Friday, July 1, 2011

பேஸ்புக் நட்பின் பின்னர் காணாமல் போன பள்ளிச்சிறுமி!


பேஸ்புக் (முகநூல்) நட்பின் பின்னர் இளவயது பள்ளிச் சிறுமி ஒருத்தி வீட்டிலிருந்து காணமல் போன சம்பவம் ஒன்று இங்கு அம்பாங்கில் இடம்பெற்றுள்ளது.
காணமல் போன தொடக்கப் பள்ளிச் சிறுமி பேஸ்புக் அரட்டை மூலமாக அறிமுகமான ஆடவர் ஒருவருடனே வீட்டிலிருந்து ஓடிவிட்டதாக அந்த பள்ளிச் சிறுமியின் பெற்றோர் கூறினர்.
தனது மகளை பேஸ்புக் மூலம் ஒரு ஆடவர் தோழியாக்கி கொண்டதாகவும் அதன் பின்னர் அடிக்கடி தனது மகள் வெளியில் சென்றுவருவதுடன் சில நாட்களில் வீட்டிற்கு வருவதில்லை என்கிறார் 52 வயதான அச்சிறுமியின் தந்தை யாப் தவ் ஹிங்.
கடந்த ஆண்டு இறுதியில் தனது மகள் அடிக்கடி கணினி மையங்களுக்கு சென்று கணினி விளையாட்டுகள் மற்றும் பேஸ்புக்கில் அரட்டை செய்வதை வழமையாக்கிக் கொண்டதாகவும் பொதுவாக வெளியே சென்றால் மீண்டும் வீட்டுக்கு வந்துவிடும் தனது மகள், கடந்த மே 10 தேதி வெளியில் சென்ற பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவர் கவலையுடன் சொன்னார்.
காணமல் போன பதும வயது பள்ளிச் சிறுமியை கண்டுபிடிக்க MCA பொதுசேவைகள் மற்றும் புகார் துறை தலைவர் மைக்கேல் சோங் உதவிசெய்வதாக அந்த சிறுமியின் பெற்றோர்களிடம் கூறினார்.

0 comments:

Post a Comment