Friday, December 30, 2011

சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்தவிருந்த ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.


இந்தியாவில் இருந்து, மலேசியா உள்ளிட்ட, தெற்காசிய நாடுகளுக்கு போதை மருந்து கடத்தும் கும்பல் சிக்கியது. முதற்கட்ட விசாரணையில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5,100 கிலோ போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை மையமாக வைத்து போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மருத்துவத்திற்கு பயன்படும் எபிடிரின், கேடமைன் உள்ளிட்ட மருந்துகள், உலகின் பல்வேறு நாடுகளில் போதைப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், இவற்றை கடத்துவதில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டுகளில், சென்னை வழியாக கடத்தப்பட இருந்த ஏராளமான போதை மருந்துகள் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை மருந்து கடத்தலின் பின்னணி குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்து பல தகவல்கள் தெரிய வந்துள்ளன.

ரகசிய தகவல்: சென்னை மற்றும் ஐதராபாத்தில் உள்ள சிலர், தெற்காசிய நாடுகளுக்கு எபிடிரின் எனப்படும் போதை மருந்தை கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடுதல் தலைமை கமிஷனர் ராஜன் உத்தரவை அடுத்து, சென்னை மற்றும் ஐதராபாத்தில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தல்காரர்கள் சிக்கினர்: கடந்த 26ம் தேதி நள்ளிரவு, அதிகாரிகள் கொண்ட குழு, ஐதராபாத்தில் உள்ள, ஜிடிமெட்லா என்ற இடத்தில் இயங்கி வரும், எபிடிரின் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை கண்காணித்தது. அப்போது, அங்கு நின்றிருந்த ஒரு காரில், சந்தேகப்படும்படியாக இருவர் அமர்ந்திருந்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த துர்காராவ், 51; ராம்பாபு, 51, என்ற அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, எபிடிரின் மருந்தை கடத்துவதை ஒப்புக் கொண்டனர். மேலும், சென்னையில் இருந்து வரும் இருவரிடம் மலேசியாவிற்கு கொண்டு செல்வதற்காக போதை மருந்தை வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்கள் பயன்படுத்திய காரில் இருந்து, 100 கிலோ எபிடிரின் போதை மருந்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை பார்ட்டிகளும் சிக்கினர்: ஐதராபாத்தைச் சேர்ந்த இருவர் கொடுத்த தகவலின் படி, சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானம் மூலம் வந்த, ராயபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம், 42; நாகூர்கனி, 40, ஆகிய இருவரையும் விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, ஐதராபாத்தில் இயங்கி வந்த எபிடிரின் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கணக்கில் முறைகேடு: இந்த சோதனையின் போது, தொழிற்சாலை நிர்வாகம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த 5,000 கிலோ, எபிடிரின் மருந்து கைப்பற்றப்பட்டது. இது சம்பந்தமாக தயாரித்தல் மற்றும் இருப்பு வைத்தல் என்பதற்கான எந்த ஆவணங்களும் பராமரிக்கப்படவில்லை. மேலும், தயாரிக்கப்பட்ட, 400 கிலோ, எபிடிரின் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த புள்ளி விவரங்களும் இல்லை. இதையடுத்து, 5,000 கிலோ எபிடிரின் மருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட் மருந்தின் மொத்த உள்ளூர் மதிப்பு, 40 கோடி ரூபாய்; சர்வதேச சந்தை மதிப்பு, 1,000 கோடி ரூபாய்.

போதை மருந்து கடத்தல் கும்பல் சிக்கியது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் தலைமை கமிஷனர் ராஜன் கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில் நான்கு பேர் சிக்கியுள்ளனர்; தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நாடு தழுவிய அளவில் இந்த கும்பலுக்கு நெட் ஒர்க் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். மிக விரைவில் கடத்தல் கும்பல் முழுவதும் சுற்றி வளைக்கப்படும்.இவ்வாறு ராஜன் கூறினார்.

as
நன்றி thedipaar .com 

செய்தியாளர்களின் கேள்விகளால் திணறிய ஹஸாரே.


19864_L_anna-hazare
மும்பை:வலுவான லோக்பால் மசோதாவிற்காக மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹஸாரே மக்கள் ஆதரவு குறைவு மற்றும் உடல்நிலை சீர்குலைவு ஆகிய காரணங்களால் 3 நாட்கள் உண்ணாவிரதத்தை 2 நாளில் கைவிட்டார்.
இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஹஸாரேவை நோக்கி செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பித் திணறடித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மிகக் குறைவாக மக்கள் வந்திருப்பது குறித்து ஒரு நிருபர் கேட்டதற்கு, “என்னிடம் அதிகாரமில்லை, பணமுமில்லை. ஆனாலும் மக்கள் வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் மக்களிடம் ஏற்பட இருக்கும் எழுச்சியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று பதிலளித்தார் ஹஸாரே.
காங்கிரஸை எதிர்ப்பது ஏன்? உங்களுடைய லோக்பால் மசோதாவுக்கு பல கட்சிகள் ஆதரவளிக்கவில்லை. அப்படியிருக்கும் போது காங்கிரஸை மட்டுமே ஏன் வில்லனாகப்
பார்க்கிறீர்கள்? சோனியாவையும், ராகுல் காந்தியையும் ஏன் குறிவைத்துத் தாக்குகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த ஹஸாரே, “காங்கிரஸ்தான் இந்த நாட்டைச் சீரழித்தது. கடந்த 5 மாதங்களில் காங்கிரஸ் கட்சி எங்களை வஞ்சித்து விட்டது. பிற கட்சிகளை எதிர்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என்றார்.
மக்களவையில் ஹஸாரேவின் போராட்டத்துக்கு எதிராக பாஜக நடந்து கொண்டதை ஒரு செய்தியாளர் சுட்டிக் காட்டினார். பாஜகவின் துரோகத்தை எதிர்த்து பிரசாரம் செய்வீர்களா என்றும் கேட்டார்.
இந்தக் கேள்வியால் அதிருப்தியடைந்த ஹஸாரே, “காங்கிரஸ்தான் எங்களுக்கு மிக அதிக அளவில் துரோகம் செய்தது” என்று கூறிவிட்டு மேடையை விட்டு சட்டென இறங்கிச் சென்றுவிட்டார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பொலி எழுந்தது.
இதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அரவிந்த் கேஜரிவாலும், மணீஷ் சிசோடியாவும் பதிலளித்தனர்.
வருங்காலத் செயல் திட்டம் பற்றி விளக்கிய கேஜ்ரிவால், “லோக்பால் மசோதாவில் இன்னும் சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசுக்கு நெருக்கடி தருவோம்.
போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்றார்.
லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் அரசின் மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, “அரசியல் சாசன அந்தஸ்து அளிப்பதால், லோக்பால் அமைப்பின் அதிகாரம் கூடவோ குறையவோ போவதில்லை” என்றார் கேஜரிவால்.
உண்ணாவிரத மைதானத்தில் கூட்டத்தைத் திரட்டுவதற்காக ரயில் நிலையங்களுக்கு பஸ்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றியும் நிருபர்கள் கேட்டனர். ஆனால் இந்த பஸ்களுக்கு தாங்கள் பணம் தரவில்லை என ஹஸாரே குழுவினர் தெரிவித்தனர்.
நன்றி தூது ஆன்லைன் 

இடஒதுக்கீடு: ஏன் இந்த கொல வெறி?



இடஒதுக்கீடு ஏன் இந்த கொல வெறி
சிறுபான்மை சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஒ.பி.சி) இடஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது. இத்தீர்மானத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சியும், சங்க்பரிவார அமைப்புகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாதாம் தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்நாட்டு போருக்கும் பா.ஜ.க தயாராகுமாம்!
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இம்முறை உ.பி உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட பேரவை தேர்தல்களில் நோட்டமிட்டு இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், பாராட்டத்தக்கதொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என பா.ஜ.க தலைவர்கள் தங்களது எதிர்ப்பை நியாயப்படுத்த சுட்டிக் காட்டுகின்றனர். அரசியல் சட்டத்துடனும், சிறுபான்மையின மக்களுடனும் பா.ஜ.கவிற்கும், சங்க்பரிவாரத்திற்கும் அணு அளவேனும் மதிப்பிருந்தால் உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்து தள்ளியிருப்பார்களா? அரசியல் சட்டத்தையும், நீதிபீடத்தையும் சிறிதளவேனும் மதித்திருந்தால் சிறுபான்மை வகுப்பினரான முஸ்லிம்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நரேந்திர மோடியை தலையில் தூக்கி வைத்து ஆடியிருப்பார்களா? சுருக்கமாக கூறினால், பாரதீய ஜனதா கட்சி மற்றும் சங்க்பரிவார அமைப்புகளின் எதிர்ப்பின் பின்னணியில் இருப்பது வகுப்புவாதமும், முஸ்லிம்கள் மீதான தீராத பகையுமாகும். இவற்றை விட வேறு எந்த அஜண்டாவும் அவர்களுக்கு இல்லை.
இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கிடைத்தே தீரவேண்டும் என்றால் அவர்கள் இந்துமதத்தின் தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் அபயம் தேடிக்கொள்ளலாம் என்ற தொகாடியாவின் வகுப்பு வெறியை உமிழும் விஷம் தோய்ந்த வார்த்தைகளில் இருந்து சங்க்பரிவாரத்தின் இடஒதுக்கீட்டின் மீதான வெறுப்பை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
சிறுபான்மையின வகுப்பினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள், பார்ஸிகள் ஆகியோரும் அடங்குவர். ஆனாலும், ‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு’ என்ற கார்ப்பரேட் ப்ரேக்கிங் நியூஸ்கள் வந்த உடனேயே தளர்ந்துகிடந்த பா.ஜ.க தலைவர்கள் துள்ளி எழுந்து தங்களை அலங்கரித்துக் கொண்டு தொலைக்காட்சியில் வாதம் புரிய கேமராவுக்கு முன்னால் போஸ் கொடுக்க அணிவகுத்தனர். மதசார்பின்மையும், தேசப்பாதுகாப்பும் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தொலைக்காட்சி விவாதங்களில் வெதும்பினர்.
பல தசாப்தங்களாக இந்தியாவில் பாரபட்சம் மற்றும் சமூக சூழல்களின் பலி ஆடுகளான முஸ்லிம்களுக்கு இந்த குறைந்தளவு இட ஒதுக்கீடாவது ஆறுதல் அளிக்கட்டும் என்ற கருத்து எந்த சேனல்களின் விவாதத்திலும் இடம்பெறவில்லை. மாறாக லோக்பால் என்ற ஊழல் எதிர்ப்புக் குழுவில் கூட அச்சமூகத்திற்கு இடம் அளிக்கக்கூடாது என்ற கூக்குரல்தான் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் கேட்டது.
தினமணி என்ற பார்ப்பன நாளேடு பழத்தில் ஊசியை அல்ல விஷ ஊசியை ஏற்றும் கைங்கர்யத்தை தலையங்கம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. மேலோட்டமாக படித்தால் நன்றாகத்தான் இருக்கும் அதன் பின்னணியில் இருக்கும் மேல்ஜாதி திமிரும், காழ்ப்புணர்வும் அதனை சற்று ஆழ்ந்து கவனித்தால் புரியவரும்.
பா.ஜ.கவின் அதே இனவெறியைத்தான் சேனல்களில் நடந்த விவாதங்களிலும் காணமுடிந்தது. ‘அரசியல் சட்ட விரோதம்’ என்ற போர்டை மாட்டி வைத்துவிட்டு ஆக்ரோஷமடைந்தார்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரும் வேளையில் அரசியல் சட்டவிரோதம் என்ற குரல் எழும்பவில்லை. அரசியல் சட்டத்தின் எந்த இடத்திலும் 50 சதவீத இடங்களை மகளிருக்கு ஒதுக்கவேண்டும் என்று கூறவில்லை. ஆனாலும், உள்ளாட்சிகளில் 50 சதவீத இடங்களும் மகளிருக்கு மனதார வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் என்பது கடைசி வார்த்தை அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அறியாமல் இந்த மற்போர் நடக்கவில்லை. அரசு தீர்மானம் வந்தால் அதன் தடைகள் ஒவ்வொன்றாக அகலும். முஸ்லிம்கள் அத்தகைய சலுகைகளுக்கு எல்லாம் தகுதியானவர்கள் அல்லர் என்பது தான் உண்மையான பின்னணி.
1956-ஆம் ஆண்டு சீக்கிய மதப் பிரிவினரையும், 1990-ஆம் ஆண்டு புத்த மதத்தை சார்ந்தவர்களையும் எஸ்.சி/எஸ்.டி பட்டியலில் சேர்த்த வேளையில் யாரும் அதனை எதிர்க்கவில்லை. இடஒதுக்கீட்டின் பலனை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அடங்கிய சிறுபான்மையினர் அனுபவித்து விடக்கூடாது என்ற மேல்ஜாதி ஆதிக்க மனப்பாண்மைதான் தேசிய நீரோட்டத்தில் காணப்படுகிறது.
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு கூட  இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கக் கூடாது என மேல்ஜாதி வர்க்கம் பாடுபடுகிறது.
சிறுபான்மை சமூகத்தினருக்கு அவர்களின் தனித்தன்மையை இழக்காத வகையிலான நலத் திட்டங்களுக்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை என அரசியல் சட்டம் கூறுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக இடஒதுக்கீடும், உறுதியான நடவடிக்கைகளும் தொடர வேண்டியது வரலாற்று ரீதியான ஒரு அத்தியாவசியமும் ஆகும். ஆனால், சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு பிறகும் மத சிறுபான்மையினரின் நிலை என்ன? கல்வி, அரசு பணி, தனியார் துறை, மீடியா – என அனைத்துத் துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? வருமானம், சுகாதாரம், தொழில் துறை ஆகியவற்றில் நாடு அடைந்த முன்னேற்றத்தில் ஒடுக்கப்பட்ட சமூகம் அடைந்த பலன் என்ன? இக்கேள்விகளுக்கு எல்லாம் எதிர்மறையான பதில்களே கிடைக்கும்!
வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திய வேளையில் ஊடகங்களும், கார்ப்பரேட்டுகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வீதிகளில் கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பின் ஆக்ரோஷ பிரகடனத்தை மறக்க இயலாது. இறுதியில் தலித்-பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் அரசியல் உணர்வை அங்கீகரிக்க வேண்டிய சூழலுக்கு தேசிய கட்சிகள் தள்ளப்பட்டன. இடஒதுக்கீட்டின் அளவை அந்தந்த மாநிலங்கள் தீர்மானிக்கலாம் என மண்டல் கமிஷன் சிபாரிசு செய்த போதிலும் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகம் அனைத்து மாநிலங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர். இந்தியாவில் முஸ்லிம்களை ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தி இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதற்கு அரசியல் சட்டம் தடையாக இருக்கவில்லை. ஆனால், அதற்கான அரசியல் ரீதியான துணிச்சல் எவருக்கும் இருக்கவில்லை.
தென்னிந்திய மாநிலங்கள்தாம் இதில் முன்மாதிரியாக திகழ்ந்தன. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்தின. தமிழகத்தில் 3.5 சதவீதமும், கர்நாடகாவில் 4 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கிய பொழுது அதன் பெயரால் சச்சரவுகள் எழவில்லை. கேரளா மாநிலத்தில் அரசு பணிகளில் 12 சதவீத இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரும் சிறுபான்மை முஸ்லிம்களை ஒ.பி.சியில் உட்படுத்தி இதர மாநிலங்களும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி இருக்கலாம். 19 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் உ.பியில் மண்டல் கமிஷன் பரிந்துரையின் பலன் குறைந்த அளவே முஸ்லிம்களுக்கு கிடைத்தது. 32 ஆண்டுகள் இடதுசாரிகளால் ஆளப்பட்ட மேற்கு வங்காள மாநிலத்தில் முஸ்லிம்களின் சதவீதம் 24 சதவீதம் ஆகும். ஆனால் இடதுசாரிகள் ஆட்சியிலிருந்து விலகுவதற்கு சற்று முன்புதான் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதாக அறிவித்தனர்.
