Wednesday, June 5, 2013

பத்திரிகைகள் செய்திகள் உருவாக்கும் பணியில் ஈடுபடக்கூடாது!-தலைமை தேர்தல் கமிஷனர்!

4 Jun 2013
 
     புதுடெல்லி:”பத்திரிகைகள் உலக நிகழ்வுகளை மட்டும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமே தவிர செய்திகளை உருவாக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கூறினார்.
 
     தினமணி பத்திரிகையின் டெல்லி பதிப்பின் 3-வது ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தனது உரையில் கூறியது:பத்திரிகைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, செய்திகளை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது; மற்றொன்று செய்திகளை உருவாக்குவது. அந்த வகையில், ஒரு நாளிதழுக்கு இலக்கணம் செய்திகளை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான்.
 
 
 
 
 
 
 
     பொறுப்புணர்வுள்ள பத்திரிகைகள், செய்திகளை உருவாக்கும் வகையில் செயல்படாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றார் வி.எஸ்.சம்பத்.

0 comments:

Post a Comment