Thursday, August 4, 2011

ஜெயா தொலைக்காட்சி மேலாளருக்கு,


மதிப்பிற்குரிய ஜெயா தொலைக்காட்சி மேலாளர் திரு. ரங்கநாதன் அவர்களுக்கு,

ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் வாழக்கூடிய இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக இந்த மின்னஞ்சலை தங்களுக்கு அனுப்புகின்றேன். தமிழ் நாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே முன்னேறி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தோல்வியை கொடுத்து மீண்டும் அண்ணா திராவிட முன்னெற்ற கழகத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள்.


ஆ.இ.ஆ.தி.மு.க பெற்ற வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது ஜெயா நெட்வர்க்  நடத்திக்கொண்டிருக்கு செய்தி ஊடகங்கள் என்று சொன்னால் மிகையாகாது. காரணம் அந்த அளவிற்கு கடந்த ஆட்சியின் போது ஆட்சியாளர்கள் செய்த அனைத்து மோசடிகளையும், ஊழல்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றது.

அது போல இஸ்லாமிய சமூகத்தை இதனால் வரை ஏமாற்றக்கொண்டிருந்த திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்கடித்து ஆ.இ.ஆ.தி.மு.கவை வெற்றி பெறவைத்தது.  ஆட்சிப் பொறுப்பில் ஏற்றதிலிருந்து இன்று வரை பல நல்ல திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு எந்த மாற்றுக்கருத்தும் இருக்கவியலாது.

தற்போது இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமான ரம்ஜானை அடைந்து, பகல் முழுக்க நோன்பு இருந்து இரவு முழுக்க இறைவனை வணங்கும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நேரத்தில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரும் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களில் விடியற்காலை பொழுதில் மக்களுக்கு நற்போதனைகளை வழங்கி வருகிறார்கள். ஆனால் தங்கள் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் விடியற்காலை 4:30 மணி முதல் 5.00 மணி வரை "எஸ்.டி.ஜி.ஏ" என்ற பெயரில் ஒரு கூட்டம் இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் போதனை செய்து வருகிறார்கள்.

இஸ்லாமியர்களின் அடிப்படை கொள்கையை குழி தோண்டு புதைக்கும் வண்ணம் இவர்களின் கொள்கையை அமைத்துக்கொண்டு தேவையற்ற குழப்பங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நபிகள் நாயகம் அவர்களே இறைவனின் இறுதித்தூதர் என்பது தான் இஸ்லாமியர்களின் அடிப்படை கொள்கைகளின் ஒன்று. ஆனால் இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு வேதியல் ஆசிரியரான "ரஷாத் கலீஃபா" என்பவனை தூதராக‌ ஏற்றுக்கொண்டு நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி வருகின்றனர்.

"இஸ்லாமிய ஷரியத் பாதுகாப்பு பேரவை" சமீபத்தில் உயர் நீதி மன்றத்தில் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடந்தது. இவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியாகி இவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்று உயர் நீதி மன்றம் கூட தீர்ப்பு வழங்கியது.

அது மட்டுமல்லாது இவர்கள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த இந்திய தேசத்திற்கும் எதிரானவர்கள் காரணம் இவர்கள் பின்பற்றும் ரஷாத் கலீஃபா என்பவன் வெள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு.

ஆகவே முஸ்லிம் சமூகத்தில் குழப்பத்தையும் பிரச்சனையும் ஏற்படுத்தும் இவர்களுக்கு தாங்கள் தங்களுடைய தொலைக்காட்சி ஊடகத்தில் வழங்கப்பட்ட அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

எஸ். முத்து அஹமது
சென்னை

அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே, சகோதரர்களே நீங்கள் உங்களுடைய பங்கிற்கு ஜெயா தொலைக்காட்சியை தொடர்பு கொண்டு உங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம்.

ஜெயா டி.வி தொடர்புக்கு:  044- 4396-0000

0 comments:

Post a Comment