Saturday, May 21, 2011

ஒரிசாவில் ஏற்பட்ட திடீர் புயல் மழையால் 7 பேர் பலி


May 21 புவனேஸ்வரம்: ஒரிசா மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட புயல் மழையால் 7 பேர் உயிரிழந்தனர். கட்டக், புரி, குர்டா, சுந்தர்கர், மயூர்பஞ்ஜ் ஆகிய பகுதிகளில் பலத்த மழையுடன் பலமாகக் காற்றும் வீசியதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. ரூர்கேலாவின் புறநகர்ப் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். ஆனந்தபூர், திலைமல், ஜோதா பகுதிகளில் மின்னல் தாக்கியதால் 3 பேர் உயிரிழந்தனர். மண் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். குர்டா மாவட்டத்திலுள்ள ஸ்ரீராம்நகரில் ஒருவர் மீது வேரோடு மரம் சாய்ந்து அவர் உயிரிழந்தார்.

0 comments:

Post a Comment