Tuesday, November 1, 2011

வெறும் 5 நிமிடம் ஒதுக்கி இதை பாருங்களேன்!



நமது இந்திய தேசத்தில் இன்றைய நிலை


மும்பையில் இந்த இடத்தில் மாதம் 200 ரூபாய் வாடகையில் வீடு கிடைக்கும் - தாராவி



மும்பையின் மொத்த ஜனத்தொகையில் 55% இது போன்ற இடத்தில்தான் வாழ்கிறார்கள் 


இதே மும்பையில் 5000 கோடி ரூபாயில் 1 வீடு – ஆண்டில்லா. அம்பானியின் வீடு...


இந்திய ஜனத்தொகை120 கோடி.. இவர்களில் பணமாக ரூ.10 லட்சம் வைத்திருப்பவர்கள் வெறும் 153,000 நபர்கள் தான் (0.013%)... பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு ஒரு உதாரணம்



விலை வாசி ஏற்றம் – விளிபிதுங்கும் நடுதர மக்கள்
81 நாடுகளில் பசியால் வாடுபவர்களது கணக்கெடுப்பு


இந்தியா 67ஆவது இடத்தில் உள்ளது
சூடான், சிறிலங்கா, வியட்நாம் போன்ற நாடுகளை விட பின்தங்கிய நிலை
 
தலீத்களை விட பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் – நீதிபதி ராஜேந்திர சச்சார்
சங்க பரிவாரங்களால் முஸ்லிம்கள் தொடர் அச்சுறுத்தப்படுதல் – வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்...




துப்பாக்கி சுடும் பயிற்சி – இந்த சப்தங்கள் அரசின் காதினுள் நுழைவதில்லை



முஸ்லிம்களுக்கெதிரான மிரட்டல்கள்....

300 மசூதிகளை இடிக்க வேண்டும்... இந்தியாவை ஹிந்து ராஷ்ரா என்று அறிவிக்க வேண்டும்.... – சுப்ரமணிய சுவாமி


இரட்டை நீதி

மாலேகானில் குண்டு வைத்த குற்றவாளிகளுக்கு உதவிய சிவநாரணயன் கல்சங்கரா, ஷியாம் சாகுவிற்கு பெயில்

அநீதியாக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் 3 வருடங்களாக இன்னும் சிறையில் வாட்டம்



கேள்விகணக்கில்லாத போலி என்கவுண்டர்கள் – செய்வதறியாத  முஸ்லிம்கள் 


குண்டு வெடிப்பில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியான உதவி செய்த ஃபைஸ் உஸ்மானி காவல் நிலையத்தியத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை



முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் இஸ்லாத்தினை தீவிரவாதமாகவும் சித்தரித்தல்




நாட்டை ஆண்ட சமூகம்....


100 ஆண்டுகளில் வாழ வழியில்லாத சமூகமானது....!


நாட்டில் புரையோடி கிடக்கும் ஊழல்

தலீத்களின் கண்ணியம் மற்றும் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை



தேவை ஒரு வீரியமிக்க போராட்டம் – களம் இறங்குகிறது
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


தென் மாநிலங்களில் கடை கோடி கிராமத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் சேவை 


தற்போது வடஇந்தியாவை நோக்கி.... 18 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்டின் மக்கள் சேவகர்கள்...!


வடஇந்தியாவில் பேராதரவுடன் பாப்புலர் ஃப்ரண்ட்



சமூக நீதியினை மீட்டெக்க... வாருங்கள் டெல்லியை நோக்கி !

தேசத்தை நீதியால் கட்டமைப்போம்.... பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சமூக நீதி மாநாடு நவ. 26, 27 – ராம் லீலா மைதான், டெல்லி முதல் நாள் – நவ.26 – தேசிய கருத்தரங்கம் ஒன்றினைவோம் சக்திபெறுவோம் நீதிக்கான உரிமை இரண்டாம் நாள் – நவ.27 – மாபெரும் மாநாடு

தலித்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பகையை மூட்ட நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்!

பல்வேறு சமூக, கலாச்சார, மத கோட்பாடுகளை பின்பற்றக்கூடிய மக்கள் இந்தியாவில் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற முழக்கம் சிறு வயது முதலே பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வாக்கியமோ வெறும் மேடை பேச்சுக்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்தியாவில் மத மோதல்கள் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. இதற்கெல்லாம் முக்கிய  காரணம் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவ வெறி பிடித்த தீவிரவாதிகள் தான் என்றால் அது மிகையாகாது.




மதக்கலவரம், குண்டுவெடிப்புகள், சிறுபான்மை மக்களின் படுகொலைகள், இந்திய வளங்களை சுரண்டக்கூடிய ஊழல்கள் இப்படி எதை எடுத்தாலும் இந்த அயோக்கிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் பங்கு அதிகம் என்பது ஆராய்ந்து உணரக்கூடிய மக்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள். தாங்கள் எந்த மதத்தினருக்கும் குறிப்பாக சிறுபான்மை மதமாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்று கூறுவார்கள். ஆனால் அவர்களுடைய இணையதளங்களுக்குள் சென்று பார்வையிட்டாலோ, அல்லது அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குச்சென்று பார்வையிட்டாலே சிறுபான்மை சமூகத்தின் மீது அவதூறையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் அடுக்கிக்கொண்டே செல்வார்கள்.

இந்த நாட்டிலே அமைதி சீர்குலைந்ததற்கு காரணமே ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கமும் அதோடு தொடர்புடைய மற்ற இயக்கங்களும் தான். வட இந்தியாவைக் காட்டிலும் தென் இந்தியாவில் தங்களது முகவரியை துளைத்துவிட்ட இந்த பரதேசிகள் எப்படியாயினும் தென்மாநிலங்களை வட மாநிலங்களைப் போல் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடவேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டுவருகிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களாக இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தினருக்கும் தலித் சமூகத்தினருக்குமிடையே பகையை மூட்டும் வேலையில் தற்போது இறங்கியுள்ளனர் இந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள். பார்பன வெறிபிடித்தவளான ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைந்தது இந்த பரதேசிகளுக்கு ஒரு புது தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது போலும்.

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பல வார்டுகளை ஒன்றினைத்தும் பல வார்டுகளை பிரித்தும் புதிய வார்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் திட்டமிட்டே முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் வார்டுகளை பிரித்து எந்தப்பகுதியிலும் முஸ்லிம்கள் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்ற நிலை கோவை மாவட்டத்தில் குறிச்சி மற்றும் குஞ்சாமுத்தூர் ஆகிய பகுதிகளில் அதிக முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்தந்த வார்டுகள தனித்தனியாக பிரிக்கப்பட்டு மற்ற வார்டுகளோடு இணைக்கப்பட்டது. அத்தோடு மட்டுமல்லாமல் அந்தந்த வார்டுகளை தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்காக ரிசர்வ் செய்யப்பட்ட வார்டாக அறிவிக்கப்பட்டது. 20,000 வாக்காளர்களை கொண்ட அந்த வார்டில் 90%  முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஆனால் அது தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்காக ரிசர்வ் செய்யப்பட்டதை கண்டித்து அந்த வார்டு மக்கள் தேர்தலை புரக்கணிக்கப்போவதாக அறிவித்தார்கள்.

ஆனால் தலித் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பது போன்ற செய்தியை கேடுகெட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் தங்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்களும் தலித்களும் ஒன்றினைந்து கூட்டணியாக செயல்பட்டனர். இதை சீர்குழைக்கும் விதமாக தவறான செய்திகளை பரப்பும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அனைத்து சமுதாய மக்களும் ஒன்றினைந்து போராட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் ஒழிந்தால் தீவிரவாதம் ஒழியும்!
தீவிரவாதம் ஒழிய ஆர்.எஸ்.எஸ் ஒழிக்கப்படவேண்டும்!

ஜெய்ஹிந்த்!

பரத்பூர் துப்பாக்கிச்சூடு:முஸ்லிம்கள் நீதி தேடி டெல்லியில் போராட்டம்



1-16
புதுடெல்லி:குஜ்ஜார்களுடனான மோதலின் பெயரால் போலீஸாரால் 10 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பரதபூரில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்கான இறுதிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களது போராட்டத்தை டெல்லிக்கு மாற்றியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக வருகிற செவ்வாய்க்கிழமை(1/11/2011) ராஜ்காட்டிலிருந்து பேரணி நடத்தப்படும். இச்சம்பவத்திற்கு காரணமான ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்திதரிவாலை மாற்றும் வரை போலீஸாரால் கொலைக்களமான மஸ்ஜிதை சுத்தப்படுத்தவோ,தொழுகை நிறைவேற்றவோ செய்யமாட்டோம் என முஸ்லிம்கள் அறிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோபால்கரில் அடக்கஸ்தலம்(கப்றுஸ்தான்) தொடர்பான தகராறில் போலீசார் மஸ்ஜிதிற்குள் நுழைந்து முஸ்லிம்களை சுட்டுக்கொன்றனர். அத்துடன் திருக்குர்ஆனை அவமதித்துள்ளனர். கொலைச்செய்யப்பட்டவர்களின் இரத்தம் மஸ்ஜிதில் தற்பொழுதும் கெட்டிக்கிடக்கிறது. நீதிக்குவேண்டி போராடுவதற்காக கோபால்கர் முஸ்லிம்கள் நேற்று முன்தினம் ஆக்‌ஷன் கமிட்டியை உருவாக்கினர். டாக்டர்.மஹ்மூத் கான் கமிட்டியின் தலைவராக தேர்வுச்செய்யப்பட்டார்.
10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காணாமல் போன இரண்டு முஸ்லிம்களை கண்டுபிடித்தல், கப்றுஸ்தான் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைத்தல், போதுமான இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் அடங்கியுள்ளன. சாந்தி தரிவாலையும், முதல்வர் அசோக் கெலாட்டையும் நீக்கக்கோரி ராஜஸ்தான் மாநில ஆளுநர் சிவராஜ் பாட்டீலுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
thanks
www.thoothuonline.com

அலிகர் பல்கலை கழக சென்டருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனா


17335-city-imageமும்பை:மஹராஷ்ட்ரா மாநிலத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக சென்டர் நிறுவுவதை எதிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாய நிலம் என்ற பெயரால் சென்டருக்கு நிலம் அனுமதிப்பதை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராமவாசிகள் இதனை எதிர்த்தபொழுதிலும் அவர்களை தூண்டிவிட்டு பின்னணியில் செயல்படுவது சிவசேனா என கூறப்படுகிறது. வடக்கு மஹராஷ்ட்ராவில் மலேகானில் முதன் முதலாக அலிகர் முஸ்லிம் பல்கலை கழக சென்டர் நிறுவ நிலம் தெரிவுச்செய்யப்பட்டது.
அங்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து ஒளரங்காபாத்தில் குல்தாபாதில் நிலம் தெரிவுச்செய்யப்பட்டபோதிலும் அங்கும் எதிர்ப்பு கிளம்பும் என கருதப்படுகிறது.
மலேகானில் கஜவாரே கிராமத்தில் உள்ள நாம்பூரியில் அலிகர் பல்கலைக்கழக கேம்பஸிற்கு நிலம் தெரிவுச்செய்யப்பட்டது. ஆனால் அந்நிலம் விவசாய நிலம் எனவும் அங்கே கட்டிடம் கட்ட அனுமதிக்கமாட்டோம் எனவும் கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.நாஸிக் மாவட்டத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் வெல்ராசு, தொகுதி எம்.பியும் பூஜ்பாலின் உறவினருமான ஸமீர் பூஜ்பால், மாநில சிறுபான்மை கமிஷன் செயலாளர் ஸெய்யத் ஹாஷ்மி ஆகியோருடன் தெரிவுச்செய்த நிலத்தை பார்வையிட வந்த அலிகர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அப்துல் அஸீஸை கிராமவாசிகள் தடுத்ததோடு அவரையும், பல்கலைக்கழக பிரதிநிதிகளையும் நிலத்தை பார்வையிட அனுமதிக்கவில்லை.
இதனால் அவர்கள் திரும்பிச்செல்ல நேர்ந்தது.முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் மோஸம் நதியின் இருபகுதியிலும் முஸ்லிம்களும், ஹிந்துக்களும் வசிக்கின்றனர்.முஸ்லிம்கள் நெசவுத்தொழிலை புரிந்துவருகின்றனர்.
அவர்களுகு நெசவுத்தொழிலுக்கு தேவையான பொருட்களையும், நெசவுச்செய்த ஆடைகளையும் வாங்குவது எதிர் புறம் வசிக்கும் ஹிந்துக்கள் ஆவர். ஹிந்து சமூகம் வசிக்கும் பகுதியில்தான் அலிகர் பல்கலைக்கழக சென்டருக்கு தேர்வுச்செய்யப்பட்ட நிலம் அமைந்துள்ளது.
இப்பகுதி சிவசேனா தலைவரும், அப்பகுதி எம்.எல்.ஏயுமான பாபு பூஸேவின் ஊராகும். கிராமவாசிகளின் எதிர்ப்பின் பின்னணியில் சிவசேனா செயல்படுவதாக மலேகான் முஸ்லிம்கள் கருதுகின்றனர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வாய்ப்பு பட்டியலில் மற்றொரு பகுதியான ஒளரங்காபாத்தில் குல்தாபாத்தை துணைவேந்தரின் தலைமையில் பிரதிநிதிக்குழு பார்வையிட்டது.அங்கேயும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சிந்தனை செய்ய முடியதா தியாகம் .

