Saturday, December 29, 2012

குஜராத் : ஓட்டுப்பதிவின்போது "துப்பாக்கிச்சூடு" நடத்தி வெற்றி பெற்ற "பாஜக. எம்.எல்.ஏ" கைது!

   DEC29, குஜராத்தில் தேர்தல் நாளன்று 8 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி, வன்முறையால் மக்களை அச்சுறுத்தி, வெற்றி பெற்ற "சஹேரா" தொகுதி எம்.எல்.ஏ. "ஜெட்டாபாய் பர்வாட்" நேற்று (28/12) கைது செய்யப்பட்டார்.

     குஜராத் "தேர்தல் வன்முறை வெறியாட்டங்கள்" குறித்து எந்த மீடியாவும் வாய் திறக்காத நிலையில், இதுபோன்ற பிரச்சினைகள் தற்போது வெளிவரத்துவங்கியுள்ளது.

     தேர்தல் நாளன்று துப்பாக்கிச்சூடு நடத்தி, வன்முறையில் ஈடுபட்டு வெற்றி பெற்ற ஜெட்டாபாய், அன்றே தலைமறைவாகி விட்டார்.

     தலைமறைவு குற்றவாளியான "நரேந்திரமோடி"யின் நண்பர் ஜெட்டா பாயின் "முன்ஜாமீன்" மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, நேற்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. "ஜெட்டாபாய் பர்வாட்" கைது செய்யப்பட்டார்.
 
     கைது செய்யப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

     "சஹேரா" தொகுதி வன்முறை தொடர்பான இந்த வழக்கில், எம்.எல்.ஏ.உடன் மேலும் 9 குண்டர்கள் தேடப்பட்டு வருகிறார்கள், என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment