Friday, July 6, 2012

இந்தியாவில் இயங்கிவரும் பத்திரிக்கைகள் இந்துத்துவா சிந்தனையை திட்டமிட்டே விதைத்து வருகின்றன.மறுபுறம் சிறுபான்மையினருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றன!





"இந்துத்துவா"வை அதாவது பாசிச சக்திக்கு உதவும் வகையில் வெகுஜனமக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் காரணிகளாக உள்ள ஜோதிடம் குறித்து வெளியிடாத பத்திரிக்கைகளை பார்க்க முடியாது! இந்த ஜோதிடப் பித்தலாட்டத்திலும் ரகரகமாக தினசரி,வார,மாத ராசிபலன்கள் என்றும் அப்புறம் குருபெயர்ச்சி,ராகு-கேது பெயர்ச்சி,சனிபெயர்ச்சி பலன்கள் என்றும்,இந்த இந்த ராசிக்கு தோஷம்,அதற்கு பரிகாரம் இதுவென்றும், இந்த கோயிலுக்கு போனால் புள்ளை பிறக்கும்,இந்த கோயிலுக்கு போனால் கல்யாணம் நடக்கும்,இந்த கோயிலுக்கு போனால் கண்டிப்பாக கர்ப்பம் அடைவாய் என்றும் தோஷம் போகும் என்றும் சொல்லாத பத்திரிக்கைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் ! ஜோதிடத்திலும் பெயரை மாற்றிகொண்டால் சொர்க்கவாழ்வு கிடைக்கும், எண ஜோதிடம், வாஸ்து ஜோதிடம்,என்று " பீலா " விடாத பத்திரிக்கைகளை காண்பது அரிதாகும்!




இப்படி தொடர்ந்து உண்மைகள் இல்லாத கற்பனைகளை ஊடக உலக மேதாவிகள் வெளியிட்டு, உழைக்கும் மக்களிடம் நம்பிக்கையை விதைத்து வருகின்ற பத்திரிக்கைகள், மறுபுறம் பாசிச சுரண்டலுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதை காணலாம்.




இதுமட்டுமின்றி, புளிய மரத்தில் புள்ளையார் உருவம் தெரிந்தது, மாங்காய் மரத்தில் மாரியம்மாள் தெரிகிறார் என்றும் முருங்க மரத்தில் பால் வடியும் அதிசயம், மக்கள் பக்திப் பரவசத்துடன் பூசை செய்தனர் . என்றோ, பாம்பு வந்து சாமிக்கு பூஜை செய்தது. {பாவம் பிராமணர்கள் பாம்பு பூஜை செய்ய வந்துவிட்டால், அப்புறம் கோயிலில் அவர்களுக்கு என்ன வேலை ?} என்றோ வெளியிட்டு வேடிக்கை காட்டவும் தவறுவதில்லை!




வித்தைகள் காட்டும் மோசடி,மோடி மஸ்தான் பேர்வழிகளை அவதார புருஷனாகவும், ஆன்மீகக் குருக்களாகவும் காட்டி மக்களை மடையர்களாக்கவும் தவறுவதில்லை.! அப்புறம், அலகு குத்துவது, பல்லக்கு தூக்குவது,சாமி அப்படியே தெருவுக்கு தெரு ஊர்வலமாய் (வீதிஉலா))வந்து, அருள் பாலித்து.... இந்திய உழைக்கும் மக்களை காத்து ரட்சிப்பது!



இந்தியாவை சொர்க்கபுரியாகி, சுகபோகத்தில் திளைக்க வைத்தது போலவே, நம்ப வைக்கும் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிடவும் தவறுவதில்லை!




எந்தவித பொறுப்பும் இல்லாத ஊர்சுத்தி ஆசாமிகளை, ஆன்மீக குரு வருகிறார்!! அருளுரை தருகிறார்! உபதேசம்,சொற்பொழிவு கேட்க வாருங்கள் என்றும், பாதபூஜை செய்ய வாருங்கள்! வேள்வி செய்ய வாருங்கள்! பஜனைபாட வாருங்கள்! என்று சலுகை விளம்பரம் கொடுத்து ,செய்திகளை வெளியிட்டும் " இந்துத்துவா சிந்தனையை " பரப்பவும், பாசிசச் சக்திகளுக்கு உதவவும், உழைக்கும் மக்களின் செல்வத்தை , நேரத்தை, உழைப்பை சுரண்டவும் பாடுபட்டு வருகின்ற இந்திய பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஜனநாயகத்தின் கேடுகளை வளர்க்கும்,பாசிச சக்திகள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்!




இதைமட்டுமா செய்கின்றன ? இந்துத்துவ சிந்தனைக்கு எதிரானவர்களை நிந்திப்பது, சிறுபான்மையினரை " தீவிரவாதிகளாக தேச விரோதிகளாக" சித்தரிப்பது, இந்துத்துவ வாதிகளை அவர்கள் எத்தனை கொலைகள்,கொடுமைகள் செய்தாலும் கண்டுகொள்ளாமல் அவர்களை தேச பக்தர்களாக காட்டுவது, போன்ற எண்ணற்ற காரியங்களை இந்திய பத்திரிக்கைகள் செய்துவரவும் தவறுவதில்லை!

தீவிர வாத செயல்கள் நடைபெறும்போது பத்திரிக்கைகளின் பார்வையை அடுத்து 

thanks to jm kani

0 comments:

Post a Comment