Saturday, May 26, 2012

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் “ கல்வி விழிப்புணர்வு மற்றும் மேற்ப்படிப்பு வழிகாட்டி முகாம்”

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 25-05-2012 அன்று மாலை 7 மணியளவில் பெரியபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் “ கல்வி விழிப்புணர்வு மற்றும் மேற்ப்படிப்பு வழிகாட்டி முகாம்” நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டத்தலைவர் I.ரிஹாருத்தீன் B.E., தலைமை தாங்கினார் , மாநில துனை தலைவர் A.சாகுல் சஹீத் B.E., அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்த நிகழ்ச்சி துவங்கியது, திரு. பைரோஸ்கான் (பெற்றொர் ஆசிரியர் கழக துனைத்தலைவர், பெரியபட்டிணம்), திரு. சேகு இபுராஹிம் (கிராம கல்வி குழு தலைவர்) , பெரியபட்டிணம் ஜமாத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாலர் C.A . ரவூஃப் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் மாவட்டத்தலைவர் வழக்கரிஞர். ரவிச்சந்திர ராமவன்னி B.Sc., B.L., கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலப் பொதுச்செயலாலர் அப்துல் சத்தார் MSW.,MBA.,, அல்-கலம் கல்வி அறக்கட்டளையின் தலைமை ஆசிரியர் திரு. காதர் இபுராஹிம் M.A.,B.Ed.,M.Phil.,, பேராசிரியர் ஜவகர் ஃபரூக் M.A.,B.Ed.,M.Phil.,, மவ்லானா ஜஹாங்கிர் அரூசி ஆகியோர் சிரப்புரை ஆற்றினார்கள் ,

அதனைத்தொடர்ந்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நாமும் சாதிக்கலாம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது, நூலை தேசிய பொதுச்செயலாலர் C.A . ரவூஃப் வெளியிட வழக்கரிஞர். ரவிச்சந்திர ராமவன்னி B.Sc., B.L., அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடந்த +2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மானவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது, மேலும் பெரியபட்டிணம் அரசு மேல்னிலைப்பள்ளியில் படித்து முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடையம் வழங்கப்பட்டது,
மேலும் கடந்த 23-05-2012 அன்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டப்பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது .
இறுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட குழு உறுப்பினர் S.தமிமுல் அன்சாரி DCE நன்றியுறையாற்றினார்.

0 comments:

Post a Comment