Wednesday, August 31, 2011

எஜமானன் இறந்ததும் சோகத்தில் உயிரை விட்ட நாய்!(வீடியோ இணைப்பு)


வாலை குலைத்து வரும் நாய்தான் அது மனிதனுக்கு தோழனடி பாப்பா என்று பாடி இருக்கின்றார் மகாகவி பாரதியார். கணவன் இறந்தமையை அறிந்த கணத்திலேயே உயிரைத் துறக்கின்ற மனைவியை நாம் இலக்கியப் பாத்திரங்களூடாக கேள்விப்பட்டு இருக்கின்றோம். எஜமானன் இறந்து விட்டார் என்பதை அறிந்து பதைபதைத்து துடிதுடித்து இறந்து விட்டது இந்நாய். எஜமானனின் பெயர் ஜோன். இராணுவ வீரர். திடீர் மரணம் அடைந்து விட்டார். இவரது சடலம் வீட்டில் பிரேதப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இவர் இறந்து விட்டார் என்பதை உணர்ந்து கொண்ட செல்லப் பிராணியான நாய் பிரேதப் பெட்டிக்கு அருகில் உயிரை மாய்த்துக் கொண்டது.

0 comments:

Post a Comment