Wednesday, June 5, 2013

ஈராக்-ஆப்கானில் சித்திரவதைகள் குறித்து விசாரணை நடத்த பிரிட்டனுக்கு ஐ.நா வலியுறுத்தல்!

2 Jun 2013
 
     ஜெனீவா:ஈராக் மற்றும் ஆப்கானில் ராணுவம் நடத்திய சித்திரவதைகள் குறித்த விசாரணையை துரிதப்படுத்துமாறும், குற்றவாளிகளை தண்டிக்குமாறும் பிரிட்டனை ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்புக் காலக்கட்டத்தில் பிரிட்டீஷ் ராணுவம் நடத்திய சித்திரவதைகள் குறித்த விசாரணைகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
 
     இதுவரை யாரையும் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவோ, தண்டிக்கவோ செய்யவில்லை என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஏஜன்சி சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணைகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரவேண்டும், ஈராக்கிலும், ஆப்கானிலும் ராணுவ தலையீட்டின் போது சாதாரண மக்களை சித்திரவதைச் செய்தது கவலையை ஏற்படுத்துகிறது என்று ஐ.நா ஏஜன்சியின் 10 நிபுணர்கள் அடங்கிய குழு கூறியுள்ளது.
 
     பிரிட்டீஷ் சட்டத்தின் சிக்கல் மிகுந்த சட்டங்களே, இத்தகைய விசாரணைகளை தாமதப்படுத்த காரணம் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினரான அலஸியோ ப்ரூணி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பிரிட்டீஷ் ராணுவம் நடத்திய கொடுமைகள் குறித்து சர் பீட்டர் கிப்ஸனின் புலனாய்வு அறிக்கை ஓரளவு வெளியே வந்தது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார்.

சிரியா அகதிகளின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது!

                             2 Jun 2013 syrian-refugee-camp
 
     ஐ.நா:உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள சிரியாவில் புலன்பெயர்ந்து அயல்நாடுகளில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளதாகஐ.நா தெரிவித்துள்ளது.
 
     துருக்கி, லெபனான், ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையே இதுவாகும்.முகாம்களில் பெயரை பதிவுச் செய்யாதவர்கள் லட்சத்திக்கும் அதிகமானோர் உள்ளனர் என கருதப்படுகிறது. அகதிகள் முகாம்களில் சிரியா மக்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது என்று ஐ.நா அகதிகள் ஏஜன்சியின் செய்தி தொடர்பாளர் டான் மக் நோர்டன் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். டயோரியா, தொற்றுநோய்கள், காய்ச்சல், காதுகளில் தொற்று போன்றவை முகாம்களில் பரவியுள்ளன. கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும்அதிகமானோர் சிரியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு புலன் பெயர்ந்துள்ளனர்

ரெட்க்ராஸ் அலுவலகம் மீதான தாக்குதலில் எங்களுக்கு பங்கில்லை – தாலிபான் மறுப்பு!

                          photo_1369976291051_5_0-18qhbpq
 
     காபூல்:கிழக்கு ஆப்கானில் உள்ள ரெட்க்ராஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் தங்களுக்கு பங்கில்லை என்று தாலிபான் போராளிகள்அறிவித்துள்ளனர்.ரெட்க்ராஸ் நடத்தும் போலியோ மருந்து விநியோகத்தை தாங்கள் முற்றிலும் ஆதரிப்பதாகவும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரெட்க்ராஸ் ஆர்வலர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தாலிபானின் செய்தி தொடர்பாளர் காரி யூசுஃப் அஹ்மதி தெரிவித்துள்ளார்.சுதந்திரமாக இயங்கும் எந்த அமைப்பையும் தாங்கள் தாக்கமாட்டோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே அரசு ஆதரவுப் பெற்ற ஆயுதக்குழுவுடன் நடந்த மோதலில் 38 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆறுமணிநேரம் மோதல் நீடித்ததாக போலீஸ் கமாண்டர் லுத்ஃபுல்லாஹ் கம்ரான் கூறுகிறார்.

சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டிற்காக 5 பல்கலைக்கழகங்கள்!-மத்தியஅமைச்சர் ரஹ்மான் கான்!

                           4 Jun 2013 aa2fbd84185ad6eb07860def6175-grande
 
    புதுடெல்லி:சிறுபான்மையினர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறைஅமைச்சர் கே.ரஹ்மான் கான் கூறியுள்ளார்.
 
     இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்களை தொடங்குவது என முடிவு செய்துள்ளோம். இப்பல்கலைக்கழகங்கள் அமையவுள்ள இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். சிறுபான்மை மதத்தினருக்கு கல்வி அளிப்பதற்காகத் தொடங்கப்படும் இப்பல்கலைக்கழகங்களில் மதம் தொடர்பாக கவனம் செலுத்தப்படமாட்டாது. கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்க்கைத் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்த சச்சார் குழு, சிறுபான்மையினரின் கல்வி நிலை, எஸ்.சி., எஸ்.டி.,யினரின் நிலையை விட பின்தங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதனால்தான் இப்பல்கலைக்கழகங்களைத் தொடங்க முடிவு செய்தோம்” என்றார்.
 
     தலித் சமூகத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வசதியாக பட்டியல் இனத்தில் சேர்ப்பது குறித்து ரஹ்மான் கான் கூறியதாவது: “”நியாயப்படி இக்கோரிக்கை சரியானதுதான். ஆனால், அரசியல் சாசன சட்டப்படி அவ்வாறு வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும். அரசியல் சாசனம் கூறுவதுதான் இறுதியானதாக இருக்கும்” என்றார்.அடுத்த ஆண்டு வரவுள்ள மக்களவைத் தேர்தலை மனதில்வைத்துத்தான் இந்த 5 பல்கலைக்கழகங்களை தொடங்குகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, “”நான் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வர முயன்றால், அதை அரசியல் ரீதியாக பார்க்கிறீர்கள்.
 
     தேர்தல் வரும்வரை பணி எதையும் மேற்கொள்ளாமல் அமர்ந்திருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார் ரஹ்மான் கான்.

பத்திரிகைகள் செய்திகள் உருவாக்கும் பணியில் ஈடுபடக்கூடாது!-தலைமை தேர்தல் கமிஷனர்!

4 Jun 2013
 
     புதுடெல்லி:”பத்திரிகைகள் உலக நிகழ்வுகளை மட்டும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமே தவிர செய்திகளை உருவாக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கூறினார்.
 
     தினமணி பத்திரிகையின் டெல்லி பதிப்பின் 3-வது ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தனது உரையில் கூறியது:பத்திரிகைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, செய்திகளை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது; மற்றொன்று செய்திகளை உருவாக்குவது. அந்த வகையில், ஒரு நாளிதழுக்கு இலக்கணம் செய்திகளை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான்.
 
 
 
 
 
 
 
     பொறுப்புணர்வுள்ள பத்திரிகைகள், செய்திகளை உருவாக்கும் வகையில் செயல்படாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றார் வி.எஸ்.சம்பத்.

இஷ்ரத் கொலை வழக்கு: ஐ.பி அதிகாரியிடம் சி.பி.ஐ விசாரணை!

4 Jun 2013
 
     புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகள் குஜராத்தின் மோடி போலீசாரால் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் மத்திய உளவுப் பிரிவு அதிகாரி(ஐ.பி)யிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தியது.
 
     இஷ்ரத் ஜஹான் உள்ளிட நான்கு பேர் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு 1979ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியிடம் உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி ஆஜரான அவரிடம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு சதித் திட்டம் தீட்டி இருப்பதாக குஜராத் குற்றப் பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தீர்களா? எனகேட்கப்பட்டது. அப்போது அவர், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு மோடியை கொலைச்செய்ய லஷ்கர்-இ-தய்யிபா அமைப்பு திட்டமிட்டது தொடர்பாக குஜராத் மாநில காவல்துறைக்கு தகவல் கொடுத்தது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
 
     போலி என்கவுண்டர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,’தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து தகவல் தருவது எனது கடமை. இதன் அடிப்படையில் குஜராத் போலீஸ் நடத்திய போலி என்கவுண்டருக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று கூறியுள்ளார். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு இஷ்ரத் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட வேளையில் குஜராத் மாநிலத்துக்காக தகவல் அளிக்கும் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலித் முஜாஹித் :விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்- குடும்பத்தினர் முடிவு!

