Tuesday, July 10, 2012

PFI சார்பாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை புர்த்தி செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது!




பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப்படிவங்களை புர்த்தி செய்து கொடுத்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக நெல்லை மேற்கு மாவட்டம் முழுவதும் நேற்று முஸ்லிம்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப்படிவங்களை புர்த்தி செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக 07.07.2012ஞாயிற்றுக்கிழமை) அன்று கடையநல்ல்லுரில் இரண்டு இடங்களில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்திலும்,அல்லிமூப்பன் தெருவில் உள்ள பிலால் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்தும் காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்பு கல்வி உதவித் தொகை பெற்றவர்கள் அதை புதுப்பிக்குவர்க்கும், இதுவரை கல்வி உதவித் தொகை வாங்காமல் இருப்பவர்களும் திரளாக வந்து விண்ணப்ப்ப்படிவங்களை புர்த்தி செய்து அப்படிவங்களை வாங்கிச்சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம B.A,BL மேற்பார்வையிட்டார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள் யாரிடமும் முகம் சுளிக்காமல் மிகச் சிறப்பாக தங்களது பணிகளை செய்தார்கள்.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப்படிவங்கள் 700க்கும் மேலான படிவங்களை புர்த்தி செய்து கொடுத்தார்கள்.

0 comments:

Post a Comment