Thursday, July 26, 2012

50 செயல் வீரர்கள் ம ம க கட்சியில் இருந்து விலகி SDPI கட்சியில் இணைந்தனர்




கடந்த 22.07.2012 அன்று மாலை 5.00 மணியளவில் திருவாரூர் மாவட்டம் கொரடசேரியில் SDPI கட்சியின் புதிய கிளையின் சார்பாக கட்சிக் கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் ஏற்றிவைத்தார்.
பிறகு மாலை 5.30 மணியளவில் ம ம கவில் இருந்த ம ம க நகர பொறுப்பாளர் ஹாஜி தலைமையில் 50 செயல் வீரர்கள் ம ம கவை விட்டு  விலகி  SDPI கட்சியில் புதிதாக இணைந்த போது அவர்களுக்கு அறிமுக உரையை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு  திருவாரூர் மாவட்ட தலைவர் M.தப்ரே ஆலம் பாதுஷா தலைமை வகித்தார்.  மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் A.முகமது பைசல் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.லத்திப்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  
                இறுதியாக மாலை 6.40 மணியளவில் SDPI கட்சியின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி   நடைபெற்றது. இதில் அத்திக்கடை, பொதக்குடி & பூதமங்கலம் ஆகிய கிளை நிர்வாகிகள் கொரடசேரி ஜமாத்தார்கள், பொதுமக்கள் ஆகியோர் 70 க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment