Thursday, July 12, 2012

அதிரை நகர பாப்புலர் ஃப்ரண்ட்-சமூக மேம்பாடு துறை சார்பாக ஐந்து நாள் கல்வி உதவி பெறுவதற்கான முகாம் இன்றுடன் நிறைவாக முடிந்தது .



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக கடந்த
(07-07-2012) சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதர்க்கான விண்ணப்ப படிவங்கள் புர்த்தி செய்வதற்க்கான முகாம் துவங்கியது. இம்முகாம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பெற்றது. இம்முகாமில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது.(xerox,printer,genrator,laptops and others).





 இதன் மூலம் ஆயிரத்திற்க்கும் மேரற்பட்ட மக்கள் பயனனடைந்தனர். மேலும் இந்த முகாம் பொது மக்கள் மற்றும் ஆசியர்களின் வேண்டுகோலுக்கு இனங்க (10/7/2012) அன்றும் கடைசி நாளாக அறிவிக்கபட்டு மக்களின் வருகை அதிகமாக இருந்ததால் இரவு 10.30 மனிவரை முகாம் நடைபெற்றது. இன்றுடன் முகாம் முடிவடைந்ததாக பாப்புலர் ஃப்ரண்டின்  நகர செயற்குழு அறிவித்தது.


ஆனால் அடுத்த நாளாகிய  (11-07-2012) இன்றும் மக்களின் வருகை தொடர்ந்ததால் மக்களின் நலன் கருதி முகாம்     . ஐந்தாவது நாளாக தொடர்ந்தது. ஐந்து நாட்களாக நடந்த இம்முகாமில் சுமார் இரண்டாயிரதிற்க்கும் மேற்ப்பட்ட மக்கள் பயனடைந்தனர். இன்றுடன் இம்முகாம் முடிவடைந்தது என  பாப்புலர் ஃப்ரண்டின்  நகர செயற்குழு அறிவித்துள்ளது...... . 



ஆனால் மேலும் அதிகமான மக்கள் படிவம் பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் மக்கள் நலன் கருதி விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதலுக்கு மட்டும் செக்கடி மேட்டில் உள்ள sdpi அலுவலகத்தை தொடர்புகொள்ள நிர்வாகிகள் அனுமதித்துள்ளனர். தொடர்புக்கு 9842716214, 9629566235

0 comments:

Post a Comment