Sunday, December 23, 2012

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி!

 karunidhi statement   23 Dec 2012
 
     சென்னை:மதவாதம் தெளிவாக தெரிந்த காரணத்தினால் தான் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் தி.மு.க செயல்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பது:
 
     சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுக்கத்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறினோம்.
 
     அதற்கு 1999 மற்றும் 2004 வரை பாஜகவின் கூட்டணியில் இருந்த போது, பாஜகவின் மதவாதம் கருணாநிதிக்கு தெரியவில்லையா என்று கேள்வி கேட்கின்றனர். குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கிய பிறகே, பாஜக கூட்டணியில் பங்கேற்கும் முடிவினை அப்போது எடுத்தோம்.
 
     ஆனால் அந்தச் செயல்திட்டத்தில் இருந்து, பாஜக சற்று விலக முற்பட்டு, அதன் அசல் நிறத்தை வெளிக்காட்டிக் கொண்ட பிறகுதான் கூட்டணியிலிருந்து விலகினோம். இப்போது பாஜகவின் மதவாதம் தெளிவாகத் தெரிந்த காரணத்தினால் தான் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் திமுக செயல்படுகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளர். நன்றி, தூது

0 comments:

Post a Comment