Friday, August 10, 2012

குடிபோதையில் ரகளை செய்த அதிரையர் கைது !


எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் மண்ணடியில் நேற்று இரவு மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் எதிரே உள்ள ஒரு பெட்டிகடையில் அதிரையை சார்ந்த ஒரு இளைஞர்பழம் வாங்கி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இவர் குடிபோதையில் உள்ளதை கண்ட அந்த கடையின் முதலாளி விட்டு விட்டார் .

மீண்டும் அருகில் உள்ள பால் கடைக்கு சென்று ஒரு பாதம் பால் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் அவரிடம் தகாத வார்த்தைகளை சொல்லி வம்பிளுத்துள்ளர் இதனால் ஆத்திரமடைந்த அந்த கடையின் முதியவர் லேசாக தட்டியுள்ளார் .

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த போதை ஆசாமி அந்த முதியவரை போட்டு பலவந்தாமாக தாக்கியதில் பலத்த காயமடைதார் இதனால் இரத்தம் தாரை தாரையாக ஓடியதை கண்ட பொதுமக்கள் இவரை பிடித்து உதைக்க ஆரம்பித்தனர்.

தகவலறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து போதை ஆசாமி மீது வழக்கு பதிவு செய்து 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

கயாம்பட்ட அந்த முதியவர் காயல்பட்டினத்தை ஒரு இதய நோயாளி அவர் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த கடையின் ஊழியர் தெரிவித்தார் .

பையனின் எதிர்கால நன்மை கருதி மேலதிக விபரங்கள் பதியவில்லை இனிமேல் இது போன்ற கேடுகெட்ட செயல்களில் ஈடுபட்டு தனக்கும் தனது ஊருக்கும் இழுக்கை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்காமாகும்.
தகவல்: அதிரை புதியவன்

0 comments:

Post a Comment