Sunday, July 31, 2011

பெல்தங்காடி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விளையாட்டுப்போட்டி


பெல்தங்காடி: கர்நாடக மாநிலம் பெல்தங்காடியில் அப்பகுதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அப்பகுதி பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் உஸ்மான் போட்டியை தொடங்கி வைத்தார்.

Sports Meetஉடல் ஆரோக்கியத்தைப்பற்றி வலியுறுத்துவதற்காக இவ்வாறான போட்டிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடந்து நாடு முழுவது நடத்தி வருகிறது.

"பலஹீனமான் முஃமீனைவிட பலமுள்ள முஃமீன் தான் அல்லாஹ்விற்கு மிகவும் உவப்பானவன்!" 
என்ற நபிகளாரின் கூற்றுப்படி பலமுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்று வருகிறது. இவ்வாறான போட்டிகளை நடத்துவதின் மூலமும் அதில் பங்குபெறுவதின் மூலம் நபிகளாரி பொன்மொழிகளை பின்பற்றுபவர்களாகவும், அதே சமயம் இறைவன் விரும்பக்கூடிய பலமுள்ள சமூகமாக மாறுவதும் என இரு அழகிய நன்மைகளை பெற முடியும்.
நிகழ்ச்சியின் இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை ஊக்கபடுத்துவதற்காக பரிசுகளும் வழங்கப்பட்டது.


Sports Meet 
Sports Meet

0 comments:

Post a Comment