Thursday, December 27, 2012

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!

 makka masjid blast   27 Dec 2012
 
     புதுடெல்லி:2007-ஆம் ஆண்டு ஒன்பது பேர் பலியான மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்தவர்களில் ஒருவரான தேஜ்ராம் பர்மர் என்பவனை மத்திய பிரதேச மாநிலம் தீபால்பூரில் இருந்து என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பர்மர், ஹைதராபாத்தில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
 
     அண்மையில் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான ராஜேந்தர் சவுத்ரி மற்றும் டான்சிங் ஆகியோரின் நெருங்கிய தோழர் தாம் பர்மர். ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களான இவர்கள், கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் தலைமையில் நாச வேலைகளில் ஈடுபட்டவர்கள் ஆவர். இவர்களில் சவுத்ரியும், பர்மரும் ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவர்கள் ஆவர். நன்றி, தூது

0 comments:

Post a Comment