Saturday, July 14, 2012

ஒன்றிணைவோம் மின்சாரம் பெறுவோம்!


அதிராம்பட்டினம் மின்சார வாரியம் மற்றும்  மின் பகிர்மான கழகத்தின் மெத்தன போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

தலைமை:அதிரை M.M ரஹ்மத்துல்லா
பகுஜன் சமாஜ் கட்சி, தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்

முன்னிலை: கா. ராஜவேல் B.A 
பகுஜன் சமாஜ் கட்சி, தஞ்சை மாவட்ட தலைவர்

அன்புடையீர்
எதிர்வரும் திங்கள்கழமை காலை 9.30  மணியளவில் அதிராம்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாடு மின்சாரவாரியம் அதிராம்பட்டினத்தில் கடந்த பல மாதங்களாக பழுதுபட்ட மின்மாற்றியை  (Transparmer) பல முறை  உள்ளூர் அதிகாரி முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரை எடுத்து சொல்லியும் பல கோரிக்கைகள் வைத்தும் இதுவரையில் அந்த Transparmer யை மாற்றாமலும் பழுதுபட்ட தெருவிளக்கு  கம்பங்களை மாற்றாமலும்  இருந்து வரும்  அதிராம்பட்டினம் மின்சார வாரியத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.மேலும் குறைந்த மின் அழுத்தத்தால் பல லட்சகணக்கான பொருட்களை இழக்க நேரிட்டது.பொது நல உணர்வு கொண்ட அணைத்து உணர்வாளர்களும் அதிரையின் நலன் நாடி இந்த மாபெரும்  கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வீர்.

இவன்
பகுஜன் சமாஜ் கட்சி 
அதிரை

0 comments:

Post a Comment