Monday, December 31, 2012

சிறை நிரப்பும் போராட்டம் : TNTJவின் மூடநம்பிக்கையை தகர்க்க ஜெயலலிதா திட்டம்!

   DEC29, மக்களின் மூடநம்பிக்கைகளை போக்க பிரச்சாரம் செய்த TNTJவினர் மீது தடியடி நடத்தியும், விழிப்படையாத TNTJவினர் "சிறை நிரப்பும் போராட்டம்" மூலம் தீர்வு காணமுடியும் என்ற, அவர்களது "மூடநம்பிக்கை"யை முறியடிக்கும் வகையில், முதல்வரின் நடவடிக்கை இருக்கும், என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     கைது செய்யப்பட்டவர்களின் மீதான வழக்குகளையே வாபஸ் வாங்காத அரசு, உயரதிகாரிகளை இடைநீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை எப்படி ஏற்கும்? எனவும் கேட்கின்றனர்.

    ஆளும் அதிமுக அரசு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் மனநிலையில் இல்லை என்பதையும் கடந்து, அவர்களுக்கு "பதவி உயர்வு" வழங்கலாமா? எனவும் யோசித்து வருவதாகவும் தெரிகிறது.

    TNTJ அமைப்பினர், அனைத்து அமைப்புக்களோடும் ஒன்றுபட்டு செயல்பட்டால், நிலைமையே வேறாக இருக்கும், எனவும் விவரமறிந்தவர்கள் விவரிக்கின்றனர்.

    சம்மந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

1 comment: