Thursday, August 18, 2011

ஸ்தம்பித்தது மேலப்பாளையம் !



இந்திய சுதந்திர நாட்டில் சுதந்திர அதிகமான போராடிய முஸ்லிம்களுக்கு சுதந்திரம் கொண்டாட கூட அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் சந்தைமுக்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 



தமிழக மற்றும் காவல்துறையின் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய போக்கினை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 17 ஆகஸ்ட் 2011 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக 17-08-2011 சுமார் 2500 திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் எம்.அன்வர் முஹைதீன் தலைமை ஏற்று வழிநடத்தினார்.


SDPI மாநில தலைவர் தெக்லான் பாக்கவி உரை நிகழ்த்தியபோது
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில், தேசிய அரசியல் கட்சி SDPI ன் மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாக்கவி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலத்துணை தலைவி A. பாத்திமா ஆலிமா, விடுதலை சிறுத்தை கட்சியின் நெல்லை மாவட்ட செயாலாளர் M.C.கார்த்திக் ஆகிய அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்ட தமிழக அரசு மற்றும் காவல்துறையினருக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் கார்த்திக் உரை நிகழ்த்திய போது


கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர் 







நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் ஆலிம் உரை நிகழ்த்திய பொழுது 





நெல்லை மாவட்ட செயலாளர் ஹைதர் ஆலிம் கண்டன உரை நிகழ்த்திய போது





NWF மாநில துணை தலைவி பாத்திமா ஆலிமா உரை நிகழ்த்திய போது

கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர் 








பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் உரை நிகழ்த்திய பொழுது



0 comments:

Post a Comment