Monday, December 31, 2012

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மாவட்ட மாநாடுகள் நடத்தப்படும் எஸ்.டி.பி.ஐ தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அறிவிப்பு

dhehlan imam 1     நேற்று (25.12.2012) நெல்லையில் நடை பெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு எஸ்.டி.பி.ஐ ( சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா)கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்தாவது:
 
    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட மாநாடுகளை நடத்த உள்ளோம். இந்த மாநாடுகளில் லஞ்சம் ஊழல் கட்டுப்படுத்தப்பட வேண்டும்,பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு தமிழகத்தில் 7சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் ஆகியன முக்கிய கோரிக்கையாக இருக்கும்.முதல் மாவட்ட மாநாடு வருகின்ற ஜனவரி 20 அன்று நேற்று (25.12.2012) நெல்லையில் நடை பெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு எஸ்.டி.பி.ஐ ( சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா)கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்தாவது:
 
    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட மாநாடுகளை நடத்த உள்ளோம். இந்த மாநாடுகளில் லஞ்சம் ஊழல் கட்டுப்படுத்தப்பட வேண்டும்,பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு தமிழகத்தில் 7சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் ஆகியன முக்கிய கோரிக்கையாக இருக்கும்.முதல் மாவட்ட மாநாடு வருகின்ற ஜனவரி 20 அன்று திருநெல்வேலியில் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவது வேதனைக்குரியது.இந்நிலைக்கு காரணமான கருதப்படுகின்ற நீரினை தரமறுத்த கர்நாடகா அரசை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.தமிழக அரசு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் விவசாயிகள் இது போன்ற பிரச்சினைகளுக்காக தற்கொலை என்ற தவாறான முடிவை எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    சமீபகாலமாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது.டெல்லியில் மருத்துவகல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு இலக்காகியிருக்கிறார்.அதைவிட கொடுமை தூத்துக்குடி மாவட்ட சிறுமி புனிதா பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.எனவே பாலியல் குற்றங்களுக்கு உச்சபட்ச தண்டனைதரும் வகையில் சட்டங்களை மத்திய,மாநில அரசுகள் இயற்ற வேண்டும்.அனைத்து குற்றங்களுக்கும் காரணம் மதுவாக இருக்கிறது.எனவே தமிழகத்தில் மதுவினை தடை செய்வதும்,பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதும் ஒன்றே தீர்வாகும்.

    மேலும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இலங்கை ராணுவத்தினரையும், காரணமான இலங்கை அரசையும்,தடுக்க தவறிய மத்திய அரசையும் எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment