Showing posts with label பலஸ்தீன். Show all posts
Showing posts with label பலஸ்தீன். Show all posts

Wednesday, August 8, 2012

மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி!


காஸ்ஸா:மஸ்ஜிதுல் அக்ஸா என்றழைக்கப்படும் பைத்துல் முகத்தஸை பாதுகாக்க கோரி காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ஃபலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் இப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
பைத்துல் முக்கத்தஸின் தற்போதைய முற்றத்தை பூந்தோட்டமாக மாற்ற யூத சியோனிச அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்த வீதிகளில் இறங்கினர். பல்வேறு மஸ்ஜிதுகளில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டம் ஜபலிய்யா சாலையில் நிரம்பி வழிந்தது.
யூதர்களின் சதித்திட்டத்திற்கு எதிராகவும், யூத தலைவர்களுக்கு எதிராகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க முஸ்லிம்களை ஊக்கப்படுத்தும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
யூதர்களின் சதித்திட்டங்கள் மற்றும் தாக்குதல்களில் இருந்து அக்ஸாவை பாதுகாக்க மக்கள் தயாராக உள்ளார்கள் என்பதை பேரணியில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் திரள் நிரூபிப்பதாக போராட்டத்திற்கு தலைமை தாங்கிய முஹம்மது அபூ அஸ்கர் தெரிவித்தார்.

Wednesday, August 1, 2012

உளநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் மீது மிருகத்தனமான தாக்குதல்!


அல் ஹலீல்: கடந்த திங்கட்கிழமை (30/07/2012) பெய்ட் உம்மார் கிராமத்தைச் சேர்ந்த உளநலம் பாதிக்கப் பட்ட பலஸ்தீன் இளைஞனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்புப் படை அவனை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளது.

முஹம்மத் அபூ தியா (வயது 23) உளநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. உளநலம் பாதிக்கப்பட்ட தமது மகன் கொடூரமாக அடித்து இம்சிக்கப்படுவது பொறுக்காமல் தடுக்க முனைந்த பெற்றோரையும் ஆக்கிரமிப்புப் படை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளது.

அபூ தியாவின் நிலைமை குறித்து விளக்கிப் புரியவைக்க முற்பட்ட பெற்றோரின் மன்றாட்டங்கள் எவற்றையுமே பொருட்படுத்தாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, மேற்படி இளைஞனைத் தடுப்பு முகாமுக்கு இழுத்துச் சென்றுள்ளது என பெய்ட் உம்மார் கிராமத்தின் தேசிய இணைப்பாளர் முஹம்மத் அவாத் குறிப்பிட்டுள்ளார். 

உளநலமற்ற ஒருவர் என்ற கருணைகூட இன்றி, அபூ தியாவையும் அவரது வயோதிகப் பெற்றோரையும் மிருகத்தனமாகத் தாக்கிவிட்டு, அவ் இளைஞனைத் தடுப்புமுகாமுக்கு எடுத்துச் சென்றுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரின் செயல் சகலவித மனிதப் பண்புகளுக்கும் அப்பாற்பட்டது என உள்ளூர் மக்கள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.