Friday, December 28, 2012

அதிரையில் பெரும் உயிர் இழப்பை தடுத்த இளைஞர்கள்! (புகைபடங்கள்)

நேற்று மாலை 6 மணி அளவில் நமதூர் CMP லைன் கல்லுகொள்ளை VKM ஸ்டோர் எதிரே உள்ள மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்துவிழுந்தது. இதை பார்த்த இளைஞர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அந்த வழியாக செல்ல கூடிய வாகனங்கள் மற்றும் பொதுமக்களை தடுத்து மாற்று வழியில் அனுப்பினர். பிறகு மின்சா(வு)ர வாரியத்திற்கு தகவல் தெருவிக்கப்பட்டது. இதன் பின்னர் விரைந்து வந்த மின் ஊழியர்கள் அறுந்த மின் கம்பியை சரிசெய்தனர். இறைவனின் அருளால் இளைஞர்கள் செய்த இந்த சேவையை நாம் பாராட்டியே ஆகவேண்டும். இதுபோல் பல சமூதாய பணிகள் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்.
 மின் கம்பியை சரி செய்யும் ஊழியர்கள்

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இந்த ஒரு நல்ல காரியத்தை செய்த அப்பகுதி இளைஞர்களை நான் மன சந்தோஷத்தோடு பாராட்டுகிறேன். மேலும் அப்பகுதியில் அனைத்து மின் கம்பிகளும் பழையன, எனவே மீண்டும் மின் ஊழியர்களை அழைத்து ஒரு தடவை பரிசோதித்தால் இன்னும் ஏதாவது இருப்பின் சரிசெய்து விடலாமே. இது வருமுன் காப்போம் என்ற சேவையாச்சே.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

    ReplyDelete
  2. இறைவனின் அருளால் இளைஞர்கள் செய்த இந்த சேவையை நாம் பாராட்டியே ஆகவேண்டும். இதுபோல் பல சமூதாய பணிகள் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்!

    ReplyDelete