Wednesday, December 26, 2012

செய்துங்கநல்லூர் அருகே சிறுமி புனிதா மானபங்கம்- பொதுமக்களோடு களத்தில் இறங்கி போராடிய எஸ் டி பி ஐ

                                
                                                     தினகரன் வந்த செய்தி

     தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்த கிளாக்குளம் கிராமத்தைச்சேர்ந்தவர் சவுந்தரராஜன். அவருடைய மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் மூத்த மகள் புனிதா ( வயது 13). நாசரேத்தில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்தில் 7ம் வகுப்பு படித்து வந்தாள். கணவர் சவுந்தரராஜன் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே, மகள்களுடன் உள்ளூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார் இசக்கியம்மாள்.இவர் அந்த பகுதியில் மிகவும் குறைந்த ஊதியத்தில் சத்துணவு தற்காலிக ஊழியராக பணி புரிந்து வருகிறார் இங்கு உள்ள தாத்தா வீட்டில் இருந்து ரயில் மூலம் நாசரேத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தாள் புனிதா. கிளாக்குளத்தில் இருந்து தாதன் குளத்தில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு அரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த வழி காட்டுப்பாதை அதனால் மாணவிகள் குழுவாக சேர்ந்துதான் ரயில் நிலையத்திற்கு செல்வார்கள்.ஆனால் சம்பவம் நடத்த அன்று அரையாண்டு தேர்வு நடந்து வருவதால் காலை 7 மணி அளவில் புனிதா தனியாக புறப்பட்டு சென்றாள். காட்டுப்பாதையில் ரயில் நிலையத்தை நோக்கி சென்றாள். சென்றவள் மாலையில் வீடு திரும்பவில்லை இந்த நிலையில் புனிதாவை தேடி செய்துங்கநல்லூநல்லூர் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்.
                                         
 
                           
     SDPI யினர் பொது மக்களோடு இணைந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொழுது
 
     இந்த நிலையில் காட்டு பகுதியில் மிகவும் மோசமான நிலையில் மானபங்கபடுத்தப்பட்ட நிலையில் பிணமாக புனிதா கிடந்தார் இந்த நிலையில் காவல்துறை அந்த பகுதிக்கு உடனே வந்து புனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.உடனே கொலை செய்யப்பட்ட புனிதாவின் குடுமபத்தினரை SDPI மாவட்ட பொது செயலாளர் பாசில்சமீர் ,மாவட்ட செயலாளர் காதர்,நகர செயலாளர் முத்து வாப்பா ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஸ்மான் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் சென்று ஆறுதல் கூறினர்.அதே நேரத்தில் கொலையாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏற்படவே எஸ்.டி.பி.ஐ பொது மக்களுடன் இணைந்து கிளாக்குளத்தில் இருந்து கருங்குளம் நோக்கி சுமார் 6 கிலோமீட்டர் வரை கண்டன பேரணி நடத்தினர்.பின்னர் SDPI மற்றும் பொதுமக்களும் இணைந்து கொலையாளிகளை பிடிக்க வலியுறுத்தியும் மற்றும் பொதுமக்களின் 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கருங்குளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட பட்டனர் .
                                   
                                      
                                     காவல்துறையுடன் SDPI பேச்சுவார்த்தை நடத்திய பொழுது
 
     அங்கு வந்த காவல்துறை மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தியது அப்பொழுது காவல்துறையினர் கொலையாளியை பிடித்து விட்டதாக கூறினார் அப்பொழுது மக்கள் கொலையாளியை கண்ணால் காணமல் நாங்கள் போகமாட்டோம் என பொது மக்கள் உறுதியாக கூறினர் இந்த நிலையில் காவல்துறை அதிகாரி ADSP கண்ணன் உங்களில் 20 பேர் மட்டும் எங்களுடன் வாருங்கள் கொலையாளியை காண்பிக்கிறோம் எனக்கூறினார் அப்பொழுது SDPI நிர்வாகிகள் பொதுமக்களோடு இணைந்து கொலையாளியை சிறைசாலையில் சென்று கணடனர்.கண்ட பின்னர் மக்களோடு கூறி போராட்டத்தை வாபஸ் பெற்றனர் பின்னர் அங்கு வந்த தாசிதாரிடம் பொது மக்கள் இனி இதே போல் சம்பவம் நடக்காமல் இருக்க எங்கள் முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரினர்.

கோரிக்கைகள் :

     1.உயிரிழந்த புனிதாவின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் 10 லட்சம் கொடுக்க வேண்டும் இதற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும்
     2.புனிதாவின் தாயார் மிகவும் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருகிறார் அதனால் அவருடைய பணியை உயர்த்த வேண்டும்
    3.இந்த பகுதியில் அதிக மின் விளக்கு அமைத்து தர வேண்டும்
  4.பேருந்து மற்றும் சாலை வசதி இல்லாமல் இந்த மாணவி காட்டு வழியே நடத்து சென்றுள்ளார் அதனால் இந்த பகுதியில் மேலும் வேறு சம்பவம் நடவாமல் இருக்க சாலி வசதி மற்றும் பேருந்து வசதி செய்து தர வேண்டும்
   5.சமுக விரோதிகள் குடியேறும் இடமாக மாறுவதால் இங்கு காவல்துறை பாதுகாப்பை அதிகபடுத்த வேண்டும்
     6.இனி இதே போல் பாலியல் சம்பவம் நடவாமல் இருக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்
தாசில்தாரிடம் மக்கள் கொடுத்த கோரிக்கை






SDPI மாவட்ட பொது செயலாளர் பாசில் சமீர் பேட்டி கொடுத்த பொழுது








 




0 comments:

Post a Comment