Wednesday, July 20, 2011

இந்தியா உடைந்து சுக்கு நூறாவாதை யாராலும் தடுக்க முடியாது!

JULY 20, பெங்களூர்: கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு பசுவதை தடைச்சட்டம், பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை படிப்பதை கட்டாயமாக்குதல் போன்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அஜண்டாக்களை அமுல்படுத்தி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடாகாவை கற்காலத்திற்கு அழைத்து செல்லும் பா.ஜ.கவின் கல்வி அமைச்சர் பகவத் கீதையை படிக்க விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வெறித்தனமாக பேசியுள்ளார். கர்நாடகா மாநிலம் கோலாரி நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு பேசிய கர்நாடகா கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, பள்ளிகளில் பகவத் கீதையைப் படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதை சிலர் எதிர்க்கின்றனர். 

அப்படிப்பட்டவர்கள் பேசாமல் நாட்டை விட்டு வெளியேறி விடலாம்’ என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சரின் பேச்சைக் கண்டித்து சமதா சைனிக் தள மாணவர் சங்கம் காகேரியின் கொடும்பாவியைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது.

அமைப்பின் மாநிலத் தலைவர் கோவிந்தய்யா இதுகுறித்துக் கூறுகையில், கர்நாடக அரசு அனைத்துப் பள்ளிகளையும் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். முகாம்களாக மாற்ற முயற்சிக்கிறது. எங்களுக்கு பகவத் கீதையின் அத்தியாயங்கள் எதையும் கற்றுத் தர வேண்டாம். அதற்குப் பதிலாக அரசியல் சாசனத்தின் அத்தியாயங்களை கற்றுக் கொடுங்கள் என்றார்.

கர்நாடக தலித் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மாரிசாமி கூறுகையில், நூலகங்கள், சிறந்த உணவு, தூய்மை ஆகியவற்றை பள்ளிகளுக்குத் தர வேண்டும். அதை விட்டு விட்டு பகவத் கீதையை கற்றுக் கொடுப்பதால் என்ன லாபம் என்று வினவினார். 

இதேபோல பல்வேறு கட்சியினரும் காகேரியின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறுகையில், காகேரி மீது முதல்வர் எதியூரப்பா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சு நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதாகும் என்றார்.

சிந்திக்கவும்: இந்தியா ஒரு மதசார்ப்பற்ற நாடு. இந்த நாட்டில் மற்றைய மத மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது, அவர்களுக்கு எதிரான திட்டமிட்டு கலவரங்களை ஏற்ப்படுத்தி அவர்களை பயமுறுத்தி மீண்டும் ஹிந்து மதத்திற்கு கொண்டு வருவது அல்லது நாட்டை விட்டே துரத்துவது, இல்லையேல் அவர்களை கலவரங்கள் மூலம் அழித்தொழிப்பது இதுவே ஹிந்துதுவாவின் திட்டமாகும். 

இதை தடுத்து நிறுத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். இல்லையேல் இந்தியா சிதறுண்டு போவதை யாராலும் தடுக்க முடியாது. இலங்கை தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதம் ஏற்ப்படுத்திய அடக்கு முறையே 35 வருட ஆயுத போராட்டம். அது இன்றளவும் முடிவுக்கு வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இலங்கை சிறிய நாடாக இருந்ததால் இந்தியா, சீனா போன்ற பெரும் வல்லரசுகள் உதவிதால் பெரிய பொருளாதார பிரச்சனைகள் இல்லாமல் தப்பியது. 120 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் ஒரு உள்நாட்டு யூத்தம் நடந்தால் அதை எண்ணி பார்க்கவே பயமாக இருக்கிறது. இதை என்ன விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும்.

இல்லையேல் இந்தியா சுக்குநூறாக சிதறி போவதை யாராலும் தடுக்க முடியாது. இலங்கை பிரச்சனையில் இந்தியா தமிழர்களை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த கொடுமைக்குதான் வைகோ சொன்னார் இந்தியா சுக்குநூராவதை யாராலும் தடுக்க முடியாது என்று. இந்தியாவில் வாழும் முஸ்லிம், மற்றும் கிருஸ்தவ, சீக்கிய, புத்த, பழங்குடி, தலித் போன்ற மக்கள் கிளர்ந்தெழுந்தால் திரும்பவும் ஒரு மன்னர் ஆட்சிகாலத்தில் இருந்த இந்தியா மாதிரி போய்விடும் என்பதே உண்மை. இந்திய அரசு இதை புரிந்து கொண்டு பாசிச ஹிந்து பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா?   

-நட்புடன் மலர் விழி-

0 comments:

Post a Comment