Wednesday, September 14, 2011

இந்திய முஸ்லிம்களின் நிலை???


ஸ்பெயினில் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க தீட்டப்பட்ட நீண்ட காலத்திட்டத்தைப் போன்றதொரு திட்டம் இந்தியாவிலும் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஸ்பெயினை விட அதிகமான துல்லியமும் துரிதமும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்தியாவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் அன்று ஸ்பெயினில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் இடையே ஒரு வேற்றுமை. இவர்கள் ஸ்பெயினில் இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தியவர்களைவிட, நயவஞ்சகர்களை விட, நயவஞ்சகத் தனத்திலும் – நம்பவைத்து ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.
இந்தியாவில் உருது மொழி முஸ்லிம்களின் மொழியாகக் கருதப்படுகின்றது. இஸ்லாமிய இலக்கியங்கள் நிறைந்து கிடைப்பதாலேயே இது முஸ்லிம்களின் தொழி எனக் கருதப்படுகின்றது.
இந்த உருது மொழியை இந்தியாவை விட்டு வெளியேற்ற எத்தனையோ வியூகங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள்.
முஸ்லிம்களைக் காப்பாற்றிட வேண்டும் என்று எந்த முஸ்லிமாவது விரும்பினால் அவன் உடனேயே ‘வகுப்புவாதி’ என முத்திரை குத்தப்படுகின்றான். எந்த முஸ்லிமாவது இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து உயர்சாதி இந்துக்களுக்குப் பக்க தாளம் போட்டால் அவன் ‘தேசிய முஸ்லிம்’ எனப் போற்றப்படுகின்றான்.
ந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு திட்டமிட்டே சிதைக்கப்படுகின்றது. “குரூரமானவர்கள் இந்த உலகில் உண்டு என்றால் அவர்கள் முஸ்லிம்கள்தான்” எனப் பள்ளிக்குப் பாடம் பயிலவரும் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கின்றார்கள். இந்த இந்திய மண்ணின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட முஸ்லிம் வீரர்கள், தியாகிகளின் பெயர்கள் முழுமையாக இருட்டிப்புச் செய்யப்பட்டுள்ளன.
ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, ‘சரணடைய மாட்டேன்’ சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்’ என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.
ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த் துரோகிகள் – ‘ தியாகிகள்’ எனப் போற்றப் படுகிறார்கள். தனது ஓய்வு ஊதியத்திற்காகப் போராடிய ‘தான்தியா தோப்பே’, தான் தத்தெடுத்த மகன் ஆட்சியாளனாக ஆக்கப்பட வேண்டும் என்று போராடிய ‘ஜான்சி ராணி லட்சுமி பாய்’ இவர்களெல்லாம் இந்தியா முழுவதும் ‘தேசியத் தலைவர்கள்’ எனவும் , விடுதலைப் போர்வீரர்கள் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறார்கள்.
விஞ்ஞானம், மருத்துவம் இன்னுமுள்ள துறைகள் இவற்றில் எத்துனைதான் சாதனைகளை முஸ்லிம்கள் சாதித்துக் காட்டினாலும் அவர்களுக்கு விருதுகளோ, பரிசுகளோ தரப்படுவதில்லை. அவர்கள் விரக்திக்கே உள்ளாக்கப்படுகிறார்கள்.
இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்குக் காலமெல்லாம் விசுவாசமாக இருந்த ‘மௌலானா ஆஸாத்’ ‘ரபீ அஹ்மத் கித்வாய்’, ‘செய்யத் மஹ்மூத்’, ‘ஹுமாயூன் கபீர்’ போன்றவர்களின் பெயர்களை நினைவு கூர ஒரு தெருவின் பெயர் கூட இல்லை.
ஆனால் உயர் ஜாதிக்காரர்களில் நாட்டுக்கு எதுவுமே செய்யாதவர்களின் எத்தனையோ வீதிகள்! சாலைக்கள்!! நகரங்கள்!!!
வரலாற்றைத் திருத்தி – திரித்து – எழுதி, அதனை முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். இதன் விளைவாக நித்தமும் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.
இந்தியாவில் முஸ்லிம்களே இல்லை என்றாகி விட்டால் இஸ்லாம் எப்படிக் காப்பாற்றப்படும்? ஸ்பெயினில் முஸ்லிம்களே இல்லை என்றாக்கிவிட்டார்கள். ஆகவே அங்கே இஸ்லாம் இல்லை என்றாகிவிட்டது!
- முஸ்லிம்களைத் திட்டம்போட்டுக் கொலைசெய்தது,
- முஸ்லிம்களின் சொத்துக்களையும், தொழில்களையும், வியாபாரங்களையும் குறிவைத்துத் தாக்கி அவர்களை ஓட்டாண்டி ஆக்கி விட்டது,
- காவல் துறை, இராணுவம் அரசு நிர்வாகம் இவற்றில் அவர்கள் புறக்கணிக்கப் பட்டுவிட்டார்கள்.
- மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் வகுப்புவெறி இந்துக்களை ஊடுருவ விட்டது.
- அரசின் நிர்வாக மொழிகளில் ஒன்றாக இருந்த உருது மொழியை 1948-1949 இல் ஒரே இரவில் அது இனி நிர்வாக மொழிகளுள் ஒன்றாக நீடிக்காது என அறிவித்துவிட்டது. அது முதல் உருது மொழிக் கல்விக் கூடங்களை மூடியது.
- முஸ்லிம் தனியார் சட்டத்தை ‘பொது சிவில் சட்டம்’ என்ற முழக்கத்தைக் கொண்டு சின்னா பின்னப்படுத்தியது.
- வரலாற்றைத் திருத்தி எழுதி முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குச் செய்த தியாகங்களை மறைத்து அவர்களை எதிரிகளாகக் காட்டியது.
- முஸ்லிம்களினன் விரோதிகளைத் தேசிய தலைவர்களாகக் காட்டியது.
- முஸ்லிம்கள் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தைக் ‘கடத்தல்’ என முத்திரை குத்தி அவர்கள் செய்யும் தொழில்களாலேயே அவர்களைத் தேச விரோதிகள்’ என விஷ வித்தை விதைத்தது.
இப்படி முஸ்லிம்களை அழிக்கும் திட்டம் முழுமையாக்கப்பட்டுவிட்டது.
இந்தத் திட்டத்தை விதையாகத் தூவியவர்கள் அறுவடைக்காகக் 
காத்திருக்கின்றார்கள். அறுவடைக் காலம் வருமுன் இந்தச் சதித்திட்டங்களை முறியடிக்க முஸ்லிம்கள் முன்வரவில்லை என்றால் அன்றை ஸ்பெயினைப் போல் இந்தியாவும் ஆகிவிடும்.

0 comments:

Post a Comment