINE Registration form Link:

:beginner: *Air Suvidha* :
https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration

:beginner: *TN ePass* :
https://tnepass.tnega.org/#/user/pass



Monday, April 12, 2021

உலக மருத்துவத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த சென்னை மருத்துவம்!

 பல உலக நாடுகளின் மருத்துவத்தால் தீர்க்க முடியாத டின்னிட்டஸ் எனும் காது சார்ந்த பிரச்சனைக்குச் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை தீர்வளித்துள்ளது.

உலக அளவில் 15% முதல் 20% சதவீத மக்கள் மட்டுமே டின்னிடஸ் எனும் காது சார்ந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயின் காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் இரு காதுகளிலும் இரைச்சல் (ringing sound in ear) சத்தம் எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இரவு நேரங்களில் தூக்கமின்மை ஏற்படுகிறது. மேலும் இந்த குறிப்பிட்ட பிரச்சனைக்கு இதுவரை உலக நாடுகளால் தீர்வு காணமுடியவில்லை. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்று இந்த நோயால் பாதிப்படைந்த 26 வயது இளைஞர் ஒருவரை மைக்ரோவாஸ்குலர் டிகம்பரஷ்ஷன் எனும் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தியுள்ளது.

2 வருட காலமாக டின்னிடஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரின் இரு காதுகளிலும் ரிங்கிங் ஒலியானது கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. இதனைச் சரிசெய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் சரியாகாத நிலையில் தற்போது மைக்ரோவாஸ்குலர் டிகம்பரஷ்ஷன் அறுவை சிகிச்சை செய்ததின் மூலம் சரியாகியுள்ளது. மேலும் உலக நாடுகளே டென்னிட்டஸ் நோய்க்கு இதுவரை தீர்வு காணாத நிலையில் சென்னையைச் சேர்ந்த எம்ஜிஎம் மருத்துவமனை தற்போது தீர்வுகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!

 தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு பணிகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.



தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை!

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

மேலும், இன்று காலை முதல் சென்னை, திருநெல்வேலி, திருச்சி,
கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, கும்பகோணம் போன்ற பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது மழை பெய்தது, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வளிமண்டல சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை இருக்கும் எனவும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.