Friday, June 7, 2013

சரணடையவந்தவர்களை தீவிரவாதிகள் என்று கைதுச் செய்த பாதுகாப்பு படை!

6 Jun 2013
 
    பஹ்ரைச்(உ.பி):கஷ்மீர் மாநில அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சரணடைய வந்த 3 நபர்களை பாதுகாப்பு படையினர்தீவிரவாதிகள் என்று கூறி அநியாயமாக கைதுச் செய்துள்ளனர். இவர்கள் இந்தோ-நேபாள எல்லைக்கு அருகில் உள்ள ருபைடிஹா சோதனைச் சாவடிஅருகே எஸ்எஸ்பி படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுக்குறித்து கைதுச் செய்யப்பட்ட முஹம்மது அக்பர் லோன், முஹம்மது ஷஃபிக் பர் மற்றும் மன்சூர் அஹ்மது ஜர்கர்  ஆகியோர் விசாரணையின் போது கூறுகையில்,’1990-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில்உள்ள முஸஃப்ராபாத்திற்கு சென்றோம். அங்கேயே பாஸ்போட்ர்ட் பெற்றோம். கஷ்மீர் மாநில அரசின் திட்டப்படி, போலீசாரிடம் சரணடைய வரும்போது கைதுச் செய்துள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment