Sunday, October 31, 2010

அணு விபத்து நட்டஈடு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

அணு விபத்து நட்டஈடு ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று கையெழுத்திட்டது. வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஒப்பந்த கையெழுத்தானது.இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதையொட்டியே இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாக கையெழுத்திடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து அமெரிக்க நிறுவனங்கள் இந்திய அணுசக்தித் துறையில் முதலீடு செய்ய முன்வரும் என்று தெரிகிறது.மிகவும் சர்ச்சைக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணுசக்தி நட்டஈட்டு சட்ட மசோதா மீது அமெரிக்க அணுசக்தி...

அமெரிக்கா செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு பொதிகள்!

அமெரிக்காவுக்கு செல்லவிருந்த யேமென் விமானங்களீல் வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யேமன் நாட்டிலிருந்து இவ்விரு விமானங்களும் புறப்பட்டுள்ளன.பிரித்தானிய புலனாய்வு பிரிவினரின் எம்.ஐ.6 ற்கு கிடைத்த தகவலை அடுத்து,  பிரித்தானியா, மற்றும் டுபாய் நகரங்களில் நிறுத்தப்பட்ட இவ்விமானங்களில் சோதனையிடப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த அச்சிடும் இயந்திரங்களில் (பிரிண்டரில்) உபயோகிப்படும் மைநிரப்பும் காட்ரிஜ்ஜினுள் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மேற்படி வெடிகுண்டுகள், அமெரிக்காவில்...

Saturday, October 30, 2010

வரும்முன் காப்போம் முகாமுக்கு வந்தவர் சாவு

புதுக்கோட்டை, அக். 30:  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வரும் முன் காப்போம் முகாமுக்கு சிகிச்சைக்காக வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார். புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இன்று தமிழக அரசின் வரும் முன் காப்போம் முகாம் நடந்தது. இந்த முகாமில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக பெரியாளூரைச் சேர்ந்த சிகாமணி (35) வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.செய்தி: ...

அயோத்தி நில வழக்கு-நவ. 30ல் அப்பீல் செய்கிறது நிர்மோகி அகாரா

அயோத்தி: அயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து நவம்பர் 30ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளதாக நிர்மோகி அகாரா தெரிவித்துள்ளது. அயோத்தி நில வழக்குகளில் முக்கியமான ஒன்று இந்த நிர்மோகி அகாரா. சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் பிறப்பித்த தீர்ப்பின்படி நிர்மோகி அகாராவுக்கும் மூன்றில் ஒரு பங்கு இடம் தரப்பட வேண்டும். இந்த நிலையில், தீர்ப்பில் திருப்தி இல்லை எனத் தெரிவித்துள்ள நிர்மோகி அகாரா நவம்பர் 30ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதேசமயம்,...

Friday, October 29, 2010

இந்தோனேஷியா: இயங்காமல் போன சுனாமி அலை எச்சரிக்கை கருவிகள்

ஜகார்தா: திங்கள்கிழமை இந்தோனேஷியாவை சுனாமி அலைகள் தாக்கியபோது அது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் கருவிகள் செயல்படாதது தெரியவந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியாவை மிக பயங்கர நிலநடுக்கம் தாக்கி சுமார் 2 லட்சம் பேர் பலியாயினர். இதையடுத்து சுனாமி அலைகள் உருவானால் அது குறித்து முன் கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் கடலில் பொறுத்தப்பட்டன. கடலில் மிதவைகளில் நிலை நிறுத்தப்பட்ட இந்தக் கருவிகள், கடலின் நீர் மட்டம் திடீரென உயரும்போது...

அமைச்சர் உபயத்துல்லா மகன் உசேன் மரணம்: திமுகவினர் அஞ்சலி

தஞ்சை: தமிழக வணிகவரித்துறை அமைச்சர் உபயத்துல்லாவின் மகன் உசேன் (40) நெஞ்சு வலியால் உயிர் இழந்தார். தமிழக வணிகவரித்துறை அமைச்சர் உபயத்துல்லாவின் மகன் உசேன் (40). இவர் தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் அமைச்சர் வசித்து வருகிறார். திருமணமான உசேனுக்கு குழந்தைகள் இல்லை. தந்தைக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர் ஒரு முறை கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார். இன்று காலை வீட்டில் இருந்த...

Thursday, October 28, 2010

மலேசியாவின் இஸ்லாமிய வங்கி செயல்பாடு : இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்

கோலாலம்பூர் : மலேசிய அரசின் இஸ்லாமிய வங்கி செயல்படுவதை போன்று, இந்தியாவில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி பார்க்கும்படி, ரிசர்வ் வங்கியை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டு கொண்டுள்ளார்.மலேசியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அந்நாட்டு பிரதமர் முகமது நஜிப் டுன் அப்துல் ரஜாக்கை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் பயனாக, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவானது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் வர்த்தகத்தை பெருக்கி கொள்ளும் வகையில், ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சு...

ஈராக் முன்னாள் அமைச்சரும், சதாமின் வலது கரமுமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை

ஈராக் முன்னாள் அமைச்சரும், சதாமின் வலது கரமுமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனைபாக்தாத்: சதாம் உசேனின் வெளிநாட்டு முகமாக திகழ்ந்தவரும், ஈராக் அரசின் குரலாக பன்னாட்டு அரங்குகளில் பல காலம் ஒலித்தவரும், ஈராக் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை விதித்துள்ளது ஈராக் கோர்ட். அவரை சாகும் வரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு- ஷியா முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டார். ஷியா முஸ்லீம்களின் கட்சிகளை ஒடுக்கினார். ஷியா பிரிவினைச் சேர்ந்தவர்களை கொலை செய்தார் என்பதாகும். ஈராக்கில் அமெரிக்கப்...

Wednesday, October 27, 2010

Who is behind 9/11 Twin Tower terror attack? answer by Dr.Zakir Naik in ...

...

"The Lost Kingdom: History of Andalus" @ University of Toronto, Canada -...

...

Saddam Hussein history in tamil

...

அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் கண்டனம்.

அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும்,அத்வானியும்,மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில்அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும்...

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்-சுனாமி தாக்கியது

ஜகார்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடு்க்கத்தையடுத்து சுமத்ரா தீவுக்கு அருகே உள்ள மென்டாவி தீவுப் பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. இதில் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ள. பலரைக் காணவில்லை. அவர்களது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மென்டாவி தீவுக்கு அருகே கடலில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 2.42 மணிக்கு (அந் நாட்டு நேரப்படி நேற்றிரவு 9.42 மணிக்கு) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 20.6 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 புள்ளிகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால்...

குஜராத் கலவர வழக்குகளில் தீர்ப்புகளை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி

டெல்லி: குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகளை அறிவிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இன்று உச்சநீதிமன்றம் விலக்கியது. இதையடுத்து கலவரம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகவுள்ளன. இருப்பினும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி கொலை தொடர்புடைய வழக்கில் மட்டும் தீர்ப்பை வெளியிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்தான் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது நினைனவிருக்கலாம். ஜாப்ரி கொலை வழக்கில் இன்னும் விசாரணை...

Abu Ali - Rasulullah (NASHEED WITH THE MESSAGE VIDEO)

...

Tuesday, October 26, 2010

Zakir Naik's dialogue with Sri Sri Ravi Sankar in Tamil Full Video

Zakir Naik's dialogue with Sri Sri Ravi Sankar in Tamil Full Vi...