        4 Jun 2013
 
      ஜாவன்பூர்:போலீஸ் கஸ்டடியில் மரணித்த காலித் முஜாஹிதின் கைதுத் தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இம்மாதம் 6-ஆம் தேதிக்குள் விசாரணை கமிஷனின் அறிக்கையை வெளியிடாவிட்டால் உ.பி மாநில சட்டப்பேரவைக்கு முன்னால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக காலித் முஜாஹிதின் மாமனார் ஸஹீர் ஆலம் ஃபலாஹி தெரிவித்துள்ளார்.
 
    2007-ஆம் ஆண்டு உ.பி மாநிலத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட அப்பாவி இளைஞர் காலித் முஜாஹித், ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தி விட்டு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்படும்போது மர்மமான முறையில் மரணமடைந்தார். மே 18-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.இவரது மரணம் போலீஸ் நடத்திய படுகொலை என்று பலத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.முன்னர் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி ஆட்சியின் போது காலித் முஜாஹித் மீதான வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஆர்.டி.நிமேஷ் தலைமையிலான கமிஷன் நியமிக்கப்பட்டது.
 
     ஆனால், கமிஷன் அறிக்கையை அளித்த பிறகும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அரசு இதுவரை வெளியிடவில்லை. விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடுவோம் என்று அரசு கூறியபோதும், அதில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று ஃபலாஹி கூறுகிறார்.”எங்களுடைய போராட்டம் காலித் முஜாஹிதிற்கு மட்டும் அல்ல. பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து நிரபராதிகளான முஸ்லிம்களுக்காகவுமே எங்களுடைய போராட்டம். முஜாஹிதின் மரணம் குறித்து விசாரணை நடத்தசி.பி.ஐயிடம் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்”.-இவ்வாறு ஃபலாஹி கூறியுள்ளார்.
 
    அதேவேளையில் காலித் முஜாஹிதின் மரணம் குறித்து உ.பி உள்துறைச் செயலாளரும், கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரலும் அடங்கிய உயர்மட்டக்குழு விசாரணையை துவக்கியுள்ளது

இஷ்ரத் போலி என்கவுண்டர்:போலீஸ்-ஐ.பி கூட்டுச் சதி!-முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி வாக்குமூலம்!

                               2 Jun 2013 1361450106_1361438752_Ishrat_Jahan_encounter-g-l-
 
      புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகள் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், போலீஸ்-ஐ.பி கூட்டுச் சதி என்று இவ்வழக்கில் கைதான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
      2004-ஆம் ஆண்டு மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர் குஜராத்தில் வைத்து மோடியின் போலீசாரால் லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தைச் சார்ந்த, மோடியை கொல்ல வந்தவர்கள் என்று போலி நாடகமாடி அநியாயமாக போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ வழக்கை விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒருவர் கிரிஷ் சிங்கால். இவர் 2004-ஆம் ஆண்டு போலி என்கவுண்டர் சம்பவம் நடைபெறும்போது அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் எஸ்.பி யாக பணியாற்றியவர். இவர் சி.பி.ஐயிடம் போலி என்கவுண்டர் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
     அவர் தனது வாக்குமூலத்தில்,”குஜராத் மாநிலத்திற்கு பொறுப்பு வகித்த ஐ.பி(இண்டலிஜன்ஸ் பீரோ)யின் இணை இயக்குநர் ரஜீந்தர் குமாரும், அன்றைய அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் டி.ஜி.பி டி.ஜி.வன்சாராவும் இணை போலீஸ் கமிஷனர் பி.பி.பாண்டேவும் இணைந்து இச்சதித்திட்டத்தை வகுத்தனர்.” என்று தெரிவித்துள்ளார். முதல்வர் மோடியை கொலைச் செய்ய வந்த லஷ்கர்-இ-தய்யிபா உறுப்பினர்கள் என்ற தகவலை ஜோடித்து போலீசுக்கு வழங்கியவர் ரஜீந்தர் குமார் என்ற தகவலை கிரிஷ் சிங்கால் சி.பி.ஐயிடம் தெரிவித்திருந்தார்.
 
