Thursday, May 10, 2012

தாதிமாரால் கொடூரமாக நடாத்தப்படும் முதியோர்கள்! இத்தாலியில் வெளியான வீடியோவால் பரபரப்பு!


இன்றைய உலகில் முதியோர்கள் எனப்படுபவர்கள் பிள்ளைகள் மட்டுமல்ல எல்லோராலும் சுமையாகவே நோக்கப்படுகின்றார்கள்.

இத்தாலியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் நோயாளர்கள் தாதிமாரால் மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுகின்றமை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

இக்கொடூரங்களை காட்டுகின்ற வீடியோ ஒன்று இணைய உலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அத்துடன் இத்தாலியிலும் பேரதிர்ச்சியை கொடுத்து உள்ளது.

தாதிமாரால் வயதான நோயாளிகள் அடிக்கப்படுகின்றனர். சித்திரவதை செய்யப்படுகின்றனர். துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். பட்டினி போடப்படுகின்றனர்.

இந்நிலையம் செனற்றர் ஒருவரின் மனைவியால் நடத்தப்படுகின்றது. சென்ற்றரின் மனைவி உட்பட 07 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.








thanks to thavaaislam.facebook

0 comments:

Post a Comment