Monday, July 23, 2012

அதிரை மின்வாரிய முற்றுகை போராட்டம் வாபஸ்....இந்த நிலைமைக்கு யார் காரணம்? நீயா? நானா?


அதிரையில் கடந்த சில மாதங்களாக மின்சாரம் (voltage) அதிகமாகவும்,குறைவாகவும் இருந்து வருகிறது.இதனால் பல வீடுகளில் தொலைக்காட்சி,மின் விசிறி போன்ற பொருள்கள் பழுதடைந்தது.வீடுகள் மட்டுமின்றி தெரு விளக்குகளும் பழுதடைந்துள்ளது.

புதுமனைத் தெருவில் பல இடங்களில் தெரு விளக்குகள் பழுதடைந்து இருட்டாக காட்சியளிக்கிறது. இந்த மாதம் புனித மிக்க ரமலான் மாதம் என்பதால் முஸ்லிம்கள் இரவு வணக்கங்களில் ஈடுபடுவார்கள்.

நேற்றைய தினம் வித்ரு தொழுகை பள்ளியில் தொழுதுவிட்டு வீட்டிற்கு  சென்று கொண்டிருந்த வயதான ஒருவர் சாலையில் கல் தடுக்கி கீழே விழ நேரிட்டது.

இதே போன்று பெண்கள் வீதியில் நடந்து வரவும் அஞ்சுகிறார்கள்.இரவுத் தொழுகை முடிந்து வீட்டிற்கு செல்லும் சிறுவர்களும் மிகவும் அஞ்சுகிறார்கள்.

புதுமனைத் தெரு மட்டுமல்லாமல் பல தெருக்களிலும் இதே போன்று தெரு விளக்குகள் பழுதடைந்து இருட்டாக காட்சியளிக்கிறது. இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்பது இந்த தெரு மக்களின் கோரிக்கையாகும்.

தகவல்:அதிரைகுரல் வஹாப்


கருத்து: அதிரை பேரூராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மீண்டும் அதிரை மின்வாரிய முற்றுகை போராட்டத்தை நடத்த வேண்டும்!

0 comments:

Post a Comment