Thursday, December 27, 2012

ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க "கமாண்டர்" தற்கொலை!

    DEC27, ஆப்கானில் செயல்பட்டுவரும் 9 அமெரிக்க கமாண்டர்களில் முக்கியமானவன், ஜான் டபுள்யூ பிரைஸ் (42), பாகிஸ்தானுக்கு சென்று "ஒசாமா"வை சுட்டுக்கொன்ற குழுவுக்கு தலைமை வகித்த இவன், நேற்றுமுன்தினம் "கிறிஸ்மஸ்" அன்று தற்கொலை செய்துக்கொண்டான்.

    ஆப்கான் நாட்டில் அமெரிக்கப்படைகள், 9 குழுக்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

     அதில் முக்கியமான 4வது செல்லின் கமாண்டர் ஜான் டபுள்யூ பிரைஸ். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இருப்பதை உறுதி செய்தவனும், தாக்குதலுக்கு நேரடியாக தலைமையேற்றவனும் இவன் தான்.

     கடந்த 23 வருடங்களாக அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவன், நேற்று முன்தினம், ஆப்கானில் அவனது குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு "தற்கொலை" செய்து கொண்டான்.
 
     அவனுக்கு ஸ்டைபன் என்ற மனைவியும் ஜேலியான் என்ற 9 வயது பெண் குழந்தையும் உள்ளது.
 
     சொந்த ஊர், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் போயிஸ் டவுன்.

0 comments:

Post a Comment