வட இந்தியாவில் தலித், பிற்படுத்தப்பட்ட அரசியல் வலுப்பெற்ற போதிலும் முஸ்லிம்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர். தற்பொழுது அடித்தளத்திலிருந்து சில அசைவுகள் முஸ்லிம் சமூகத்திடம் தென்படுகிறது. மே.வங்கத்தில் இதுவரை இடதுசாரிகளுக்கு அளித்து வந்த ஆதரவை முஸ்லிம்கள் மமதாவிற்கு அளித்தனர். அஸ்ஸாமில் முஸ்லிம்கள் காங்கிரஸிற்கு வாக்களிக்காமல்  மவ்லானா அஜ்மலின் கட்சிக்கு வாக்களித்து எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளனர். தொப்பி அணிந்தும், அஜ்மீர் தர்காவிற்கு நன்கொடை அளித்தும் முஸ்லிம்களை நம்மோடு நிறுத்தலாம் என கருதிய லாலுவின் திட்டமும் பீகாரில் செல்லுபடியாகவில்லை. உ.பியில் மாயாவதியும், முலாயமும் முஸ்லிம்களின் அசைவுகளை அடையாளம் காண்கின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு என கண்ணியமான வாழ்க்கையை தேடிய முஸ்லிம்கள் துவக்கியுள்ள போராட்டத்தின் ஒரு பகுதிதான் இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை.
பிரிவினைக்கு பிறகும் இந்தியாவில் வாழ தீர்மானித்த ஒரு சமூகத்திற்கு இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் இழைத்த அநீதியின் சுட்டெரிக்கும் உண்மைகளைத்தான் சச்சாரும், ரங்கநாத் மிஸ்ராவும் தங்களது ஆய்வில் வெளிக்கொணர்ந்தனர். தலித்துகளை விட மோசமான நிலையில் முஸ்லிம்கள் வாழ்வதாக சச்சார் கூறுகிறார். முஸ்லிம் சமுதாயம் தங்களது நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிச்செய்ய 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரைச் செய்தது. கிராமங்களில் வாழும் முஸ்லிம்களின் 41.6 சதவீதம் பேருக்கு  மாத வருமானம் 825/ ரூபாய் மட்டுமே என்ற உண்மையை ஆக்ஷன் எய்டும், இந்தியன் சோஷியல் இன்ஸ்ட்யூட்டும் நடத்திய புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், அப்துல் கலாம் இந்தியாவின் குடியரசு தலைவரானதும், ஹமீத் அன்ஸாரி துணை குடியரசு தலைவராக தொடர்வதும், குரைஷி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டதும், ஷாருக்கான், சல்மான் கான் போன்ற கான் வகையறாக்கள் பாலிவுட்டில் பிரபலமானதையும் சுட்டிக்காட்டி ஒரு மேதாவித்தனமான கேள்வியை எழுப்புகிறார்கள் – இவர்கள் எல்லாம் உயர் பதவிகளை எட்டியதற்கு இடஒதுக்கீடுதான் காரணமா? என்பதுதான் அக்கேள்வி.
அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்திலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் அகற்றுவதற்கு திட்டமிட்டு முயற்சிகள் நடைபெறும் வேளையில் இத்தகைய முட்டாள்தனமான கேள்விகளை எழுப்பி முஸ்லிம்களை சமாதானப்படுத்தலாம் என எவரும் கருதவேண்டாம். இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மையின் அடித்தளமே சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவமும், உரிமைகளுமாகும். அவர்களை புறந்தள்ளிவிட்டு எந்த சமூகமும் முன்னேற முடியாது.
ஆதலால் காங்கிரஸும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் செய்யவேண்டியது என்னவெனில் முஸ்லிம்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதாகும். முஸ்லிம் வேடம்பூண்ட  ஷாநவாஸ் ஹுஸைன், முக்தா அப்பாஸ் நக்வி போன்ற எட்டப்பர்களை விலைக்கொடுத்து வாங்கிவிட்டு அவர்கள் மூலமாக ஊளையிடும் பா.ஜ.க, சங்க்பரிவார்களின் அச்சுறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்துவிடக் கூடாது. இத்தகைய களத்து மேட்டு காளான்களை அதற்குரிய மதிப்புடன் புறக்கணிப்பதே சிறந்தது!
அ.செய்யது அலீ.
நன்றி தூது ஆன்லைன் 

ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு


காங்கிரஸ் கட்சியின் 127 வது தொடக்க விழா சத்தியமூர் த்தி பவனில் நேற்று  நடைபெற்றது.இதையொட்டி தமிழ் நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கலந்து கொண்ட போது அவரிடம் ஹசாரேவின் போராட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளது கு றித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இள ங்கோவன் அன்னாஹசாரேவை இந்த வருட 
தொடக்கத் தில் ஊடகங்கள்  பெரிதாக உருவகப்படுத்தின. அவரது நிஜ உருவம் இப்போது தெரிந்து விட்டது. அவர் இப்போது நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் வரவில்லை. ஆதரவும் இல்லை.
  சென்னையில் நடைபெறும்  போராட்டத்தில் 100 பேர் கூட கலந்து கொள்ளவில்லை. கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள்தான் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கின்றனர். அந்த வகையில்தான் ரஜினியும் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கறுப்புப் பணம் வைத்துள்ளதால்தான் ஹசாரே குழுவினரின் போராட்டத்துக்கு தனது திருமண மண்டபத்தைக் கொடுத்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.

அவருடன் இருப்பவர்கள் கறுப்பு பணவாதிகள். கருப்பு  பணத்தால் கட்டப்பட்ட  மண்டபத்தில் தான் அவருக்கு ஆதரவாக போராட்டம்  நடக்கிறது. ஹசாரே இப்போது காற்று போன பலூன் அவர் புஷ்வாணம் ஆகி விட்டார் என்பதுதான் புத்தாண்டின் இனிப்பான செய்தி. காங்கிரஸ் 50 ஆண்டுகள் விடுதலைக்காக போராடியது. 60 ஆண்டுகளுக்கு மேல் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது. காங்கிரசையும் மக்களையும் பிரிக்க முடியாது. இன்று ஜி.கே.வாசன் பிறந்த நாள். அவர் வயதில் என்னை விட இளையவர் என்றாலும் செயல்பாட்டில் மூத்தவராக இருக்கிறார் என தெரிவித்தார்.

இன்றைய சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நன்றி ismailpno 

Thursday, December 29, 2011

தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்:கண்பார்வையற்றவர் கைது


தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்:கண்பார்வையற்றவர் கைது
தஞ்சாவூர், 28 டிசம்பர்- தமிழர்தம் சிற்பக்கலைக்குப் பெருமை சேர்க்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது., இதனையடுத்து அங்கு போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் நேற்று விடிய விடிய சோதனை நடத்தினர்.
பின்னர், தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த சங்கர் என்ற கண்பார்வையற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வெடிகுண்டு புரளியால் தஞ்சை நகரில் பெரும் பரபரப்பு நிலவியது.
vanakkammalaysia.com

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம்? தொழிலதிபர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்.



வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள தொழில் அதிபர்கள் பலர், தங்களுக்கு அப்படிப்பட்ட கணக்கு எதுவும் இல்லை என, மறுத்து வருவதால், அவர்களின் பழைய வருமான மற்றும் பணப் பரிமாற்ற கணக்கு விவரங்களை தோண்டித் துருவ, வருமான வரித்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ளனர். இந்தப் பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, சில நாடுகளிலிருந்து வங்கிக் கணக்கு வைத்துள்ள மற்றும் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர் விவரங்கள் கிடைத்துள் ளன. குறிப்பாக, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து இத்தகவல்கள் கிடைத்துள்ளன.

135 கோடி ரூபாய் வசூல்: அவற்றில் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்துள்ளவரின் பெயர், அவரின் பாஸ்போர்ட் நம்பர், டெபாசிட் செய்துள்ள தொகை போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன. பிரான்ஸ் அரசிடம் இருந்து இதுபோல், 700க்கும் மேற்பட்டோரின் கணக்கு விவரங்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 80 பேருக்கு, கணக்கில் வராத 438 கோடி ரூபாய் சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் வரியாக 135 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேறு பலரோ, குறிப்பாக மும்பை மற்றும் டில்லியில் வசிக்கும் பலர், தங்களுக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இல்லை; கறுப்புப் பணத்தையும் டெபாசிட் செய்யவில்லை என, மறுத்து வருகின்றனர். ஆனால், அவர்களின் பெயர் விவரங்கள் எல்லாம், வெளிநாடுகளில் இருந்து வந்த தகவல்களில் இடம் பெற்றுள்ளன.

