Sunday, May 13, 2012

வலதுசாரி பயங்கரவாதி ப்ரெவிக் மீது நீதிமன்றத்தில் ஷூ வீச்சு!


ஓஸ்லோ:நார்வேயில் அநியாயமாக அப்பாவிகளை கொன்று குவித்த வலதுசாரி பயங்கரவாதி ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் அவன் மீது ஷூ வீசப்பட்டது.
கொலைச் செய்யப்பட்டவரின் உறவினர் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஷூவை வீசினார். ‘நீ எனது சகோதரனை கொலைச் செய்துவிட்டாய்!நீ நரகத்திற்கு செல்!’ என்று கூறி அவர் ப்ரெவிக் மீது ஷூவை வீசினார்.
ஆனால் ஷூ வழக்கறிஞர் மீது பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடவடிக்கைகள் தற்காலிகமாக தடைப்பட்டன.
நார்வே தலைநகரான ஓஸ்லோவில் நடத்திய தாக்குதலில் 7 பேரையும், பின்னர் ஆளுங்கட்சியின் இளைஞர் முகாமில் பங்கேற்ற 69 பேரையும் அநியாயமாக படுகொலைச் செய்த வலதுசாரி பயங்கரவாதி ப்ரெவிக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். வலுவான பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறும் விசாரணையில் முதன் முதலாக கொலைச் செய்யப்பட்ட நபர்களின் தரப்பில் இருந்து வெளிப்படையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இஸ்லாத்தின் வளர்ச்சி மற்றும் பன்முகத் தன்மையை ஊக்குவிக்கும் நார்வே அரசின் அணுகுமுறை ஆகியவற்றைக் கண்டித்து கூட்டுப் படுகொலையை நடத்தியதாக ப்ரெவிக் நீதிமன்றத்தில் கூறினான்.
thanks to asiananban

0 comments:

Post a Comment