Thursday, July 12, 2012

உறங்கும் அதிரை மின்வாரியம்! நாளை(12/7/12) தட்டி எழுப்ப வாரீர்...வாரீர்... வாரீர்...

கடந்த மூன்று தினங்களுக்கு முன் அதிரையின் சில பகுதிகளில் உயர்மின்னழுத்தம் வந்துள்ளது. குறிப்பாக  செக்கடி மேட்டில் உள்ள டிரான்ஸ் பார்மரில் இணைப்பு பெற்ற பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் செக்கடிப்பள்ளியில் வந்த உயர் மின்னழுத்தம் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதனால், அவ்வீடுகளில் இருந்த மின் விளக்கு, தண்ணீர் மோட்டார்,குளிர்சாதப்பெட்டி இன்னும் இதுபோன்று மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் அதிக அளவில் சேதம் அடைந்தது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருகும் என்கிறார் அதிரை சேர்மன் எஸ்.ஹெ.அஸ்லம்.


பாதிக்கப்பட்ட மக்களும் சேர்மனும்  பலமுறை அதிரை மின்சாரவாரியத்தில் புகார் அளித்தும். இதுவரை உருப்படியான நடவடிக்கை இல்லை;ஆள்ந்த  உறக்கத்தில் மின்சாரவாரியம் உள்ளது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.


இந்த உறக்கத்தை தட்டியெழுப்ப அதிரை மின்சார வாரியம் செல்ல அதிரை மக்களால் முடிவு செய்யப்படுள்ளது.


கிளம்பும் இடம்: செக்கடி பள்ளிவாசல் வளாகம்
thanks to adiraipost

0 comments:

Post a Comment