தமக்கு தேவை இருந்தபோதும் பிறரின் பசி தீர்த்த நபி தோழர் 


தமக்கு தேவை இருந்தபோதும் பிறரின் பசி தீர்த்த கருணையாளர்கள்!

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.".. அல்லது 'இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.".. என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)" என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து" என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், 'உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு" என்று கூறினார். அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும் , தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்" என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.

ஆதாரம் புஹாரி எண் 3798

இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விருந்தாளியை அழைத்துச்சென்ற அன்சாரித்தோழரின் வறுமை நிலை பாரீர். அவரது வீட்டில் குழந்தைகளுக்கான உணவு மட்டுமே உள்ளது. அன்சாரி தோழருக்கும் அவரது மனைவிக்கும் கூட அங்கே உணவில்லை. இந்த நிலையிலும், தனது குழந்தைகளை தூங்கவைத்து விட்டு குழந்தைகளின் உணவை அந்த விருந்தினருக்கு வழங்கி தனது வள்ளல் தன்மையை காட்டிய அந்த அன்சாரித்தோழர் அவர்களின் வாழ்க்கையே தியாகமாக இருந்தது. அதனால் அல்லாஹ் ஒரு வசனத்தையே இறக்கி இந்த தோழரின் ஈகை குணத்தை கண்ணியப்படுத்தி, இத்தகைய குணமுடையவரே வெற்றியாளர்கள் என்று தன் அருள்மறையில் கூறும் அளவுக்கு அன்சாரித்தோழரின் வாழ்க்கை அமைந்ததை பார்த்து உள்ளபடியே இத்தகைய நற்குணத்தை நாமும் பெறவேண்டும் என்ற சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். ஆனால் இன்று நடப்பதென்ன? நமது வீட்டிற்கு நமது உறவினர்கள் யாரேனும் வந்துவிட்டால் அவனை பார்த்த மாத்திரமே 'வந்துட்டான்யா வந்துட்டான்யா' என்று மனதில் கருவும் எத்துணையோ பேரை பார்க்கிறோம். வந்த விருந்தாளியை வேண்டா வெறுப்பாக கவனிப்பதையும் 'எப்படா எடத்த காலி பன்னுவான்' என்று நினைப்பவர்களையும் பார்க்கிறோம். கணவனின் உறவினர்கள் வந்துவிட்டால் மனைவிக்கு எரிகிறது. மனைவியின் உறவினர்கள் வந்துவிட்டால் கணவனுக்குஎரிகிறது. இவ்வாறான மன நிலையுள்ளவர்கள் இன்றைய நவீன உலகில் இருக்க, அன்றோ யார் என்றே தெரியாத ஒருவருக்கு விருந்தளித்து கண்ணியப்படுத்திய அன்சாரித்தோழரின் வாழ்வில் நமக்கு மிகப்பெரிய படிப்பினை உள்ளது.

ஜசகல்லாஹ் கைர் முகவை எஸ்.அப்பாஸ்