Thursday, July 12, 2012

பலஸ்தீன் சிறுவன்மீது காரை ஏற்றிய யூத ஆக்கிரமிப்பாளர் !




அல் ஹலீல்: கடந்த செவ்வாய்க்கிழமை (10/07/2012) பலஸ்தீன் சிறுவன் மீது தனது காரை ஏற்றிப் படுகாயப்படுத்திவிட்டு யூத ஆக்கிரமிப்பாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
அல் ஹலீல் பிராந்தியத்தின் சூஸியா பகுதியில் இக்கொடுமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமுற்ற 13 வயதான பலஸ்தீன் சிறுவன் முஹம்மத் மஹாரிக்கின் ஒரு கால் முறிந்துள்ள நிலையில் அருகில் உள்ள
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பலஸ்தீன் சிறுவன் மீது காரை ஏற்றிய யூத ஆக்கிரமிப்பாளர், சிறுவனின் கதறலையோ சுற்றியிருந்த மக்களின் கூச்சலையோ பொருட்படுத்தவில்லை என்றும், தனது காரை நிறுத்தாமல் விரைவாக ஓட்டிச் சென்றுவிட்டார் என்றும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை தற்போது ஓரளவு தேறிவருவதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
thanks to asiananban

0 comments:

Post a Comment