பழைய விவரங்கள்: அதனால், இந்த நபர்களுக்கு உண்மையிலேயே வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இருக்கிறதா அல்லது இல்லையா என்ற விவரத்தை கண்டறியவும், அவர்கள் சொல்வது உண்மையா என்பதை உறுதி செய்யவும், அதற்காக அவர்களின் பழைய கணக்கு விவரங்களை தோண்டித் துருவவும், வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இப்படி பழைய கணக்கு விவரங்களை தூசி தட்டி பார்ப்பதன் மூலம், அவர்கள் கறுப்புப் பணத்தை குவித்துள்ளனரா, இல்லையா என்பது தெரிய வரும் என, நினைக்கின்றனர்.

வரித்துறை நோட்டீஸ்: இப்படிப்பட்ட நபர்கள் பலரின் பெயர் விவரங்களை, மத்திய நேர்முக வரிகள் வாரியம், வருமான வரித்துறையின் மதிப்பீட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதனடிப்படையில், மும்பை, பெங்களூரு, டில்லி மற்றும் ஆமதாபாத்தைச் சேர்ந்த பலருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன் பின், அந்த நபர்களின் வருமானம் மற்றும் பணப் பரிமாற்ற விவரங்கள் எல்லாம் மின்னணு முறையிலும், அதிகாரிகள் மூலமும் பரிசோதிக்கப்படும். அவர்கள் ஏமாற்றியிருப்பது தெரியவந்தால், கடும் நடவடிக்கைகள் பாயும்.

as
thedipaar.com

பிரிட்டன் முஸ்லிம்கள் மீது இனரீதியான தாக்குதல் - மனித உரிமைக்கு சவால்


2011-ஆம் ஆண்டு முடிவுறும் வேளையில் பிரிட்டன் மனிதஉரிமையை பாதுகாப்பதில் மிகவும் பின் தங்கியுள்ளது. இவ்வாண்டு நடந்த பல்வேறு சம்பவங்களில் அரசு அணுகுமுறைகளை ஆராயும் வேளையில் பிரிட்டனின் மனித உரிமை பாதுகாப்பில் மிகவும் மோசமான ஆண்டாக 2011 மாறியுள்ளது.

அரசின் 2011-ஆம் ஆண்டைய தீவிரவாத எதிர்ப்பு சட்டம்தான் மனித உரிமை மீறலுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

இச்சட்டம் மனிதஉரிமைகளை வெளிப்படையாக மீறுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் உள்ளிட்ட  அமைப்புகள் கூறியுள்ளன. சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதுதான் பிரிட்டனின் தீவிரவாத எதிர்ப்பு சட்டம் என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

ஃபலஸ்தீன் தலைவர் ஷேக்ரஈத் ஸாலிஹ் கடந்த ஜூன் 28-ஆம் தேதி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார். இதனை மனிதஉரிமை மீறல் என பிரிட்டன் நீதிமன்றம் கூறியது.

இஸ்ரேலிய போர்க் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவதற்கான ஜெனீவா கன்வென்சனின் பொது சட்டப் பிரிவை திருத்துவதற்கான அரசின் தீர்மானம், செலவுகளை குறைப்பதற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல், லண்டனில் கலவரத்தை உருவாக்கிய டாட்டன் ஹாம் மார்க்டக்கனின் கொலை, கலவரக்காரர்களை கூட்டாக கைது செய்தது, சமூக இணையதளங்கள் மீது கட்டுப்பாட்டை விதிக்க முயற்சி ஆகியன மனிதஉரிமைகள் மீது அரசு நடத்திய அத்துமீறல்களுக்கான உதாரணங்களாகும்.

மேலும் பிரிட்டனில் சிறுபான்மையின வகுப்பினரான முஸ்லிம்கள் மீது நடக்கும் இனரீதியான தாக்குதல்களும் மனித உரிமையை பாதுகாப்பதில் சவாலாக எழுந்துள்ளது.
thanks to yarlmuslim

நொறுக்கு தீனி சாப்பிடும் இளைஞர்கள் கவனத்திற்கு..!


டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள நொறுக்கு தீனிகளை சாப்பிடும் இளைஞர்களுக்கு விந்தணு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளின் ஆராய்ச்சி எச்சரிக்கிறது. இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் வெளியான தகவல் வருமாறு,

ஊட்டச் சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது ஆய்வில் தெரிய வந்தது. நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் அவற்றின் ஊர்ந்து சென்று கரு உண்டாக்கும் வேகம் (மொபிலிடி) குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டது. இதே விஷயத்தில் ஜப்பானில் நடந்த ஆய்வும் இதையே தெரிவித்துள்ளது. 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது. தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால், இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஸலபி சித்தாந்தத்தை வருங்காலத்திலும் பின்பற்றுவோம் - சவூதி அறிவிப்பு


சவூதி அரேபியா தான் பல்லாண்டுகளாக கடைப்பிடித்து வரும் ஸலபிச சித்தாந்தத்தையே வருங்காலங்களிலும் பின்பற்றும் என்றும் மிதமான சிந்தனையான ஸலபிசத்தை தீவிரவாதத்துடனும் தீவிரத்தன்மையுடயதாகவும் சித்தரிக்கும் போக்கை கண்டிப்பதாகவும் ஆய்வரங்கம் ஒன்றில் பேசிய சவூதி இளவரசர் நயீப் திட்டவட்டமாக கூறினார்.

"ஸலபிசம் - ஷரியாவின் அணுகுமுறையும் தேசத்தின் தேவையும்" எனும் தலைப்பில் இமாம் முஹம்மது பின் சவூத் பல்கலைகழகம் ஏற்பாடு செய்த ஆய்வரங்கத்தில் கலந்து கொண்ட சவூதி இளவ்ரசர் நயீப் ஸலபிசம் என்பது குரான் மற்றும் நபிகள் முஹம்மதின் வழிமுறையில் உள்ளதாகவும் இதற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக நாம் அணி திரள வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். 

மேலும் ஸலபிசம் பிற மதத்தவர்களுக்கு வழங்கப்பட்ட வேண்டிய உரிமைகள் விஷயத்தில் தாராள போக்கு கொண்டதாக விளங்குகிறது என்று குறிப்பிட்ட இளவரசர் இந்த ஆய்வரங்கத்தில் ஸலபிச வரலாறு, ஸலபிசம் குறித்த தவறான கருத்துகளை களைதல், ஸலபிசம் மற்றும் சவூதி அரசாங்கத்திற்கிடையான உறவு மற்றும் ஸலபிசமும் பாடத்திட்டமும் எனும் தலைப்புகளில் ஆய்வுகள் நடத்தவுள்ளது வரவேற்கத்தகுந்தது என்றும் இதன் முடிவுகள் மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். 

ஸலபிய சித்தாந்தத்தை பின்பற்றுவதால் சவூதி அரசாங்கம் இதர சித்தாந்த பிரிவினருடன் கடுமையான போக்கை கடைப்பிடிப்பதாகவும் மாற்று மதத்தினருடான கடும் போக்கை வெறுப்பை தூண்டுவதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
thanks to yarlmuslim

எனக்கு ஏதாவது ஆனால்..!


எனக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால், நீங்கள் தான் என் மகனுக்கு ஆலோசகராக இருந்து வழிகாட்ட வேண்டும்' என முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்தாரி துபாயில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவரும், பாக்., முன்னாள் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தானின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவருமான அய்ட்ஜாஜ் அசனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசியுள்ளார்.

அப்போதுதான் அவரிடம், இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்நிலையில், சிந்து மாகாணத்தில் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ நினைவிடம் அமைந்துள்ள கர்ஹி குதா பக்ஷ் கிராமத்தில் நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் இறுதியுரை ஆற்றும்படி, அசனைக் கேட்டுக் கொண்டார் சர்தாரி.

இது பாக்., அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கிலானியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அசனை பிரதமராக நியமிக்க சர்தாரி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. ஆனால் அதை மறுத்த அசன்,"ஒருவர் பிரதமர் ஆவதற்கு எம்.பி.,யாக இருக்க வேண்டியது அவசியம். எனினும், இடைத் தேர்தல் மூலம் நான் எம்.பி.,யாக வாய்ப்பிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
thanks to yarlmuslim