Sunday, March 24, 2019

சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : அனைவரும் விடுதலை என்ற தீர்ப்பு நீதித்துறையை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது.

என்.ஐ.ஏ (NIA) ஒரு நேர்மையற்ற நிறுவனம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது!*
சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்தா மற்றும் மற்ற மூன்று நபர்கள் விடுதலை என்ற NIA நீதிமன்ற தீர்ப்பு நீதித்துறையை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), அரசின் அழுத்தத்திற்கு உள்ளாகும் நேர்மையற்ற நிறுவனம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் குறிப்பிட்டுள்ளார்.
12 வருடங்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு என்பது இந்துத்துவ தீவிரவாத குழுக்களால் நடத்தப்பட்டு 68 அப்பாவி மக்களின் உயிரை பறித்த, இந்த தேசத்தின் மிக மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்றாகும்.
நீதிபதி முன்பு சுவாமி அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்த போதிலும், அவருக்கு தண்டனை பெற்றுத் தருவதிலிருந்து NIA தோல்வி அடைந்துள்ளது, இத்தகைய செயல்பாடுகள் புலனாய்வு நிறுவனத்தின் திறமை குறித்தும் நம்பகத் தன்மை குறித்தும் சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது. NIA நீதிமன்றம் இதற்கு முன்பு அஜ்மீர் ஷரீஃப், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் மாலேகான் போன்ற ஹிந்துத்துவ தீவிரவாத தாக்குதல் வழக்குகளிலும் இவரையும் மற்ற பலரையும் விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் பெயர்களை கொண்ட வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டுவதற்கு ஆர்வம் காட்டியது போல் எந்தவொரு ஹிந்துத்துவா தீவிரவாத வழக்குகளை சார்ந்த குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்களை திரட்ட NIA ஆர்வம் காட்டவில்லை.
நமது தேசத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மதத்திற்கு ஏற்றாற் போல் தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு வெவ்வேறு முறையில் அணுகப்படுகின்றது என்பதற்கு இந்த அனைத்து வழக்குகளும் உதாரணமாகும். குறிப்பிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களை தண்டிப்பதில் நமது நீதிமன்றங்கள் மிகவும் முனைப்புடன் செயல்படுகின்றது. கோத்ரா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட அதே நாளில் தான் குற்றம் சாட்டப்பட்டவர்களில் எந்த ஒரு நபருக்கும் தண்டனை வழங்கப்படாத சம்ஜவுத்தா தீர்ப்பு வெளி வந்துள்ளதை E.அபுபக்கர் நினைவு கூர்ந்துள்ளார்.
இத்தகைய இரட்டை நிலைக்கு குற்றஞ்சுமத்திய அரசின் மனோபாவம் காரணமாக வேறுபாடாக இருந்தபோதிலும், இது நமது தேசத்தின் நீதித்துறை நிர்வாகத்தின் மீது அவமதிப்பையே கொண்டுவரும். தேர்தல் போட்டியில் இருக்கும் பாஜக அல்லாத கட்சிகள் சம்ஜவுத்தா குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பை குறித்து தமது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று E.அபுபக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். NIAவின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ள இந்த சமீபத்திய தீர்ப்பின் வெளிச்சத்தில், காங்கிரஸ் மற்றும் மற்ற அரசியல் கட்சிகள் தாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் இத்தகைய புலனாய்வு அமைப்பை கலைப்பதற்கு தயாராக இருக்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
*இப்படிக்கு*
*டாக்டர். முஹம்மது ஷம்மூன்,*
*தலைவர், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு,*
*பாப்புலர் ஃப்ரண்ட், தலைமையகம், புது தில்லி.*

0 comments:

Post a Comment