ரஜீந்தர குமார் தற்போது புதுடெல்லி ஐ.பி தலைமையகத்தில் பணியாற்றுகிறார்.அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பி.பி.பாண்டே தற்போது தலைமறைவாக உள்ளார். பாண்டேவுக்கு எதிராக சி.பி.ஐ நீதிமன்றம் ஜாமீன் இல்லா வாரண்டை பிறப்பித்திருந்தது.குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமறைவாக இருக்க குஜராத் அரசு அனுமதிப்பதாககடந்த மாதம் அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனிடையே தனது பெயரை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்) சி.பி.ஐ சேர்த்ததை ரத்துச் செய்யக்கோரி பி.பி.பாண்டே உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்ஏற்பட்டதை தொடர்ந்து குஜராத் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் கிரீஷ் சிங்காலுக்கு கடந்த 27-ஆம் தேதி ஜாமீன் வழங்கியிருந்தது.          

இஷ்ரத் ஜஹான் வழக்கு:சி.பி.ஐயின் மிருதுவான அணுகுமுறையால் 5 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜாமீன்!

                       1 Jun 2013 CBI_AFP1
 
     புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகளை அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் கைதுச் செய்யப்பட்ட 6 போலீஸ் அதிகாரிகளில் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கைதுச் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ காட்டிய மிருதுவான அணுகுமுறையே முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்க காரணமானது. இவ்வழக்கில் தொடர்புடைய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளை கைதுச் செய்வதற்கான முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறும் சி.பி.ஐ, குற்றப்பத்திரிகையை 90 நாட்கள் கழிந்த பிறகும் தாக்கல் செய்யாமல் இழுத்தடிக்கிறது.
 
     கடந்த பெப்ருவரி மாதம் முதல் 6 போலீஸ் அதிகாரிகளை, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகளை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் சி.பி.ஐ கைதுச் செய்திருந்தது. இதில் 5 பேரைக் கைதுச் செய்து 90 தினங்கள் கழிந்துவிட்டன. இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு போலீஸ் அதிகாரியான அமீனை, சி.பி.ஐ கடந்த ஏப்ரல் மாதம் கைதுச் செய்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.ஜி.வன்ஸாரா மற்றும் அமீன் ஆகியோர் சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகளான தருண் பரோட், ஜெ.ஜி.பர்மர் ஆகியோர் 2003-ஆம் ஆண்டு ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பதால் இவர்கள் ஜாமீனில் வெளியே வரமுடியாது.
 
     சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை 90 தினங்களுக்குள் தாக்கல் செய்யாததை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கண்டித்தது. இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகளை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலைச் செய்த வழக்கில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கும், முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவுக்கும் எதிராக ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா? என்பதை புலனாய்வு செய்து வருவதால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள பி.பி.பாண்டே என்ற முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியை கைதுச் செய்யவும், சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் கைதுச் செய்யப்பட்டு மஹராஷ்ட்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.ஜி.வன்ஸாராவை கஸ்டடியில் பெறவும் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டதாகவும், ஜாமீன் அனுமதிக்க கூடாது என்றும் சி.பி.ஐ வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிட்டபோதும், நீதிபதி அதனை அங்கீகரிக்கவில்லை.
 
