Sunday, June 9, 2013

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கு:பாண்டே மீதான வழக்கு ரத்து இல்லை! உச்சநீதிமன்றம்!

                       8 Jun 2013 SupremeCourt
 
புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் கூடுதல் டி.ஜி.பி பி.பி பாண்டே மீதான வழக்கை ரத்துச் செய்ய உச்சநீதிமன்றம்மறுத்துவிட்டது. நீதிபதிகள் சுதன் மிஷ்ரா, மதன் பி லோகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலைச் செய்ய திட்டமிட்டு இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேர் வருவதாக குஜராத் போலீசுக்கு தகவலை அளித்தவர் பி.பி.பாண்டே ஆவார். இஷ்ரத் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டபோது துணை கமிஷனராக பாண்டே பதவி வகித்தார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment