Saturday, March 23, 2019

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் வரும் மார்ச் 26 முதல் 29 வரை சிறப்பு ரயிலை பயன்படுத்தி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்.

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி, எஞ்சிய ஒரு சில பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் அமைக்கும் பணி நிறைவடைந்ததையொட்டி, சோதனைக்காக சிக்னல் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் வரும் மார்ச் 26  முதல் 29 வரை சிறப்பு ரயிலை பயன்படுத்தி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாகவும். இதில், தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கலந்துகொண்டு இந்த வழித்தடத்தில் உள்ள தண்டவாளம், ரயில் நிலையங்கள், ரயில்வே கேட், கேட் கீப்பர் அறை, சிக்னல்கள் போன்றவற்றில் ஆய்வை நடத்துவார் எனவும் தென்னக ரயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.





















0 comments:

Post a Comment