     இதனிடையே இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டினார்கள் என்ற போலியான தகவலை அளித்த ஐ.பி அதிகாரிக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. 2002-ஆம் ஆண்டிற்கும், 2004-ம் ஆண்டிற்கும் இடையே குஜராத் மோடியின் போலீஸ் நான்கு போலி என்கவுண்டர்களில் எட்டு பேரைக் கொலைச் செய்தது.
     சம்பவம் நடக்கும்போது க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக இருந்த பி.பி.பாண்டே, ஐ.பி அதிகாரி ராஜேந்திர குமாருடன் இணைந்து இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டியதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.குஜராத் மாநிலத்தில் ஸாதிக் ஜமால் என்ற மெக்கானிக்கை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த வழக்கின் பின்னணியிலும் இதே ஐ.பி அதிகாரி இருப்பதாக ஸாதிக்கின் சகோதரர் ஸபீர் ஜமால் புகார் அளித்துள்ளார்.மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வேளையில் ஸாதிக் ஜமாலை கொலைச் செய்ததாக போலீஸ் பொய் கூறியது.
 
      நான்கு போலி என்கவுண்டர்களுக்கும் தலைமை தாங்கியவர் அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக இருந்த, தற்போது சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் டி.ஐ.ஜி  வன்ஸாரா ஆவார்.

கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஓயாது!-கேர​ள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த மக்களின் எழுச்சி!


திருவனந்தபுரம்: நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது.


யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரண யாத்திரா’ என்ற மக்கள் விசாரணை பயணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை வகித்திருந்தார். இப்பயணம் நேற்று(மே 30-ஆம் தேதி) திருவனந்தபுரத்தில் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பிரம்மாண்டமான பேரணி மற்றும் மாநாட்டில் அணி திரண்ட மக்கள் வெள்ளம், பல மணிநேரங்கள் கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தது. சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதி காலவரையற்று சிறைகளில் அடைக்கும் அரசு-அதிகார வர்க்க கூட்டணிக்கு எதிரான பிரம்மாண்ட எதிர்ப்பாக பேரணியும், மாநாடும் அமைந்தது.


மாலை 3.30 மணியளவில் பாளையம் பகுதியில் இருந்து துவங்கிய மக்கள் எழுச்சிப் பேரணி புத்தரிக் கண்டம் மைதானத்தில் நிறைவுற்றது. யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்தை வாபஸ் பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியான பிரகடனத்துடன் கேரள தலைநகரில் திரண்ட மக்கள் வெள்ளம், புதிய வரலாற்றைப் பதிவுச் செய்தது. மாலை 5 மணிக்கு பிரம்மாண்ட கண்டன மாநாடு துவங்கியது. மஃரிப் தொழுகைக்காக 6.45 மணிக்கு இடைவேளை விட்ட வேளையிலும் கூட மக்கள் கூட்டங்கூட்டமாக மாநாட்டு அரங்கிற்குள் வந்து கொண்டிருந்தனர்.


பிஞ்சுக்குழந்தைகள் முதல் வயோதிகர் வரை தாங்களும் இப்போராட்டத்தில் பங்காளர்கள் என்ற முறையில் கலந்து கொண்டது மாநாட்டுக்கும், பேரணிக்கும் மெருகூட்டியது. பெண்களும், இளைஞர்களும், மார்க்க அறிஞர்களும் பெரும் திரளாக ஆவேசத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கண்டன மாநாட்டை ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் முன்னாள் தேசிய செயலாளரும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான இ.அபூபக்கர் துவக்கி வைத்தார்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை தாங்கினார். பேராசிரியர் எஸ்.ஏ.ஆ.கிலானி (டெல்லி பல்கலைக்கழகம்), ஒ.எம்.அப்துல் ஸலாம் (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தேசிய பொதுச் செயலாளர்), எ.ஸயீத் (எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர்), பேராசிரியர் ஜக்மோகன் சிங் (சுதந்திரப்போராட்ட தியாகி பகத் சிங்கின் சகோதரி மகன்) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.


கறுப்புச் சட்டங்களில் கைதுச் செய்யப்பட்டு அநியாயமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு கேரள தலைநகரில் நடந்த மாநாடும், பேரணியும் ஆறுதலை தரும்.