Sunday, July 3, 2011

மத்திய பிரதேசம்:பள்ளி மாணவர்களுக்கு கீதை கட்டாய பாடம்!



சிவராஜ் சிங் சவுகான் 

மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.ஆட்சி செய்து வருகிறது.மாநிலமுதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருக்கிறார்.இங்கு கடந்த 2008 ம் ஆண்டு முதல் மாணவர்கள் காலை பள்ளிக்கு வந்தவுடன் சூரிய நமஸ்காரம்(சூரியனை வழிபடுதல்)செய்யவேண்டும்.பிறகு வந்தே மாதரம் (காளியை வழிபடுதல்)பாட வேண்டும்.
ஆனால் தற்போது மாநில முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில்,இலவச இணைப்பாக பகவத் கீதை அணைத்து மாணவர்களுக்கும் பயிற்ருவிக்கப்படும் எனஅரசு அறிவித்துள்ளது.தற்போது 1 முதல் 10 வரை உள்ள எல்லா  பள்ளிகளுக்கும் கீதை அனுப்பப்பட்டு வருகிறது.சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சிவராஜ் சிங்,அரசு உழியர்கள் r.s.s அமைப்பு நடத்தும் ஷாஹா பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள் என அரசு உழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.இதனையல்லாம் பார்க்கும் பொது இந்திய மதசார்பற்ற நாடுதானா?என்ற சந்தேகம் உங்களைபோல் எனக்கும்எழுகிறது! 

0 comments:

Post a Comment