Wednesday, December 19, 2012

மின்வெட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க ஆர்ப்பாட்டம்!

 power-cut   19 Dec 2012

      சென்னை: தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறின.
 
    சென்னையில் நடந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதி பேசுகையில், ’வரலாறு காணாத மின்வெட்டு இது, இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, சென்னை உயர்நீதிமன்றம் வரை பிரச்சினை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது நீதிபதிகளே நிலையைக் கண்காணிக்கப்போவதாகக் கூறியிருக்கின்றனர்”, என்றார்.
 
    மேலும், ’நிலையை சீர்செய்வதற்கு பதிலாக எதிர்க்கட்சியினர் மீது பொய்வழக்கு போடுகிறது அரசு, பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற நிலைமைக்கு எங்களையெல்லாம் ஆளாக்காதீர்கள்’ எனவும் அவர் எச்சரித்தார். காஞ்சீபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். நன்றி, தூது

0 comments:

Post a Comment