Tuesday, July 12, 2011

முத்துப்பேட்டையில் வெடிகுண்டு பொருள்கள் பறிமுதல்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் பொருள்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
முத்துப்பேட்டை, ஜாம்பவானோடையைச் சேர்ந்த மதியழகன் என்பவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு அவரது வெடிகுண்டு தயாரிப்புக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வேலை பார்த்த 2 பெண்கள் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து நாட்டு வெடி குண்டு தயாரிப்பு கூடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில் மதியழகன் அனுமதியின்றி மீண்டும் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலையடுத்து அனுமதியின்றி செயல்பட்ட இடத்திற்குக் காவல்துறையினர் ஞாயிற்றுக் கிழமையன்று சென்று சோதனை நடத்தினர்.
அங்கு வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் 1 மூட்டை வெடி மருந்து பொருட்கள், உப்பு, நூல் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் மதியழகனைக் காவலர்கள் தேடிவருகின்றனர்.

0 comments:

Post a Comment