Saturday, October 30, 2010

வரும்முன் காப்போம் முகாமுக்கு வந்தவர் சாவு

புதுக்கோட்டை, அக். 30:  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வரும் முன் காப்போம் முகாமுக்கு சிகிச்சைக்காக வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இன்று தமிழக அரசின் வரும் முன் காப்போம் முகாம் நடந்தது.

இந்த முகாமில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக பெரியாளூரைச் சேர்ந்த சிகாமணி (35) வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செய்தி:  http://www.dinamani.com/edition/story.aspx?Title=வரும்முன்+காப்போம்+முகாமுக்கு+வந்தவர்+சாவு&artid=3

0 comments:

Post a Comment