Saturday, November 6, 2010

பாக். மசூதியில் குண்டு வெடிப்பு 25 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானில் வடமேற்கு மாகாணத்தில் உள்ள மசூதியில் நேற்று குண்டுவெடித்ததில், 25 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின், தரா ஆத ம்கேல் அருகே அக்கோர்வால் கிராமத்தில் உள்ள மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நேற்று ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த பயங்கர சம்பவத்தில், 25 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்து பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

0 comments:

Post a Comment