Friday, July 8, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்ட கல்வி உதவிப் பணிகள்

அஸ்ஸலாமு அலைக்கும்,

சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த நாட்களில் தேசிய அளவில் பிரச்சாரம் முதற்கொண்டு எண்ணற்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

1. சர்வ ஷிக்ஷ்கிராம் - தேசத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச்சென்று, சர்வே மேற்கொண்டு, அதில் கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு உதவி செய்தது முதற்கொண்டு பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கியது வரை பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 


2. பள்ளி செல்வோம் பிரச்சாரம் - தேசிய அளவில் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி செல்வோம் என்ற தலைப்பில் நாடுமுழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், நோட்டு புத்தகம் வழங்குதல் என பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

3. கல்வி உதவித்தொகை: இந்த ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் நாடு முழுவதும் ஏழை எளிய மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூபாய் 24 லட்சம் ஒதுக்கியுள்ளது.
4. வழிகாட்டி முகாம்: தமிழகம் முழுவது மாண்வர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம் நடத்தப்பட்டது. அரசாங்கம் வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற்றுக்கொடுப்பதற்காக அவர்களுக்கான உதவிகள் செய்யப்பட்டது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள  www.popularfronttn.org மற்றும்www.popularfrontindia.org
வருகின்ற ரமழான் மாதத்தில் உங்களுடைய ஜகாத்தினையும், சதக்காக்களையும் அல்லாஹ்வினுடைய பாதையில் அள்ளித்தாருங்கள். எண்ணற்ற பணிகள் நம் கண் முன்னே செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் பொருளாதாரம் மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. எங்களது சகோதரர்கள் உங்களை நாடி வரும் போது தாராளமாக உதவுங்கள். எல்லாம் வல்ல இறைவன் நமது சமூகத்தை நல்வழிப்படுத்துவானாக!
பத்திரிக்கைகளில் வெளிவந்த நமது சமூகப்பணிகள்

0 comments:

Post a Comment